Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரி பிரதேச சபை வீதியை அபகரித்த தனிநபர் – போராடி மீட்ட மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி பிரதேச சபை வீதியை அபகரித்த தனிநபர் – போராடி மீட்ட மக்கள்

May 12, 2023

IMG-20230512-WA0027.jpg?resize=1280%2C72

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தினையும் சட்ட விரோதமான முறையில் தனி நபர் ஒருவர் அபகரித்து எல்லை வேலிகளை போட்டு , அவ்வீதி ஊடான போக்குவரத்தையும் தடை செய்து இருந்தார்.  குறித்த நபரின் ஆக்கிரமிப்பில் இருந்து வீதியை மீட்டு தர கோரி அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பிரதேச சபை செயலாளர் , கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பேச்சு நடாத்திய போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமக்கு வீதியை மீட்டு தரும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

அதனை அடுத்து குறித்த வீதிக்கு போராட்டக்காரர்கள் காவல்துறையினர் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் சென்று தனியாரால் அபகரிக்கப்பட்டு போடப்பட்டு இருந்த வேலியை அகற்றி  அவ்வீதி ஊடான போக்குவரத்திற்க்கு வீதியை திறந்து விட்டனர்.  அதேவேளை குறித்த தனிநபர் அந்த வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தின் ஒரு பகுதியையும் அபகரித்து 2020 ஆம் ஆண்டு கால பகுதியில் வேலி அடைத்து அபகரித்துள்ளார்.

அது தொடர்பில் அப்பகுதி மக்களால் பிரதேச சபையிடம் முறையிட்டதை அடுத்து பிரதேச சபையினர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து ஆவணங்களை பரிசீலித்து , குறித்த வீதி பிரதேச சபைக்கு சொந்தமானது என தெரிவித்து வேலிகளை அகற்றி அவ்வீதி ஊடாக போக்குவரத்து செய்வதற்க்கு வீதியை திறந்து விட்டு இருந்தனர்.

அவ்வாறு வீதி திறந்து விடப்பட்டு ஒரு சில வாரங்களிலையே மீண்டும் அவ்வீதியையும் குளத்தையும் அபகரித்து வேலி அமைத்துள்ளார்.  இந்நிலையிலையே மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் செய்து மீண்டும் வீதியை மீட்டுள்ளனர்.

 

https://globaltamilnews.net/2023/190588/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

 

அவ்வாறு வீதி திறந்து விடப்பட்டு ஒரு சில வாரங்களிலையே மீண்டும் அவ்வீதியையும் குளத்தையும் அபகரித்து வேலி அமைத்துள்ளார்.  இந்நிலையிலையே மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் செய்து மீண்டும் வீதியை மீட்டுள்ளனர்.

 

https://globaltamilnews.net/2023/190588/

நல்ல செயல், அடுத்த சென்னையாக மறவிடமால் விட்டால் நன்று👍

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன், சோனகன் தான்... காணி பிடிக்கின்றான் என்று போராடிக் கொண்டிருந்தால்...
நம்மாக்களும் காணி பிடிப்பதை எதிர்த்து போராட வேண்டி உள்ளது.

இது, முந்தின காலத்தில் இல்லாத வியாதி, புதுசாக ஆரம்பித்திருக்குது. 
முன்பு... நேர்மை, அறம் என்ற வழியில் மக்கள் வாழ்ந்தார்கள்.
இப்ப... அது எல்லாம், கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் நடத்தும் மக்களுக்கே முதல் நடவடிக்கை…. 

மக்கள் போராட்டம் நடத்தும் வரை அரச உத்தியோகத்தர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தினையும் சட்ட விரோதமான முறையில் தனி நபர் ஒருவர் அபகரித்து எல்லை வேலிகளை போட்டு , அவ்வீதி ஊடான போக்குவரத்தையும் தடை செய்து இருந்தார்

அந்த தனிநபர் பணபலத்துடன் அரச செல்வாக்கு உள்ளவராக இருப்பார்.வர வர சாவகச்சேரி பக்கம் ஒரு மார்க்கமாய்த்தான் போகுது.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அந்த தனிநபர் பணபலத்துடன் அரச செல்வாக்கு உள்ளவராக இருப்பார்.வர வர சாவகச்சேரி பக்கம் ஒரு மார்க்கமாய்த்தான் போகுது.:rolling_on_the_floor_laughing:

நீங்கள் ஊரில் இல்லாதது... சனத்துக்கு, குளிர் விட்டுப் போச்சுது.  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் ஊரில் இல்லாதது... சனத்துக்கு, குளிர் விட்டுப் போச்சுது.  😂

சரியாச்சொன்னியள் சிறித்தம்பி...எங்களை கண்டால் ஊரே கலங்கும்.நாய்கள் கூட குலைக்காது.....:face_with_tears_of_joy:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வேலியை தள்ளிப் போட்டு அடுத்தவர் காணியை அபகரிப்பது யாழ்பாண தமிழ் பாரம்பரியங்களில் ஒன்று தானே!  என்ன இவர் கொஞ்சம் எல்லை மீறீட்டார். அவ்வளவுதான். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, island said:

வேலியை தள்ளிப் போட்டு அடுத்தவர் காணியை அபகரிப்பது யாழ்பாண தமிழ் பாரம்பரியங்களில் ஒன்று தானே!  என்ன இவர் கொஞ்சம் எல்லை மீறீட்டார். அவ்வளவுதான். 😂

இப்ப வேலியை தள்ளி அடைக்கிறதெல்லாம் ஓல்ட் பாஷன். நேரடியாய் கள்ள உறுதிதான்.
இப்படிக்கு
பாதிக்கப்பட்டவன் :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.