Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்

35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்

பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில்   சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில்  2 கிலோமீற்றர் வரையிலான  வீதியைப்   புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து  கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கும் மேற்பட்ட சவுக்கு, இலுப்பை மரங்களை  நாட்டி அதனைப் பராமரித்தும் வருகின்றார் எனவும் செயலிழந்து போன வீதி விளக்குகளை  அவர் சீர் செய்து கொடுத்துள்ளதுடன் 17 வீதி விளக்குகளைப் புதிதாகப்  பொருத்தியும் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்குச் செல்லும் பல மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், உதிரி பாகங்கள், என்பனவும் வழங்கி கல்வி ஊக்கிவிப்பு பணிகளையும் மேற்கொண்டு  வருவதுடன் பல்வேறு ஆண்மீகப்  பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது சேவையை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். எனினும் தனது பெயரையோ தன்னைப்பற்றியோ ஊடகங்களுக்கு தெரிவிப்பதை அந்நபர் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_5216-600x338.jpg

IMG_5206-600x338.jpg

IMG_5203-600x338.jpg

https://athavannews.com/2023/1339281

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நல்லுள்ளத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அந்த நல்லுள்ளத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

நம்ம ஏரியாவில ரோட்டையே ஆட்டைய போட்டவன்தான் அதிகம்😛

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டத் தக்க செயல்....... என்ன, அவரே விளம்பரம் வேண்டாம் என்று சொல்ல அவரது படத்துடன் விளம்பரம் செய்கிறார்கள் ........!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

பாராட்டத் தக்க செயல்....... என்ன, அவரே விளம்பரம் வேண்டாம் என்று சொல்ல அவரது படத்துடன் விளம்பரம் செய்கிறார்கள் ........!

அவரா இருக்காது என நினைக்கிறன் நான் நீங்க தானோ என நினைச்சிட்டன்

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக ஞாபகம் வைத்திருக்கின்ரீர்கள் தனி...........!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நன்றாக ஞாபகம் வைத்திருக்கின்ரீர்கள் தனி...........!

உன்மையாக ஒரு கணம் உங்கள் முகம் வந்து போனது மறக்க முடியுமா உங்களை அதற்காகவே சொன்னன் அண்ண உங்களை போல ஒருவர் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவரா இருக்காது என நினைக்கிறன் நான் நீங்க தானோ என நினைச்சிட்டன்

 

12 minutes ago, suvy said:

நன்றாக ஞாபகம் வைத்திருக்கின்ரீர்கள் தனி...........!

பிரான்சில் நடந்த... மோகன் அண்ணாவின், யாழ்.கள  உறவுகளின் சந்திப்பில்,
சுவியரின் படம், எனக்கும் நல்ல நினைவில் உள்ளது.
தனிக்காட்டு ராஜாவும்... அந்தப் படத்தைத்தான் நினைவில் வைத்திருக்கின்றார் 
என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

பாராட்டத் தக்க செயல்....... என்ன, அவரே விளம்பரம் வேண்டாம் என்று சொல்ல அவரது படத்துடன் விளம்பரம் செய்கிறார்கள் ........!

ஒரு நல்ல உள்ளத்தை... ஊர் மக்களும், உலகமும் அறியட்டும் என,
பத்திரிகையாளர் நினைத்திருக்கலாம்.
இதனைப் பார்த்து...  ஒரு  சிலராவது, தமது ஊருக்கும் அரசை நம்பியிராது,
நல்லது செய்யலாம் என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பகிர்ந்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

 

பிரான்சில் நடந்த... மோகன் அண்ணாவின், யாழ்.கள  உறவுகளின் சந்திப்பில்,
சுவியரின் படம், எனக்கும் நல்ல நினைவில் உள்ளது.
தனிக்காட்டு ராஜாவும்... அந்தப் படத்தைத்தான் நினைவில் வைத்திருக்கின்றார் 
என நினைக்கின்றேன்.

நானும் தனியும் ஜீவன்சிவாவும் இந்துக்கல்லூரி வீதிகளில் சுற்றித் திரிந்தோம் அதனால் தனிக்கு என்னை நன்றாகத் தெரியும் சிறியர்........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

நானும் தனியும் ஜீவன்சிவாவும் இந்துக்கல்லூரி வீதிகளில் சுற்றித் திரிந்தோம் அதனால் தனிக்கு என்னை நன்றாகத் தெரியும் சிறியர்........!

சுவியர்.. இது, புதிய தகவல்.
அட... இது எப்ப நடந்தது?
மாணவப் பருவத்தில் நடந்த சம்பவமா?
தனி... யாழ்ப்பாணத்தில் வசித்தவரா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

சுவியர்.. இது, புதிய தகவல்.
அட... இது எப்ப நடந்தது?
மாணவப் பருவத்தில் நடந்த சம்பவமா?
தனி... யாழ்ப்பாணத்தில் வசித்தவரா?

நான் சில வருடத்துக்கு முன் ஸ்ரீலங்கா சென்றிருந்த போது நடந்தது.......!

இதில் அந்த சந்திப்பு பற்றி விவரமாக எழுதியிருந்தேன்........!

இப்பொழுது நான் ஜெர்மனியில் நிக்கிறேன்......காலையில் ஜெர்மனியில் வேறிடத்துக்கு போய்விடுவேன்.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

நான் சில வருடத்துக்கு முன் ஸ்ரீலங்கா சென்றிருந்த போது நடந்தது.......!

இதில் அந்த சந்திப்பு பற்றி விவரமாக எழுதியிருந்தேன்........!

இப்பொழுது நான் ஜெர்மனியில் நிக்கிறேன்......காலையில் ஜெர்மனியில் வேறிடத்துக்கு போய்விடுவேன்.....!

இப்போ நினைவிற்கு வருகின்றது சுவியர். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

 

முகம்காட்டாது மக்களுக்காகத் தொண்டாற்றும் அந்த நல்லுள்ளத்திற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

சுவியவர்கள் கடந்த 2021இல்ஆலனில் நடைபெற்ற  நடன ஆற்றுகைத்தேர்வுக்கும் வந்திருந்தவர்.  யேர்மன் கள உறவுகளை ஒருக்கா சந்திக்கலாமே ஐயா. வாரவிடுமுறையும் வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

நானும் தனியும் ஜீவன்சிவாவும் இந்துக்கல்லூரி வீதிகளில் சுற்றித் திரிந்தோம் அதனால் தனிக்கு என்னை நன்றாகத் தெரியும் சிறியர்........!

சில  நேரம்  தொடர்பில் வருவார் ஜீவன்   
நன்றி அண்ண

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம ஏரியாவில ரோட்டையே ஆட்டைய போட்டவன்தான் அதிகம்😛

சரியாகச் சொன்னீர்கள் ராஜா.

 ஒய்வு பெற்ற அதிபராக இருக்கும் பாடசாலை நண்பன் ( என்று நம்பியிருந்த) ஒருவனின் ஊடாக , அம்பாறை பின்தங்கிய கிராம மக்கள் பலருக்கும் வாழ்வாதார உதவிகளை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டிருந்தோம் .

அண்மையில் ஊருக்கு சென்று பார்த்தபோது , “இக்கரையும் பச்சையில்லை” என அறிந்து மனம் வெதும்பிப் போனேன் .

அந்த கேவலம் கெ ட்ட பயல் நாம் இங்கேயிருந்து கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தின் கணிசமான பகுதியை விழுங்கி ஏப்பம் விட்டதல்லாமல் , ஆதரவற்றிருக்கும்  பயனாளிப் பெண்மணிகளிடமும் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான்.  

வாய்க்கு வாய் God Bless  என்று சொல்லும் பச்சோந்திகளும் இக்கரையில் …..

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, சாமானியன் said:

சரியாகச் சொன்னீர்கள் ராஜா.

 ஒய்வு பெற்ற அதிபராக இருக்கும் பாடசாலை நண்பன் ( என்று நம்பியிருந்த) ஒருவனின் ஊடாக , அம்பாறை பின்தங்கிய கிராம மக்கள் பலருக்கும் வாழ்வாதார உதவிகளை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டிருந்தோம் .

அண்மையில் ஊருக்கு சென்று பார்த்தபோது , “இக்கரையும் பச்சையில்லை” என அறிந்து மனம் வெதும்பிப் போனேன் .

அந்த கேவலம் கெ ட்ட பயல் நாம் இங்கேயிருந்து கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தின் கணிசமான பகுதியை விழுங்கி ஏப்பம் விட்டதல்லாமல் , ஆதரவற்றிருக்கும்  பயனாளிப் பெண்மணிகளிடமும் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான்.  

வாய்க்கு வாய் God Bless  என்று சொல்லும் பச்சோந்திகளும் இக்கரையில் …..

நானும் அம்பாறைதான்  சொல்லியிருந்தால் தகவல் கொடுத்து இருப்பேனே ஆளைப்பற்றி  இதானால் தான் யாழில் கூட யாரும் உதவி செய்ய சொன்னால் கூட பணம் அனுப்பி முன் நிற்பதில்லை நான் மற்றபடி இங்குள்ள மக்களை திருப்திப்படுத்த அந்த கடவுளால் கூட முடியாத காரியம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nochchi said:

 

முகம்காட்டாது மக்களுக்காகத் தொண்டாற்றும் அந்த நல்லுள்ளத்திற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

சுவியவர்கள் கடந்த 2021இல்ஆலனில் நடைபெற்ற  நடன ஆற்றுகைத்தேர்வுக்கும் வந்திருந்தவர்.  யேர்மன் கள உறவுகளை ஒருக்கா சந்திக்கலாமே ஐயா. வாரவிடுமுறையும் வருகிறது. 

வணக்கம் நொச்சி.......நானும் உங்களை சந்திக்க விரும்பினேன்......இங்கு எனது உறவுகளிடம் நேற்று  விசாரித்தேன் யாருக்கும் தெரியவில்லை. உங்களுடையது புனைபெயராய் இருக்கலாம்.....!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

சரியாகச் சொன்னீர்கள் ராஜா.

 ஒய்வு பெற்ற அதிபராக இருக்கும் பாடசாலை நண்பன் ( என்று நம்பியிருந்த) ஒருவனின் ஊடாக , அம்பாறை பின்தங்கிய கிராம மக்கள் பலருக்கும் வாழ்வாதார உதவிகளை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டிருந்தோம் .

அண்மையில் ஊருக்கு சென்று பார்த்தபோது , “இக்கரையும் பச்சையில்லை” என அறிந்து மனம் வெதும்பிப் போனேன் .

அந்த கேவலம் கெ ட்ட பயல் நாம் இங்கேயிருந்து கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தின் கணிசமான பகுதியை விழுங்கி ஏப்பம் விட்டதல்லாமல் , ஆதரவற்றிருக்கும்  பயனாளிப் பெண்மணிகளிடமும் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான்.  

வாய்க்கு வாய் God Bless  என்று சொல்லும் பச்சோந்திகளும் இக்கரையில் …..

பயனாளிகளின் வங்கி/தபாலக கணக்கிற்கு பணத்தைச் செலுத்தி ரசீதை அனுப்பச் சொல்லி இருக்கலாம். அத்தோடு பயனாளிகளிடம் தொடர்பில் இருக்கவேண்டும்.
நம்பியவர்கள் ஏமாற்றும் போது ஏற்படும் கோபமும் வலியும் தாங்கமுடியாதது.

இயலாமை உடைய பிள்ளைகளை பராமரிக்கும் நிலையத்திற்கு புலம்பெயர்ந்தோர் தனி ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியவர்கள், நேரடியாக சென்று பார்த்தபோது போலிப் பற்றுச் சீட்டெழுதி பணத்தை எடுத்து போதைப்பழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டார். பொலீசில் முறைப்பாடு செய்து இப்ப ஆள் கைது செய்யப்பட்டுவிட்டார்.
இது சம்பந்தமான செய்தியை யாழிலும் இணைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மால் இயன்றது சிறிதோ பெரிதோ நாமே செய்வது மனதுக்கு திருப்தி. என்னால் அள்ளிக்கொடுக்க முடியாது, ஆனால் என்னை ஒறுத்து ஒரு பொது நிலையாளரிடம் கொடுத்து குறித்த ஒரு தேவையுடையோருக்கு உதவும் படி சொன்னேன். ஆனால் அது யாருக்கு கொடுத்தது, கொடுக்கப்பட்டதா என்பதை என்பதை கூட அறிவிக்க விரும்பவில்லை? நான் யாருக்கு கொடுக்கப்பட்டது என அறிய விரும்பவில்லை, ஆனால் கொடுக்கப்பட்டதா என அறிய எனது மனம் இன்றுவரை தவிக்கிறது. ஆளின் தொடர்பே இல்ல. அவருக்கும் எனது அன்பளிப்பை செய்தே இந்த உதவியை கேட்டிருந்தேன்.  நான் செய்ய விரும்பியது மிகவும் அத்தியாவசியமான தேவையுடையவருக்கு. அதை நான் மனமுவந்து செய்தேன். அவர் அதை செய்யாமல் ஏமாற்றியிருந்தால் அதன் பலன் அவருக்கு. எனக்கு உரியது மன அமைதி எனும் நம்பிக்கையியோடு இப்போ எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு செல்கிறேன். ஒரு வேளை நானே அவர் அவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணமாக இருந்து விட்டேனோ எனவும் எண்ணுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2023 at 08:05, suvy said:

வணக்கம் நொச்சி.......நானும் உங்களை சந்திக்க விரும்பினேன்......இங்கு எனது உறவுகளிடம் நேற்று  விசாரித்தேன் யாருக்கும் தெரியவில்லை. உங்களுடையது புனைபெயராய் இருக்கலாம்.....!

வணக்கம் சுவியவர்களே,  நீங்கள் சுட்டியிருப்பதுபோல் 'நொச்சி' யாழுக்கான எனது புனைபெயரே.அத்தோடு நான் அவளவு பிரபல்யமானவருமல்ல.
நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.