Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெருகல் படுகொலையின் 37 ஆவது வருட நினைவேந்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெருகல் படுகொலையின் 37 ஆவது வருட நினைவேந்தல்

13 Jun, 2023 | 10:59 AM

image

வெருகல் - ஈச்சிலம்பற்று பகுதி அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது இடம்பெற்ற சேருவில படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு 12 ஆம் திகதி  ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் மிகவும் உணவுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.06.12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லீம் சகோதரர்களாவர்.

இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

1.தங்கராஜா – கிராம சேவகர் (பூமரத்தடிச்சேனை) - ஈச்சிலம்பற்று முகாம்)

2.அலிபுகான் - கிராம சேவகர் (தோப்பூர்) - பூமரத்தடிச்சேனை முகாம்

3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் (பாலத்தோப்பூர்) - மீள்குடியேற்ற உத்தியோகத்தர் - பூநகர் முகாம்

4.கோணாமலை வேலாயுதம் - பூமரத்தடிச்சேனை

5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி - பூமரத்தடிச்சேனை

6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை

7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர்

8.கனகசபை கனகசுந்தரம் - பூநகர்

9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி - பூநகர்

10.மூத்ததம்பி காசிப்பிள்ளை - பூநகர்

11.கதிர்காமத்தம்பி நாகராசா - பூநகர்

12.வீரபத்திரன் நடேசபிள்ளை - பூநகர்

13.முத்தையா காளிராசா - பூநகர்

14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை - பூநகர்

15.வேலுப்பிள்ளை சித்திரவேல் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

16.சித்திரவேல் சிவலிங்கம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

17.வீரபத்திரன் சோமசுந்தரம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்

20.தாமோதரம் தர்மலிங்கம் - ஈச்சிலம்பற்று

21.புண்ணியம் மதிவதனன் - பூமரத்தடிச்சேனை

அத்துடன் 1.வீரபத்திரன் சோமசுந்தரன், 2.வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள்

WhatsApp_Image_2023-06-12_at_12.59.02.jp

WhatsApp_Image_2023-06-12_at_12.59.03.jp

WhatsApp_Image_2023-06-12_at_12.59.04.jp

WhatsApp_Image_2023-06-12_at_12.59.03__1

WhatsApp_Image_2023-06-12_at_12.59.04__1

WhatsApp_Image_2023-06-12_at_12.59.05.jp

WhatsApp_Image_2023-06-12_at_12.59.05__1

WhatsApp_Image_2023-06-12_at_12.59.06.jp

WhatsApp_Image_2023-06-12_at_12.59.09.jp

WhatsApp_Image_2023-06-12_at_12.59.06__1

WhatsApp_Image_2023-06-12_at_12.59.10.jp

  •  

 

https://www.virakesari.lk/article/157590

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says '12 தமிழினப்படு கொலைகள். சேறுவிலில் இடம்பெயர்ந்தோருக்கான 06 உணவினை எடுத்துச்செல்லும்போது சிங்கள காடையர்களால் 21 பொதுமக்கள் 1986 கொல்லப்பட்டனர். கொக்கட்டிச்சோலைப் படுகொலை மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பகுதியில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 220 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை சிறிலங்கா இராணுவம் கத்திகளால் வெட்டியும் குத்தியும், சுட்டும் படுகொலை செய்தது. 1991 400 வீடுகள் எரிக்கப்பட்டன. 12 06 12 யாழ்ப்பாணத்தில் "கடல் நீரேரித் தடைச்சட்டம்" சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டதால் 35,000 மீனவக்குடும்பங்கள் தமது தொழிலை இழந்தனர். #30ne2remember 1986 Sivapi கருத்திடுக'

இராணுவத்தால்... படுகொலை செய்யப் பட்ட பொதுமக்களுக்கு.  நினைவு அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

37ம் வருட நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலங்கள் சென்றாலும் வலி மாறாது.
நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் ........!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.