Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் சூசை நலமடைந்துள்ளார்: இறுவட்டு அறிமுக விழாவில் கடற்புலிகளின் தளபதி விநாயகம் தகவல்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை நலமடைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று "கடற்கரும்புலிகள் பாகம் - 11, தேசத்தின் புயல்கள் பாகம் - 5" இறுவட்டு அறிமுக நிகழ்வில் பேசிய கடற்புலிகளின் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை நலமடைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று "கடற்கரும்புலிகள் பாகம் - 11, தேசத்தின் புயல்கள் பாகம் - 5" இறுவட்டு அறிமுக நிகழ்வில் பேசிய கடற்புலிகளின் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

தளபதி மீண்டு வந்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பூரண குணமடையப் பிரார்த்திக்கும் அதேவேளை.. மகனைப் பிரிந்து துயருறும் அவருக்கும்.. குடும்பத்தாருக்கும்.. எங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Edited by nedukkalapoovan

சூசை அண்ணா நலமடைந்ததையிட்டு மகிழ்சியடைகிறோம்.

அவரின் மகனுக்கு எமது கண்ணிர் அஞ்சலிகள்.

மீண்டும் புத்துணச்சியுடன் எங்கள் தளபதி செய்படவேண்டும்.

மகனை இழந்த சூசை அண்ணாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி குணமடைய பிராத்தனைகளும்

மகனுக்கு கண்ணீர் அஞ்சலிகளும் .

கேணல் சூசை குணமடைந்து கள நடவடிக்கையில் ஈடுபடுகின்றார் - தளபதி விநாயகம்

விடுதலைப் புலிகளின் கடற்புலித் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் குணமடைந்து கள நடவடிக்கையில் ஈடுபடுகின்றார் என கடற்புலிகளின் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் புலிகளின் குரல் அமலன் அரங்கில் நடைபெற்ற ''கடற் கரும்புலிகள் பாகம் 11'', ''தேசத்தின் புயல்கள் பாகம் 5'' ஆகிய இறுவட்டுகள் வெளியீட்டு அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை மற்றும் எண்ணத்திற்கு ஏற்ப கடற்புலிகள் மட்மீட்புப் போராட்டதிற்கான தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதேநேரம் சிறீலங்கா அரசாங்கம் மக்களைக் குழப்பும் போலியான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றது. சிறப்புத் தளபதி கேணல் சூசை தொடர்பில் சிறீலங்கா அரசாங்கமும் அரச சார்ந்த ஊடகங்களாலும் தவறான கருத்துக்களை பரப்பப்படுகின்றன.

படகு விபத்தில் கேணல் சூசை விழுப்புண் அடைந்து குணமடைந்துள்ளார். அவரின் மகன் உயிரிழந்துள்ளார்.

இன்றைய இறுவட்டு அறிமுக விழா கூட அவரின் ஏற்பாட்டிலேயே அவரின் வழி நடத்திலேயே முன்னேடுக்கப்பட்டுள்ளது என தளபதி விநாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி: பதிவு.கொம்

தமிழர் கடற்சேனையின் தளபதி அவர்கள் விழுப்புண் மாறி மீண்டும் தனது பணிகளை பொறுப்பேற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது.

சிறிலங்கா அரசின் பொய்பரப்புரைகளை உடைக்கும் வகையில் உண்மையை வெளியே கொண்டுவந்த தளபதி விநாயகத்திற்கு நன்றிகள்.

இதேவேளை சிறிலங்காவின் மற்றொரு பொய்ப் பரப்புரையை உடைக்கும் வகையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்ட தளபதி கேணல் பதுமன் அவர்கள் மாவீரர் ஒருவரின் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

சூசை அண்ணா நலமடைந்ததையிட்டு மகிழ்சியடைகிறோம்

உண்மையாகவா? நல்ல செய்தி

***

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி சூசை அண்ணா திரும்பவும் களத்தில்.அவரது மகனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்தி சூசை அண்ணா திரும்பவும் களத்தில்.அவரது மகனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

சூசையண்ணன் காயமடைஞ்சது மகன் செத்ததெல்லாம் உண்மையெண்டு சொல்லுரியளோ? இவ்வளவுகாலமும் உதெல்லாம் பொய் செய்தியெண்டு சொல்லிப்போட்டு இப்ப தலகீழா நிண்டால் எப்பிடி?

காயமடைந்த சூசையண்ணன் பூரண நலமடைய வேண்டுகிற அதேநேரம் அவருடைய மகனுக்கும் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிரேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சூசையண்ணன் காயமடைஞ்சது மகன் செத்ததெல்லாம் உண்மையெண்டு சொல்லுரியளோ? இவ்வளவுகாலமும் உதெல்லாம் பொய் செய்தியெண்டு சொல்லிப்போட்டு இப்ப தலகீழா நிண்டால் எப்பிடி?

காயமடைந்த சூசையண்ணன் பூரண நலமடைய வேண்டுகிற அதேநேரம் அவருடைய மகனுக்கும் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிரேன்.

சில விடயங்கள் தற்போதைய சூழலில் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவை ஆதி. எது எப்படியோ எங்கள் கடற் சேனைத் தளபதி குணமடைந்தால் போதும். அதுவே எதிரிக்கு.. பின்னடைவாகும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மீ;ண்டும் களத்திற்கு தளபதி வந்ததையிட்டு மகிழ்சி அதேவேளை கேணல் பதுமன் அவர்களுடைய வரவும் மகிழ்வை தருகின்றது....

கடற்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அண்ணா நலம் பெற்றும் மீண்டும் நடவடிக்கைகளுக்கு திரும்பியது மகிழ்ச்சியை தருகிறது..........எனக்கு மிகவும் பிடித்த தளபதி மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி........அதே வேளை வீரகாவியமான அவரது புதல்வருக்கு வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்..........

ஏறத்தாழ ஓரு மாதத்திற்கு முன்பு யாழில் " சுசையண்ணை தலைவரோட பிரச்சனையெண்டு" வேறொரு இணையத்தில் வெளிவந்நிருந்த செய்தி;க்கு பல நண்பர்கள் கருத்து எழுதிய பொழுதிலும் சில பேர் இது உண்மையான செய்தி போலவே பிதற்றியிருந்தனர். ஆனாலும் உண்மை வெளிவர ஆட்களை காணவில்லை இனி கடலில்ல நல்ல சண்டையொண்டு நடந்து அதில சுசையண்ணையின்ர படம் வந்தான் நம்புவினமாக்கும்

விபத்தில் சாவயைணைத்துக் கொண்ட தளபதியின் மகனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்ற நேரம் தளபதி புதிய உத்வேகத்துடன் வர பிரார்த்திப்போம்.

Edited by puthijavan

தளபதி சூசைக்கு என்ன நடந்ததோ என்று தெரியாமல் கலங்கி கொண்டிருக்கும் எல்லோருக்கும் சந்தோசமான் செய்தி.இலங்கை அரசுக்கு வயிற்றில் புளி கரைத்து விட்ட மாதிரி இருக்கும்.

வெகுவிரைவில் தளபதி களமிறங்க பிரார்த்திப்போம்.

தளபதியின் மகனுக்கு வீர வணக்கங்கள்.

ஈழப்பிரியன் அவர் ஏற்கனவே களமிறங்கி விட்டார் என்றுதான விநாயகம் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.