Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டியலினத்தோர் பற்றி சர்ச்சை பேச்சு; சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டியலினத்தோர் பற்றி சர்ச்சை பேச்சு; சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்!

பட்டியலினத்தோர் பற்றி சர்ச்சை பேச்சு; சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பட்டியலினத்தோர் குறித்து தவறாக பேசியதூ தொடர்பான வழக்கில், ஈரோடு நீதிமன்றத்தில்  இன்று சீமான் ஆஜராகினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பட்டியலினத்தவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

image_750x_64fecd48c2e16.jpg

இதையடுத்து, பிரசார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் இன்று  ஆஜராகும்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்த சீமானிடம் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கடந்த 2ந் தேதி இந்த சம்மனை வழங்கினர்.

image_750x_64fece7f8d38f.jpg

இதனை அடுத்து சீமான் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜராகினார். அவரைக் காண ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக அளவில் திரணடனர். 

https://www.malaimurasu.com/posts/tamilnadu/Controversy-about-Scheduled-Tribes-Seaman-appears-in-court

டிஸ்கி

அண்ணி போட்ட வழக்கின் ஆரவாரத்தில் இந்த வழக்கை பலரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த சம்பவம் நடந்த போதே இதை வன்மையாக கண்டித்து, அரசு வழக்கு போட வேண்டும் என யாழில் எழுதபட்டது.

இத்தனை தாமதமாக முதல் முறை கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்டுள்ளார் சீமான்.

பட்டியல் இனத்தவர் என்றால் அரசு, பொலிஸ், கோர்ட் எல்லாருக்கும் இளக்காரம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

அண்ணி போட்ட வழக்கின் ஆரவாரத்தில் இந்த வழக்கை பலரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த சம்பவம் நடந்த போதே இதை வன்மையாக கண்டித்து, அரசு வழக்கு போட வேண்டும் என யாழில் எழுதபட்டது.

இத்தனை தாமதமாக முதல் முறை கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்டுள்ளார் சீமான்.

பட்டியல் இனத்தவர் என்றால் அரசு, பொலிஸ், கோர்ட் எல்லாருக்கும் இளக்காரம்தான்.

ஆக மொத்தம், அண்ணன் இப்ப எல்லா மீடியாவிலும் கவர் பண்ணப் படுகிறார்.

லட்சுமி கடாச்சம்... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஆக மொத்தம், அண்ணன் இப்ப எல்லா மீடியாவிலும் கவர் பண்ணப் படுகிறார்.

லட்சுமி கடாச்சம்... 🤣

சிலருக்கு பதவி மட்டும் இருக்கும்.  மீடியாவில் நாலு வரி நாக்கு தளம்பாமல் பேசவும் தெரிய வேண்டுமே!!!

100க்குள் எத்தனை 9 உள்ளது பகிடி சிரித்து முடிய ஒரு நாள் எடுத்தது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

ஆக மொத்தம், அண்ணன் இப்ப எல்லா மீடியாவிலும் கவர் பண்ணப் படுகிறார்.

லட்சுமி கடாச்சம்... 🤣

அதற்கு யாழ் களமே சாட்சி 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பப்ளிசிட்டி பண்ணினாலும்….

39/39 எம்பி சீட்டை எடுத்து தாளிச்சுடுவாராக்குமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அப்படியே பப்ளிசிட்டி பண்ணினாலும்….

39/39 எம்பி சீட்டை எடுத்து தாளிச்சுடுவாராக்குமா🤣

40/40 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

40/40 😜

புதுச்சேரியிலும்…அண்ணன் கச்சேரிதான் என்கிறீர்களா🤣.

பெங்களூர், தாராவிய விட்டுட்டேள்?🤣

# ஒருத்தருக்கு எந்திரிச்சி நிக்கவே வக்கில்லையாம்…இதுக்குள்ள ஒன்பது பெண்ஜாதி கேட்டுச்சாம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் வ‌ழ‌க்கை க‌ண்டு அஞ்சும் ம‌னித‌ர் கிடையாது

அண்ண‌ன் சீமான் பானியில் சொல்ல‌னும் என்றால் வ‌ழ‌க்கு இல்லை என்றால் விடியாது கிழ‌க்கு லொல்..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.