Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!

“வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!

யாழ்.மாநகர சபையில் சிலர் “வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி “சபையில் சிலரின் செயற்பாடுகள் வைக்கோல் பட்டறை நாய்” போன்றுள்ளது என கூறியிருந்தார்.

அதனால் சபையில் சில உறுப்பினர்கள் கடும் ஆவேசமடைந்து அமளியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து “வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரை வெளியேற்றுமாறு முதல்வரை கோரினர்.

“நீங்கள் என்னை வெளியேற்ற தேவையில்லை.  நானே வெளியேறுகிறேன் ” என கூறி உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறி சென்றார்.

குறித்த உறுப்பினர் சபையில் கூறியது அநாகரீகமானது. அதனை சபை குறிப்பேட்டில் பதிய வேண்டும். சபை உறுப்பினர்களின் வேண்டுகோளினால், உறுப்பினர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சபையில் அநாகரீகமான வார்த்தை பிரயோகித்தமையால், அவரது ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்வதுடன், இந்த மாதத்தில் சபையின் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அவர் அனுமதிக்கப்படமாட்டார் என சபையில் தீர்மானிக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

https://athavannews.com/2023/1324271

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர்.

ஒரு மாத சம்பளம் எவ்வளவு?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புத்தகத்தில் இந்த பழமொழி படித்தது போன்ற நினைவு எனக்கு. இது மக்களிடையே அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழியும் ஆகும். 

இந்த பழமொழி அநாகரியமானதா? எப்போது தொடக்கம்??

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழமொழி இதே பொருள்பட  தானும் படுக்கான் தள்ளியும் கிடவான் என்றும் பழமொழி உண்டு. பழமொழி கூறியதற்கு  இந்தத் தண்டனை பொருத்தமற்றது;. எந்தக் கெட்ட சொல்லும் பாவிக்கப்படவிலை;லை. நாய் என்ற சொல்தான் உறுத்தியது என்றால் யாழ்மாநகரசபை நாய்கள் தொடர்பான விடயங்களைக் கதைக்க வே முடியாது;. அப்புறம் எப்படிக் கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்ற முடியும். பாதீட்டைை ஆதரிக்காமல் எந்த அபிவிருத்தியையும் செய்ய விடாமல்தடுக்கும் உறுப்பினர்களுக்கு அது உறுதியிலருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். தொப்பி அளவான உறுப்பினர்கள் ஆவேசமடைந்திருப்பார்கள், அவர்களுக்குத்தான் அதன் அர்த்தம் சரியாக விளங்கியிருக்கு என்பதைவிட பொருந்தியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளோ தன கொல கண்ணத் நா, கண கொணாட்ட கண்ண தென்னத் நா…..

என சொல்லி இருந்தால் ஆர்னோல்ட் அப்படியே விட்டிருப்பார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2023 at 01:32, தமிழ் சிறி said:

சபையில் அநாகரீகமான வார்த்தை பிரயோகித்தமையால், அவரது ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்வதுடன், இந்த மாதத்தில் சபையின் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அவர் அனுமதிக்கப்படமாட்டார் என சபையில் தீர்மானிக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

முதல்வருக்கும் அந்தப்பழமொழியின் அர்த்தம் புரியவில்லை என்பதே இந்தசெயற்பாட்டின் மூலம் வெளிப்படுகிறது. அவர் நாய் என்று யாரையும் விளிக்கவில்லை, சிலரின் செயல், போன்றுள்ளது என்றே உவமானப்படுத்தியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் உறுப்பினர் பா.பத்மமுரளி “வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுவதாக” தெரிவித்தார்.

இதற்காக உறுப்பினர் பா.பத்மமுரளி மாநகர சபை நடவடிக்கையில் பங்கேற்க ஒரு மாததிற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநகர முதல்வருக்கு எதிராகவும் குறித்த தீர்மானத்துக்கு எதிராகவும் அவரால் உள்ளூராட்சி ஆணையாளர் பிரணவநாதனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

https://athavannews.com/2023/1324580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.