Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!

jeyamohan1.jpg

Furniture-ன் பெயரால் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபர்னிச்சர்கள் உடைபட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளம் இப்போது யுத்த களமாக உருமாறி நிற்பதற்கு காரணம் எழுத்தாளர் ஜெயமோகனின் அந்த ஒற்றை அறிவிப்புதான்.

புளிச்ச மாவு

2020-6-aqdep22uoan-fb.jpg

எழுத்தாளர் ஜெயமோகன், தீவிர வலதுசாரி எழுத்தாளர். இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக முன்வைப்பவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளின் மையமாகவும் இருப்பவர் ஜெயமோகன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மளிகை கடைகாரர் ஒருவர் புளிச்சமாவு கொடுத்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருந்தார் ஜெயமோகன்.

அறைகலனும் ஜெயமோகனும்

இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது ஃபர்னிச்சர் விவகாரம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், Furnitureக்கு அர்த்தம் அறைகலன் என்பதை வெண்முரசுவில் பயன்படுத்தினேன். அதில் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டது. அந்த சொல்லை நான்தான் கண்டுபிடித்தேன் என்றார். அதாவது அறைகலன் என்ற சொல்லை தமிழுக்கு நன்கொடையாக கண்டுபிடித்து வழங்கியவர் ஜெயமோகன் என்பது அவரது கருத்து.

மனுஷ்யபுத்திரன்

manushyaputhiran-165500085616x9.jpg

அவ்வளவுதான்.. சமூக வலைதளங்களில் அமளி துமளிதான்.. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த ஃபர்னிச்சர் விவகாரம்தான். திமுகவை சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஜெயமோகனுக்கு பதிலடி தரும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், Furniture க்கு ' அறை கலன்' என்ற சொல் 1994 ல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆட்சிச் சொல்லகராதி ஆறாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. 1994 ல் வெண்முரசு எழுதப்படவில்லை. அறைகலன் ஜெயமோகனின் சொல்லும் அல்ல.

என் வேண்டுகோளுக்கிணங்க இதைக் கண்டுபிடித்துத் தந்த பெருமாள் முருகனுக்கு நன்றிகள். நாங்கள் இவ்வளவு அலர்ட்டா இருக்குற காலத்திலேயே இவ்வளவு துணிச்சலா கதை விட்டால் எப்படி? என சீறியிருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் மனுஷ்யபுத்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1974-ம் ஆண்டு நூலில்..

IMG-20221116-213330.jpg

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை தளபதிராஜ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், அறைகலன் என்ற சொல்லை உருவாக்கியது ஜெயமோகனா?

ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ. இராமலிங்கனார் 1974 -ஆம் ஆண்டு எழுதிய 'ஆட்சித் துறைத் தமிழ்' என்னும் நூலின் மூலம் 'அறைகலன்' என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் ! (படம்: கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நால். வெளியான ஆண்டு 1978. பக்கம் 94) என பதிவு செய்துள்ளார்.

கவிஞர் மகுடேசுவரன்

கவிஞர் மகுடேசுவரன், அறைக்குள் மட்டுமே வைத்துப் பயன்படுத்தத் தக்க பொருள் அறைகலன் எனப்படும். அறைகலன் (அறையினது கலன்), அறைக்கலன் (அறையின்கண் வைக்கும் கலன்) என இருவாறும் எழுதலாம். உள்ளிருக்கும் பயன்பொருள். இச்சொல்லினைத் தமிழாய்ந்த பெருமக்கள் பலர் நெடுங்காலமாகவே பயன்படுத்தியுள்ளனர்.

மணவை முஸ்தபா வெளியிட்ட 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற நூலில் 'அறைகலன்' என்ற சொல் பதினெட்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இந்நூலின் முதற்பதிப்பு செப்டம்பர் 1993ஆம் ஆண்டு வெளிவந்தது என எழுதியுள்ளார். இப்படியான விவாதங்களால் சமூக வலைதள பக்கங்கள் ரத்த பூமியாகி கிடக்கிறது!

https://tamil.oneindia.com/news/chennai/a-new-controversy-erupts-over-rightwing-writer-jeyamohan/articlecontent-pf807095-485596.html

  • கருத்துக்கள உறவுகள்

கலைச்சொல் - ஜெயமோகன்

MeenaNovember 17, 2022

Mudhalavin-001.jpeg

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
 

 

https://www.jeyamohan.in/175825/

 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 19:49, கிருபன் said:

கலைச்சொல் - ஜெயமோகன்

MeenaNovember 17, 2022

Mudhalavin-001.jpeg

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
 

 

https://www.jeyamohan.in/175825/

 

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை,

ஜெய மோகன் என்பவர் யார்?

முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை,

ஜெய மோகன் என்பவர் யார்?

முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

🤣

முடியாதுதான். அதுதான் பாவம் எண்டு “சுமாரான” எழுத்தாளர் என்றேன்🤣.

சரி நல்ல எழுத்தாளர்தான். கருத்தாளர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

ஜெய மோகன் என்பவர் யார்?

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

3 hours ago, goshan_che said:

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

வெண்முரசை எழுதிய போதும் சரி, கோவிட் பெருந்தொற்றின் போது ஒரு நாளுக்கு ஒரு சிறுகதை என்ற வேகத்தில் எழுதிய போதும் சரி, ஜெயமோகனின் சலிக்காத எழுத்துழைப்பு வியக்க வைத்தது. இதே போல ஆங்கிலத்தில் எழுதும் பெயர் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமே! ஒரு prolific எழுத்தாளராக அறியப் பட்ட ஹருகி முறகாமி என்கிற ஜப்பானிய எழுத்தாளர் கூட, வருடத்தில் சில மாதங்கள் தான் தினசரி உட்கார்ந்து எழுதி முடிப்பாராம் என்று அறிந்திருக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

அதுதானே பார்த்தேன் நந்தினியை குடும்பிக் கூட்டத்தின் வளர்ப்பு மகளாக்கி.. குடும்பிகளின் ஆதிக்கத்தையும் படத்திற்குள் திணித்ததை. நந்தினி கல்கி உருவாக்கிய செருகல் பாத்திரத்திற்கு இவர்... கூடக் குடும்பிச் சாயம் பூசி விட்டிருக்கிறார்.

அதேபோல்.. பல்லவர்களை சிங்களவர்களின் காலடியில் கெஞ்சுவது போலக் காட்டி இருப்பதும் இவரின் சித்துவிளையாட்டாகத்தான் இருக்கும். ஏனெனில்.. இவர் தமிழீழ எதிர்ப்பு ஆள். சிங்களத் தீவு விசுவாசி. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தா

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

 

 

 

 

 நன்றி

16 minutes ago, வாலி said:

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

அது உங்க பார்வையில இருக்கு வாலி🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

நன்றி கோசான்.

4 hours ago, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

நன்றி கிருபன், நான் பன்னாடை மாதிரி, நல்லவற்றை விட்டு விட்டு குப்பைகளை எடுப்பது, கதைகள் வாசிப்பதை 5 அல்லது 6 வருடங்களாக பெரும்பாலும் நிறுத்திவிட்டேன், யாழ்கள உறவுகள் கதைகள் சில சமயம் வாசிப்பதுண்டு, சிலவேளை ஜெயமோகனின் கதையினை எங்காவது வாசித்திருப்பேன்.

ஆனால் பொதுவெளியில் இந்த பெயர்களை அதிகம் கேள்விப்பட்டுள்ளேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அறைக்கலன் -அவதூறு

MeenaNovember 17, 2022

 

கலைச்சொல்

பேட்டியில் மறைந்து போன சொற்களை மீண்டும் கொண்டு வந்தேன் என சொன்ன பின்தான் அறைகலன் பற்றிக்கூறி இருக்கிறீர்கள். இந்த சொல்லை நீங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை. இது நினைவுப் பிழை அல்ல ஒப்புக் கொள்ளல் பிழை. மிதமிஞ்சிய சமூக ஊடக உலாவிகளின் காய்ச்சல் உங்களுக்கும் தொற்றி விட்டது.

கிருஷ்ணன் ஈரோடு

*

நண்பர் கிருஷ்ணன் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார் நான் இப்போது பின்லாந்தில் Rovaniemi என்ற ஊரில் உறைநிலைக்கு கீழே 11 பாகை குளிர் சூழ இருக்கிறேன். மின்னஞ்சல்களைப் பார்க்க நேரமில்லை. அருஞ்சொல் பேட்டியை முழுசாக பார்க்க முடியவில்லை. அது நேர் உரையாடலாக தன்னியல்பாக நடந்தது. பேசிய விஷயங்கள் எனக்கு சரியாக நினைவிலும் இல்லை. ஆகவே வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலுமாக நான் அறைக்கலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாக அப்பேட்டியில் நானே சொல்லியிருப்பதாக பலர் சொன்னபோது இருக்கலாம் என்று நானும் நினைத்தேன்.

கிருஷ்ணன் சொல்வது போல அது நினைவுப்பிழை அல்ல, ஏற்பு பிழை. இப்போது அந்தப் பேட்டியைப் பார்த்தால் அதில் நான் அச்சொல்லை உருவாக்கியதாக எங்குமே சொல்லவில்லை. மாறாக சீவகசிந்தாமணியிலிருந்து ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் பழைய மரபிலிருந்து ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் எடுத்து பயன்படுத்தியிருப்பதாகத்தான் அந்தப்பேட்டியில் சொல்லியிருக்கிறேன். மரபிலிருந்த சொல்லை மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டுவந்ததற்கு உதாரணமாக அச்சொற்களை சொல்லியிருக்கிறேனே ஒழிய அதை நான் உருவாக்கியதாக கூறவில்லை.

அப்படி என்றால் ஏன் முந்தைய குறிப்பில் அதை சொன்னேன். உண்மையில் சமூக வலைதளங்களில் உலவும் நாலைந்து நண்பர்கள், அதாவது என்மேல் நல்லெண்ணம் கொண்டவர்கள், எனக்கு மின்னஞ்சல் வழியாக அதை தெரிவித்தார்கள். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று கேட்டார்கள். ஆகவே ஒரு அவசர விளக்கமாக அதை எழுதினேன். இப்போது அந்த நண்பர்களை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு “நான் அப்படி சொல்லவே இல்லையே நீங்கள் எதை நம்பி என்னிடம் அப்படி கேட்டீர்கள்? நீங்கள் அந்தப்பேட்டியை முழுக்க பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்களும் அந்தப்பேட்டியை முழுக்க பார்க்கவில்லை என்றார்கள். அவர்கள் அனைவருமே பெருமாள் முருகன் என்ற ஒரு நபர் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டவர், அவர் சொன்னதனால் நான் சொல்லியிருப்பேன் என்று நம்பியிருக்கிறார்கள். மற்ற திமுக அல்லக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

நான் சொன்னேன்…

“அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான் இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி எப்படி நீங்கள் இதை என்னிடம் கேட்கலாம்? ஓராண்டுக்கு இனிமேல் நாம் நண்பர்களாக இல்லாமல் இருப்போம். உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தபின் நாம் நண்பர்களாக இருப்போம்” என்றேன். அதன்பின் அவர்கள் மீண்டும் வருந்தி கடிதமிட்டார்கள். எப்போதுமே முதல்கட்ட சீற்றத்திற்கு பிறகு நண்பர்களிடம் இசைந்துவிடுவது எனது வழக்கம். சரிதான் விட்டுவிடுவோம். யாரோ எதையுமே படிக்கவோ எழுதவோ சிந்திக்கவோ தெரியாத ஒரு வெற்று அரசியல் கூட்டம் உருவாக்கும் ஓசைகள். அதற்காக நாம் நட்பை இழக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

சமூக ஊடக வெளியில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் இந்த கும்பல் தன்னிச்சையாக கூடியதல்ல. இது ஓர் அரசியல் இயக்கத்தின் ஊடக அணி. எழுத்தாளர்களின் மேல் கட்சிகளின் ஊடக அணிகள் நடத்தும் இந்த அவதூறுத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் அதைப்பற்றி சற்று விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.

எண்ணிப்பாருங்கள், வெண்முரசு போன்று ஒரு பிரம்ம்மாண்டமான ஒரு படைப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. அது நிறைவுற்றபோது தமிழில் எந்த சமூக வலைதளம், எந்த இணைய ஊடகம் அதைப்பற்றி ஒரு வரி செய்தியாவது போட்டது? ஆனால் இவர்கள் உருவாக்கும் இந்த முற்றிலும் அடிப்படைகள் அற்ற அவதூறுக்கு பத்துக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தினமலர் நாளிதழ் உட்பட இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. எங்கு வரை கொண்டு சேர்க்க இவர்களால் இயல்கிறது! இந்த அவதூறை அவர்கள் சில லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்திருப்பார்கள். அவர்களிடம் பதில் சொல்ல நமக்கு ஊடகம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இதை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். நமக்கு நாமேயாவது நிதானத்துடனும் தெளிவுடனும் இருந்தாகவேண்டும்.

 

https://www.jeyamohan.in/175839/

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அருஞ்சொல்லுக்கு வழங்கிய           பேட்டியில்(https://youtu.be/lMgQ9QVIjdQ)  ஜெயமோகன் மிகத்தெளிவாகவே அறைக்கலன் என்ற சொல்லை தானே உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார். பேட்டியின் 13.28 க்கும் 13.45 க்கும் இடையில் அவர் சொன்னதன் எழுத்து வடிவம் கீழே

"உதாரணமாக Furniture க்கு அறைக்கலன் என்கிற வார்த்தை வெண்முரசில இருக்கு.  பிறகு அது டிக்சனரிக்கு போகிறது. பிறகு தினத்தந்தி விளம்பரத்தில் வருகிறது. என் கண்முன்னாலேயே தினத்தந்தியில் அறைக்கலன்கள் விற்பனை அப்படீன்னு. அது நான் உருவாக்கிய வார்த்தை"

 

 

 

 

 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தமிழில் வழக்கில் உள்ள "தளபாடம்" எனும் சொல் தமிழ் சொல் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2022 at 02:11, Justin said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

நான் ஒரு பன்னாடை மாதிரி நல்ல விடயங்களை விட்டு விட்டு குப்பை கூழங்களை எடுத்து கொண்டுள்ளேன், அவரது தமிழ் சேவை தெரியவில்லை ஆனால் ஒரு புளித்த மா விவகாரத்தினை மட்டும் பார்த்து விட்டு எனது மனதில் நினைத்துக்கொண்டது

என்ன ஒரு மனிதர் இவர் புளித்தமாவினை தூக்கி போட்டுவிட்டு போயிருந்தால் ஒரு சாமானிய கடைக்காரரிற்கு இலாபம் தற்போது அந்த கடைக்காரரிற்கு மேல் வழக்கு போட உதவுவதற்காக வைத்தியசாலைக்கெல்லாம் போய் அதற்கு மேல் செலவழித்து மன உளச்சலுக்கு ஆளாகி, மன உளச்சலுக்கு உள்ளாக்கி என நினைத்தேன்.

ஆனால் உங்களது கருத்துகளை பார்க்கும் போதுதான் புரிகிறது.

On 19/11/2022 at 05:02, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

கிருபன் இவரது கதைகளை இணைத்தால் நேரம் கிடைக்கும் போது வாசிக்க தற்போது ஆவலாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

கிருபன் இவரது கதைகளை இணைத்தால் நேரம் கிடைக்கும் போது வாசிக்க தற்போது ஆவலாக உள்ளது.

ஆசான் ஜெயமோகனின் தளத்தில் பல நூறு கதைகள் உள்ளன. படித்தவற்றில் சிலவற்றை இடைக்கிடை யாழில் இணைப்பதுண்டு.

 

யாழில் கடைசியாக இணைத்த கதை!

 

இன்னொரு சுவாரசியமான நெடுங்கதை!

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆசான் ஜெயமோகனின் தளத்தில் பல நூறு கதைகள் உள்ளன. படித்தவற்றில் சிலவற்றை இடைக்கிடை யாழில் இணைப்பதுண்டு.

 

யாழில் கடைசியாக இணைத்த கதை!

 

இன்னொரு சுவாரசியமான நெடுங்கதை!

 

நன்றி கிருபன், கதைகளை சும்மா ஒரு பொழுதுபோக்காகவே முன்பு வாசிப்பதுண்டு அதனால் அதன் காத்திரங்களை கவனத்தில் எடுப்பதில்லை, தற்போது உங்களது கருத்துகளை பார்க்கும் போதுதான் தேர்வு செய்து வாசிக்கவேண்டும் எனும் எண்ணம் உருவாகியுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.