Jump to content

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல் தானியங்களை உலர்த்தும் தொழிற்சாலையை பாதித்ததாகவும் இந்த சம்பவம் குறித்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

எவ்வாறாயினும் ரஷ்ய ஏவுகணைகள் போலந்து பிரதேசத்தை தாக்கியதாக வெளியான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

மேலும் இது நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் வேண்டுமென்றே செய்யப்படும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும் சாடியுள்ளது.

நேட்டோ உறுப்பினரான போலந்தின் மீதான தாக்குதலால் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேட்டோ உடன்படிக்கையின் 4 வது பிரிவின் கீழ் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிப்பது குறித்து போலந்து பரிசீலித்து வருகின்றது.அதன் ஒரு அங்கமாக போலந்து ஜனாதிபதி அண்ட்ரேஜ் டுடாவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜேர்மனியும் கனடாவும் நிலைமையை அவதானித்து வருவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் மேலதிக விவரங்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்தன.

https://athavannews.com/2022/1310753

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் படையினரின் ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்திருக்கலாம் - அமெரிக்க அதிகாரிகள்

By Rajeeban

16 Nov, 2022 | 11:57 AM
image

ரஸ்ய படையினர் மீது உக்ரைன் படையினர் ஏவிய ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்துள்ளது என  அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக போலந்து அதிகாரிகள் இந்த ஏவுகணை ரஸ்யாவில் தயாரிக்கப்பட்டது என தெரிவித்திருந்தனர்.

இதேவேளை ரஸ்யா இந்த ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் என தான் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிpவித்துள்ளார்.

FhoPFLFXoAEhLqg.jpg

இதேவேளை நேட்டோவின் உறுப்பு நாடான போலந்தில் வீழ்த்து வெடித்த ஏவுகணை குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பலநாடுகளிடம் இதேபோன்ற ஆயுதங்கள் உள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் இதன் காரணமாக அந்த ஏவுகணை எதுவென அடையாளம் காண்பதன் மூலம் தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற முடிவிற்கு வரமுடியாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

FhoPFLNWAAEIAcU.jpg

நாங்;கள் இந்த விடயம் குறித்து மிகவும் அவதானத்துடன் அணுகுவதே  அர்த்தபூர்வமானது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை போலந்து எல்லைக்கு மேல் சென்றுகொண்டிருந்த நேட்டோ விமானமொன்று ஏவுகணையை அவதானித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.virakesari.lk/article/140189

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உக்ரைன் படையினரின் ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்திருக்கலாம் - அமெரிக்க அதிகாரிகள்

Bild

சகுனி உக்ரேனின் திருவிளையாடல்கள் போகப்போகத்தெரியும்.😎😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்து ஏவுகணை விவகாரம்: அமெரிக்காவுக்கு ரஷ்யா பாராட்டு

By DIGITAL DESK 3

16 NOV, 2022 | 04:12 PM
image

போலந்தில் ஏவுகணை வீழ்ந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா கவனமாக பதிலளித்துள்ளதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.

யுக்ரைன் எல்லையிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு  ஏவுகணை வீழ்ந்ததால் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த ஏவுகணை ரஷ்யாவினால் ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். 

ஆமெரிக்காவின் இந்த கருத்துக்கு ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக செயலாளர் திமித்ரி பேஸ்கோவ்  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அமெரிக்காவின் கவனமான பதில் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில்  கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். 

அதேவேளை போலந்து சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/140247

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:

போலந்தில் ஏவுகணை வீழ்ந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா கவனமாக பதிலளித்துள்ளதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.

யுக்ரைன் எல்லையிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு  ஏவுகணை வீழ்ந்ததால் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த ஏவுகணை ரஷ்யாவினால் ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். 

ஆமெரிக்காவின் இந்த கருத்துக்கு ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக செயலாளர் திமித்ரி பேஸ்கோவ்  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அமெரிக்காவின் கவனமான பதில் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில்  கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். 

அதேவேளை போலந்து சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

 

3 hours ago, குமாரசாமி said:

சகுனி உக்ரேனின் திருவிளையாடல்கள் போகப்போகத்தெரியும்.😎😂 

உக்ரேனின் நரித்தனம் இன்னும் வரும்.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனின் நரித்தனம் இன்னும் வரும்.....:cool:

இந்த வருட ஆரம்பத்தில் போர் ஆரம்பித்த உடனேயே...
உக்ரைன்,  பல உயிருள்ளவர்களை படுக்க வைத்து,  துணிகளால் மூடி   
ரஷ்யாவினால் கொல்லப் பட்டவர்கள் என்று, மேற்கு  ஊடகங்களுக்கு  காட்டியது.
அதில் பல ஆட்களின் கால்கள் ஆடுவதையும், காற்றுக்கு துணி விலகுவதையும் கண்டோம்.

அப்பவே... உக்ரைன் பச்சை கள்ளர்கள் என்று புரிந்து விட்டது.
இவன் செய்கிற சுத்துமாத்து வேலைகளால்.. உலக யுத்தம் வந்தாலும் ஆச்சரியமில்லை. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வருட ஆரம்பத்தில் போர் ஆரம்பித்த உடனேயே...
உக்ரைன்,  பல உயிருள்ளவர்களை படுக்க வைத்து,  துணிகளால் மூடி   
ரஷ்யாவினால் கொல்லப் பட்டவர்கள் என்று, மேற்கு  ஊடகங்களுக்கு  காட்டியது.
அதில் பல ஆட்களின் கால்கள் ஆடுவதையும், காற்றுக்கு துணி விலகுவதையும் கண்டோம்.

அப்பவே... உக்ரைன் பச்சை கள்ளர்கள் என்று புரிந்து விட்டது.
இவன் செய்கிற சுத்துமாத்து வேலைகளால்.. உலக யுத்தம் வந்தாலும் ஆச்சரியமில்லை. 

உக்ரேன்ரை கள்ளத்தனம் தெரியாமல் எங்கடை ஆக்கள்  கொஞ்சப்பேர் உக்ரேனுக்கு கொடி புடிச்சு கதை,கவிதை,கட்டுரை எழுதிக்கொண்டு திரியினம்.....😂  அதிலையும் புனித ஈழப்போராட்டத்தோட ஒப்பிட்டு......:(
என்ர சிவனே  எங்கை போய் முட்ட?????? ~*~ ..om.. namah Shivaye namoh namahe.. ~*~

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏவுகணை உக்கிரைனில் உட்பதி செய்ததாக கூட இருக்கலாம், ரஷ்யா தொழில்நுட்ப வடிவமைப்பில். 

ஏனெனில், உக்கிரைன் ரஷ்யாவின் (சோவியத் யூனியன் காலத்தில்) ஆயுத உற்பத்தி தொழிற்சாலை. 

ரஷ்யா, உக்கிரனை  சோவியத் யூனியன் இறைமையில் இருந்து கைவிட்டதும், ரஷ்யா இடம் உக்கிரைன் ரஷ்யா இடம் மீளளிக்காத ஆயுதங்கள் (வேறு எந்த அரசியல், பொருளாதாரா, படைவளம், இயற்கை வளம், என் கலாசார குறியீடுகள், வளங்கள் போன்றவை அனைத்தும்)  அனைத்தும் உக்கிரைன் இன் இறைமைக்குள் வந்துவிட்டது.

இதுவே, உக்கிரைன் இன்னும் பல உயர்வலு ரஷ்ய ஆயுதங்களை வைத்து இருப்பதற்கு. 

மேற்கின் பிரச்சாரம் அணு ஆயுத யுத்தத்தில் கொண்டு வருவதற்கு தூபம் போடுகிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்து ஏவுகணை : வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல: நேட்டோ

By DIGITAL DESK 3

16 NOV, 2022 | 06:42 PM
image

போலந்தில் ஏவுகணை வீழ்ந்து வெடித்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டமைக்கான அறிகுறி இல்லை என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.

போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்ததால் இருவர் உயிரிழந்தனர்.

நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் இச்சம்பவம் இடம்பெற்றமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இது தொடர்பாக கூறுகையில், 'இச்சம்பவம் தொடர்பில் எமது விசாரணைகள் தொடர்கின்றன. அதன் பெறுபேறுக்கு நாம் காத்திருக்க வேண்டும்.  ஆனால்,  அது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவு என்பதற்கான அறிகுறிகள் இல்லை' என்றார். 

யுக்ரைனிய படையினர் ஏவிய விமான எதிர்ப்பு ஏவுகணையொன்றின் விளைவாக இச்சம்பவம் இருக்கலாம் எனவும் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறினார். 

எனினும் இது யுக்ரைனின் தவறு அல்ல எனவும், யுக்ரைன் மீது ரஷ்யா சட்டவிரோத யுத்தத்தை தொடர்வதால் ரஷ்யாவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதேபோன்ற கருத்தை போலந்து ஜனாதிபதி அண்ட்றே டூடாவும் தெரிவித்துள்ளார். இது ஒரு துரதிஷ்டமான விபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரைன் படையினர் ஏவிய சோவியத் காலத்து ஏவுகணையொன்றின் விளைவாக இது இருப்பதற்கான அதி வாய்ப்புள்ளது என ஜனாதிபதி அண்ட்றே டூடா கூறினார்.

முன்னதாக, மேற்படி ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். பைடனின் இக்கருத்தை ரஷ்யா பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/140276

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனதும்.. பிரிட்டன் உட்பட்ட முந்திரிக்கொட்டை ஐரோப்பிய நாடுகளினதும்.. பக்கச்சார்ப்பை பார்த்து சந்தி சிரிக்குது. உக்ரைன் தானே அடிச்சிட்டு பழியை ரஷ்சியா மீது போட்டு நேட்டோவை நேரடியாக மோதவிட்டு குளிர்காயலாம் என்று சிலுங்கி கள்ளக் கணக்குப் போட்டிருப்பார்.. எல்லாம் பிடிபட்டுப் போச்சு. நேட்டோ ஐரோப்பிய வாலுகள் தான் இதற்குப் பொறுப்பு. அமெரிக்கா புத்திசாலித்தனமாகத்  தப்பிவிட்டது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

போலந்தில் ஏவுகணை வீழ்ந்து வெடித்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டமைக்கான அறிகுறி இல்லை என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.

மேற்குலக வியாபார கள்ளர்ரை புத்தியை பார்த்தியளே?????😂

அடிச்சது உக்ரேன் எண்டு தெரிஞ்சவுடனை  வேணுமெண்டு அடிக்கேல்லையாம் எண்டு நேட்டோ மழுப்ப வெளிக்கிட்டீனம். நேற்று இந்த நேரமெல்லாம் இந்தா புடி ரஷ்யாவின்ரை வேலையப்பார்....அஜாரகத்த பார்....வெட்டுறம் கொத்துறம்.....இந்தா துவக்கை ரஷ்யாவுக்கு நேராய் நீட்டுறம்....நாங்கள் ஆரெண்டு காட்டுறம் எண்ட பீலிங்கில இருந்திச்சினம். இப்ப தற்செயல் எண்டு அடக்கி வாசிக்கிறம்.🤣

மக்களே இப்பவும் சொல்லுறம் ரஷ்யாவின்ர நோக்கம் மற்ற நாட்டை பிடிக்கிறதோ ஆக்கிரமிக்கிறதோ இல்லை. எல்லாம் சுய பாதுகாப்பிற்கான நடவடிக்கை மட்டுமே.:cool:

போயும் போயும் கோமாளி செலென்ஸ்கிக்காக வக்காளத்து வாங்காதீர்கள்.🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்து உக்ரைன் விசாரணை

Saturday, November 19, 2022 - 3:28pm
w6.jpg?itok=OiB-CK1v

போலந்தைத் தாக்கிய ஏவுகணை குறித்து புலன்விசாரணை நடத்த உக்ரைனிய நிபுணர்கள் சென்றுள்ளனர்.

போலந்து, நேட்டோ கூட்டணி, மற்ற மேற்கத்திய நாடுகள் ஆகியவை அந்த ஏவுகணை தற்செயலாக உக்ரைனில் இருந்து பாய்ந்ததாக நம்புகின்றன.

ஆனால் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அதனை மறுக்கிறார். அது ரஷ்யாவில் இருந்து பாய்ச்சப்பட்டதாக அவர் கூறுகிறார். எனினும் நூறு வீதம் உறுதியாகச் சொல்ல முடியாது என்று அவர் தற்போது தமது நிலையைச் சற்று மாற்றிக்கொண்டார்.

 
 

போலந்து ஜனாதிபதி ஆன்றே டூடா தமது நாட்டின் புலனாய்வு முடிவை உக்ரைனிடம் காட்டலாம் ஆனால் சர்வதேச சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று கூறினார். ஏவுகணை யாரிடம் இருந்து பாய்ந்தது என்பதில் அமெரிக்கா, போலந்து, உக்ரைன் என்று தரப்புக்கொரு கருத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே உக்ரைனில் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எரிசக்தி வசதி இல்லாமல் குளிர்காலத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.