Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரிக்கை!

May 12, 2023

spacer.png
 

யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர்.

காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்வதாகவும், பனம் பழங்களின் விதைகள் கொண்டு, பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பனம் பழத்தின் இளம் பதமாக உள்ள நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்வதனால் பனம் பழம் இல்லாது போகிறது. பனம் பழத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தமது சிறிய வாழ்வாதாரம் இல்லாமல் போகின்றது. எனவே உரிய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நுங்கு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பனங்காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
https://globaltamilnews.net/2023/190568/

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த கார்த்திகையில் நுங்கு குடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திச்சு (சில பணைகளில் பிந்தி வந்த குழைகள்)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த கார்த்திகையில் நுங்கு குடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திச்சு (சில பணைகளில் பிந்தி வந்த குழைகள்)

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு - விதை2விருட்சம்

நான்... கடைசியாக சென்ற போது, பனங்காய்  பணியாரம் செய்ய,
பனம் பழத்திற்கு... ஆனைக்கோட்டை, பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, 
நுணாவில், கொடிகாமம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மாவிட்டபுரம், 
கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி எல்லாம் தேடியும்....   
ஒரு பனம் பழம் கூட கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு - விதை2விருட்சம்

நான்... கடைசியாக சென்ற போது, பனங்காய்  பணியாரம் செய்ய,
பனம் பழத்திற்கு... ஆனைக்கோட்டை, பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, 
நுணாவில், கொடிகாமம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மாவிட்டபுரம், 
கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி எல்லாம் தேடியும்....   
ஒரு பனம் பழம் கூட கிடைக்கவில்லை.

பனம்பழக்காலத்தில் போனால் எல்லா இடமும் கிடைக்கும், காலந்தவறிப்போனால் எத்தனை இடம் அலைந்தாலும் கிடைக்காது. எதற்கும் ஒரு பருவமுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

பனம்பழக்காலத்தில் போனால் எல்லா இடமும் கிடைக்கும், காலந்தவறிப்போனால் எத்தனை இடம் அலைந்தாலும் கிடைக்காது. எதற்கும் ஒரு பருவமுண்டு. 

PANAI MARAM TODDY KALLU HEALTH BENEFITS #PHLF #PANAIMARAM 10 - YouTube

Nagercoil Boys and girls

கள்ளு  மட்டும்... வருடத்தின்  எல்லா நாளும் கிடைக்க செய்திருப்பது,
ஆண்டவனின் கருணை என்றே சொல்ல வேண்டும். 🤪

  • கருத்துக்கள உறவுகள்

மாரிகாலத்தில் அதிகம் கிடைக்காது இருந்தாலும் சுவை இருக்காது என நினைக்கிறன் காரணம் மழை நீர் கலக்கும் சந்தற்பமுமுண்டு.

20 minutes ago, தமிழ் சிறி said:

கள்ளு  மட்டும்... வருடத்தின்  எல்லா நாளும் கிடைக்க செய்திருப்பது,
ஆண்டவனின் கருணை என்றே சொல்ல வேண்டும்

ஹிஹி ... 

  • கருத்துக்கள உறவுகள்

பனைமரம் இயற்கை தந்த கொடை........அதனால்தான் அது கற்பகத்தரு என அழைக்கப் படுகிறது......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

“காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்வதாகவும், பனம் பழங்களின் விதைகள் கொண்டு, பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்வதாகவும்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது“

ஹிஹிஹி ...அப்டியா

நான் இத்தனை நாட்களும் பனையில் இருந்து பனங்களியைக் கறந்துதான் பனாட்டு கிண்டுவதாகவும், பனங்கிழங்கு  காய்த்துத் தொங்குவதாகவும் நினைத்திருந்தேன். என்னைத் தெழிவுபெறச் செய்த குளோபல்நியூஸிற்கு நன்றி. 

😏

  • கருத்துக்கள உறவுகள்

நுங்கு விற்பனைக்காக அறுக்கையிடாத திறந்த காணிகளில் உள்ள பனைகளில் இருந்தே வெட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு - விதை2விருட்சம்

நான்... கடைசியாக சென்ற போது, பனங்காய்  பணியாரம் செய்ய,
பனம் பழத்திற்கு... ஆனைக்கோட்டை, பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, 
நுணாவில், கொடிகாமம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மாவிட்டபுரம், 
கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி எல்லாம் தேடியும்....   
ஒரு பனம் பழம் கூட கிடைக்கவில்லை.

நான் அளவெட்டிக்கு நண்பனை பார்க்க சைக்கிளில் போனான், திரும்பி வரும்போது வேலியோரத்தில் இரண்டு பனம் பழம் விழுத்திருச்சி, நான் சுட்டுகிட்டு வந்திட்டேன்,😃 பிறகென்ன அம்மாவின் கைபக்குவத்தில் பணியாரமும் சாப்பிட்டாச்சு உறவினர்களுடன்👍

அடுத்த முறை ஏராளனை சந்தியுங்கள் பனம் பழமென்ன நுங்கும் தருவார்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரிக்கை!

May 12, 2023

spacer.png
 

யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர்.

காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்வதாகவும், பனம் பழங்களின் விதைகள் கொண்டு, பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பனம் பழத்தின் இளம் பதமாக உள்ள நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்வதனால் பனம் பழம் இல்லாது போகிறது. பனம் பழத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தமது சிறிய வாழ்வாதாரம் இல்லாமல் போகின்றது. எனவே உரிய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நுங்கு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பனங்காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
https://globaltamilnews.net/2023/190568/

இவை எல்லாம் புதிய விடயங்கள் இல்லை. எம்மிடம் பல பனங்காணிகள்.  ஊரில் முன்பு நாம் போடும் பனம் பாத்தியை விட பனங்காணியே இல்லாதவர்கள் போடும் பனம்பாத்தி பெரியாக இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் 😆😆

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

நான் அளவெட்டிக்கு நண்பனை பார்க்க சைக்கிளில் போனான், திரும்பி வரும்போது வேலியோரத்தில் இரண்டு பனம் பழம் விழுத்திருச்சி, நான் சுட்டுகிட்டு வந்திட்டேன்,😃 பிறகென்ன அம்மாவின் கைபக்குவத்தில் பணியாரமும் சாப்பிட்டாச்சு உறவினர்களுடன்👍

அடுத்த முறை ஏராளனை சந்தியுங்கள் பனம் பழமென்ன நுங்கும் தருவார்

ஏப்ரல் மே தான் நுங்கு காலம், பிந்தினால் இளநி தான் வாங்கிக் கொடுப்பேன்! கறுத்தக் கொழும்பான் மாமரமும் இருக்கு(கொஞ்சம் முத்தின மாங்காய்களோடு. அணில், கிளி, வௌவால் நிறைய சாப்பிடுது) இப்ப தான் 10-20 முத்தல் மாங்காய்கள் பிடுங்கி வைச்சிருக்கு. பழ வியாபாரிகள் சுழன்று திரிகிறார்கள் விக்கப்போறீங்களோ என்று, அம்மா கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

ஏப்ரல் மே தான் நுங்கு காலம், பிந்தினால் இளநி தான் வாங்கிக் கொடுப்பேன்! கறுத்தக் கொழும்பான் மாமரமும் இருக்கு(கொஞ்சம் முத்தின மாங்காய்களோடு. அணில், கிளி, வௌவால் நிறைய சாப்பிடுது) இப்ப தான் 10-20 முத்தல் மாங்காய்கள் பிடுங்கி வைச்சிருக்கு. பழ வியாபாரிகள் சுழன்று திரிகிறார்கள் விக்கப்போறீங்களோ என்று, அம்மா கொடுக்கவில்லை.

பொன்னாலை காட்டுக்குள் சில பனை மரங்கள் பிந்தி காய்க்கும், நெல்லியானிலும் இருக்கு, இந்த முறை அணில் குடித்து விழுந்து நுங்கை கூட விடவில்லை நான் 😂; நெல்லியான் வைரவ கோவிலுக்கு முன்னால் நிற்கின்றது இந்த பனைகள் ; உங்களிடத்தில் வௌவால் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

பொன்னாலை காட்டுக்குள் சில பனை மரங்கள் பிந்தி காய்க்கும், நெல்லியானிலும் இருக்கு, இந்த முறை அணில் குடித்து விழுந்து நுங்கை கூட விடவில்லை நான் 😂; நெல்லியான் வைரவ கோவிலுக்கு முன்னால் நிற்கின்றது இந்த பனைகள் ; உங்களிடத்தில் வௌவால் அதிகம்

அணில் நுங்கின் ஒரு கண்ணைக் குடித்தால் மற்ற இரு கண்கள் உங்களுக்கு வாய்த்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

அணில் நுங்கின் ஒரு கண்ணைக் குடித்தால் மற்ற இரு கண்கள் உங்களுக்கு வாய்த்திருக்கும்.

👍👍 அணில் குடித்த நுங்குகள் நல்ல பதமாக இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.