Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது.

இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின.

இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது.

பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பலர் பிரதமரை கேலி செய்தனர் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்கான அடையாளங்களை வைத்திருந்தனர்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்படும் என தீவிர வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் மரின் லு பென் பரிந்துரைத்துள்ளார்.

பரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நடவடிக்கையை நிராகரித்து, தேசிய கீதத்தைப் பாடி, தொழிற்சங்கக் கொடிகளை அசைத்தனர்.

மாலையில் சில போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதிக்கொண்டனர். ப்ளேஸ் டி லா கான்கார்ட்டின் நடுவில் தீ மூட்டப்பட்டது மற்றும் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களை அகற்றினர். இரவுக்குள், 120 பேர் கைது செய்யப்பட்டதாக, பரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2023/1327830

பரிசில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் வீதியெங்கும் குப்பை நிறைந்துள்ளது.

சற்று நேரத்துக்கு முன் எதிர்க்கட்சியினரால் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, தமிழ் சிறி said:

ப்ளேஸ் டி லா கான்கார்ட்டின் நடுவில் தீ மூட்டப்பட்டது மற்றும் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களை அகற்றினர். இரவுக்குள், 120 பேர் கைது செய்யப்பட்டதாக, பரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையே மாண்புமிகு புட்டின் செய்திருந்தால்????????

இந்த உலகம் என்ன சொல்லியிருக்கும்? அய்யோ கடவுளே யோசிக்கவே பயமாய்க்கிடக்கு :face_with_tears_of_joy:

15 minutes ago, குமாரசாமி said:

இதையே மாண்புமிகு புட்டின் செய்திருந்தால்????????

இந்த உலகம் என்ன சொல்லியிருக்கும்? அய்யோ கடவுளே யோசிக்கவே பயமாய்க்கிடக்கு :face_with_tears_of_joy:

 

கடந்த செப்டெம்பரில் ரஸ்யாவில் நடந்தது. 1300 பேர்வரை கைது செய்யப்பட்டனராம்.

நீங்கள் சொன்னதுபோல் மக்கள் போராட்டமெல்லாம் ரஸ்யாவில் கற்பனை செய்யக்கூட முடியாது. வீடியோவைப் பார்த்தால் நாடகம்போல்  உள்ளது.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை

ஜனநாயகம் என்றால் வாக்களிப்பு  இருக்க வேண்டுமே??
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நான் அரசுக்கு  ஆதரவானவன்

ஆனால் 49.3 யை  பயன்படுத்துவதற்கு  ஆதரவில்லை

7 minutes ago, nunavilan said:

ஜனநாயகம் என்றால் வாக்களிப்பு  இருக்க வேண்டுமே??
 

ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விவாதத்தின்பின் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். முக்கியமானதொரு சட்டம் இவ்வாறான அதிகப்படியான வாக்குகள் பெறாது என்று ஊகித்தால் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சியிலுள்ள முதலமைச்சரால் அரசியல் வரைபில் உள்ள 49.3 சரத்திற்கு உட்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படாமலே அமுல்படுத்த முடியும்.

இவ்வாறு அமுல்படுத்தும்போது இதற்குச் சமனாக ஆழும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யாரும் கொண்டு வரலாம் என்ற வாய்ப்பு உடனடியாக உருவாகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆழும் கட்சிக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லையானால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

இது ஜனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி இணையவன் .....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விவாதத்தின்பின் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். முக்கியமானதொரு சட்டம் இவ்வாறான அதிகப்படியான வாக்குகள் பெறாது என்று ஊகித்தால் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சியிலுள்ள முதலமைச்சரால் அரசியல் வரைபில் உள்ள 49.3 சரத்திற்கு உட்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படாமலே அமுல்படுத்த முடியும்.

இவ்வாறு அமுல்படுத்தும்போது இதற்குச் சமனாக ஆழும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யாரும் கொண்டு வரலாம் என்ற வாய்ப்பு உடனடியாக உருவாகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆழும் கட்சிக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லையானால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

இது ஜனநாயகம்.

அருமையான விளக்கம். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, இணையவன் said:

கடந்த செப்டெம்பரில் ரஸ்யாவில் நடந்தது. 1300 பேர்வரை கைது செய்யப்பட்டனராம்.

நீங்கள் சொன்னதுபோல் மக்கள் போராட்டமெல்லாம் ரஸ்யாவில் கற்பனை செய்யக்கூட முடியாது. வீடியோவைப் பார்த்தால் நாடகம்போல்  உள்ளது.😂

இதை விட மோசமாக பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ்சில் பல போராட்டங்கள் அடித்து நொருக்கி  அடக்கப்பட்டது. அது போல்  ஜேர்மனியிலும் ஒரு போராட்டம் அடக்கப்பட்டது. இந்தா  மே தினம் வருகின்றது. காத்திருங்கள்.

ரஷ்யாவில் 1300 பேர் கைது செய்யப்படுமளவிற்கு போராட்டம் நடந்திருக்கு என்றால் அங்கே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது என்பதுதானே அர்த்தம். ஏதோ பிரான்ஸ்லும் மற்றைய மேற்குலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள்  நடக்கும் போது  தடியடிகளும் கைதுகளும் நடக்காதது போல் கதையளக்க வேண்டாம் இணையவரே :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.