Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இந்தியாவை பிரதிபலித்து பறக்கவிடப்பட்ட பட்டங்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்தியாவை பிரதிபலித்து பறக்கவிடப்பட்ட பட்டங்கள் !

By DIGITAL DESK 5

23 JAN, 2023 | 01:33 PM
image

இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை  முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

IMG-20230122-WA0020.jpg

இந்தியக் கொடியின்  நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டது.

IMG-20230122-WA0019.jpg

இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/146489

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்

என்னது ஆசாரிட ஆட்டுகுட்டி மசக்கை ஆயிடுத்தா?

இங்கேயும் வந்துட்டானுகளா பானிபூரிய தூக்கிகிட்டு🤬

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எமக்கான தீர்வைத் தரப்போவதில்லை அல்லது தர விடப்போவதில்லை என்பது தெரிந்தும் தமிழர்கள் ஏன் இன்னும் இந்தியாவின் பின்னால் அலைய வேண்டும்? அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இப்போது கூட இந்தியா இலங்கையின் பக்கமே நிற்கும் என்று கூறியிருக்கிறார். இலங்கையைக் காப்பாற்றி, தான் இலங்கைக்கு நெருக்கமான நாடு என்று காட்டுவதில் இருக்கும் அக்கறை, தானே முன்னின்று செய்த 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையினை முற்றாக அமுல்ப்படுத்துங்கள் என்று இலங்கையிடன் கோருவதில் இந்தியாவுக்கு இல்லை என்பது பலமுறை வெளிப்படுத்தப்பட்டு விட்டது, ஆனால் நாம் இன்னமும் தந்தையர் நாடு என்று சொல்லிக்கொண்டு நிற்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இந்தியா எமக்கான தீர்வைத் தரப்போவதில்லை அல்லது தர விடப்போவதில்லை என்பது தெரிந்தும் தமிழர்கள் ஏன் இன்னும் இந்தியாவின் பின்னால் அலைய வேண்டும்? அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இப்போது கூட இந்தியா இலங்கையின் பக்கமே நிற்கும் என்று கூறியிருக்கிறார். இலங்கையைக் காப்பாற்றி, தான் இலங்கைக்கு நெருக்கமான நாடு என்று காட்டுவதில் இருக்கும் அக்கறை, தானே முன்னின்று செய்த 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையினை முற்றாக அமுல்ப்படுத்துங்கள் என்று இலங்கையிடன் கோருவதில் இந்தியாவுக்கு இல்லை என்பது பலமுறை வெளிப்படுத்தப்பட்டு விட்டது, ஆனால் நாம் இன்னமும் தந்தையர் நாடு என்று சொல்லிக்கொண்டு நிற்கிறோம். 

இந்தியாவுக்கு இலங்கை வேறு, இலங்கையினுள் உள்ள தமிழர் பிரச்சனை வேறு. வெளியாளாக, அது தனது நலன்களுடன் இலங்கை என்னும் போது அது சீனாவுடன் சேர்த்தே பார்க்கும். ஆகவே, இரண்டையும் குழப்பாமல் இதனை பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து.

அதே இந்தியா, எமது மறை கழண்ட அரசியல் வாதிகளை அழைத்து, உங்கள் உள்ளூர் தேர்தல் பிரச்சனைக்கு பிரிந்திருக்கும் அதேவேளை, ஒன்றாக, பலமாக, உங்கள் உரிமைகளை வென்றெடுங்கள் என்று சொல்லி இருக்கின்றது.

அதாவது, உள்வீட்டு பிரச்சனைக்கு வெளியார் வரவேண்டும் என்று நினைக்காமல், கடனால் பலமிழந்துள்ள அரசிடம், பேசி, வாங்குவதை வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறது.

சாடை அறியாதவன் சர்வ முட்டாள் என்பார்கள். பின்னால் இருந்து இனவாதம் பேசுபவர்களை கிளப்பி விட்டுக் கொண்டிருந்த, மகிந்தா கொம்பனிக்கு, கனடா மூலம் பலமான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. முரண்டு பிடித்த கமன்பில்ல அடக்கி வாசிக்கிறார்.வாயை திறந்த விமல் வீரவன்ச, ஒரு வழக்குடன் பதுங்கி விட்டார். சரத் வீரசேகர மட்டுமே சவுண்டு கொடுக்கிறார். அவருக்கும் ஒரு ஆப்பு இறுகும்.

இவைகளை புரிந்து, வெட்டி ஆடாமல், நமது அரசியல்வாதிகள் இந்தியா மத்தியஸ்தத்துக்கு வரவேண்டும் என்பது குழந்தைத்தனமானது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

இவைகளை புரிந்து, வெட்டி ஆடாமல், நமது அரசியல்வாதிகள் இந்தியா மத்தியஸ்தத்துக்கு வரவேண்டும் என்பது குழந்தைத்தனமானது.

நீங்கள் முன்னர் டெல்லியில் பேச்சுவார்த்தையில் புளொட் சார்பாக கலந்து கொண்ட அர்ஜூன் அண்ணா இந்திய அணுகுமுறை பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா?

இந்திய மத்தியஸ்தம் வேண்டும் என இவர்களை கேட்க சொல்லுவதும் - சாட்சாத் இந்தியாவேதான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இவைகளை புரிந்து, வெட்டி ஆடாமல், நமது அரசியல்வாதிகள் இந்தியா மத்தியஸ்தத்துக்கு வரவேண்டும் என்பது குழந்தைத்தனமானது.

ஒரு உள்ளூராட்சித் தேர்தலை சரியான ஆலோசனை, வழிநடத்தலில் ஒற்றுமையாக சந்திக்க முடியாமல் ஏழு பிரிவாய் நிக்கும் இவர்கள்? விளங்கின மாதிரித்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசியா பக்கம் இந்தியா முக்கிய நாடு. இந்தியாவிற்கு ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறையில்லை. விருப்பமுமில்லை. எனவே இந்தியாவை மீறி எந்தவொரு மேற்குலக சனநாய்க நாடுகளும் ஈழத்தமிழர்க்கு உதவப்போவதில்லை.:cool:

நாமளும் ஜெய்கிந்த் சொல்லி பானிப்பூரிய அமுக்க வேண்டியதுதான். :smiling_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

மிகக் கிட்டின இடத்தைப் பிடித்து தலைநகர் ஆக்கப் போகினம்...எதுக்கும் சீனாக்காரன் வரமுன்னம் முந்துங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து அணைத்துக்கொள்ள விருப்பமில்லை. அடாத்தாக நுழையும் எதுவும் நிலைத்துநிற்காது, எப்பவும் தப்புவதற்கு, உடைப்பதற்கும் சமயம் தேடிக்கொண்டே இருப்பார்கள். நல்ல தலைமை இல்லை. என்னவோ சொல்வார்கள் "அப்பன் இல்லாத பிள்ளையின் தலையில்  எல்லோரும் சிரைத்து பழகுவார்களாம்" என்று. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் காட்டியும் கூட்டியும் கொடுப்பவர்கள், தாங்களும் அதற்குள் உள்ளடங்குவார்கள் என்பதை உணர மறுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, alvayan said:

மிகக் கிட்டின இடத்தைப் பிடித்து தலைநகர் ஆக்கப் போகினம்...எதுக்கும் சீனாக்காரன் வரமுன்னம் முந்துங்கோ..

எந்த இடம்? எந்த இடம்? எனக்கும் சொல்லுங்கோ? :grinning_face_with_big_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

எந்த இடம்? எந்த இடம்? எனக்கும் சொல்லுங்கோ? :grinning_face_with_big_eyes:

ஏன் படையளை அனுப்பப்போகிறீர்களோ தடுக்க? விஜயன், சங்கமித்தை வந்திறங்கிய இடமாக இருக்குமோ? அதுக்கு தேவையில்லை, இப்ப பலாலியில நோகாமல் வந்திறங்குவினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, satan said:

இப்ப பலாலியில நோகாமல் வந்திறங்குவினம்.

சிங்கள உடன்பிறப்புகள் இது சிங்கள நாடு என கோபித்து வெகுந்தெழ மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

30 லட்சம் கணக்கு காட்டி 3 லட்சத்திற்கு பட்டம் வாங்கி மிகுதி 27 லட்சம் பொக்கற்றில் விட்டிருந்தா ரொம்ப சந்தோசபடுவன்..

டிஸ்கி 

கிந்தியனிடம் தற்போதைக்கு  செய்யக்கூடிய வழி இதுவே..👍 சிங்கனுக்கு போட்டியாக கறக்க வெளிக்கிடனும்..👌

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிங்கள உடன்பிறப்புகள் இது சிங்கள நாடு என கோபித்து வெகுந்தெழ மாட்டார்களா?

அவர்கள் உற்ற நண்பர்கள் தமிழன்தான் எல்லோருக்கும் எதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

எந்த இடம்? எந்த இடம்? எனக்கும் சொல்லுங்கோ? :grinning_face_with_big_eyes:

வல்வெட்டித்துறைதான்  சாமியர்...புதுப்படம் பாக்கப்பொறதூரம் என்றால் பருத்தித்துறையளவு தூரம்தானே வரும் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.