Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர் அலி சப்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர் அலி சப்ரி

Published By: DIGITAL DESK 5

22 FEB, 2023 | 02:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 

தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களது மொழி மற்றும் கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதற்கு  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர முதலீடுகள் சட்டமூலம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன மற்றும் மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் பல் தன்மை ஒருமைப்பாட்டுடன் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பயணமே வெற்றி பெற முடியும் அதன் மூலமான பொருளாதார முன்னேற்றமே நிலையானதாக அமையும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல் தன்மை  ஒருமைப்பாட்டுடனான பயணம் எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்.

அவ்வாறான நிலை ஏற்படும் போது தான் எம்மால் சுயாதீனமாக செயல்பட முடியும்.அவ்வாறில்லாவிட்டால் எப்போதும் சர்வதேசத்திற்கு கடன்காரனாகவே நாம் இருக்க நேரிடும். அப்போது எமது நாட்டின் சுயாதீனம் என்பது வெறும் கனவாகவே  அமையும்.

அதேபோன்று எந்த நாட்டுடனும் நாம் பகைமையுடன் செயல்பட முடியாது அனைத்து நாடுகளுடனான நல்லுறவு எமக்கு மிக அவசியமானது. குறிப்பாக மேற்கத்தைய நாடுகளுடனான சிறந்த நல்லுறவு அவசியமாகும்.

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது.அந்த வகையில் சர்வதேச நாடுகளுட னான நல்லுறவுக்கு முன்னாள் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் செயற்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது என்றும் மறந்து விடக் கூடாது என்றார்.

https://www.virakesari.lk/article/148845

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது

சப்ரியின்  அண்டப்புழுகு என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nunavilan said:

சப்ரியின்  அண்டப்புழுகு என நினைக்கிறேன்.

காசு பணம் துட்டு மணி மணி

இது வாங்குமட்டும் இதற்கு மேலேயும் பேசுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல் தன்மை  ஒருமைப்பாட்டுடனான பயணம் எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்.

 

5 hours ago, ஏராளன் said:

எமது நாட்டின் சுயாதீனம் என்பது வெறும் கனவாகவே  அமையும்.

சிங்கள, பவுத்தத்தின் இருப்பு கேள்விக்குறியாகி விடும், இறுகுகிறதோ? இனவாதத்தை, பிக்குகளை உசுப்பிவிட்டு சாதித்ததெல்லாம் இப்போ அவர்களுக்கு எதிராக திரும்புகிறது போல் தென்படுகிறதே இவரின் அறிக்கை.  பந்தை விட்டெறிந்தால்  அது பட்டதுபோல் திரும்பி வந்து தாக்கும்  என்பதை யோசிக்கவில்லை எறியும்போது. 

5 hours ago, ஏராளன் said:

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது.

இவர்களின் இந்த அறிக்கை இந்தியாவுக்கு இருக்கும் மன அழுத்தத்தை கூட்டுவதோடு தூக்கமும் இல்லாமல் செய்யபோகுது. போர் விமானம்   அனுப்புமா? தூதுவரை அனுப்பி அதிருப்தியை தெரிவிக்குமா? இந்த அறிக்கைக்கு எதிராக, போரை வெல்வதற்கு  தான் செய்த உதவிகளை வெளிப்படையாக பட்டியலிட முடியுமா  இந்தியாவால்?   பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டி பிழைத்த இலங்கை சரியாக மாட்டப்போகுது என நினைக்கிறன். இனி பிக்குகளும், குழப்பிகளும் அடக்கி வாசிப்பினம்.    

  • கருத்துக்கள உறவுகள்

காக்கா மொட்டையள் பற்றி விளங்கித் தானோ கதை அளக்கிறார். பக்கத்து இலைக்கு பாயாசமோ அல்லது முஸ்லீம்களுக்கு தனிய சொல்வரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.