Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் - புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் - புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

kugenMay 21, 2023
 
University-Professors-Meeting-08.jpg

போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  அதற்கு தேவையான ஒழுங்குகளை செய்யுமாறும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இதன்போது ஜனாதிபதியிடம் கருத்துரைத்த ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, 

புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றனர். எம்முடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினர்.

குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். உண்மையில், அவர்கள், நெருக்கடியான இந்த நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர். 

எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடக்குக்கு மீண்டும் செல்லவுள்ளேன். எனவே, இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிப்பது சிறந்தது என்று நீண்ட விளக்கத்தை அளித்தார்.

இதற்கு மறுமொழியளித்து ஜனாதிபதி ரணில் கூறுகையில், புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழையுங்கள். அவர்களுக்கு தேவையன ஒத்துழைப்புகளை வழங்குங்கள். அரசியலில் ஈடுபடும்போது, உலக அரசியல் போக்கை போன்று தேசிய அரசியல் நகர்வுகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யுங்கள். இது அனைவருக்கும் முக்கியமானது என கூறினார்.
 

http://www.battinews.com/2023/05/blog-post_838.html

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த புலம்பெயர்ஸ்..லண்டனில்  ரணில்போட்ட எலும்புத்துண்டைக் கடித்தவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். உண்மையில், அவர்கள், நெருக்கடியான இந்த நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.

பிரித்து விளையாடுகிறார்கள். உளூரில் சாதியம் மற்றும்  மதத்தையும் வைத்து பிரிகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இன்னொரு யுக்தி பாவிக்கிறார்கள். 

1 hour ago, கிருபன் said:
சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர். 

 

ரணில் புலம்பெயர்ந்த தமிழர்களை நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். எமது தமிழ் அரசியல்வாதிகள் செய்ய மறந்த வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்று. புலம்பெயர்ந்த தமிழரின் முதலீடு தமிழர் பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அம்சம்.

வெளிநாட்டவர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போராட வேண்டியவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே. இதனைத் தவறவிட்டதால் முதலீட்டாளர்கள் சிங்க்களவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

யார் இந்த புலம்பெயர்ஸ்..லண்டனில்  ரணில்போட்ட எலும்புத்துண்டைக் கடித்தவர்களா?

எலும்பை கடித்து பின்பக்கத்தை சுட்டு கொண்டு வர தயராக லண்டனில் மட்டும் அல்ல எல்லா இடம்களிலும் இருப்பினம் .பவுன் 2௦௦ஆக உள்ளபோது பத்து கோடிக்கு காணி வாங்கியவரின் தற்போது அதை திருப்பி எடுப்பது என்றால் ஐந்து கோடி தான் வரும் .காரணம் தற்போதைய பணப்பெறுமதி 4௦௦களில் .         காசை துலைக்க என்று விருப்ப பட்டால் போகட்டும் .

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் - புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

எந்தவொரு புலம்பெயர் தமிழனுக்கும் சிங்கள நாட்டு நலன் இருக்கவே கூடாது. இலங்கை வாழ் தன் குடும்ப நலன் மட்டுமே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்க தயாரில்லை. ஆனால் அவர்களது பணம் மட்டும் வேண்டும். அங்குதான் அவர்களது தந்திரம் இருக்கிறது. உரிமையுடன் பணம் இங்கு வந்தால் வடக்கு கிழக்கு பிரதேசம் தெட்கை  விட அபிவிருத்தி அடைந்துவிடுமென்று அவர்களுக்கு நன்றாக தெரியும். வெளி நாட்டு தமிழன் அப்படி எல்லாம் ஏமாந்துருவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2023 at 18:22, கிருபன் said:

போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 

சொந்தக்காணிகளில் குடியிருக்க உரிமையில்லை, எங்கள் வழிபாட்டுத்தலங்களில் வழிபட முடியவில்லை, எங்கள் உறவுகளை சுதந்திரமாக நினைவு கூர முடியவில்லை, இராணுவம் இன்னும் எங்கள் காணிகளில் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது, அதை இந்த நரியார் அரசியலாக்க வேண்டாம் என்கிறார். எந்த அச்சம் தீர்ந்தது? என்ன திமிர் இத்தனையும் செய்துகொண்டு முதலிட வாருங்கள் என்று அழைக்க? அப்போ இவர்களது அரசியல்தான் என்ன? தெற்கில் தமிழருக்கெதிராக கூச்சலிடுகிறார்கள், அதை தடுக்க முடியவில்லை. நாளைக்கு முதலிடுவோரின் முதலீடுகள் முடக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சிங்கள பவுத்த நாட்டை தமிழர் ஏன் முன்னேற்ற வேண்டும்? இத்தனையும் செய்துகொண்டு அழைக்கிறாராம், வெட்கமில்லை இவருக்கு?

23 hours ago, Cruso said:

உரிமையுடன் பணம் இங்கு வந்தால் வடக்கு கிழக்கு பிரதேசம் தெட்கை  விட அபிவிருத்தி அடைந்துவிடுமென்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

அதனாற்தான் அரச அதிகாரம் தமிழனுக்குத் தர மறுக்கிறது சிங்களம். அபிவிருத்தி என்று சொல்லி, நாங்கள் கஸ்ரப்பட்டு சேர்ப்பதை பறித்து, நம்மை துரத்துவதற்கு. அதுதான் நடக்கிறது. அதை உணர அறிவற்றவர்கள், அதுதான் பெரிதென்கிறார்கள், அவர்கள் வீட்டுக்குள் விகாரை நுழைந்து திருடும்வரை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.