Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு அனுமதிக்க முடியாது – செல்வம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு அனுமதிக்க முடியாது – செல்வம்

யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு அனுமதிக்க முடியாது – செல்வம்

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எவ்விதத்திலும் உடன்பட முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தெல்லிப்பழையில் எரிக்க முடியாது எனவும் வரும் காலங்களில் வவுனியாவில் எரிப்பதற்கான முடிவை வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இவ்வாறான   முடிவை எடுப்பதற்கு முன் வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அலுவகத்திற்குள் இருந்துகொண்டு எடுக்கும் முடிவுகள் சமூகங்களுக்கிடையில் பிரிவினையையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தும். இதனை அதிகாரிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் தற்போது ஓமந்தை வைத்தியசாலை எரியூட்டும் நிலையத்தில் எரியூட்டப்படுவதால் அருகாமையில் உள்ள ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளையும் வவுனியாவில் எரிக்க முற்படுவதானது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும்.

எனவே புதிய பொறிமுறைகளையும் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவத்தினூடான புதிய செயற்றிட்டங்களையும் கையாண்டு யாழ் போதனா வைத்தியசாலை கழிவுகளை யாழ்ப்பாணத்திலேயே எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1325394

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அற்ற தொலைதூரத் தீவொன்றில் வைத்து பாதுகாப்பான முறையில் நச்சு வாயுக்களை வடிகட்டி எரிக்கலாம் தானே. எதற்கு மக்கள் நிறைந்த இடங்களில் இதை செய்யனும்..??!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே யாழ்ப்பாணபகுதியில் சன நடமாட்டம் இல்லாத கன குட்டித்தீவுகள் இருக்கெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

Idea Illatha Pasanga - YouTube

ஐடியா இல்லாத பசங்க!

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அற்ற தீவில் யார் வேலைக்கு செல்வது? 

இரவோடு இரவாக எல்லாவற்றையும் திருடி விடுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை ; யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்

Published By: T. SARANYA

27 FEB, 2023 | 12:52 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ்  போதனா  வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ் போதனா  வைத்தியசாலையில் இன்று திங்கட் கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா  வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு வந்திருந்தது.

இதேநேரம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக கொரோனா நோயாளர்கள் பாவிக்கும் அனைத்து உடைமைகளும் எரிக்க வேண்டிய  நிலை காணப்பட்டதால்,  அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட திருத்த வேலை காரணமாக தொடந்து தெல்லிப்பழையில் எரிப்பதில் இடர்பாடான நிலை காணப்படுகிறது.

இப்போது நாம் வைத்தியசாலைக்கு என தனியான ஒரு எரியூட்டி இயந்திரத்தினை பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் பொருத்தி பாவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு யாழ்ப்பாண மாநகர சபையுடன் கலந்துரையாடி கோம்பையன் பகுதியில் மக்களுக்கு  பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது.  கோம்பையன்  பகுதியானது எரியூட்டி அமைப்பதற்கு பொருத்தமான இடம் இல்லை எனவும் மாற்று இடம் ஒன்றினை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது 

வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம்தொடர்பில் கலந்துரையாட உள்ளோம். அதேபோல் அந்த நிலைமை கைகூடும் வரை  வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தனியார் நிறுவனங்கள் மூலம் எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எரியூட்டி நிலையத்தினை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படும் அதேபோல மருத்துவ கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது. தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை வழமை போல் வைத்தியசாலையில் சேவைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. வழமைபோல் பொதுமக்கள் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்ள முடியும். எந்த ஒரு வைத்தியசாலையிலும் மருத்துவ கழிவு என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும்.

எனினும் விரைவில் எமது  வைத்தியசாலைக்கென தனியான எரியூட்டி ஒன்று அமைப்பதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

https://www.virakesari.lk/article/149246

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.