Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் 3 இடங்களில் முதலீட்டு வலயங்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 3 இடங்களில் முதலீட்டு வலயங்கள்

IMG-20230505-222031.jpg

வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். அங்கே முதலீட்டு வலயம் அமைக்க உத்தேசித்துள்ளோம்.

கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலும், மாங்குளத்தில் 400 ஏக்கரிலும் முதலீட்டு வலயங்கள் அமைக்க உத்தேசித்துள்ளோம்” – என்று முதலீட்டுச் சபை பிரதிநிதி குறிப்பிட்டார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/05/192951/

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தையிட்டியை விட்டிட்டினம்?!

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியை… பௌத்த புனித பூமியாக்கும் திட்டம் இருக்கலாம்.
வடக்கின் உயரமான விகாரை, கடற்படை, இராணுவம் என்று பெருமளவு
தமிழரின் காணிகளை பிடித்து வைத்திருப்பதை பார்க்க, அடுத்த திட்டம் இது போலுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கில் 3 இடங்களில் முதலீட்டு வலயங்கள்

எப்பிடியும் அந்த முதலீட்டு வலயங்களை சுற்றி விகாரையள் கட்டோணும் எல்லோ? :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் முதலீட்டாளர்கள் முந்திக்கொள்வது நன்று. சந்தர்ப்பங்களைத் தவறவிடுவோமாகில் மீண்டும் வருந்த நேரிடும். 

 இந்திய முதலீட்டாளர்களும், தென்னிலங்கை முதலீட்டாளர்களுமே இந்த இடத்தை நிரப்புவார்கள. இரண்டுமே நன்மை பயக்காது.

பெரும் வணிக வளாகங்களும் தொழிற்சாலைகளும் இங்கே வரும் வாய்ப்புகள் அதிகம். தென்னிந்திய முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதன்போது இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

    யார் இந்த பிரதிநிதி?

 

2 hours ago, Kapithan said:

புலம்பெயர் முதலீட்டாளர்கள் முந்திக்கொள்வது நன்று. 

 இந்திய முதலீட்டாளர்களும், தென்னிலங்கை முதலீட்டாளர்களுமே இந்த இடத்தை நிரப்புவார்கள. இரண்டுமே நன்மை பயக்காது.

யார் வேண்டாம் என்கிறார்கள்? அந்த முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகை, முதன்மை, அதிகாரம் நம்மவர்க்கு வழங்கப்படுமா? அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை கேள்வி கேட்காமல், மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் சிங்களம், இந்த மண்ணின் மைந்தர் நமக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது ஏன், தடுப்பது ஏன்? அவர்களுக்கு பணிவதுபோல் நமக்கு பணியுமா? ஆம் என்றால்; எமது அதிகாரங்களை வழங்காமல் அச்சுறுத்துவது ஏன்? இதற்கெல்லாம் உத்தரவாதம் அளிக்க உங்களால் முடியுமா? எங்களது சொந்த முதலீடுகளை அழித்தார்கள்? இப்போ அழிக்க மாட்டார்களா? பகிரங்கமாகவே எச்சரிக்கிறார்களே தடுக்க முடிந்ததா ஆட்சியாளரால்? காணிக்குரிய மக்கள் அகதிகளாக அலையும்போது, அவர்கள் காணியில்  விகாரை கட்டி திறப்புவிழா செய்து கொண்டு உரிமையாளரை அடித்து விரட்டுபவர்கள் புலம்பெயர்ந்தோரை விட்டு வைப்பார்களா? அப்போ எங்களது சொந்த முதலீட்டை கண்முன்னே இழந்து கண்ணீர்விட்டு கப்பல் ஏறினோம், இப்போ இங்கே வந்து அழித்த போது காப்பாற்ற போராடி விழுந்தோம், அப்போதும் வருத்தினோம் இப்போதும் வருந்துகிறோம் இனிமேல் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. எங்களை அனுமதிக்க விரும்பினால் வெளியாரை அழைக்கத்தேவையில்லை, வெளியாரை முதலிட அழைப்பவர்கள் எங்களை, நாட்டை முன்னேற்ற அழைக்கிறார்கள். அவர்கள் முன்னேறியதும், நாங்கள் வெளியேற்றப்படுவோம், இது வரலாறு. எங்களுக்காக வாதாட யாரும் வரப்போவதில்லை மாறாக நிஞாயப்படுத்துவார்கள். சுமந்திரன் அன்று சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ? "புலம்பெயர்ந்தோரின் விருப்புகளுக்கு நாம் இங்கு அரசியல் செய்ய முடியாது." ஆனால் அவர்களின் பணம் வேண்டும், முதலீடு வேண்டும் நாடு முன்னேற!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

யார் இந்த பிரதிநிதி?

பெயர் கிடைக்க வில்லை தோழர்

தொடர்புடைய இதர இணைப்புகள்

1)

https://ibctamil.com/article/investment-zones-at-three-locations-in-the-north-1683285001

2)

https://samugammedia.com/investment-zones-in-three-locations-in-the-north---cabinet-papers-soon-samugammedia-1683270857

  • கருத்துக்கள உறவுகள்

பெயரில்லை, யாரென்று இல்லை, கண்டவன் நிண்டவன் எல்லாம் வந்து தனக்கு பிடித்த இடத்தில விகாரை கட்டலாம், கடற்பண்ணை அமைக்கலாம், முள்வேலி அமைத்து சொந்தக்காரரை உள்நுழைய விடாமல் தடுத்து விலை பேசலாம், யார் கேட்க வரப் போகிறார்கள்? அல்லது நீதி நிஞாயம் இருக்கிறதா இங்கே? இதற்குத்தான் புலிகளை ஒன்றுசேர்ந்து அழித்தார்கள். இப்போ நமது விடுதலைப்போரை அழிக்க உதவிய நாடுகள், எங்கள் நில அதிகார அலகுகளை மாற்றியமைத்து எங்களை இந்த இக்கட்டான நிலைக்கு தள்ளிய பிரித்தானியா போன்ற நாடுகள் மீது அந்த நாட்டிலேயே வழக்குத்தொடுத்து இதற்கான பதிலை வழங்க வற்புறுத்த வேண்டும். சும்மா ஒன்றுமில்லாத இந்தியா, இலங்கையை சுற்றிக்கொண்டு காலத்தை கழிப்பதை விட்டு வெளியேறி வேறு வழிகளில் முயற்சிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.