Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலர்களை திருப்பி செலுத்தியது இலங்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலர்களை திருப்பி செலுத்தியது இலங்கை !

பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலர்களை திருப்பி செலுத்தியது இலங்கை !

2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது.

இம்மாதம் 17 ஆம் திகதி குறித்த தவணைப்பணம் செலுத்தப்பட்டதாக பங்களாதேஷ் வங்கியின் ஊடக பேச்சாளரும், நிர்வாக பணிப்பாளருமான மெஸ்பால் ஹக், உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டாவது தவணை எதிர்வரும் 30 ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்த ஆண்டுக்குள் இலங்கையிடமிருந்து மொத்தத் தொகையையும் திரும்பப் பெற எதிர்பாத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் வரை மூன்று மாதங்களில் இரண்டு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.

இறுதியாக, கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் அதாவது செப்டம்பர் வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடன் ஒப்பந்தத்தின்படி, செலுத்த வேண்டிய வட்டியை இலங்கை முறையாக செலுத்தி வருவதாக பங்களாதேஷ் வங்கி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

https://athavannews.com/2023/1346231

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷிடம் பெற்ற கடனில் ஒரு பகுதியை இலங்கை திருப்பி செலுத்தியது

இலங்கை, பொருளாதார நெருக்கடியுடன் போராடிக்கொண்டிருந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று பொறிமுறையின் கீழ் பெற்ற 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷிற்கு நேற்று செலுத்தியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளால் முதல் தவணை செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் வங்கியின் (BB) செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque, கடந்த வாரம் ஒகஸ்ட் 17 ஆம் திகதி தவணை பெறப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த தொகை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாதத்திற்குள் இரண்டாவது தவணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என மத்திய வங்கியின் நிர்வாக பணிப்பாளர் ஹக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2021 செப்டெம்பரில் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்த தெற்காசியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பங்களாதேஷ் தனது வெளிநாட்டு இருப்பில் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை இலங்கைக்கு வழங்கியது.

கடந்த ஆண்டு செப்டெம்பரில் ஒரு வருட கடனின் காலம் முடிவடைந்தது.

பின்னர் இந்த ஆண்டு மார்ச் வரை மூன்று மாதங்களில் இரண்டு முறை பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

கடைசியாக, அண்டை நாட்டிற்கு கடனை திருப்பிச் செலுத்த செப்டெம்பர் வரை மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

https://thinakkural.lk/article/269666

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லோரும் இலங்கையர்களாக இந்த நடவடிக்கைக்காக பெருமைப்படுகின்றோம். வாழ்க ஸ்ரீ லங்கா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Cruso said:

நாங்கள் எல்லோரும் இலங்கையர்களாக இந்த நடவடிக்கைக்காக பெருமைப்படுகின்றோம். வாழ்க ஸ்ரீ லங்கா.

ஐயா! கேக்கிறன் எண்டு கோவிக்கக்கூடாது.
திடீரெண்டு இவ்வளவு காசு எங்காலை????? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஐயா! கேக்கிறன் எண்டு கோவிக்கக்கூடாது.
திடீரெண்டு இவ்வளவு காசு எங்காலை????? 

ஒராளிடம் கடனை வாங்கி மற்றாளின் கடனை அடைப்பது தான். 
இப்போ உல்லாச  பயணிகள் வருகையால் கொஞ்ச பணம்  வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ஒராளிடம் கடனை வாங்கி மற்றாளின் கடனை அடைப்பது தான். 
இப்போ உல்லாச  பயணிகள் வருகையால் கொஞ்ச பணம்  வருகிறது.

இந்த மாதத்துடன் அதுவும்சரி.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த மாதத்துடன் அதுவும்சரி.

யாராவது மாட்டுப்படுவார்கள். சிங்கப்பூரில் ரனிலின் விஜயம் கடனுமாக கட்டாயம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஐயா! கேக்கிறன் எண்டு கோவிக்கக்கூடாது.
திடீரெண்டு இவ்வளவு காசு எங்காலை????? :rolling_on_the_floor_laughing:

உங்களுக்கு அதெல்லாம் விளங்காது. 80 மில்லியன் டொலரையே அடைப்பதட்கு தயாராகி கொண்டு இருக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு சிம்பிள்.

எமது பண வீக்கம் (அது உண்மை கணக்கா பொய் கணக்கா எண்டெல்லாம் கேட்க கூடாது) கட்டுக்குள் கொண்டு வந்து விட்டொம். இந்தியாவை  காட்டி சீனாவிடமும், சீனாவை காட்டி இந்தியாவிடமும் சுருட்டி விடுவோம். அதெல்லாம் திருப்பி கொடுக்கவேண்டுமோ இல்லையோ எண்டெல்லாம் கேட்கக்கூடடாது. எங்களை என்னே எண்டு நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.😜😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Cruso said:

உங்களுக்கு அதெல்லாம் விளங்காது. 80 மில்லியன் டொலரையே அடைப்பதட்கு தயாராகி கொண்டு இருக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு சிம்பிள்.

எமது பண வீக்கம் (அது உண்மை கணக்கா பொய் கணக்கா எண்டெல்லாம் கேட்க கூடாது) கட்டுக்குள் கொண்டு வந்து விட்டொம். இந்தியாவை  காட்டி சீனாவிடமும், சீனாவை காட்டி இந்தியாவிடமும் சுருட்டி விடுவோம். அதெல்லாம் திருப்பி கொடுக்கவேண்டுமோ இல்லையோ எண்டெல்லாம் கேட்கக்கூடடாது. எங்களை என்னே எண்டு நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.😜😜

சிறிலங்கா அணு குண்டு செய்யாத வரைக்கும் நிம்மதியும் சந்தோசமும் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சிறிலங்கா அணு குண்டு செய்யாத வரைக்கும் நிம்மதியும் சந்தோசமும் :rolling_on_the_floor_laughing:

இந்திய $120 மில்லினில் நிலாவுக்கு சந்திராயனை அனுப்பியது. இலங்கை $320  மில்லியனில் சந்திரிக்காவை (செயறகை கோள்) அனுப்பியது. இது எப்படி இருக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

இந்திய $120 மில்லினில் நிலாவுக்கு சந்திராயனை அனுப்பியது. இலங்கை $320  மில்லியனில் சந்திரிக்காவை (செயறகை கோள்) அனுப்பியது. இது எப்படி இருக்குது?

ஆனால்  2012இல் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 செயற்பட்டிருக்கிறது. அதற்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்ததது என தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

இந்திய $120 மில்லினில் நிலாவுக்கு சந்திராயனை அனுப்பியது. இலங்கை $320  மில்லியனில் சந்திரிக்காவை (செயறகை கோள்) அனுப்பியது. இது எப்படி இருக்குது?

பிரதான செய்திகளை எடுத்து பாருங்கள்  ஒரு விடயம் பூரணமாக விளங்கும்   அதாவது தமிழன்  உதவிகள். இல்லாமல் எதையும் எங்கேயும் எவரும் அனுப்பி விட முடியாது....இது விளங்காத இலங்கை    தமிழனை அழித்து கொண்டுருக்கும். இலங்கை    ஒரு கொசுவைக் கூட  எங்கும் அனுப்பி விட முடியாது   அவர்களுக்கு யாழ்ப்பாணம் சந்திரமண்டலம் மாதிரி   அடிக்கடி வந்து போகிறார்கள்   அது சரி   சந்திரிக்கா  என்ற செயற்கை கோள்   ஏதாவது ஆய்வு செய்து  உள்ளதா?? படங்கள் எடுத்து அனுப்பவில்லையா??   🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

ஆனால்  2012இல் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 செயற்பட்டிருக்கிறது. அதற்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்ததது என தெரியாது.

பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். பதில் சொல்லத்தான் யாருமில்லை. 

18 hours ago, Kandiah57 said:

 அது சரி   சந்திரிக்கா  என்ற செயற்கை கோள்   ஏதாவது ஆய்வு செய்து  உள்ளதா?? படங்கள் எடுத்து அனுப்பவில்லையா??   🤣🙏

சந்திரிக்காவை அனுப்பினால்தானே படம் வரும். சும்மா படம் வருமோ? 😜

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பி செலுத்தியது

banga-300x200.jpg

இலங்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர்களில் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/271384

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2023 at 22:22, குமாரசாமி said:

ஐயா! கேக்கிறன் எண்டு கோவிக்கக்கூடாது.
திடீரெண்டு இவ்வளவு காசு எங்காலை????? :rolling_on_the_floor_laughing:

பாவம், எந்த நாடு மாட்டுப்பட்டு முழிக்கப்போகுதோ?

On 24/8/2023 at 14:37, குமாரசாமி said:

சிறிலங்கா அணு குண்டு செய்யாத வரைக்கும் நிம்மதியும் சந்தோசமும் :rolling_on_the_floor_laughing:

இதுவேறை கனவா? தொலைஞ்சோம் நாங்கள்! சோதனை நடவடிக்கை என்று முடித்து விடுவார்கள் கதையை. 

On 24/8/2023 at 03:08, nunavilan said:

யாராவது மாட்டுப்படுவார்கள். சிங்கப்பூரில் ரனிலின் விஜயம் கடனுமாக கட்டாயம் இருக்கும்.

அதுவும் புதிய ஜனாதிபதி, யாழ்ப்பாண வழித்தோன்றலாம். விடுவாரா.... உரிமையோடு கேப்பார்!

On 25/8/2023 at 16:18, Kandiah57 said:

தமிழன்  உதவிகள். இல்லாமல் எதையும் எங்கேயும் எவரும் அனுப்பி விட முடியாது...

இது சரத் வீர சேகரவுக்கு தெரியுமோ? இல்லை..... முந்தாநாள்தான் சொன்னவர் இராவணன் சிங்கள மன்னனாம், அவர் சிங்களவர் அந்தக்காலத்திலேயே தொழில் நுட்பத்தில் சிறந்து புஷ்ப்பக விமானத்தை உருவாக்கி இந்தியாவுக்கு போய் இராமனின் மனைவி சீதாவைக் கடத்திக்கொண்டு வந்தவராம். இனி அப்படி யாராவது சாதனை படைத்தாலும், தேடிப்பிடித்து முடிச்சுப்போட்டு அது சிங்கள வம்சம் என உரிமை கொண்டாடுவார்கள். அவர்களுக்கென்று எதுவும் இல்லை, தமிழரோடு செருகி அழித்து தமதென்று புது வரலாறு திரித்து சொந்தமாக்குவது. 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடனை குறுகிய காலத்துக்குள் இலங்கை மீளச் செலுத்திவிடுமென எதிர்பார்க்கவில்லை - பங்களாதேஷ் பிரதமர் மகிழ்ச்சி

20 SEP, 2023 | 06:13 AM
image
 

கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

மேலும், கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த பங்களாதேஷ் பிரதமர், அந்த கடனை செலுத்த முடிந்துள்ளதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் தெரிகிறது என்பதோடு, அதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்வதன் ஊடாக இலங்கை சுமூகமான நிலைமையை அடைந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

கடந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது, பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பங்களாதேஷின் பெருந்தன்மைக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

முன்னதாக பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சந்தர்ப்பத்தை இழந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/164977

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.