Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; பொலிஸார் அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; பொலிஸார் அதிரடி

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; பொலிஸார் அதிரடி

கடந்த சில மாதங்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதாள உலகக் கும்பல்களிடையே இடம்பெற்றுவரும்  போட்டியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக நேற்றைய தினம் ஹோமாகம, கொஸ்கம மற்றும் கொட்டாவ ஆகிய இடங்களில்  இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுக்க பொலிஸார் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகா் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அண்மையில் இடம்பெற்ற பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் பாதாள உலகம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவையாக உள்ளன.

“சில சம்பவங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தமது போட்டியாளர்களுக்கு எதிராக  இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளைக்  கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1336001

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளைக்  கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது முடியாது உங்களால். இவர்களை உருவாக்குவதும் வழிநடத்துவதும் அரசியல்வாதிகளே.  அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுங்கள் முதலில். நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையேதான் அறுவடை செய்யவேண்டும், அதற்கு மேல் எதிர்பார்க்கக்கூடாது அது எதுவாக இருந்தாலும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 22 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி !

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2023 | 09:26 AM
image
 

எம்பிலிபிட்டிய, பனாமுர, வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தநபர் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் அவரைக் கைது செய்வதற்காக இன்று சனிக்கிழமை (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். 

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் முன்னாள் இராணுவவீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவா் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆகியவற்றுடன் தொடர்புடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/158458

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

இவ்வாறு உயிரிழந்தவர் முன்னாள் இராணுவவீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மனதில் நினைத்துக்கொண்டே செய்தியை வாசித்தேன், அதுதான் உண்மை. இவர் முன்னாள் இராணுவ வீரராம், அப்படியெனில்; எத்தனை வயதில் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பார்? விலகியிருப்பார்? அங்கே சிறுவர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படத்தை யாரும் கதைப்பதில்லை, கேள்வி கேட்ப்பதுமில்லை. தாங்கள் சிறுவர்மீதும், சிறுவர் இல்லங்கள்மீதும் தெரிந்துகொண்டே குண்டுகளை வீசி கொல்லலாம், சுட்டுக்கொல்லலாம், மற்றவர்கள் மேல் குற்றம் சொல்வதும், பாடம் எடுப்பதும் தாங்கள் சுத்தமானவர்கள் என்கிற நினைப்போ? அல்லது அவை வெளிவராது என்கிற நினைப்போ?

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2023 | 11:09 AM
image
 

பெண் சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர்  நேற்று வெள்ளிக்கிமை (23) இரவு கைதுச் செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுச் செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி  கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158467

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... சிங்களம் விதைத்தது இப்போ அதுக்கெதிராக திரும்பியுள்ளது. அது தெரிந்தே இதுகளை வடக்கில் கட்டி வைத்திருக்கிறது, இல்லது சிங்களம் தாங்காது அதன் விளைவுகளை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இவ்வாறு உயிரிழந்தவர் முன்னாள் இராணுவவீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

31 minutes ago, ஏராளன் said:

சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

 

13 minutes ago, satan said:

ம்.... சிங்களம் விதைத்தது இப்போ அதுக்கெதிராக திரும்பியுள்ளது. அது தெரிந்தே இதுகளை வடக்கில் கட்டி வைத்திருக்கிறது, இல்லது சிங்களம் தாங்காது அதன் விளைவுகளை.

செய்திகளை பார்க்க... சிங்களம் விதைத்ததை அறுவடை செய்கின்றது போல் தெரிகின்றது.
மாட்டுப் படாமல் எத்தனை இராணுவத்தினன், புத்த பிக்கு உடைக்குள் இருக்கின்றானோ யாரறிவார்.

  • கருத்துக்கள உறவுகள்

T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 250,000 ரூபா வெகுமதியும், தனியார் உளவாளிக்கு 250,000 ரூபாவும் வழங்கப்படும்.

இதேவேளை பல்வேறு வகையான தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளை கைது செய்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 250,000 ரூபா வெகுமதியும், தனியார் உளவாளிக்கு 250,000 ரூபாவும் வழங்கப்படும்.

இதேவேளை பல்வேறு வகையான தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளை கைது செய்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

 

இரண்டு செய்தியையும் வாசிக்க... சிரிப்பு தானாக வருகுது. animiertes-gefuehl-smilies-bild-0056
250,000 ரூபாவை வாங்க, ஆள் உயிரோடே இருக்க வேணுமே.... animiertes-gefuehl-smilies-bild-0048.gif

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2023 at 08:31, தமிழ் சிறி said:

 

 

செய்திகளை பார்க்க... சிங்களம் விதைத்ததை அறுவடை செய்கின்றது போல் தெரிகின்றது.
மாட்டுப் படாமல் எத்தனை இராணுவத்தினன், புத்த பிக்கு உடைக்குள் இருக்கின்றானோ யாரறிவார்.

உலகில் இறுதியாக எங்கும் ஆயுதத்தளபாடக் குவியல்கள் மட்டுமே மிச்சம் இருக்க அவற்றின் மேல் சில காகங்களும் கழுகளும் அமர்ந்திருக்கும்போல் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா குடுத்துவிட்டு வெகுமதி கொடுத்து மீளப்பெறப்போகினமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் குற்றச்செயல்கள் : களனி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயம்

Published By: DIGITAL DESK 3

26 JUN, 2023 | 10:10 AM
image
 

களனி, திப்பிட்டிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்  இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் 24, 34 மற்றும் 44 வயதுடைய வெல்லம்பிட்டிய, அங்கொட, பேலியகொட மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158583

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2023 at 23:35, தமிழ் சிறி said:

கடந்த சில மாதங்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதாள உலகக் கும்பல்களிடையே இடம்பெற்றுவரும்  போட்டியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் ஆட்டத்துக்காக குழுக்களை உருவாக்கி வைத்திருப்பார்கள்.

இவர்களை கட்டுப்படுத்த பொலிசாரால் முடியாது.

நள்ளிரவில் குடிபோதையில் மறியல் வீட்டிற்குள் புகுந்து தமிழர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதையே விசாரணைக்கு எடுக்க முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.