Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்!

யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின் பங்கேற்புடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

நயினாதீவு மேகலை அரங்கத்தில் இன்று புதன்கிழமை(05) காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடங்களின் தேரர்கள் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

விகாரையில் இடம்பெற்ற பூஜைகளுடன் , விழா நாயகனான விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ தவில் நாதஸ்வர இசையுடனும், கண்டிய நடனத்துடனும் மண்டபத்திற்கு செங்காவி விரிப்பில் அழைத்து செல்லப்பட்டார்.

அதன் போது வீதியில் இரு மருங்கிலும் மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கூடி, விகாரதிபதிக்கு மலர் தூபி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள், நயினாதீவு மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நயினாதீவு மண்ணில் சேவை புரிய தனது 11வது வயதில் தடம் பதித்த
நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் 50 வருடங்களாக நயினை மண்ணிற்கும் மக்களுக்கும் ஆற்றிவரும் பெரும் சேவையை கௌரவிக்கும் வகையில் நயினாதீவு மக்களால் குறித்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

IMG-20230705-WA0031-1-600x338.jpg

IMG-20230705-WA0023-600x338.jpg

IMG-20230705-WA0029-600x338.jpg

https://athavannews.com/2023/1337629

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடங்களின் தேரர்கள் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன்

 ம்ம்.....  இதற்கு சர்வ மத தலைவர்களின் பங்கேற்பு என்று தமக்கு தாமே கூறி பெருமைபட்டுக்கொள்வது.

9 hours ago, தமிழ் சிறி said:

நயினாதீவு மண்ணில் சேவை புரிய தனது 11வது வயதில் தடம் பதித்த
நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் 50 வருடங்களாக நயினை மண்ணிற்கும் மக்களுக்கும் ஆற்றிவரும் பெரும் சேவையை கௌரவிக்கும் வகையில் நயினாதீவு மக்களால் குறித்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

 

அப்படி என்ன சேவையை அவர் செய்து, அதில் மக்கள் மகிழ்ந்தார்கள் என்பதையும் அறிவித்து  மலர் தூவி மரியாதையை செய்தால்; நாங்களும் சேர்ந்து அவரை வாழ்த்த வசதியாக இருக்கும். நாட்டிலே பல தசாப்தமாக தமிழர் கொல்லப்பட்டு தம் சொந்த இருபீடங்களை விட்டு வெளியேறும்போது, நிலங்கள் அபகரிக்கப்படும்போது, இழப்புகளை தாங்காமல் கதறும்போது இவரின் கண்டனக்குரல் ஒலிக்கவில்லையே, அதை தடுக்க இவர் முயலவில்லையே, அந்த மக்களுக்காக பேசவில்லையே. வேறு எந்த நன்மையை இவர் செய்தார்? அப்படியேதும் செய்திருந்தால் பிரதான பௌத்த பீட தேரர்கள் இதில் கலந்து கொண்டிருக்க மாட்டார்களே. எப்போதும் தமிழர்தான் விட்டுக்கொடுப்பதும், பாராட்டுவதும். சரியானதை சுட்டிக்காட்டாமல் எடுத்ததற்கெல்லாம் விழா எடுத்தால் நிலைமை அதிகரிக்குமேயொழிய மாற்றம் வாராது. சிங்களத்தின் பிரச்சாரங்களுக்கு மட்டுமே இது உதவும். நாம் எந்த மதத்துக்கும் எதிரிகள் கிடையாது ஆனால் எங்கள் உரிமைகளை புறந்தள்ளி அதில் அவர்கள் உரிமை கோருவதை ஏற்று பாராட்ட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 ம்ம்.....  இதற்கு சர்வ மத தலைவர்களின் பங்கேற்பு என்று தமக்கு தாமே கூறி பெருமைபட்டுக்கொள்வது.

அப்படி என்ன சேவையை அவர் செய்து, அதில் மக்கள் மகிழ்ந்தார்கள் என்பதையும் அறிவித்து  மலர் தூவி மரியாதையை செய்தால்; நாங்களும் சேர்ந்து அவரை வாழ்த்த வசதியாக இருக்கும். நாட்டிலே பல தசாப்தமாக தமிழர் கொல்லப்பட்டு தம் சொந்த இருபீடங்களை விட்டு வெளியேறும்போது, நிலங்கள் அபகரிக்கப்படும்போது, இழப்புகளை தாங்காமல் கதறும்போது இவரின் கண்டனக்குரல் ஒலிக்கவில்லையே, அதை தடுக்க இவர் முயலவில்லையே, அந்த மக்களுக்காக பேசவில்லையே. வேறு எந்த நன்மையை இவர் செய்தார்? அப்படியேதும் செய்திருந்தால் பிரதான பௌத்த பீட தேரர்கள் இதில் கலந்து கொண்டிருக்க மாட்டார்களே. எப்போதும் தமிழர்தான் விட்டுக்கொடுப்பதும், பாராட்டுவதும். சரியானதை சுட்டிக்காட்டாமல் எடுத்ததற்கெல்லாம் விழா எடுத்தால் நிலைமை அதிகரிக்குமேயொழிய மாற்றம் வாராது. சிங்களத்தின் பிரச்சாரங்களுக்கு மட்டுமே இது உதவும். நாம் எந்த மதத்துக்கும் எதிரிகள் கிடையாது ஆனால் எங்கள் உரிமைகளை புறந்தள்ளி அதில் அவர்கள் உரிமை கோருவதை ஏற்று பாராட்ட முடியாது. 

எங்கட சனத்துக்கும் வர வர அறளை பேருதோ தெரியேல்லை. இவர் 50 ஆண்டுகள்  ஆக்கிரமிப்பிற்கான பிரதிநிதியாக இருந்தமைக்குப் பாராட்டா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே மீரா......? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

எங்கே மீரா......? 

😁

எதற்கு அவரை தேடுகிறீர்கள்? இதற்கு அவரிடம் ஏதாவது தீர்வு உண்டென நினைக்கிறீர்களா?

 

8 hours ago, nochchi said:

எங்கட சனத்துக்கும் வர வர அறளை பேருதோ தெரியேல்லை. இவர் 50 ஆண்டுகள்  ஆக்கிரமிப்பிற்கான பிரதிநிதியாக இருந்தமைக்குப் பாராட்டா?

அதே! மக்கள் இடம்பெயர்ந்து போனபோது அவர்களோடு இவர் இடம் பெயரவில்லை, இடத்தை ஆக்கிரமித்து, பெருப்பித்து, தக்க வைத்துக்கொண்டிருந்தார். மக்களுக்கு சேவை செய்திருந்தால்; அவர்களோடு இவரும் இடப்பெயர்ந்திருக்க வேண்டும் அல்லது அந்த அனர்த்தத்தை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். மக்களே இல்லாத இடத்தில இருந்து யாருக்கு என்ன சேவை செய்தார் இவர்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்டின் பெர்னான்டோ, சரத் முத்தெட்டுவேகம, முதல் யாராவது தமிழர் சார்பில் நியாயமா பேசினால், தூக்கி தலையில் வச்சு கொண்டாடுவோம் எல்லோ....

இவர் தையிட்டி விகாரை தொடர்பில் நியாயமாக பேசினார் என்று இப்போதைக்கு தூக்கி தலையில் வச்சு கொண்டாடுகிறோம்.

ராஜிவ் காந்தி அனுப்பின பருப்பு விமானத்துக்கு பிறகு, அவரையும் கொஞ்ச நாள் தூக்கி தலையில் வச்சு கொண்டாடினோமே. 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஐம்பதாவது ஆண்டு நிறைவை நிறைவாக கொண்டாடுவதற்காக, தமிழர் தன்பக்கம் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக அவ்வாறு பேசியிருப்பார். இன்றைய தெற்கின் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கிற வேலையையே திட்டமிட்டு எடுபட்ட கூத்தாடிகளை வைத்து செய்கிறார்கள்.  அதிலும் உற்றுபாத்தால் விளங்கும், சம்பில் துறையில் விகாரை கட்டினார்கள் நான் வேண்டாம் என்றேன், பின் சும்மா விட்டு விட்டேன். தையிட்டியிலும் எனது பெயரில் காணி உண்டு, அதற்கு மேல் அதிகமான காணியில் கட்டினார்கள், நான் விட்டுவிட்டேன். அவர்களுக்கும் சாப்பாடுக்கு வேண்டுந்தானே என்று. யார் நிலத்தை யார் யாருக்கு விட்டுக்கொடுப்பது? யார் சொந்தம் கொண்டாடுவது? இது என்ன இவர் அப்பன் வீட்டு முதுசமா வந்ததா இவர் விட்டுக்கொடுப்பதற்கு? பெரிய சாமி இறந்த பிற்பாடு தனக்கு வந்ததாம், தனது வீதிக்கு தான் பெயர் வைத்தாராம். இனிதான் அவர் தன் சொந்த முகத்தை, கருத்தை வெளியிடுவார். இல்லையென்றாலும் சிங்களம் இவரை வைத்து மூளைச்சலவை செய்யும் அந்த மக்களை. எந்த கூத்தாடி இந்த நிகழ்வுக்கு  பின்னால் இருக்கிறது என்பதும் வெளிவரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.