Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் கிறுக்கல்கள்....

Featured Replies

பேனாவோடு நான்...

என்னவளே...

என்ன யோசிக்கிறாய்..

உனக்காய் நான் எழுதுவதை இன்னும்

என் பேனா நிறுத்தவில்லையென்றா..?

ஆமாம்..

அதைத்தான் நானும்

யோசிக்கிறேன்

உனக்கு தெரியுமோ தெரியாது

ஏன் என் கவிதைகளில் எழுத்து

பிழைகள் அதிகமென்று

ஏன் தெரியுமா...

என் கவிதைகளை

நான் வாசிப்பதில்லை

வாசித்தால்

ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்

என்பதை படித்துக் கவலைப்படுவேன்

என்பதால்தான்.

பேனா எடுத்தவர் யாரும்

பேனாவால் இறந்ததில்லை

நான் மட்டும்தான் உனக்காய்

எழுதி எழுதி இறந்து

கொண்டிருக்கிறேன்

இந்த உலகம் கவலைப்படுகிறது

உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்

என்று

உண்மைதான் அதற்காக நான்

அதிகம் வருத்தப்படுவதுண்டு

ஆனால் அவர்களுக்கு எப்படி

புரியவைப்பேன்...

நான் உனக்காய் எழுதுவதில்லை

உன்னால்தான் எழுதுகிறேன் என்று.

உன்னைக் காதலித்தது

மட்டும்தான் நான்

உன்னைக் கற்றுக்கொண்டது

என் பேனாதான்

இல்லையென்றால்..

நான் சொல்வதைக் கேட்டு

எழுதுவதை எப்போதோ

நிறுத்தியிருக்கும்.

நீ என்னைக் காதலித்த

காலங்களை விட உன்னால்

என்னை மட்டும் காதலித்துக்

கொண்டேயிருக்கும் பேனாவின்

காலங்கள்தான் அதிகம்

இதனால்தான் சொன்னார்களோ...

காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்

கிடைத்ததை காதலியென்று

பேனா பாவம் பொல்லாததுதான்

ஆனால் அதைவிட பெண்பாவம்

பொல்லாதது அதனால்தான்

என் பேனா என் இதயத்தை

கிழித்தபோதும் உன் பெயர்

சொல்லித் துடித்துக்

கொண்டிருந்தேன்.

என் கவி ரசிகைகளைவிட

என் பேனாதான் உன் மேல்

அதித பொறாமைப் படுகிறது

ஏன் தெரியுமா..

தான் இவ்வளவு

ரசிகர்களையும்

பெருமைகளையும்

சேர்த்து தந்தும் தன்னைக்

காதலிக்காமல் உன்னை

மட்டும் நான் காதலித்துக்

கொண்டேயிருப்பதால்.

உண்மையை சொல்லப் போனால்

என் பேனாவிடம் இருந்துதான்

உன் பழக்கங்களை தெரிந்து

கொண்டேன்

இப்பொழுதெல்லாம் பேனா எழுத

ஆரம்பித்தால் நான் எதுவும் பேசுவதில்லை

பேசி பிடிவாதத்தால் வலிக்கபோவது என்

கை என்பதால்.

இருந்தாலும் ராசியான

கவிஞர்களில் நானும்

ஒருவன்

என் பெற்றோர்களுக்கும்

எழுதப்படிக்க தெரியாது.

என்னவளே வா..

உனக்காய் எழுதி எழுதி

என் பக்கங்களை காயப்படுத்தும்

என் பேனாவை பறித்துவிட்டுப் போ

இல்லையேல்

என் கைகளை

முறித்துவிட்டு போ

எல்லாம் உன் கையில்தான்

இருக்கிறது வா..

-யாழ்_அகத்தியன்

Edited by yaal_ahaththiyan

அகத்தியன் உங்கள் பேனாவால் உங்கள்

காதலியை சம்பாதித்தீர்களோ இல்லையோ எனக்குத்தெரியாது..

நிச்சயமாக ஒரு ரசிகனாய் என்னைச் சம்பாதித்து விட்டீர்கள்..

சுகமான கவிதைகள்..

பேனா எடுத்தவர் யாரும்

பேனாவால் இறந்ததில்லை

நான் மட்டும்தான் உனக்காய்

எழுதி எழுதி இறந்து

கொண்டிருக்கிறேன்

இந்த வரிகள் மிக அருமை

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தியன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.நீங்கள் வாழ்க்கையின் ரகசியத்தை புரியத்தொடங்கி விட்டீர்கள் என் கீழ் வரும் வரிகள் சொல்கின்றன.

"இதனால்தான் சொன்னார்களோ...

காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்

கிடைத்ததை காதலியென்று"

நீங்கள் உங்கள் பேனாவை காதலிக்க உங்கள் கவிதையை ரசிகர்கள் காதலிக்க தொடங்கி விட்டார்கள்.

இந்த உலகம் கவலைப்படுகிறது

உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்

என்று

உண்மைதான் அதற்காக நான்

அதிகம் வருத்தப்படுவதுண்டு

ஆனால் அவர்களுக்கு எப்படி

புரியவைப்பேன்...

நான் உனக்காய் எழுதுவதில்லை

உன்னால்தான் எழுதுகிறேன் என்று.

-யாழ்_அகத்தியன்

அருமையான வரிகள் அகத்தியரே!

தென்றலின் சுகமும் தேன் - சுவை

இரண்டும் சேர்த்து

அன்பினை கவிதை செய்த

அகத்தியன் திறமை வாழ்க

உங்கள் அடிமனதில் இருந்து வார்த்தைகள் வருவதால், கவிதைகள் நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள்

மாமா மறுபடி கவிதையுடன் வந்திட்டீங்களா அந்த மாதிரி இருக்கு கவிதை உங்க கவிதையை வாசித்தாலே சும்மா அதிருதிலலலல்..........அதிலையும் இந்த வரியில பல விளக்கம் கொடுத்து சென்று விட்டீங்கள் அகத்தியன் மாமா வாழ்த்துகள்........... :P ;)

இதனால்தான் சொன்னார்களோ...

காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்

கிடைத்ததை காதலியென்று

யாழ் அகத்தியனின் கவிதைகள் அனைத்தும் அருமை. உங்கள் கவிதைகள் அனைத்தையும் ஒரு பகுதிக்குள்ளேயே பதியலாமே.

ரொம்ப தான் காதல் தோல்வி அடைஞ்சுட்டீங்க போல

  • தொடங்கியவர்

நீ மறந்த எதுவும்……

உன்னை மட்டும்

காதலித்தேன்

என்பதை மறந்தாய்

உன்னால் கவிஞனாக்கப்

பட்டேன் என்பதையும்

மறந்தாய்

உன் மறதி கூட

எனக்கு பிடித்திருக்கிறது

நீ மறந்த எதுவும்

உருப்பட்டதில்லையே

-யாழ்_அகத்தியன்

எனக்கு அகத்தியனின் காதலியை பார்க்கணும் போல இருக்குங்கோ

ஏனெனில் அகத்தியனை இப்படி எல்லாம் எழுத வைத்த அந்த காதலிக்கு வாழ்த்து சொல்லணும் :P

Edited by வெண்ணிலா

பேனா பாவம் பொல்லாததுதான்

ஆனால் அதைவிட பெண்பாவம்

பொல்லாதது அதனால்தான்

என் பேனா என் இதயத்தை

கிழித்தபோதும் உன் பெயர்

சொல்லித் துடித்துக்

கொண்டிருந்தேன்.

ஹும் இப்படியும் துடிக்கிதா இதயம்..... ரொம்ப நல்லாருக்கு உங்க கவிதைகள் எல்லாமே.... பாராட்டுக்கள்....!

அந்த காதலிக்கு வாத்து சொல்லணும்

வெண்ணிலா அதெப்படி வாத்து சொல்லுறது எனக்கும் சொல்லித்தாங்கோ :D B)

வெண்ணிலா அதெப்படி வாத்து சொல்லுறது எனக்கும் சொல்லித்தாங்கோ :D B)

ஹீஹீ ஒரு எழுத்து விடுபட்டுவிட்டது

தவறுக்கு வருந்துகின்றோம் :D ;)

என்னவளே வா..

உனக்காய் எழுதி எழுதி

என் பக்கங்களை காயப்படுத்தும்

என் பேனாவை பறித்துவிட்டுப் போ

இல்லையேல்

என் கைகளை

முறித்துவிட்டு போ

எல்லாம் உன் கையில்தான்

இருக்கிறது வா..

--------------------------------------------------------------------------

என் கிறுக்கல்கள்... என்று சொல்லப்பட்டாலும் கீறுப்பட்ட இதயங்களின் வலி தெரிகின்றது. கிறுக்கல்கள் என்று கவிதையை ரசிக்கின்ற அதே நேரம் கவிதையில் இழையோடும் உணர்வுகளை உணர முடிகின்றது. வாழ்த்துக்கள்

அகத்தியன் மாமா ஏதாவது கெல்ப் வேண்டும் என்றா என்னிட்ட கேளுங்கோ.......... கவிதை நல்லா தான் இருகிறது :P ........அது சரி காதலை கூட மறக்கிற அளவுக்கு உங்கள் காதலிக்கு கஜனி சூரியா மாதிரி ஏதாவது வியாதியோ..........என்றாலும் கவி வரிகள் அருமை மாமா........ :D

உன்னை மட்டும்

காதலித்தேன்

என்பதை மறந்தாய்

Edited by Jamuna

  • தொடங்கியவர்

சிலையானவளே...

நீ கொடுத்த முத்தத்தால்

மொய்த்துக் கொள்கின்றன

என்னைச் சுற்றி தேனீக்கள்

*

அழகைப் பற்றி

எழுதச் சொன்னார்கள்

நான் உன்னைப் பற்றி

எழுதினேன்

உன்னைப் பற்றி

எழுதச் சொன்னார்கள்

நான் கவிதையைப் பற்றி

எழுதினேன்

*

உன்னைப் பார்த்து

எழுதிய கவிதைகள்தான்

என் சொந்தக் கவிதைகள்

*

நிலவின் கையால்

சாப்பிட்டபின்

நிலாச்சோறு

பிடிக்கவில்லை

*

எழுந்தாலும்

விழச் சொல்லும்

உன் கன்னக்குழி

-யாழ்_அகத்தியன்

எழுந்தாலும்

விழச் சொல்லும்

உன் கன்னக்குழி

ஹீஹீ கன்னக்குழிக்குள் அடிக்கடி விழுறியள் போல.

அதுசரி அகத்தியா நீங்கள் கவிதைகள் மட்டும் தான் எழுதுவியளா?

  • தொடங்கியவர்

என் காதல் நீ...

என் முதல்

காதல் நீ

நான்

காதலித்ததே

உனக்கு தெரியாது.

என் கடைசி

காதல் நீ

நான்

உன்னை மட்டும்

காதலித்ததுதான்

உனக்கு தெரியும்.

-யாழ்_அகத்தியன்

  • தொடங்கியவர்

யார் அந்த நிலா..

முகமே தெரியாத

உன் கண்களுக்காக

தினம் ஒரு கவித்

தூண்டிலோடு

நான் காத்துக்

கிடந்தாலும்

மனதில் சின்ன

பயம்

யாருக்காக

போட்ட தூண்டிலில்

நான் மாட்டினேன்

என

நீ கேட்பாயோ

என்று

-யாழ்_அகத்தியன்

யாருக்காக

போட்ட தூண்டிலில்

நான் மாட்டினேன்

என

நீ கேட்பாயோ

என்று

நல்லா தான் இருக்கு கவிதை எல்லாம் மாமி அப்படி எல்லாம் கேட்க மாட்டா ரொம்ப நல்லவா.......... :P :P :D

நான்

உன்னை மட்டும்

காதலித்ததுதான்

உனக்கு தெரியும்

.

அப்போ வேறை யாரையாவது தெரியாமல் காதலிக்கிறியளோ?

  • தொடங்கியவர்

கடைசி ஆசை

அன்பே:

ஏன் பிரிந்தாய்?

நம் பிரிவை உயிர்

மட்டும்தான் பிரிக்கும்

என்றுதானே நானிருந்தேன்.

எப்படி பிரிந்தாய்?

நீ

இல்லாமல்

வாழத்தெரியாத நான்

நீ

இருந்தும் இல்லாமல்

எப்படி வாழ்வேன்.

சொல் கண்ணே சொல்

நீ

இல்லாத உலகத்தில்

நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ

இருக்கும் உலகில்

நான் கல்லறையாய்

வாழலாம்.

எங்கே நீ சொல்

அன்பே சொல்..

உனக்கான என் காதல்

மரத்தில் இருந்து

தினமொரு கவியிலையாய்

விழுந்து கொண்டிருக்கிறது

என் கண்ணீர் எனும்

மழையாலும்

உன் நினைவெனும்

புயலாலும்.

வா அன்பே வா...

நீ

என்னை வாழ

வைக்க வேண்டாம்

வாழ விடாமல்

வைத்துவிடு

அது போதும்

உனக்காய் வாழ்ந்து

உன்னால் இறந்தேன்

என்பதே என்

வாக்குமுலமாய்

இருகட்டும்.

வா அன்பே வா

-யாழ்_அகத்தியன்

உனக்கான என் காதல்

மரத்தில் இருந்து

தினமொரு கவியிலையாய்

விழுந்து கொண்டிருக்கிறது

உண்மையாகவே அப்படி தான் விழுந்து கொண்டிருக்கிறது போல் தெரிகிறது B) ..............கவிதை நன்றாக இருக்கிறது அதிலும் இந்த வரிகள் உண்மையை சொல்லுகின்ற வரிகளாக இருக்கிறது போல் தெரிகிறது.......உங்கள் காதல் வெற்றியடைய பேபியின் வாழ்த்துகள்............ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.