Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் - திலீபன் எம்.பி. குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களாக  வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்ச உணர்வுக்கு மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு முற்று முழு காரணம் பொலிஸார் தான்.

வவுனியா மாவட்டத்திலே இருக்கின்ற நகர பொலிஸ் நிலையம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய குற்றத் தடுப்புப் பிரிவு இந்த இரண்டிலேயும் மக்களுக்கான நம்பிக்கை தற்போது இழந்த நிலைமையே காணப்படுகின்றது. 

இது தொடர்பாக இன்று நாங்கள் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம்.

இது தொடர்பாக ஜனாதிபதியிடமும் முறையிட இருக்கின்றோம். இந்த குற்றச்செயல்கள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும். 

கடந்த காலங்களில் ஒருவர் அல்லது இரண்டு பேர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டதை அறிந்திருக்கின்றோம்.

தற்போது பத்து, பதினைந்து பேர் ஒன்றாக சென்று ஒரு வீட்டுக்குள்ளே புகுந்து வெட்டி எரித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இன்று வரைக்கும் ஒருவர் கூட சந்தேகத்தின் பேரில் கூட கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறி இருக்கிறார்.  

எனவே, நாங்கள் இவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை சரிவர கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம்.  சில விமர்சனங்கள் இருக்கின்றது அதனை உரிய இடங்களுக்கு தெரிவிப்போம் என்றார்.

வவுனியா மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் - திலீபன் எம்.பி. குற்றச்சாட்டு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்தான் அமைச்சர் பதவி, அரச நிர்வாகம் எல்லாம் வைத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது இந்த குற்றச்சாட்டு உங்களுக்கும் பொருந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

நீங்கள்தான் அமைச்சர் பதவி, அரச நிர்வாகம் எல்லாம் வைத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது இந்த குற்றச்சாட்டு உங்களுக்கும் பொருந்தும். 

திலீபன்…. டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியை சேர்ந்தவர் என நினைக்கின்றேன்.
அவரே… காவல்துறையின் மீது குற்றம் சொல்லி பத்திரிகையில் அறிக்கை விடுவதை விட… தனது எஜமானர்களிடம் சொல்லி உடனடி நடவடிக்கையில் இறங்கி, புரையோடிப் போயிருக்கும் காவல் துறை மீது, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்… வவுனியாவில் வசிக்கும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

திலீபன்…. டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியை சேர்ந்தவர் என நினைக்கின்றேன்.
அவரே… காவல்துறையின் மீது குற்றம் சொல்லி பத்திரிகையில் அறிக்கை விடுவதை விட… தனது எஜமானர்களிடம் சொல்லி உடனடி நடவடிக்கையில் இறங்கி, புரையோடிப் போயிருக்கும் காவல் துறை மீது, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்… வவுனியாவில் வசிக்கும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கின்றது.

இன்னும் ஐந்து வருடங்களில் வவுனியா பெருநகரம் பெரும்பான்மை இன மக்களின் கைகளில் சென்று விடும் போல தெரிகிறது.

கிழக்கு போயி வவுனியாவில வந்து நிற்கிறது அவர்கள் கையிில் சேர்ந்த பிறகு காவல் துறை பாதுகாப்பு வழங்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் ஐந்து வருடங்களில் வவுனியா பெருநகரம் பெரும்பான்மை இன மக்களின் கைகளில் சென்று விடும் போல தெரிகிறது.

கிழக்கு போயி வவுனியாவில வந்து நிற்கிறது அவர்கள் கையிில் சேர்ந்த பிறகு காவல் துறை பாதுகாப்பு வழங்கும்

நம்முடைய அரசியல்வாதிகள் எல்லாம், தூர  நோக்கு அற்ற...சுய நலம் மிக்க,
ஆட்களை வைத்துக் கொண்டு தமிழன் படும் பாடு பெரும் பாடு.

"குதிரை ஓடிய பின் லாயத்தை பூட்டி என்ன பயன்." 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

திலீபன்…. டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியை சேர்ந்தவர் என நினைக்கின்றேன்.
அவரே… காவல்துறையின் மீது குற்றம் சொல்லி பத்திரிகையில் அறிக்கை விடுவதை விட… தனது எஜமானர்களிடம் சொல்லி உடனடி நடவடிக்கையில் இறங்கி, புரையோடிப் போயிருக்கும் காவல் துறை மீது, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்… வவுனியாவில் வசிக்கும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கின்றது.

திலீபன் என்னுடைய திருமண வீட்டு அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்தவர். அது தான் அவர் தொழில், எனது தம்பிக்கு இன்னும் 50, 000 கடன் கொடுக்க இருக்கு, அதை கொடுத்த மாதிரி தெரியவில்லை. எப்பிடியோ மனுஷன் அமைச்சர் பதவி வரைக்கும் போய் விட்டார். ஊரில் அமைச்சர் எம்பி பதவிக்கு இருந்த மரியாதையே போச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2023 at 01:22, பகிடி said:

திலீபன் என்னுடைய திருமண வீட்டு அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்தவர். அது தான் அவர் தொழில், எனது தம்பிக்கு இன்னும் 50, 000 கடன் கொடுக்க இருக்கு, அதை கொடுத்த மாதிரி தெரியவில்லை. எப்பிடியோ மனுஷன் அமைச்சர் பதவி வரைக்கும் போய் விட்டார். ஊரில் அமைச்சர் எம்பி பதவிக்கு இருந்த மரியாதையே போச்சு 

இவர் அமைச்சர் இல்லை. டக்ளசுடன் சேர்ந்து போட்டி போட்டு 3000 ஓட்டுக்களுடன் வன்னியில் இருந்து தெரிவுசெய்யப்படடவர். வன்னியில் இருந்து தெரிவு செய்யப்படட மட்டி மடயர்களில் இவரும் ஒருவர்.

மக்களையும் குறை சொல்ல முடியாது. ஒழுங்கானவர்கள் போட்டியிடாவிட்ட்தால் இப்படியானவர்கள்தான் வருவார்கள். இவருடைய அரசுதான் பதவியில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது போலீசாரை குறை சொல்லுவது வேடிக்கைதான்.

அதுபோக, உங்களுக்கு அந்த பணம் கிடைக்க சந்தர்ப்பமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2023 at 05:52, பகிடி said:

எனது தம்பிக்கு இன்னும் 50, 000 கடன் கொடுக்க இருக்கு, அதை கொடுத்த மாதிரி தெரியவில்லை. எப்பிடியோ மனுஷன் அமைச்சர் பதவி வரைக்கும் போய் விட்டார்.

 

14 minutes ago, Cruso said:

உங்களுக்கு அந்த பணம் கிடைக்க சந்தர்ப்பமே இல்லை. 

 உங்கள் தம்பியை வீடு தேடி வந்து அச்சுறுத்த வாய்ப்பிருக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.