Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம் தரப்பினருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் - முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் தரப்பினருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் - முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

Published By: Digital Desk 3

12 May, 2023 | 10:49 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் நடத்தப்படும் பேச்சுவார்த்தைப் போன்று முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட வேண்டும்  என எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களான  பைசல் காசிம், எம்.எஸ். தெளபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

பைசல் காசிம் எம்.பி, உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார்.

அதன் பின்னர் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அந்தப் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் கட்சிகளின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தும் உள்ளார். 

இந்த பாராளுமன்ற வரலாற்றில் ரணில் விக்கிரமசிங்கவுக்காக கடுமையாக உழைத்தவர்கள் நாங்கள். எமது மக்களும் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் போது தமிழ் மக்களின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்துவதோடு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன.வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் முஸ்லிம்கள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர். அவர்கள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை.

முஸ்லிம் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் அது தொடர்பில் ஏற்பட்டுள்ள இன ரீதியான முரண்பாடுகள் தொடர்பிலும் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். சுமார் முப்பதாயிரம் ஏக்கர் காணிகளை முஸ்லிம் மக்கள் இழந்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடைபெறுவது போல் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

அந்த வகையில் தமிழ் மக்கள் சார்பில் இந்தியா ஆதரவு வழங்கிறது. இந்தியா முஸ்லிம் மக்கள் சார்பில் ஆதரவு வழங்க விரும்பாவிட்டால் நாம் சவூதி அரசாங்கத்தின்  ஆதரவுடன் அதை மேற்கொள்ளவும் முடியும்.  நான் இனவாதம் பேசவில்லை. தற்போது நாட்டில் நடப்பதை  பார்த்துவிட்டே பேசுகின்றேன். முஸ்லிம் மக்களுக்கு எதிரான அநீதி தொடர்பில் குரல் கொடுப்பதற்கு  எமக்கு பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. எனினும் உள்நாட்டுப் பிரச்சினையை இந்த நாட்டிலேயே பேசி தீர்க்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம். வெளிநாடுகள் இதில் தலையிடும் அளவுக்கு இடம் வைக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

எம்.எஸ்.தெளபீக் எம்.பி தெரிவிக்கையில், 

2002 இல் யுத்த நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் கலந்துரையாடும்போதும் முஸ்லிம் தரப்புக்கு தனியாக கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கவி்லலை. அரச தரப்பு உறுப்பினராகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார். முஸ்லிம்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சினை இருக்கிறது. அந்த காலத்திலும் எமக்கு தனித்து கலந்துரைாயட சந்தரப்பம் வழங்கப்படததைப்போன்று தற்போதும் அந்த தவறை செய்யக்கூடாது.

2002 யுத்த நிறுத்தத்தின் போது தமிழ் மக்களைப்போன்று முஸ்லிம் மக்ளும் பாரிய இழப்புக்களை சந்தித்தது. தற்போதும் முஸ்லிம் மக்கள் தங்களின் உரிமைகள் சலுகைகளை பெற்றுக்கொள்ள போராடவேண்டி இருக்கிறது. அதனால் ஜனாதிபதி முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகாண எமக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்றார்.

இஷாக் ரஹ்மான் உரையாற்றுகையில், நாட்டில் 40 அரபுக்கல்லூரிகள் கல்வி அமைச்சுக்கு  கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன,ஆயிரத்தி 100 பள்ளிவாசல்கள் முஸ்லிம் விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறன. ஆனால் இன்னும் 400 பள்ளிவாசல்கள் பதிவு செய்ய முடியாமல் இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக அதன் பதிவுகள் தடைப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த விடயங்களுக்கு தீர்வு காணப்படவேண்டி இருக்கிறது. ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்திருப்பது போன்று முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சிகளை தீர்பபதற்கும் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/155104

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தரப்பினருடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தும் போதெல்லாம்….
முஸ்லீம்கள், தங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கிளம்பி விடுவார்கள்.
அது வரைக்கும், சிங்களத்துடன் ஒட்டி உறவாடிக் கொண்டு மல்லாக்க படுத்திருப்பார்கள்.

உங்களில் தானே… பல முஸ்லீம் எம்.பிக்கள், அமைச்சர்கள்
அரசுடன் இணைந்து முக்கிய பதவியில் இருக்கிறார்கள்.
அதென்ன தமிழருடன் கதைக்கும் போது மட்டும் உங்களுக்கு வயிறு எரிகின்றது.
இது வடித்தெடுத்த களவாணி செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?

வெட்கம் கெட்டவர்களே… இனியாவது அரசியலில் நேர்மையை கடைப் பிடியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்கு த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளை ம‌ட்டும் அழைத்த‌ ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌ செய‌ற்பாட்டை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம்.

 

mubar.jpg

 

பேச்சுவார்த்தைக்கு த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளை ம‌ட்டும் அழைத்த‌ ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌த்தின் ஒருத‌லைப்ப‌ட்ச‌மான‌ செய‌ற்பாட்டை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம் : ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

 

நூருல் ஹுதா உமர்

 

"வ‌ட‌க்கு கிழ‌க்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌னான‌ ஜ‌னாதிப‌தியின் ச‌ந்திப்பு " என‌ கூறிக்கொண்டு வ‌ட‌க்கு கிழ‌க்கின் சிங்க‌ள‌, ம‌ற்றும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை அழைக்காம‌ல் த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளை ம‌ட்டும் அழைத்த‌ ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌த்தின் ஒருத‌லைப்ப‌ட்ச‌மான‌ செய‌ற்பாட்டை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து. இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் மௌலவி முபாற‌க் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப‌தாவ‌து,

 

இந்த‌ நாடு சுத‌ந்திர‌ம் பெற்ற‌ கால‌ம் முத‌ல் முஸ்லிம்க‌ள் ப‌ல‌ இழ‌ப்புக்க‌ளை இழ‌ந்து வ‌ந்துள்ள‌ன‌ர். அப்போதெல்லாம் முஸ்லிம்க‌ள் த‌ர‌ப்பில் பேச‌ முஸ்லிம் த‌னிக்க‌ட்சி இல்லை என‌ கூற‌ப்ப‌ட்ட‌தாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டு அது முஸ்லிம்க‌ளை பாராளும்ன்றில் பிர‌திநிதித்துவ‌ப‌டுத்திய‌து. ஆனாலும் அக்க‌ட்சி முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌ போராடிய‌தை விட‌ த‌ம‌து சுக‌ போக‌ங்க‌ளுக்கே அதிக‌ம் போராடிய‌து.

 

2001ம் ஆண்டு ஒஸ்லோவில் ந‌ட‌ந்த‌ பேச்சுவார்த்தைக‌ளில் அன்று அமைச்ச‌ராக‌ இருந்த‌ ர‌வூப் ஹ‌க்கீம் முஸ்லிம் த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்க‌ வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவ‌ர் அமைச்ச‌ர் என்ற‌ சுக‌ போக‌த்தை விரும்பிய‌தால் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ள‌ ம‌றுத்த‌ துரோக‌த்தின் கார‌ண‌மாக‌ இன்று வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு த‌னித்த‌ர‌ப்பு கிடைக்க‌வில்லை.

 

அக்க‌ட்சியின் செய‌ல்க‌ளால் விர‌க்தியுற்ற‌த‌னாலும் அக்க‌ட்சி த‌ன் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை இழ‌ந்த‌தாலும் முஸ்லிம் ச‌மூக‌த்தில் வேறு க‌ட்சிக‌ளின் தேவை உருவாகிய‌து. ஆனாலும் இவ்வாறு உருவான‌ ஏனைய‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்கும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் கிடைத்த‌ போதும் அவ‌ர்க‌ளும் நாட்டில் எதை சுருட்ட‌லாம், யாரை ஏமாற்ற‌லாம் என்றுதான் முய‌ற்சித்தார்க‌ளே த‌விர‌ முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளுக்கான‌ தீர்வை பெற‌ அர‌சுக‌ளுக்கு அழுத்த‌ம் கொடுக்க‌வில்லை.

 

இந்த‌ நிலையில் நாட்டின் இன‌ப்பிர‌ச்சினையை தீர்ப்ப‌த‌ற்காக‌ த‌ற்போதைய‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ முய‌ற்சிப்ப‌து பாராட்டும்ப‌டியான‌ செய‌லாகும். ஆனாலும் வ‌ட‌க்கு கிழ‌க்கில் உள்ள‌ த‌மிழ் எம்பிக்க‌ளை ம‌ட்டும் அழைத்து பேசுவ‌த‌ன் மூல‌ம் இம்மாகாண‌ங்க‌ளில் வாழும் முஸ்லிம் ம‌ற்றும் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் வேண்டுமென்றே ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ன‌ரா என்ற‌ கேள்வி எழுகிற‌து.

 

புலிக‌ளால் அனைத்து சொத்துக்க‌ளும் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்டு விர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ட‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளின் மீள் குடியேற்ற‌ம் இன்ன‌மும் முறையாக‌ ந‌ட‌க்க‌வில்லை. ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் மீள‌ கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை. காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளுக்கான‌ ப‌தில்க‌ள் கிடைக்க‌வில்லை. இவ்வாறு த‌மிழ் ம‌க்க‌ள் போன்று ஒரே பிர‌ச்சினைக்கு வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ளும் முக‌ம் கொடுப்ப‌தால் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்தில் ப‌திவு பெற்றுள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளுட‌னும் பேச்சுவார்த்தை ந‌ட‌த்த‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ப‌ல‌ த‌ட‌வைக‌ள் கோரிக்கை விடுத்தும் இன்ன‌மும் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை.

 

ஆக‌வே இது விட‌ய‌த்தில் ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌த்தின் ஒருத‌லைப்ப‌ட்ச‌மான‌ செய‌ல்பாட்டை நாம் க‌ண்டிப்ப‌துட‌ன் உட‌ன‌டியாக‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளுட‌னும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

https://www.madawalaenews.com/2023/05/i_62.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் நடத்தப்படும் பேச்சுவார்த்தைப் போன்று முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட வேண்டும்  என எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களான  பைசல் காசிம், எம்.எஸ். தெளபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

சும்மா திரிவானுகள்.....தமிழர் தரப்பு ஏதாவது செய்தால் தங்களுக்கும் அது போல வேணுமெண்டு குதிப்பானுகள்.

இலங்கைவாழ் முஸ்லீம்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

த‌மிழ் எம்பிக்க‌ளை ம‌ட்டும் அழைத்து பேசுவ‌த‌ன் மூல‌ம் இம்மாகாண‌ங்க‌ளில் வாழும் முஸ்லிம் ம‌ற்றும் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் வேண்டுமென்றே ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ன‌ரா என்ற‌ கேள்வி எழுகிற‌து.

எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்! சிங்களத்தால் பாதிக்கப்பட்டது இழந்தது நாம். சிங்களவருக்கும் எமக்குமுள்ள பிரச்சனையை பேசப்போகிறோம், உடன்பாடுள்ள,  ஒற்றுமையுள்ள உங்களுக்குள் எதைப்பற்றி பேசப்போகிறீர்கள்? ஆமா ..... பிரச்சனையென்று போராடியது தமிழர், அப்போவெல்லாம் சிங்களத்தோடு கூடி கூத்தடிப்பது. பேச்சு என்றவுடன் எங்களோடும் பேசவேண்டும் என்கிறார்கள். அதுவரை சிங்களத்துக்கு எங்களுக்கும் ௯௮% வீதம் உடன்பாடுண்டு என்று ஒட்டிக்கொண்டிருப்பது, காட்டிக்கொடுப்பது. ஐநாவில் போய் சிங்களத்தை நிஞாயப்படுத்துவது. 

 

4 hours ago, கிருபன் said:

அந்த வகையில் தமிழ் மக்கள் சார்பில் இந்தியா ஆதரவு வழங்கிறது. இந்தியா முஸ்லிம் மக்கள் சார்பில் ஆதரவு வழங்க விரும்பாவிட்டால் நாம் சவூதி அரசாங்கத்தின்  ஆதரவுடன் அதை மேற்கொள்ளவும் முடியும்.

ஊரொச்சம் வீடு பட்டினி. அந்த ஆதரவோடு நிறைய சாதித்துள்ளீர்கள்நாட்டில் இதையும் முடிந்தால் சாதிப்பது. எதுக்கு வெருட்டல்? சவூதி ஷேக்குகள் வந்து பிக்குகளோடு உண்டு குடித்து மகிழுகிறார்கள் இவர் வேறு. ரோஹிங்கியா முஸ்லீம்கள் கேட்ப்பாரற்று அலைகிறார்கள், இவர்கள், முசுலீம்களென்றவுடன் சவூதி வந்து சண்டைபோடும் என்று கனவு. 

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாகவே சிங்கள் பெளத்த இனவாத அரசின் கபட நாடகம்.

ஒர் பக்கம் தமிழர்களை பேச அழைப்பது மறுபக்கம் சோனகர்களை எதிராக தூண்டி விடுவது. பின்னர் உங்களுடன் உடன்படுவோம் ஆனால் சோனகர்கள் எதிராக உள்ளனர் அவர்களை சமாதானப்படுத்துங்கள் சற்று பொறுங்கள் என்று கால விரயம் செய்வது. இது இப்படியே நீண்டு செல்லும்…

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு ஒன்றும்கிடைக்கவிடடாலும் பரவாயில்லை. தமிழனுக்கு ஒன்றும் கிடைக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரு சமுதாயம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் எல்லாவற்றையும் தட்டிப்பறிப்பதற்காக சிங்களத்துடன் உடன்பாடு, தமிழனுக்கு கிடைப்பதை தடுப்பதற்காக எங்களுடனும்  பேசுங்கள் என்று குடைச்சல், வற்புறுத்தல். நாம் விட்ட தவறே இன்றைய இந்த இருபகுதிக்குள் நாம் மாட்டுப்பட்டு திண்டாட காரணம். அன்று சிங்கள முசுலீம் பிரச்சனையில் வாதாட சென்ற சேர். பொன். இராமநாதன், அதற்குமுதல் நம் இனத்தின் இருப்பையும், உரிமையையும் பாதுகாத்து உறுதிப்படுத்திவிட்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்கியிருந்தால்; இந்த இழிநிலை நமக்கு ஏற்பட்டிருக்காது. இன்றும் பாருங்கள்! தம் மக்களை விட அவர்களுக்காகவே ஓங்கி குரல் கொடுக்கிறார்கள். கொடுங்கள், முதலில் நம் இருப்பை தக்க வையுங்கள். அன்று முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார், இன்று தமிழன் ஒரு அரசாங்க அதிபர் பதவி பெறுவதற்கு எதிராக எத்தனை போராட்டம்,  குற்றச்சாட்டு? பட்டும் திருந்தாதவர்களை என்ன சொல்வது? இவர்கள் விட்ட, விடுகின்ற  தவறினாலேயே பெருச்சாளிகள் பெருகுகின்றன, பெருகுவிக்கப்படுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.