Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.

 

இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1355296

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபா!  

Published By: VISHNU   23 OCT, 2023 | 12:02 PM

image
 

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபாவை  வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி  வரை செயற் படுத்தப்படும், இந்தக் காலகட்டத்தில், மதுபோதையில் வாகனம்  செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ உத்தியோகத்தருக்கு அவரது சம்பளத்தில் 5,000 ரூபாவை கூடுதல் கொடுப்பனவாகவும் வழங்கப்படும்.  என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/167561

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்.

நான் சொல்லுறன் தண்ணியடிச்சுப்போட்டு கார் ஓடுறவையை பிடிக்கிற பொலிசுக்கு 10000 த்த எண்ணிக்குடுக்க.....😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் சொல்லுறன் தண்ணியடிச்சுப்போட்டு கார் ஓடுறவையை பிடிக்கிற பொலிசுக்கு 10000 த்த எண்ணிக்குடுக்க.....😁

பணக்காரன், காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து தப்பி போய் விடுவான்.
காசு கொடுக்க வசதி இல்லாதவன்தான்.... அம்பிட்டு 
நீதிமன்றத்துக்கு அலைந்து திரிய வேண்டி வரும்.

இந்த நடைமுறை, எவ்வளவு தூரம் பலன் கொடுக்குது என்று பார்ப்போம்.
ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடுகின்ற நாட்டில், சட்டத்தை நடைமுறைப் படுத்துவது கடினம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

பணக்காரன், காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து தப்பி போய் விடுவான்.
காசு கொடுக்க வசதி இல்லாதவன்தான்.... அம்பிட்டு 
நீதிமன்றத்துக்கு அலைந்து திரிய வேண்டி வரும்.

இந்த நடைமுறை, எவ்வளவு தூரம் பலன் கொடுக்குது என்று பார்ப்போம்.
ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடுகின்ற நாட்டில், சட்டத்தை நடைமுறைப் படுத்துவது கடினம் தான்.

நாசமறுந்தது.

வாகணம் ஓடுறவயளப் பிடிச்சு, வலுக்கட்டாயமா, வாய்குள்ள சாரயத்தை ஊத்திப்போட்டு, அரசாங்கத்திட்ட, தா 5,000 எண்டு நிக்கப் போறாங்கள், சிறீ லங்கன் போலீஸ் ராலாமிகள்.

🫨🥴🤢

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனி மஞ்சள் தாளுக்கு மவுசு அதிகமாகப் போகுது. சொறீலங்கா.. அரசாங்கம் 5000 கொடுத்தால்.. குடிகாரர்கள் 10,000 கொடுப்பார்கள். வெளிநாட்டுக் காசு போய் இறங்கும் தானே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்

IMG-4939.jpg

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்.

தண்ணி அடித்துவிட்டு வாகனம் ஓட்டும் பொலிசாருக்கு என்ன தண்டனை?

லஞ்சத்துக்கு எதிராக சட்டங்கள் நிறைவேற்றினார்கள்.

ஆனாலும் சட்டங்களை நிறைவேற்றியவர்களாலேயே பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.