Jump to content

சுமனரத்தின தேரரின் "தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்" என்ற கருத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி சுமந்திரன் பலஸ்தீனத்திற்கு சென்று பொய் பரப்புரை நிபுணர்களான ஹமாஸ்சிடம் பொய்களை பரப்புரைகள் செய்வது எப்படி என்று பயிற்ற்சி எடுத்து வந்தால் ஏதாவது பயன் உண்டா ?    ஹமாஸ்சின் பொய் பரப்புரைகளுக்கு கதறி கண்ணீர் வடிப்பார்கள் சுமந்திரன் உண்மையாக செய்வதை நாடகம் என்பார்கள்.

 

வாஸ்தவம்தான். அவரும் நாங்களும் சன்மார்கத்தை தழுவிக் கொண்டால் - உலகளாவிய உம்மா எமக்கும் குரல் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிக்கர் மட்டும் தானா.. இப்படிப் பேசினவர். இல்லையே..?!

சமீப காலத்தில் இப்படி பேசியவர்கள்..

1. உதய கம்பன்பில

2.மேர்வின் சில்வா

3.ஞானசார தேரர்

4.சரத் வீரசேகர

5.சுமனரத்தின தேரர் 

6. ஹிஸ்புல்லா  (வடக்குக் கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்)

சிங்கள பெளத்த கடும்போக்கு பயங்கரவாத அரச அமைச்சர்களும்.. பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்படி பகிரங்கமாகப் பேசுவதால் தான் இந்த தேரர்களாலும் இப்படி பேசவும் செயற்படவும் முடிகிறது.

சொறீலங்காவில் இன நல்லிணக்கம் என்ற ஒன்றே கிடையாது. அதற்கான சாத்தியமும் இல்லை. இன நல்லிணக்கம் என்பது தமிழர்களின் அரசியல் சமூக பொருண்மிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் கிடைக்கப் போவதும் இல்லை.

இப்போ இருப்பது இன மெளனத்தன்மை மட்டுமே. இது தமிழ் மக்களை பெளத்த சிங்கள ஆயுதப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஆயுத முனையில் வைத்திருப்பதன் விளைவே தவிர வேறில்லை. 

ரணில் விக்கிரமசிங்கவும் மகிந்த கூட்ட அரசாங்கமும் இதை ரசிப்பதன் விளைவே.. இந்தப் பேச்சுக்கள். இதனை அவர்கள் இனவாத அரசியல் சூடு ஆறாமல் இருக்க தமக்காகப் பாவிக்கிறார்கள். இதனை சிங்கள வாக்குகளாக அறுவடை செய்யலாம் என்று நினைக்கிறார்கள். சிங்களப் பெரும்பான்மை.. முஸ்லிம் காங்கிரஸ் மத அடிப்படைவாதிகள்.. மத்தியில் ஒரு பாரிய சிந்தனை மாற்றம் வராமல்.. வெறும் ஒரு சிலரை சட்டத்தை காட்டி பயமுறுத்துவதால்.. எந்தப் பிரயோசனமும் இல்லை. அது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல். 

அப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால்.. மேற்குறிப்பிட்ட அனைவர் மீதும் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தாலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் சட்ட முறைமை இவர்களை தண்டிக்கும் திராணியற்ற ஒன்றாகும். அதனால்.. இவர்களை தண்டிக்கவும் முடியாது. அந்தளவுக்கு அது சிங்கள பெளத்த பேரினவாத வெறியூட்டப்பட்ட ஒன்று. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுமந்திரன் போடுவது பக்கா நாடகம். அவர் ஒருபோதும் மேற் சொன்ன 6 பேர் மீதும் சர்வதேச முறைப்பாடு செய்யமாட்டார் அல்லது இனச் சுத்திகரிப்புக்கான கூவல் என்று.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முயலமாட்டார். 

ஏனெனில்.. அவர் சிங்கள பெளத்தத்தோடு வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று கருதுபவர். முஸ்லிம் அடிப்படைவாத முல்லாக்களுடன் கூடிக் குலாவது மகிழ்ச்சி என்று இருப்பவர். அவர் கழுத்தை தேரர்கள் ஏன் வெட்டப் போகிறார்கள். முஸ்லிம்கள் ஏன் அறுக்கப் போகிறார்கள். எனவே அவர்.. இந்தச் சூழலில்.. இப்படி சிங்களப் பொலிஸுக்கு கடிதம் (கவனிக்க பொலிஸ் முறைப்பாடு கூட அல்ல) எழுதி.. நாடகம் ஆடி அதில்.. தன்னை தமிழ் மக்கள் முன் .. நானும் நல்லவன்.. என்று காட்ட வேடம் தரிக்க முயல்கிறார். அவ்வளவே.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

வாஸ்தவம்தான். அவரும் நாங்களும் சன்மார்கத்தை தழுவிக் கொண்டால் - உலகளாவிய உம்மா எமக்கும் குரல் கொடுக்கும்.

உங்க கட்டை வேகுறதுக்காக என் கவட்டையில் வெட்ட முடியாது… 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆர் ஜெயவர்த்தனா தொடக்கம்  இன்று வரைக்கும்  இனவாதத்தை ஆள் மாறி ஆளாக வாந்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இதற்கு பௌத்த மதவாதிகள் உந்து சக்தியாக இருக்கின்றார்கள். அவ்வளவுதான்.
நம்மவர்களுக்குத்தான் சிங்களவர்களை மாதிரி இனவாதம் பேசத்தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

ஜே ஆர் ஜெயவர்த்தனா தொடக்கம்  இன்று வரைக்கும்  இனவாதத்தை ஆள் மாறி ஆளாக வாந்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இதற்கு பௌத்த மதவாதிகள் உந்து சக்தியாக இருக்கின்றார்கள். அவ்வளவுதான்.


நம்மவர்களுக்குத்தான் சிங்களவர்களை மாதிரி இனவாதம் பேசத்தெரியவில்லை.

சிங்கள பெளத்த இனவெறியன் பொது எதிரி. அவன் பேசுவது எதிரியின் பேச்சு. ஆனால்.. வடக்குக் கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசும் தொப்பிகளுக்கு துணிவை யார் வழங்கியது..??!

இதனால்.. தான் என்னவோ தேசிய தலைவர்.. இவர்கள் பக்கத்தாலும் தமிழர்கள் மத்தியில்.. இந்த ஆறு வடக்கில் ஓடாமல் இருக்க இவர்களை வெளியேற்ற வேண்டி வந்திருக்கும். ஒருவேளை கிழக்கில் இருந்தும் வெளியேற்றி இருந்தால்.. கிழக்கில் இவர்களால் ஓடிய இரத்த ஆறு.. இந்தளவுக்கு ஓடியும் இருக்காது.. எனியும் ஓடாதிருந்திருக்கும். இப்படியான வெருட்டல்களும் வந்திருக்காது. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சிங்கள பெளத்த இனவெறியன் பொது எதிரி. அவன் பேசுவது எதிரியின் பேச்சு. ஆனால்.. வடக்குக் கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசும் தொப்பிகளுக்கு துணிவை யார் வழங்கியது..??!

இதனால்.. தான் என்னவோ தேசிய தலைவர்.. இவர்கள் பக்கத்தாலும் தமிழர்கள் மத்தியில்.. இந்த ஆறு வடக்கில் ஓடாமல் இருக்க இவர்களை வெளியேற்ற வேண்டி வந்திருக்கும். ஒருவேளை கிழக்கில் இருந்தும் வெளியேற்றி இருந்தால்.. கிழக்கில் இவர்களால் ஓடிய இரத்த ஆறு.. இந்தளவுக்கு ஓடியும் இருக்காது.. எனியும் ஓடாதிருந்திருக்கும். இப்படியான வெருட்டல்களும் வந்திருக்காது. 

எது எப்படி இருந்தாலும் அவர்கள் உயிர்ப்புடன் இருந்த போது நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தவர்கள் இன்று வீதிக்கு வந்து தினாவெட்டு காட்டுவதும் ஒருவகை கேணைத்தனம் தான்......இதில் சிங்களவர்களும் நம்மவர்களும் அடக்கம்...

Protest led by Ambitiya Sumana Ratna Thera in Batticaloa - Threat to  journalist

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வாஸ்தவம்தான். அவரும் நாங்களும் சன்மார்கத்தை தழுவிக் கொண்டால் - உலகளாவிய உம்மா எமக்கும் குரல் கொடுக்கும்.

சன்மார்க்கணும், துன்மார்க்கணும் அழிக்கப்படுவார்கள்.😜

4 hours ago, nedukkalapoovan said:

சிங்கள பெளத்த இனவெறியன் பொது எதிரி. அவன் பேசுவது எதிரியின் பேச்சு. ஆனால்.. வடக்குக் கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசும் தொப்பிகளுக்கு துணிவை யார் வழங்கியது..??!

இதனால்.. தான் என்னவோ தேசிய தலைவர்.. இவர்கள் பக்கத்தாலும் தமிழர்கள் மத்தியில்.. இந்த ஆறு வடக்கில் ஓடாமல் இருக்க இவர்களை வெளியேற்ற வேண்டி வந்திருக்கும். ஒருவேளை கிழக்கில் இருந்தும் வெளியேற்றி இருந்தால்.. கிழக்கில் இவர்களால் ஓடிய இரத்த ஆறு.. இந்தளவுக்கு ஓடியும் இருக்காது.. எனியும் ஓடாதிருந்திருக்கும். இப்படியான வெருட்டல்களும் வந்திருக்காது. 

நான் இதைப்பற்றி நிறையவே இங்கு எழுதி இருக்கிறேன். இவர்கள்தான் தமிழர்களின் சாபக்கேடு என்றும் எழுதி இருந்தேன். இனியாவது அவர்களைப்பற்றி இங்கு கருத்து எழுதுபவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழர்களை ஒட்டுமொத்தமாக கொன்று அழிப்பேன் ' என்று புத்த பிக்கு பேச்சு - இலங்கையில் கொந்தளிப்பு

தேரரின் சர்ச்சை கருத்து

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக இனப் படுகொலை செய்ய வேண்டும் எனறு மட்டக்களப்பு பகுதியிலுள்ள மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் என்ற புத்த பிக்கு தெரிவித்த கருத்து, இன்று பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கருத்து பாரதூரமானது எனவும், அந்த புத்த பிக்கு கைது செய்யப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

வீதியின் நடுவே இருந்தவாறு இனவாதத்தை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக அவர் தெரிவித்த கருத்து, சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு கள்ளியன்காடு பகுதியில் வீதியோரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இந்த கல்லறை அமைந்துள்ளதாக கூறப்படும் இடத்திற்கு வருகை தந்தவாறே, அவர் தமிழர்களுக்கு எதிராக இவ்வாறான கருத்தை வெளியிட்டார்.

மட்டக்களப்பு நிர்வாகத்திலுள்ள பெரும்பான்மையினர் தமிழர்கள் என்ற அடிப்படையில், சிங்களவர்களின் அடையாளங்களையே தமிழர்கள் இல்லாது செய்வதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியம் போன்ற அரசியல்வாதிகளே, சிங்களவர்களின் அடையாளங்களை அழிப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். தமிழர்களுக்கு எதிரான புத்த பிக்குவின் இனவாத கருத்து இலங்கையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தேரரின் சர்ச்சை கருத்து
படக்குறிப்பு,

சுமணரத்ன தேரர் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக கருதுக்களை வெளியிட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு - மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்திற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கடிதமொன்றின் ஊடாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டுவேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஏன் இதுவரை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என எம்.ஏ.சுமந்திரன், போலீஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீஸ் மாஅதிபருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியனை, அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்ச்சியாக எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
தேரரின் சர்ச்சை கருத்து

பட மூலாதாரம்,MANO GANESAN

படக்குறிப்பு,

தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்து குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட அனைவரும் கவனத்திற்கு எடுத்து, தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.

''மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் இனவாதத்தை கக்கியிருக்கின்றார். அதற்கு இடமளிக்க முடியாது. நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். நடுத் தெருவிற்கு வந்து, தமிழர்களை வெட்ட வேண்டும். கொல்ல வேண்டும் என்று பேச்சினாலும், சைகையினாலும் செய்கின்றார்; சொல்கின்றார். இது என்ன? மனநோயா?

அவருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவரின் தாயின் மயான பூமியிலே ஏதோ நடந்து விட்டதாக சொல்கின்றார். அது உண்மையானால், அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டுகின்றார். மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக குற்றஞ்சாட்டுகின்றார்.

அதற்கு வேறு வழியிருக்கின்றது. போலீஸில் புகார் செய்யலாம். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பேசலாம். ஒரு முடிவு காணலாம். வழியிருக்கின்றது. அதனை செய்யாமல் நடுத் தெருவிற்கு வந்து தமிழர்களை கொல்வேன் என்று சொல்ல முடியாது.

ஐ.சி.சி.பீ.ஆர் சட்டம் என்று ஒன்று நாட்டில் இருக்கின்றது. அதன் பிரகாரம், எவரது இனத்திற்கு எதிராகவும் பேச முடியாது. இனங்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்த முடியாது. இந்த அம்பிட்டிய தேரரும் கைது செய்யப்பட்டே ஆக வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். நாட்டிலுள்ள பௌத்த மகாநாயக்க தேரர்களும் இதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

அவரை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்ல, நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதை கவனத்தில் எடுக்க வேண்டும். நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும். ஜனாதிபதி வழமை போல இதையும் கடந்து போகக்கூடாது என கூறிக்கொள்ள விரும்புகின்றோம்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 
தேரரின் சர்ச்சை கருத்து

பட மூலாதாரம்,CWC MEDIA

படக்குறிப்பு,

 

''தமிழ் மக்களை இலக்கு வைத்து அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் இனக்குரோதத்தை விதைக்கும் வகையில் உள்ளது” என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்பு

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு - அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மாஅதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் தலைமையகத்திலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மேலும், குறித்த தேரரின் கடந்த கால செயற்பாடுகள் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதால் அது தொடர்பில் உரிய வகையில் விசாரணை நடத்தி பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், தனக்கும் அறிக்கையொன்றை வழங்குமாறும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

''தமிழ் மக்களை இலக்கு வைத்து அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் இனக்குரோதத்தை விதைக்கும் வகையில் உள்ளதுடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்றால் எமது நாட்டு பொருளாதாரம் சரிந்தது. அதன்பின்னர் அரசியல் குழப்பத்தால் அதலபாதாளத்திலேயே விழுந்தது. எனவே, அனைவரும் இணைந்து செயற்பட்டால்தான் இந்நாட்டை கட்டியெழுப்பலாம்.

நாட்டில் முன்னேற்றத்துக்கு இன, மத நல்லிணக்கம் மிக முக்கியம். இந்நிலையில் இனவாதம் கக்கி, இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் குறித்த தேரர் செயற்பட்டு வருகின்றார்.

கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட முற்படுகின்றார். எனவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 
தேரரின் சர்ச்சை கருத்து

பட மூலாதாரம்,RAJKUMAR RAJEEVKANTH

படக்குறிப்பு,

தேரரின் பேச்சுக்கு எதிராக வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் ராஜ்குமார் ரஜீவ்காந்த் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

தமிழர்களுக்கு எதிராக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் ராஜ்குமார் ரஜீவ்காந்த் இந்த முறைப்பாட்டை நேற்றைய தினம் பதிவு செய்துள்ளார்.

''குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு முன்னிலையில், அவரின் தனிப்பட்ட பிரச்னைகளை பொது பிரச்னையாக மாற்றி, தெற்கில் வசிக்கக்கூடிய அத்தனை தமிழர்களையும் தான் துண்டு துண்டாக வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறியிருக்கின்றார்.

இந்த நாட்டை பொருத்த வரையில் இன, மதவாதங்களை தூண்டுபவர்கள் மீது, குறிப்பாக பௌத்த பிக்குகள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது. இங்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் முதல் ஐ.சி.சி.ஆர்.பி வரை சாதாரண மக்கள் மீது பாவிக்கப்படுகின்றது.

எனக்கு தெரிந்த பல பேர், முகப்புத்தக பதிவிற்காக மூன்று வருடங்கள் சிறையில் இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, நான் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றேன். என்னுடன் மேலும் சிலர் வருகைத்தந்திருக்கின்றார்கள். அவர்களும் இதே கோரிக்கையை விடுத்திருக்கின்றார்கள். உடனடியாக அவர் கைது செய்யப்படவேண்டும். இந்த கைது இடம்பெறும் வரை இதற்கு எதிராக நாம் குரல் கொடுப்போம்." என ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இதற்கு முன்னரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்த நிலையிலேயே, தற்போது தமிழர்களை வெட்டுவதாக கூறி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பௌத்த விகாரையான மங்களாராமய விகாரையின் விஹாராதிபதியாக (பிரதான பிக்கு) அவர் செயற்பட்டு வருகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cv24y1r7q9eo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த பிக்குகள் அப்படி ஒன்றும் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. ஆனால் அப்படித்தான் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனையோ பெளத்த பிக்குகளை சிங்களவர்க்ள சரமாரியாகத்தாக்கியிருக்கிறார்கள். கோகம போராட்டம். மமற்றும் அண்மையியல் தாயையும் மகளையும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திய விகாரத்தில் எல்லாம் நல்ல தர்ம அடி கோடுத்திருக்கிறார்கள்.ஆகவே அவர்களைக்கைது செய்து உள்ளே போடுவது பெரிய விடயமல்ல. இந்த அரசாங்கம் ஏன் அதைச் செய்யாமல் இருக்கிறது. சுமத்திரன் அவர்மீது சட்டரீதியாக வழக்குத் தொடுக்காமல் பொத்தாம் பொதுவாக ஏன் கடிதம் எழுதினார். புலிகள் இருந்தவரையில் இந்தப் பிக்குகளின் வீரம் எங்கே மறைந்திருந்தது.இந்தநாட்டில் முதல் துப்பாக்கியை வெடித்தது பிக்குவவின் துப்பாக்கிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புலவர் said:

பெளத்த பிக்குகள் அப்படி ஒன்றும் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. ஆனால் அப்படித்தான் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனையோ பெளத்த பிக்குகளை சிங்களவர்க்ள சரமாரியாகத்தாக்கியிருக்கிறார்கள். கோகம போராட்டம். மமற்றும் அண்மையியல் தாயையும் மகளையும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திய விகாரத்தில் எல்லாம் நல்ல தர்ம அடி கோடுத்திருக்கிறார்கள்.ஆகவே அவர்களைக்கைது செய்து உள்ளே போடுவது பெரிய விடயமல்ல. இந்த அரசாங்கம் ஏன் அதைச் செய்யாமல் இருக்கிறது. சுமத்திரன் அவர்மீது சட்டரீதியாக வழக்குத் தொடுக்காமல் பொத்தாம் பொதுவாக ஏன் கடிதம் எழுதினார். புலிகள் இருந்தவரையில் இந்தப் பிக்குகளின் வீரம் எங்கே மறைந்திருந்தது.இந்தநாட்டில் முதல் துப்பாக்கியை வெடித்தது பிக்குவவின் துப்பாக்கிதான்.

இது பாதி சரி, பாதி பிழை.

பிக்கு ஒருவர் சிங்களவர் மத்தியில் துஸ்பிரயோகமாக நடந்தால் அடி விழ வாய்ப்புண்டு.

உதாரணமாக, அந்த பாலியல் விடயத்துக்காக உதை விழுந்த வழக்கில் சம்பந்த பட்ட பெண்கள், தட்டி கேட்ட ஆண்கள் தமிழராய் இருந்திருப்பின், பொய் குற்றம் சொல்லி, பிக்குவை தண்டித்து அதன் மூலம் பெளத்த சிங்கள இனத்தை வஞ்சிக்கிறார்கள் தமிழர்கள் என கூச்சல் போட்டு பிக்கு தப்பி விடுவார்.

அதே போலத்தான் ஞானே, சுமணே எல்லா மொட்டைகளும். இனவாதத்தை ஒரு பிக்கு கையில் எடுத்தால் அதன் பின் அவர் மேல் கை வைப்பது கடினம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
    • 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம்  அரியநேத்திரனை  ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.   மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும்  வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.  நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை  அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  ஆனால், இந்த தேர்தலில்  பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக  ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.  மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது  ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.