Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாறையில் கடல் கொந்தளிப்பு : கடலரிப்பால் கரையோரப் பகுதிகளுக்கு பாரிய சேதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

ங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை,  நிந்தவூர், ஒலுவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேக அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. இதனால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, காலநிலை மாற்றங்கள் காரணமாக கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதனாலும், கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

DSC_0563.JPG

மேலும், அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய  கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

இதேவேளை மருதமுனை கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவுகொள்ளப்பட்டுள்ளதுடன், ஏராளமான தென்னை மரங்கள் சரிந்து விழுந்து, பெருமளவு சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. 

இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்  கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கடலரிப்பினால் கல்முனை கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

கடந்த சுனாமி பேரலை தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்துவரும் கடலரிப்பினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு,  அங்குள்ள மீனவர்கள் தொழில் செய்வதில் பேரிடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

DSC_0521.JPG

DSC_0546.JPG

DSC_0556.JPG

DSC_0550.JPG

DSC_0561.JPG

DSC_0564.JPG

fb1.JPG

DSC_0567.JPG

fb5.JPG

அம்பாறையில் கடல் கொந்தளிப்பு : கடலரிப்பால் கரையோரப் பகுதிகளுக்கு பாரிய சேதம்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதலாவது  படம் இருந்த பகுதியை கூட அரித்திருக்கலாம்...🙃

  • கருத்துக்கள உறவுகள்

தனி சுகங்கள் எப்படி? உங்கள் பகுதி பாதுகாப்பாக உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

அந்த முதலாவது  படம் இருந்த பகுதியை கூட அரித்திருக்கலாம்...🙃

அவங்க எம் பி மார் உடன் ஓடி வருவார்கள் நிந்தவூரில் கற்கள் இடப்படுகிறது  அரிப்பான  இடங்களில் நம்ம பகுதியை பார்க்க கூட ஆட் கள் இல்லை 

16 hours ago, nunavilan said:

தனி சுகங்கள் எப்படி? உங்கள் பகுதி பாதுகாப்பாக உள்ளதா?

பாதுகாப்பு என்பதற்கில்லை இருக்கிறோம் கடல் அமைதியாகிவிட்டது வானம் மப்பும் மந்தாரமும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவங்க எம் பி மார் உடன் ஓடி வருவார்கள் நிந்தவூரில் கற்கள் இடப்படுகிறது  அரிப்பான  இடங்களில் நம்ம பகுதியை பார்க்க கூட ஆட் கள் இல்லை 

 

அவை இப்ப கொழும்பிலை பெட்டி பிரிப்பதற்கு ஒத்திக்கை பார்க்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

அவை இப்ப கொழும்பிலை பெட்டி பிரிப்பதற்கு ஒத்திக்கை பார்க்கினம்....

பெட்டிய வேண்டிய பிறக ஏசிற மாதிரி ஏசுவாங்களாம் அரசுக்கு நாம அத நம்பணுமாம்🙄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.