Jump to content

இனியவள் ரசித்த சினிமா பாடல்கள்


Recommended Posts

படம் : மொழி

பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா

கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா

சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி

உனது கோபங்களும் ஏனடி

உனது சில்லென்ற கண் பாரடி பாரடி

எனது சாபங்களை தீரடி

(கண்ணால்)

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே

குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே

பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே

பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்

மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்

வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி

சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)

(கண்ணால்)

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி

கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி

செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்

பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்

காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்

வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்

வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி

இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)

(கண்ணால்)

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply

நீங்க இரசிச்ச பாட்டு நல்லா இருக்கு அதை நாங்களும் இரசிக்க போட்டமைக்கு நன்றிகள் :rolleyes:

Link to comment
Share on other sites

படம் : 12B

பாடல் பூவே வாய் பேசும் ..

இசை: Harris Jayaraj

பாடியவர்: Harish Ragavendra , Mahalakshmi

பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு

பூவின் பொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்

என்னைத் தாண்டிப் போனால் நான் விழுவேன்

மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடித்தூடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால் களித்திருப்பேன் அன்பே

(பூக்களை...)

காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்

கைக்கொட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்

உன் சுவாசப் பாதையில் நான் சுற்றி திரிவேன்

(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய் என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை

நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை

(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு

உன் நெஞ்சுக்குள்ளே என்னை துளி நீரைச் சிந்திடு

என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு

( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது இன்று நீ சொன்னது

Link to comment
Share on other sites

எனக்கு என்றும் பிடித்த ஓர் பாடல்!! :P

படம்: இந்திரா

பாடியவர்: ஹரினி??

பாடல் வரிகள்: வைரமுத்து

ஆ... ஆ... ஆ.... ஆ...

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது! யாரும் சுகிக்கவில்லையே!

சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே!

ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை!

என்றென்றும் வானில்!!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

அதோ போகின்றது! ஆசை மேகம்! மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!

இதோ கேட்கின்றது குயிலின் பாடல்! இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!

இந்த பூமியே பூவனம்! உங்கள் பூக்களை தேடுங்கள்!

இந்த வாழ்கையே சீதனம்! உங்கள் தேவையை தேடுங்கள்!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது! யாரும் சுகிக்கவில்லையே!

சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

Link to comment
Share on other sites

கலைஞன் உங்களாள் முடிந்தால் ,

பாடல் வரிகளையும் இனைத்து விடுங்கள்,

பிறறுக்கு இது உதவலாம்!!! :rolleyes:

Link to comment
Share on other sites

திரைப்படம் : ஆழ்வார் (2006)

இசை : ஸ்ரிகாந்த் தேவா

இயக்கம் : செல்லா

பாடியவர்கள் : மதுஷ்ரி

நடிப்பு : அஜித்,அஸின்

பெண்

பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்

ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும் (பிடி)

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்

அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்

அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்

அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும் (பிடி)

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்

காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்

ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்

தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்

உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்

உன்னோட வார்த்தைகள் எல்லாமே; பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்

நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்

அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்

அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்

காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்

அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்

ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும் (பிடி)

Link to comment
Share on other sites

ஏன் எல்லாரும் உங்களுக்குப்பிடிச்ச பாட்டெண்டுட்டு எனக்கு பிடிச்ச பாட்டை போடுறீங்க.. :rolleyes:

பரவாயில்லை நிறைய போடுங்கோ.. :)

Link to comment
Share on other sites

படம்: AH AAH (BEST FRIEND)

பாடியது: Madhusri, Naresh Iyer

மயிலிறகே! மயிலிறகே! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை!

மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல்!

அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!

வான் உள்ள வரை வாழும் பாடல்!

மயிலிறகாய்! மயிலகாய்! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவாய்! மழை நிலவாய்! விழியில் எல்லாம் உன் உலா.....

உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே!

தமிழா! தமிழா! தமிழா! உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்! கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!

உனக்கும் எனக்கும் விருப்பம் - அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!

ஊர் உறங்கட்டும்! உறைப்பேன் கேளு!

மயிலிறகே! மயிலிறகே! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

வருடுகிறாய்....மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

Link to comment
Share on other sites

படம்: ஆறு

பாடியவர்: கோபிகா பூர்ணிமா

நெஞ்சம் எனும் ஊரினிலே!

காதல் எனும் தெருவினிலே!

கனவு எனும் வாசலிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

வாழ்க்கை எனும் வீதியிலே!

மனசு எனும் தேரினிலே!

ஆசை எனும் போதையிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

நான் தனியாய் தனியாய் நடந்தேனே!

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே!

ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே!

காதலாலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே!

காதல் எனும் தெருவினிலே!

கனவு எனும் வாசலிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்றும் பிடித்த ஓர் பாடல்!! :P

படம்: இந்திரா

பாடியவர்: ஹரினி??

பாடல் வரிகள்: வைரமுத்து

நன்றி கலைஞன்

இப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. ஹரினியின் முதல்பாடல் இது தான் என நினைக்கின்றேன்.

இதில் அவதானித்த என்னுமொரு விடயம் என்னவென்றால் நிலாக் காய்கின்றது என்ற பாடலில் குழந்தை நட்சத்திரமாக இருக்கின்ற சிறுமி தான் 23ம் புலிக்கேசியில் வடிவேலுக்கு கீழ்வரும் பாடலில் ஜோடியாக நடித்திருப்பவர் போலத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

நன்றி தூயவன்... பாட்டு நல்லா இருக்கு. அதில வடிவேலின்ர ஆட்டம் ரசிக்கத்தக்க வகையில் நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது சரியாக இருக்ககூடும். இந்திரா படம் 2000 இல் வந்தது என நினைக்கின்றேன். புலிகேசி 2006 இல் தானே வந்தது? ஆறு வருடங்களில் சிறுமி பெரிய ஆளாக வளர்ந்து இருக்கலாம். முகம், சாயல் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கு. சிலது சிறுமியின் அக்காச்சியோ தெரியாது.

Link to comment
Share on other sites

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

Link to comment
Share on other sites

படம்: முத்து

பாடியவர்கள்: மனோ, சுஜாதா

பாடல் வரிகள்: வைரமுத்து

ஓ... ஓ... ஓ...

தில்லானா! தில்லானா! தித்திக்கின்ற தேனா?

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

தில்லானா! தில்லானா! தித்திக்கின்ற தேனா?

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

ஓ மஞ்சக் காட்டு மைனா! என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா!

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

ஓ... ஓ... ஓ...

கண்ணு வெச்சதும் நீதானா?

வெடி கண்ணி வெச்சதும் நீதானா?

கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா?

(தில்லானா)

[இஞ்ச - இந்த பீசில மியூசிக் சூப்பரா இருக்கும் :P ]

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை!

தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை!

கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை!

மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை!

கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா?

அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா?

முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா?

முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா?

தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா?

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...

திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு!

கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன?

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே!

கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே!

மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே!

மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே!

சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே!

சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே!

கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே!

(தில்லானா)

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் பேபிக்கு என்ன பாட்டு விருப்பம் என்று தெரிந்து போடுறீங்க மிக்க நன்றி எல்லா பாட்டும் எனக்கு ரொம்ப நல்லா பிடித்து கொண்டது........ :)

Link to comment
Share on other sites

இனியவள்,கலைஞன் இருவருக்கும்

வணக்கங்கள்.

அருமையான பாடல்களை இணைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.

எனது விருப்பமான பாடலான (ஆசை பட்ட எல்லாத்தையும் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா)

பாடலை முடிந்தால் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

பாடல்: உன்னோடு வாழாத வாழ்வென்ன

குரல்: சித்ரா

வரிகள்: வைரமுத்து

படம். அமர்க்களம்.

இசை. பரத்வாஜ்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

Link to comment
Share on other sites

படம்: பூவெல்லாம் உன் வாசம்

பாடியவர்: சுவர்ணலதா

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே!

நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்

வேறு இல்லை!

ஞாயிறுக்கும் திங்களுக்கும்

தூரம் இல்லை!

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

தாலி கொள்ளும் பெண்கள் -

தாயை நீங்கும்போது -

கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு!

மாடி கொண்ட ஊஞ்சல் -

மடிமேல் கொஞ்சும் பூனை -

சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு!

அந்த நிலை இங்கே இல்லை!

அனுப்பி வைக்க வழியே இல்லை!

அழுவதற்கு வாய்ப்பே இல்லை!

அதுதான் தொல்லை!

போனவுடன் கடிதம் போடு!

புதினாவும் கீரையும் சேரு!

புத்திமதி சொல்லும் தாயின்

மொழியே இல்லை!

ஏன் என்றால் சுவர் தான் உண்டு!

தூரம் இல்லை!

இப்படி ஓர் நல்லுறவு

வாய்த்திடுமா?

வீட்டுக்குள் விண்மீன்கள்

காய்த்திடுமா?

திருமண மலர்கள் தருவாயா?

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

கன்னம் கிள்ளும் மாமி!

காதை திருகும் மாமா!

என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு?

மாதம் பத்து செல்ல -

மழலை பெற்றுக்கொள்ள -

அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு!

பாவாடை அவிழும் வயதில்

கைறு கட்டிவிட்டவன் எவனோ?

தாலி கட்ட வந்தவன் அவனே!

உறவானவன்!

கொழுசுயிடும் ஓசை கேட்டே -

மனசில் உள்ள பாஷை சொல்வாய்!

மழை நின்ற மலரை போல

பதமானவன்!

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய்

கூடியவன்!

தெய்வங்களும் எங்களைதான்

நேசிக்குமே!

தேவதைகள் வாழ்த்து மடல்

வாசிக்குமே!

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே!

நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்

வேறு இல்லை!

ஞாயிறுக்கும் திங்களுக்கும்

தூரம் இல்லை!

Link to comment
Share on other sites

கல்யாண தேன் நிலா,உன்னோடு வாழாத வாழ்வென்ன ,மயிலிறகே! மயிலிறகே ஆகிய 3 பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்கள்.இணைத்த கலைஞன்,இனியவளுக்கு நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

படம்: உன்னுடன்

பாடல் : கோபமா என்மேல்...

இசை : தேவா

பாடகர்:ஹரிகரன்

கோபமா என்மேல் கோபமா

பேசம்மா ஒரு மொழி பேசம்மா

என் பாலைவனத்தில் உந்தன்

பார்வையாறு வந்து பாய்ந்திடுமா

உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்

ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா

உள் உரிரே உருகுதம்மா... ஆ..

(கோபமா)

உன் பார்வை வடிகின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி

உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி

கோபமா என்மேல் கோபமா

என் மார்பு தீரடி பெண்ணே

அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே

கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா

(கோபமா)

நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை

நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை

கோபமா என் மேல் கோபமா

என் கண்ணில் ஏனடி வந்தாய்

என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்

மெனங்கள் மொழிகளின் வேசமம்மா மறுமொழி இன்று பேசிடம்மா

(கோபமா)

http://www.tamil.tamilsongs.net/page/player.cgi?3437

Link to comment
Share on other sites

படம் : சிந்து பைரவி

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

குரல் : சித்ரா

நானொரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்லை

உள்ள சோகம் தெரியவில்லை

தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்லை

அதச் சொல்லத்தெரியவில்லை

(நானொரு சிந்து.........)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு

விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு

பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு

என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு

கண்டுபிடி........

(நானொரு சிந்து...)

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே

தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன

சொல்லுங்களேன்...

(நானொரு சிந்து.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்! மிக நல்ல பாடல்கள். :):)

Link to comment
Share on other sites

திரைப்படம்: காதலன்

பாடகர்: உன்னிகிருஷ்ணன்

இசையமைத்தவர்: ஏ.ஆர். ரஹ்மான்

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று

உந்தன் காலடி தேடி வந்தேன்

காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று

உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்

எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து

இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே.............)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்

உன் வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே...............)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக்

கும்பிட்டுக் கண்ணடிப்பேன்

கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு

உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க

உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்

வடிகட்டி அனுப்பி வைப்பேன்

என் காதலின் தேவையை

காதுக்குள் ஓதி வைப்பேன்

உன் காலடி எழுதிய கோலங்கள்

புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே..........)

Link to comment
Share on other sites

படம்: பூவெல்லாம் உன்வாசம்

பெண்: நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

ஆஆஆஆ....

பெண்: தூங்காத காற்றே! துணை தேடி ஓடி!

என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா?

ஆண்: நில்லாத காற்று! சொல்லாது தோழி!

நீயாக உந்தன் காதல் சொல்வாயா?

பெண்: உள்ளே எண்ணம் அரும்பானது!

உன்னால் இன்று ருதுவானது!

ஆண்: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது!

தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

பெண்: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்!

உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்!

ஆண்: நீ வந்து போனால் என் வீடு எங்கும்!

உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்!

பெண்: கனா வந்தால்! மெய் சொல்கிறாய்!

கண்ணில் கண்டால்! பொய் சொல்கிறாய்!

ஆண்: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்!

தன்னன்னானன!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

http://ww.smashits.com/player/flash/flashp...m?SongIds=32633

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=316553

Link to comment
Share on other sites

படம்: கிச்சா வயது 16

பாடல்:சில நேரம் சில பொழுது

இசை: தீனா

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம்

இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம்

சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான்

சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

வானம் தலையில் மோதாது

பூமி நகர்ந்து போகாது

நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை

தொலைந்து ஒன்றும் போகாது

சோகம் என்றும் முடியாது

கவலை என்றும் அழியாது

இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால்

வாழ்க்கை என்றும் தோற்காது

நெஞ்சே ஓ! நெஞ்சே தடையாவும் துரும்பு

தீயாய் நீ ஆனால் மெழுகாகும் இரும்பு

தோல்வி அவையேல்லாம் சில காயத்தழும்பு

ஏறு முன்னேறு உளியோடு திரும்பு

பறவை அதற்கு இறகு சுமையா

தோல்வி ஒரு தடையா

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

உனது கண்கள் அழும்போது

எந்த விரலும் துடைக்காது

விரலைநம்பி நீயும் நின்றால்

வந்த பாரம் தீராது

இன்று வந்த ராஜாக்கள்

நேற்று என்ன செய்தார்கள்

தோல்வி வந்து தீண்டும்போது

தன்னை நம்பி வாழ்ந்தார்கள்

கோடு அது நீள புது கோலம் பிறக்கும்

மேடு அதில் எறும் நீர் வேகமெடுக்கும்

சோகம் அதைவென்றால் ஒரு சக்திகிடைக்கும்

பாதை சில போனால் பல பதைதிறக்கும்

நேற்றை மறப்போம் நாளையொழிப்போம்.

இன்று யெயித்திருப்போம்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம்

இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம்

சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான்

சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது .........

*மிகவும் பிடித்த பாடல்

Link to comment
Share on other sites

படம் :கருத்தம்மா

பாடல் :தென்மேற்குப் பருவக் காற்று

குரல்: உன்னிகிருஷ்ணன், சித்ரா

வரிகள்: வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று

தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்

தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று

சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்

வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட

செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

(தென்மேற்குப்)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்

பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்

பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ

மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ

நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

(தென்மேற்குப்)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி

நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி

ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன

கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து

யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

(தென்மேற்குப்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.