Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்த்தேக்கத்தில் விழுந்த செல்போன்- 21 இலட்சம் லிற்றர் தண்ணீரை வெளியேற்றி தேடிய அதிகாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர் தேக்கம்

இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்க அதிகாரி ஒருவர் தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டமைக்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சத்தீஸ்கர் மாநிலமான உள்ள கெர்கட்டா அணையில் உள்ள நீரே குறித்த அதிகாரியினால் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.

ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவு ஆய்வாளரான இந்த அரச அதிகாரி செல்பி எடுக்கும் போது, அவரது கைப்பேசியை குறித்த நீர்தேக்கத்தில் வீழ்ந்தது. இதனையடுத்து உள்ளூர் சுழியோடிகளை நாடிய போதும் அவர்களால் அந்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கைப்பேசியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களை வரவழைத்து, 3 நாட்களாக  21 இலட்சம் லிற்றர் லிற்றர் நீரை அவர் வெளியேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அது இயங்க முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தது. தமது கைப்பேசியில் முக்கியமான அரச கருமம் சார்ந்த தரவுகள் இருப்பதன் காரணமாகவே அதை மீட்டெடுக்க வேண்டும் அந்த அதிகாரி கூறியிருந்தார்.

எனினும், அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னதாக அருகில் உள்ள கால்வாயில் சிறிது தண்ணீரை வெளியேற்றப் போவதாக ஒரு அதிகாரியிடம் வாய்மொழி அனுமதி பெற்ற நிலையிலேயே குறித்த அதிகாரி நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றியுள்ளார்.

கைப்பேசியை கண்டுபிடிப்பதற்காக அவரால் வெளியேற்றப்பட்ட நீர், 6 சதுர கிமீ அதாவது 600 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமானது என்று கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/255734

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

நீர் தேக்கம்

இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்க அதிகாரி ஒருவர் தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டமைக்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சத்தீஸ்கர் மாநிலமான உள்ள கெர்கட்டா அணையில் உள்ள நீரே குறித்த அதிகாரியினால் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.

ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவு ஆய்வாளரான இந்த அரச அதிகாரி செல்பி எடுக்கும் போது, அவரது கைப்பேசியை குறித்த நீர்தேக்கத்தில் வீழ்ந்தது. இதனையடுத்து உள்ளூர் சுழியோடிகளை நாடிய போதும் அவர்களால் அந்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கைப்பேசியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களை வரவழைத்து, 3 நாட்களாக  21 இலட்சம் லிற்றர் லிற்றர் நீரை அவர் வெளியேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அது இயங்க முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தது. தமது கைப்பேசியில் முக்கியமான அரச கருமம் சார்ந்த தரவுகள் இருப்பதன் காரணமாகவே அதை மீட்டெடுக்க வேண்டும் அந்த அதிகாரி கூறியிருந்தார்.

எனினும், அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னதாக அருகில் உள்ள கால்வாயில் சிறிது தண்ணீரை வெளியேற்றப் போவதாக ஒரு அதிகாரியிடம் வாய்மொழி அனுமதி பெற்ற நிலையிலேயே குறித்த அதிகாரி நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றியுள்ளார்.

கைப்பேசியை கண்டுபிடிப்பதற்காக அவரால் வெளியேற்றப்பட்ட நீர், 6 சதுர கிமீ அதாவது 600 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமானது என்று கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/255734

இவரை பதவி நீக்கம் மட்டும் செய்தால் போதாது,
சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2023 at 01:33, தமிழ் சிறி said:

இவரை பதவி நீக்கம் மட்டும் செய்தால் போதாது,
சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும்.

இது ஒரு Sam sung phone , இங்கு ரேடியோவில் சொல்லி சொல்லி சிரிக்கின்றார்கள் இவரைப்பற்றி😁,

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, உடையார் said:

இது ஒரு Sam sung phone , இங்கு ரேடியோவில் சொல்லி சொல்லி சிரிக்கின்றார்கள் இவரைப்பற்றி😁,

அவுஸ்திரேலியா மட்டும், இந்தச் செய்தி பரவி விட்டதா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2023 at 18:33, தமிழ் சிறி said:

இவரை பதவி நீக்கம் மட்டும் செய்தால் போதாது,
சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும்.

அண்ணா இவரை மாதிரி பல வட இந்தியர் வரணும் அங்கு பஞ்சம் வரணும்  இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட சிதைக்கப்பட்ட எம்   உறவுகளின்  ஆன்மாக்கள்  இன்னமும் அமைதியற்று திரிகின்றன. 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியா மட்டும், இந்தச் செய்தி பரவி விட்டதா. 😂

பின்ன.....?    இதென்ன லேசுப்பட்ட வேலையே? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியா மட்டும், இந்தச் செய்தி பரவி விட்டதா. 😂

Russia போய், அங்கிருந்து அவுஸ் போயிருக்கிறது 😁

RT யில் வந்திருந்தது, அது பொய்ச்செய்திகளை மட்டுமே வெளியிடுவதால்  அதனால் அதனை இங்கே இணைக்கவில்லை 😉

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணை நீரை இறைத்த அதிகாரிக்கு அபராதம்

wld03.jpg?itok=5dmBX6ic

செல்பி படம் எடுக்கும்போது விழுந்த கைபேசியை மீட்பதற்கு அணையில் உள்ள நீரை இறைத்த இந்திய அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அவருக்கு அரசு அபராதம் விதித்துள்ளது.

நிர்வாகத்தின் அனுமதியை பெறாமல் பல மில்லியன் லீற்றர் நீரை இறைத்ததற்காக 53,092 இந்திய ரூபா அபராதம் செலுத்தும்படி ராஜேஷ் விஷ்வாஸ் என்ற அந்த அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது 100,000 ரூபா மதிப்புக் கொண்ட கைபேசியில் அரசின் முக்கிய தரவுகள் இருப்பதாகக் கூறியே அதனை மீட்க முயன்றார். ஆரம்பத்தில் சுழியோடிகளைக் கொண்டு தேடியபோதும் கைபேசி கிடைக்காத நிலையிலேயே அணையின் நீரை இறைக்க உத்தரவிட்டார்.

இந்தியாவின் மத்திய மாநிலமான சட்டிகாரில் உள்ள கார்கட்டா அணையில் உள்ள நீரையே அவர் முழுமையாக இறைத்துள்ளார். இந்நிலையில் தனிப்பட்ட நலனுக்காக இறைக்கப்பட்ட நீருக்காகவும் அனுமதியின்றி அதனை இறைத்ததற்காகவும் அபராதம் செலுத்தும்படி நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

https://www.thinakaran.lk/2023/06/01/வெளிநாடு/99159/அணை-நீரை-இறைத்த-அதிகாரிக்கு-அபராதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.