Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!

கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !!

இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் உள்ளதாகவு குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1327968

  • கருத்துக்கள உறவுகள்

பெர்மிட் காணிகளை உறுதிக் காணிக்களாக எழுதிக் கொடுக்கும் வரைக்கும் இது தொடரும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !!

கிளிநொச்சி பகுதிகளில் காட்டில் ஒரு பகுதியியை திருத்தி வேலியடைத்து காணியாக்கிய பின் கள்ள உறுதி முடித்து சொந்தமாக்கி வைத்திருக்கின்றார்கள். இது 70,80 களில் தீவிரமாக நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கிளிநொச்சி பகுதிகளில் காட்டில் ஒரு பகுதியியை திருத்தி வேலியடைத்து காணியாக்கிய பின் கள்ள உறுதி முடித்து சொந்தமாக்கி வைத்திருக்கின்றார்கள். இது 70,80 களில் தீவிரமாக நடந்தது.

 

3 hours ago, பகிடி said:

பெர்மிட் காணிகளை உறுதிக் காணிக்களாக எழுதிக் கொடுக்கும் வரைக்கும் இது தொடரும் 

இங்கே நடப்பது வித்தியாசமானது.

60 -70 களில் காணிகளை மடக்கிப் பிடித்து, தென்னை, வாழை போன்ற பயிர்களை செய்து, அதன் மூலமாக, வடபகுதியின் ஆட்சி உருத்தை வைத்து பதிந்து கொண்டனர். அவர்களுக்கு விற்க முடியாது என்ற நிபந்தனையுடன் தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ கையெழுத்திட்ட விசேட பர்மிட் வழங்கப்பட்டது. இது 70 பின் பகுதியில் சிறிமாவோ காலத்தில் வந்த காணி உச்ச வரம்பு சட்டத்தின் பின் நிறுத்தப்பட்டது.

இந்த கோபல்லாவ பர்மிட் காரர் இரண்டு வகை. ஒரு வகை 

அங்கேயே தங்கி இருந்து விவசாயம் செய்து, சிலர் யுத்தத்தில் மாண்டு போனவர்கள். அடுத்தவர்கள் கொழும்பு யாழ் வியாபார, அரச உத்தியோகம் பார்த்தவர்கள்.

பலர் மரணித்து விட்டார்கள். அவர்கள் பிள்ளைகள் வெளிநாடு போய் செட்டில் பண்ணி விட்டார்கள். 

யுத்த காலத்தில், புலிகளின் நிர்வாகத்தில் அவர்கள் அங்கே போகமுடியவில்லை.

உயிருடன் இருந்த ஒரு சிலர் 2009 பின்னர் அங்கே போய், தமது காணிகளை தேடிப்பிடித்து பார்த்தால், அங்கே புதிய ஆட்கள் இருக்கிறார்கள். விசாரித்து பார்த்தால், அவர்களுக்கு கோபல்லவா பெர்மிட் உடன் original உரிமையாளர் வந்தால், இது கான்சல் ஆகும் என்ற நிபந்தனையுடன் தற்காலிக பர்மிட் கொடுத்து உள்ளார்கள்.

ஆக இந்த தற்காலிக பர்மிட் காரர்கள், கோபல்லவா பெர்மிட்காரர்கள் இனி வரமாட்டார்கள் அல்லது இறந்து விட்டார்கள், அவர்களது பிள்ளைகளும் அதனை மறந்து விட்டார்கள் என்று வீடு, வாசலை கட்டி இருக்கும் போது பல, கோபல்லவா பெர்மிட்காரர்கள் வந்தும் அரச அதிகாரிகளிடம் நேரடியாக தமது உரிமையினை நிரூபிக்க, அவர்கள் கொடுத்த பெர்மிட் கான்சல் என்ற செய்தியுடன் விதானைமார் செல்ல, அவர்கள் நீதிமன்றம் சென்று இழுத்து அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு வரும் கோபல்லவா பெர்மிட்காரர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனது உறவினர் அமெரிக்காவில் இருந்து அங்கே கோபல்லாவ உறுதியுடன் தனது 87 வது வயதில் போயிருக்கிறார். அவரது காணியில் இருந்தவர்கள் தாம் திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் என்று அவரிடம் சொல்ல, அவரது 50 ஏக்கரில், 5 ஏக்கரை கொடுக்க இணங்கினார். கணவனை இழந்தவர்  என்று, மனைவியும், மனைவியை இழந்தவர் என்று கணவரும் என்று அங்கே இருந்த பலர் பொய் சொல்லி காணியை இலவசமாக பெற்றுக்கொண்டு விட்டனர். இது நீதிமன்ற சமாதானம் மூலம் நடந்ததால், அவர்களுக்கு கிடைத்த 5 ஏக்கர்களும், விக்க முடியாது என்ற நிபந்தனை இல்லாமலே கொடுக்கப்பட்டது.

அதேவேளை, அவர்களுக்கு, தம்பலகாமத்தில் அவர்களது சொந்த காணி கிடைத்த விபரத்தினை நீதி மன்றுக்கு சொல்லவில்லை.

ஆக, காணி உறுதி கைக்கு கிடைத்த மறு மாதமே வெளியே வித்து விட்டு தம்பலகாமம் போய் விட்டார்கள்.

இப்போது, 92 வயதில், ஏமாத்தப்பட்ட கசப்புடன் உள்ளார் அவர்.    

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2023 at 17:31, Nathamuni said:

 

இங்கே நடப்பது வித்தியாசமானது.

60 -70 களில் காணிகளை மடக்கிப் பிடித்து, தென்னை, வாழை போன்ற பயிர்களை செய்து, அதன் மூலமாக, வடபகுதியின் ஆட்சி உருத்தை வைத்து பதிந்து கொண்டனர். அவர்களுக்கு விற்க முடியாது என்ற நிபந்தனையுடன் தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ கையெழுத்திட்ட விசேட பர்மிட் வழங்கப்பட்டது. இது 70 பின் பகுதியில் சிறிமாவோ காலத்தில் வந்த காணி உச்ச வரம்பு சட்டத்தின் பின் நிறுத்தப்பட்டது.

இந்த கோபல்லாவ பர்மிட் காரர் இரண்டு வகை. ஒரு வகை 

அங்கேயே தங்கி இருந்து விவசாயம் செய்து, சிலர் யுத்தத்தில் மாண்டு போனவர்கள். அடுத்தவர்கள் கொழும்பு யாழ் வியாபார, அரச உத்தியோகம் பார்த்தவர்கள்.

பலர் மரணித்து விட்டார்கள். அவர்கள் பிள்ளைகள் வெளிநாடு போய் செட்டில் பண்ணி விட்டார்கள். 

யுத்த காலத்தில், புலிகளின் நிர்வாகத்தில் அவர்கள் அங்கே போகமுடியவில்லை.

உயிருடன் இருந்த ஒரு சிலர் 2009 பின்னர் அங்கே போய், தமது காணிகளை தேடிப்பிடித்து பார்த்தால், அங்கே புதிய ஆட்கள் இருக்கிறார்கள். விசாரித்து பார்த்தால், அவர்களுக்கு கோபல்லவா பெர்மிட் உடன் original உரிமையாளர் வந்தால், இது கான்சல் ஆகும் என்ற நிபந்தனையுடன் தற்காலிக பர்மிட் கொடுத்து உள்ளார்கள்.

ஆக இந்த தற்காலிக பர்மிட் காரர்கள், கோபல்லவா பெர்மிட்காரர்கள் இனி வரமாட்டார்கள் அல்லது இறந்து விட்டார்கள், அவர்களது பிள்ளைகளும் அதனை மறந்து விட்டார்கள் என்று வீடு, வாசலை கட்டி இருக்கும் போது பல, கோபல்லவா பெர்மிட்காரர்கள் வந்தும் அரச அதிகாரிகளிடம் நேரடியாக தமது உரிமையினை நிரூபிக்க, அவர்கள் கொடுத்த பெர்மிட் கான்சல் என்ற செய்தியுடன் விதானைமார் செல்ல, அவர்கள் நீதிமன்றம் சென்று இழுத்து அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு வரும் கோபல்லவா பெர்மிட்காரர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனது உறவினர் அமெரிக்காவில் இருந்து அங்கே கோபல்லாவ உறுதியுடன் தனது 87 வது வயதில் போயிருக்கிறார். அவரது காணியில் இருந்தவர்கள் தாம் திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் என்று அவரிடம் சொல்ல, அவரது 50 ஏக்கரில், 5 ஏக்கரை கொடுக்க இணங்கினார். கணவனை இழந்தவர்  என்று, மனைவியும், மனைவியை இழந்தவர் என்று கணவரும் என்று அங்கே இருந்த பலர் பொய் சொல்லி காணியை இலவசமாக பெற்றுக்கொண்டு விட்டனர். இது நீதிமன்ற சமாதானம் மூலம் நடந்ததால், அவர்களுக்கு கிடைத்த 5 ஏக்கர்களும், விக்க முடியாது என்ற நிபந்தனை இல்லாமலே கொடுக்கப்பட்டது.

அதேவேளை, அவர்களுக்கு, தம்பலகாமத்தில் அவர்களது சொந்த காணி கிடைத்த விபரத்தினை நீதி மன்றுக்கு சொல்லவில்லை.

ஆக, காணி உறுதி கைக்கு கிடைத்த மறு மாதமே வெளியே வித்து விட்டு தம்பலகாமம் போய் விட்டார்கள்.

இப்போது, 92 வயதில், ஏமாத்தப்பட்ட கசப்புடன் உள்ளார் அவர்.    

விளக்கத்துக்கு நன்றி.

எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்ன இன்னொரு கதை இது.

படித்த வாலிபர்களுக்கு என்று கிளிநொச்சி கனகபுரத்தில் ஒரு பெண்மணிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் permit காணியை அவரின் அனுமதி இல்லாமல் அவரின் சகோதரன் இயக்கம் இருந்த காலத்தில் களவாக  வெறும் 60 ஆயிரத்துக்கு தன்னுடைய காணி என்று கொடுக்க அந்தப் பெண் சமாதான காலத்தில் புலிகளின் நீதி மன்றுக்கு சென்று பின்னர் கடந்த பத்து வருடம் கிளிநொச்சி நீதி மன்றில் வாதிட்டு கடைசியில் அது பெர்மிட் காணி என்பதால் அங்கே கடைசி இருபது வருடம் குடி இருந்தவர் மின்சார சபைக்கு கட்டணம் செலுத்தினார் என்பதால் காணி அவருக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்து விட்டது. Permit காணி இல்லாமல் உறுதிக் காணியாக இருப்பின் இந்தப் பிரச்னை வர வாய்ப்பில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.