Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி

image_eb20462ab6.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்யில் தற்போது தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார். பின்னர் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்து வந்துள்ளனர்.

 பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன்,  உரிய இடத்திற்கே நோய்காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதில் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல், சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார். நாம் அவருக்கு புதிக ஆடைகளை மாற்றி வைத்தியசாலையிலிருந்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், மேலும் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ளோம். என ஜனநாயக் போராளிகள் கட்சியைச் சேர்ந்த நகுலேஸ் தெரிவித்தார்.
 

 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சடா-முடியுடன்-மீட்கப்பட்ட-முன்னாள்-போராளி/73-313712

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியையும், காணொளியையும் பார்க்க.. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க மிகமிக வேதனையாய் இருக்கிறது........இப்படி இன்னும் எவ்வளவு பேரோ யாரறிவார்........!  😢

  • கருத்துக்கள உறவுகள்

எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கை, விடுதலை புலிகள்

பட மூலாதாரம்,N.NAGULESH

நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி-ப்பளை பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியிலேயே இவர் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலம் குன்றிய நிலையிலேயே அவர் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

குறித்த காட்டுப் பகுதி வழியாக செல்வோர் இவரை பாலா என்ற பெயரை கொண்டே அழைத்துள்ளனர்.

 

தாந்தாமலை பகுதியின் றெட்பாணா எனும் கிராமத்திற்கு அண்மித்த பகுதியிலுள்ள காட்டில் கொட்டகை ஒன்றை அமைத்து இவர் இதுவரை காலம் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் கடந்த நான்கு வருடங்களாக காட்டில் பெரும்பாலும் பழங்களை உட்கொண்டே வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் காட்டு பகுதியை அண்மித்துள்ள பிரதேசத்தில் வாழும் மக்கள், ஏதாவது உணவு பொருட்களை இவருக்கு வழங்கி வந்துள்ளனர்.

இவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்களை கொட்டகைக்கு கொண்டு சென்று, அவற்றை கொண்டு சுகாதாரமற்ற வகையில் உணவுகளை சமைத்து உட்கொண்டுள்ளதாக என்.நகுலேஸ் தெரிவிக்கின்றார்.

''சுகாதார சீர்கேடாக வாழ்ந்து வந்துள்ளார். கொட்டிலில் உணவு சமைத்தால், அந்த பாத்திரங்களை கழுவ மாட்டார். அடுத்த சமையலையும் அதிலேயே சமைத்துள்ளார். மீனை எடுத்து, அரிசியுடன் போட்டு, அப்படியே சமைத்துள்ளார்" என அவர் கூறுகின்றார்.

இலங்கை, விடுதலை புலிகள்

பட மூலாதாரம்,N.NAGULESH

நான்கு வருட காலமாக குளிக்காமல், முடிவெட்டாமல், அதிக நித்திரையின்றி, சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியிலேயே இவர் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறிது காலம் சிலருடன் பழகி வந்த பாலா, பின்னரான காலத்தில் மக்களை கண்டால் காட்டுப் பகுதிக்குள் ஓடி ஒளிந்து விடுவதாக அவர் கூறுகின்றார். காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே, இவர் இந்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.இவ்வாறான நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தகவலளிந்த ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், குறித்த பகுதிக்கு சென்று, பாரிய சிரமத்திற்கு மத்தியில் மூன்று நாட்களின் பின்னர் இவருடன் உரையாடியுள்ளனர்.

முதலில் தம்மை கண்ட பாலா, ஓடி ஒளிந்து கொண்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் கூறினார்.

''இவர் தொடர்பான தகவல் எமக்கு கிடைத்தது. மூன்று நாட்கள் நின்றோம். முதல் நாள் போன போது, ஓடி மறைந்து விட்டார். பின்நேரம் வரை நின்றோம். "பாலா, வா" என்று கூப்பிட்டோம். "எங்களோட இருந்தனீர் தான் என்று சொல்ல, அவருக்கு புரிகின்றது. நீ எங்களோ முல்லைத்தீவுல இருந்தனீர்," என்று தெரிந்த ஒருவரை போல கதைத்தோம்.

"மொதுவாக கிட்ட நெருங்கியவுடன், நீங்கள் வர வேண்டாம்," என சொல்லி விட்டார்.

காசு ஏதாவது தந்து விட்டு, பிஸ்கட்டை சாப்பிட்டு போகுமாறு சொன்னார். அன்பாக தான் சொன்னார். பிறகு வா பாலா என்று சொல்லி அவருடன் நெருங்கி கதைத்தோம்.

முடியெல்லாம் வெட்ட வேண்டும். நீயொரு முன்னாள் போராளி, என்ன பிரச்னை, நாங்கள் உன் பிரச்னையை தீர்த்து வைக்கின்றோம் என்று கதைத்தோம். எனக்கு ஒன்றும் இல்லை, முடியெல்லாம் வெட்ட முடியாது என சொன்னார்.

ஒரு மாதிரி மூன்று நாட்களில் நாங்கள் கூப்பிட்டால் வரும் அளவிற்கு அவரை வளப்படுத்தி விட்டோம்;." என நகுலேஸ் கூறினார்.

இலங்கை, விடுதலை புலிகள்

பட மூலாதாரம்,N.NAGULESH

அதன் பின்னர், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து, அம்பியூலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு, முன்னாள் போராளியான பாலா ஏறாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமது கட்சியின் பணியாளர் ஒருவரின் கண்காணிப்பில், ஏறாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

முன்னாள் போராளியான பாலா தொடர்பில் ஏற்கனவே சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் கூறுகின்றார்.

சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், பாலா தொடர்பில் தவறான காணொளிகளை வெளியிட்டு, சர்வதேச சமூகத்திடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் நடவடிக்கையானது, முன்னாள் போராளிகளையும், தமிழர் போராட்டத்தையும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் கூறினார்.

அத்துடன், பாலாவின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கு யாராவது ஒருவர் முன்வர வேண்டும் எனவும், அவரின் வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல நேரடியாக அவருக்கே உதவிகளை வழங்குமாறும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ் கேட்டுக்கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/c19z90yx9p7o

  • கருத்துக்கள உறவுகள்

புலம்ஸ் பெயர் டமில் டேசியவாதிகளுக்குச் சமர்ப்பணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை தரும் செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை  – உறவினர்கள் விசனம்!

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை  – உறவினர்கள் விசனம்!

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் காணிக்குள் வசித்துவந்த நிலையிலேயே அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அண்மையில் மட்டக்களப்பு தாந்தாமலை பகுதியில் மீட்கப்பட்ட போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) முன்னாள் போராளியின் சகோதரி மற்றும் மருமகன் ஆகியோர் ஊடக சந்திப்புகளின் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், “அண்மையில் நாடுக்காட்டிலிருந்து போராளியொருவர் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன் சிலர் அதனை வைத்து தமது தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர் நடுக்காட்டில் மீட்கப்படவில்லை. தாந்தாமலை, ரெட்பானா எனப்படும் நடு ஊருக்குள் இருந்தே மீட்கப்பட்டார். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அதன் பின்னர் அதிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையிலீடுபட்டுவந்த நிலையில் 2007ஆம் ஆண்டு அவரது மனைவி அவரை பிரிந்துசென்றார்.

அதன் பின்னர் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் உள்ள எங்களது வீட்டுக்குவந்து சிறிதுகாலம் வசித்த பின்னர் தாந்தாமலையில் உள்ள தமது பரம்பரை வீட்டில் வசிக்கப்போவதாக அங்கு சென்று வசித்து வந்தார்.

அது எங்கள் பரம்பரை வீடாகும். அது காடு அல்ல. ஊருக்கு நடுவில் உள்ள எமது காணியாகும். அங்கு சென்று அவர் 15 வருடத்திற்கு மேல் வசித்து வருகின்றார்.“ எனவும் குறிப்பிட்டனர்.

அவர் சில வருடங்களாகவே இந்த நிலைமையில் உள்ளதாகவும் முன்னர் அவர் தமது காணியில் பயிர்செய்கைகள் முன்னெடுத்து தன்னை தானே பார்த்துவந்த நிலையில்,

கடந்த சில வருடங்களாக இவ்வாறு இருந்ததாகவும், எனினும் தான் மாதத்திற்கு இரண்டு தடைவ சென்று அவருக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கிவந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

அவரை கடந்த காலத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தபோதும் அவர் இணங்காத நிலையிலேயே இருந்துவந்ததாகவும் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

https://athavannews.com/2023/1327412

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.