Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

5-27.jpg

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக காணொளி ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

மாவீரர் தினம்

இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

https://akkinikkunchu.com/?p=261269

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

5-27.jpg

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக காணொளி ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

மாவீரர் தினம்

இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

https://akkinikkunchu.com/?p=261269

 

ஒரு சிங்கள ஊடகத்துக்கு இருக்கும் நடைமுறை நவீன தொழில்நுட்ப அறிவுகூட இங்கு உயர்தொழில்நுட்பம் கொட்டிக்கிடக்கும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

ஒரு சிங்கள ஊடகத்துக்கு இருக்கும் நடைமுறை நவீன தொழில்நுட்ப அறிவுகூட இங்கு உயர்தொழில்நுட்பம் கொட்டிக்கிடக்கும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

இனி இந்த திரி சுறுசுறுப்பாக இயங்க தொடங்கப்போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

ஒரு சிங்கள ஊடகத்துக்கு இருக்கும் நடைமுறை நவீன தொழில்நுட்ப அறிவுகூட இங்கு உயர்தொழில்நுட்பம் கொட்டிக்கிடக்கும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

நம்ம ஆட்கள் களைத்து விட்டார்கள் எத்தனை தரம் யாருமே இல்லை என்று சொல்வது புலி பினாமியாக இருந்தவனுக்கும் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் புலி உயிருடன் இருக்குது என்று சொல்ல  அவசர தேவை .

புலி உயிருடன் உள்ளது என்பவர்களால் இன்று கூட ஒரு தாக்குதல் நடாத்த முடியவில்லை முடியாது வெத்து வேட்டுக்ககள்  காரணம் இன்று என்ன நடக்கும் என்பது உண்மையானவர்கள்  தெரிந்தே போனார்கள் இனி அவர்கள் வரமாட்டர்கள் ஆனால் நாங்கள்தான் இன்னமும் சவாரிதம்பிகளாய் இருக்கிறம் .

எப்படி என்றால் சம்பந்தனுக்கு பிறகு திருகோனமலையில் அரசியல் செய்ய ஆள் இல்லை  சம்பந்தனின் தலைமைக்கு மாறாக தமிழ்தேசிய முன்னணிக்கு ஆள் இல்லை என்பது போல் தமிழ் மக்கள் மனதை  டிசைன் செய்து உள்ளார்கள் அதே போல் மேற்குலகில் உள்ளவருடன் கதைப்பது என்றால் சுமத்திரன் அவரை தவிர வேறு ஆள் கிடையாது அதையும் யார் டிசைன் செய்தது ?

  • கருத்துக்கள உறவுகள்

Defense.jpg?resize=700,375&ssl=1

துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? காணொளி குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது.

அவர் இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று நவம்பர் 27 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

புலிகளின் மற்றொரு மலிவான முயற்சி என்பதனால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக தேவைப்பட்டால், அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1359834

7 hours ago, தமிழ் சிறி said:

புலிகளின் மற்றொரு மலிவான முயற்சி என்பதனால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

எப்பவும் புலிகளுக்கு மலினமான பெயரைத் தேடி கொண்டு வந்து சேர்ப்பது புலிகள் அல்ல, புலிகளின் வால்களும் புலிகளின் சொத்துகளை ஆட்டையைப் போட்டு அதை தொடர்ந்து தக்கவைக்க முனையும் திருட்டுக் கூட்டமுமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

எப்பவும் புலிகளுக்கு மலினமான பெயரைத் தேடி கொண்டு வந்து சேர்ப்பது புலிகள் அல்ல, புலிகளின் வால்களும் புலிகளின் சொத்துகளை ஆட்டையைப் போட்டு அதை தொடர்ந்து தக்கவைக்க முனையும் திருட்டுக் கூட்டமுமே.

நச்சென்று.... நாலு வரியில்,  அருமையாக சொன்னீர்கள்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

எப்பவும் புலிகளுக்கு மலினமான பெயரைத் தேடி கொண்டு வந்து சேர்ப்பது புலிகள் அல்ல, புலிகளின் வால்களும் புலிகளின் சொத்துகளை ஆட்டையைப் போட்டு அதை தொடர்ந்து தக்கவைக்க முனையும் திருட்டுக் கூட்டமுமே.

 

19 hours ago, தமிழ் சிறி said:

நச்சென்று.... நாலு வரியில்,  அருமையாக சொன்னீர்கள்.  😂

நான் நினைக்கிறேன் 4மாத‌த்துக்கு முத‌ல் யாழில் அருணா கில‌ப்பி விட்ட‌ புர‌ளிய‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் யாழில் இணைத்து இருந்தார்...............அப்போது க‌டும் கோவ‌ம் வ‌ந்திச்சு............என்ன‌ கொடுமை  த‌லைவ‌ரின் குடும்ப‌த்தில் யாரும் இல்லை அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நாட்டுக்காக தங்களின் உயிரை தியாகம் செய்தவர்கள்..............த‌லைவ‌ர் 150 போராளிக‌ளுட‌ன் ந‌ல‌மாய் இருக்கிறார் போன்று வாய் கூசாமை அறிக்கை விட்டா அருணா............இவாக்கும் எங்க‌ட போராட்ட‌த்துக்கும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஏதும் தொட‌ர்வு இருக்கா..........குண்டு ச‌த்த‌ம் கேட்க்க‌ முத‌ல் நாட்டை விட்டு த‌ப்பி ஓடி வ‌ந்து டென்மார்க் நாட்டில் அக‌தியா வ‌ந்து பின்னைய‌ கால‌ங்க‌ளில் டென்மார்க் நாட்டு குடியுரிமை கிடைத்த‌ பின் உல்லாச வாழ்க்கை வாழ‌ தொட‌ங்கின‌வா...........இவா எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு சிறு பங்களிப்பு கூட செய்யவில்லை.............இது டென்மார்க்கில் வ‌சிக்கும் த‌மிழ்  ம‌க்க‌ளுக்கு தெரிந்த‌  விடைய‌ம் 

 பின்னைய‌ கால‌ங்க‌ளில் ல‌ண்ட‌னுக்கு மாறி ஏதோ ஒரு கும்ப‌லுக்கு விலை போய் விட்டா போல் இருக்கு .........இவா விட்ட‌ அறிக்கைக்கு பிற‌க்கு தான் துவாராக‌ ப‌ற்றி அதிக‌ம் பேச‌ப் ப‌ட்ட‌து.............

ச‌ரி இனி 2009க‌ளில் ந‌ட‌ந்த‌ நிதி மோச‌டிப‌ற்றி விவாதிப்போம் ...........எம் போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ர் க‌ன‌டாவில் த‌ன‌து ம‌க‌ளுக்கு கெலிக‌ப்ட‌ர் மூல‌ம் சாம‌த்திய‌ வீடு செய்த‌வ‌ர் என்று..........த‌மிழ் நாட்டில் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ திராவிட‌ க‌ட்சிய‌ சேர்ந்த‌ ந‌ண்ப‌ன் சொல்லித் தான் இந்த‌ உண்மை  என‌க்கு தெரியும் அவ‌ன் சொல்லாட்டி இது என‌க்கு தெரிந்து இருக்காது............டென்மார்க்கில்  இறுதி கட்டப் போரில் காசு சேர்த்தவர் செய்த குளறுபடிகள் நிறைய இருக்கு அதுக‌ளை இதுக்கை சொல்ல விரும்பவில்லை..........ஒரு வ‌ரியில் சொல்ல‌னும் என்றால் எங்க‌ளை பொய் சொல்லி ஏமாற்றி விட்டின‌ம் அதை எல்லாம் நாம் க‌ட‌ந்து வ‌ந்து விட்டோம்............த‌லைவ‌ரை எம் போராளிக‌ளை ந‌ம்பி தான் ப‌ண‌த்தை அள்ளிக் கொடுத்தோம் ஆனால் அந்த‌ ப‌ண‌ங்க‌ள் வ‌ன்னி த‌லைமைக்கு போய் சேர‌ வில்லை இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ ..............நாங்க‌ள்  முன் வைப்பதெல்லாம் போரால் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு கையை கால‌ இழந்த போராளிகளுக்கு ஏதும் சுய‌ தொழில் செய்து கொடுத்து அவ‌ர்க‌ளுக்கு இருக்க‌ வீடுக‌ள் க‌ட்டி கொடுக்க‌ சொல்லி..........எம‌க்காக‌ போராடின‌வையின் நில‌மை இப்போது இருக்க‌ வீடு இல்லாம‌ ஒரு நேர‌ சாப்பாட்டுக்கு அதுக‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ளை க‌ண்ணீரை நான் அதிக‌ம் பார்த்து இருக்கிறேன்...........முன்னாள் போராளிக‌ளின் உற‌வின‌ர்க‌ள் சில‌ர் வெளி நாட்டில் இருந்த‌ ப‌டியால் அதுக‌ள் அவைக்கு கை கொடுத்து ப‌ல‌ உத‌விக‌ள் செய்த‌ ப‌டியால் அவ‌ர்க‌ள் மூன்று நேர‌ உண‌வை த‌ன்னும் நின்ம‌தியாய் சாப்பிடின‌ம் ஊரில் ............

போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் இப்ப‌வும் சில‌ர் க‌ண்ணீர் விட்ட‌ ப‌டி.......முன்னாள் போராளியின் த‌ங்கைச்சி இர‌ண்டு பெண் பிள்ளைக‌ளை வ‌ன்னியில் அக்கராயன் என்ர‌ இட‌த்தில் வ‌சித்து வ‌ருகிறா உண‌வுக்கு காசில்லை 500ரூபாய் தாங்கோ அடுத்த‌ நாள் வேலைக்கு போய் விட்டு வ‌ந்து தாறேன் என்று க‌ட‌னாய் கேட்க்க‌ அவ‌ர்க‌ள் காசு க‌ட‌ன் த‌ர‌ முடியாது என்று திர‌த்தி விட்ட‌வை...........இதெல்லாம் காணொளி ஆதார‌த்தோடு இருக்கு அந்த‌ காணொளிய‌ பார்த்து ம‌ன‌ம் உடைந்து போய் விட்டேன் ச‌ரி மாத‌ க‌ட‌சியில் இந்த‌ அம்மா குடும்ப‌த்துக்கு எப்ப‌டியாவ‌து உத‌வ‌னும் என்று முடிவெடுத்தேன்..............ஒரு கிழ‌மை க‌ழித்து பார்த்தா அந்த‌ அம்மாவுக்கு புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் ப‌ல‌ ல‌ச்ச‌ க‌ண‌க்கில் உத‌விச்சின‌ம்............அந்த‌ அம்மா கேட்ட‌ அனைத்தும் அவான்ட‌ கைக்கு போன‌து அதுக்கு பிற‌க்கு அந்த‌ அம்மாவின் முக‌த்தை பார்க்க‌ எவ‌ள‌வோ ச‌ந்தோஷ‌மாய் இருந்திச்சு...........அந்த‌ அம்மா சுய‌ தொழில் செய்து முன்னுக்கு வ‌ர‌க் கூடிய‌ திற‌மை ப‌டைத்த‌  அம்மா..............இப்ப‌டி போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளின் வாழ்க்கை போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளின் வாழ்க்கைய‌ ப‌ற்றி எழுதி கொண்டே போக‌லாம்...........எங்க‌ட‌ முன்னோர்க‌ள் எங்க‌ளுக்கு இப்ப‌டி சொல்லித் தான் வ‌ள‌த்த‌வை அடுத்த‌வேன்ட‌ ஜ‌ஞ்சிய‌ம் எடுத்தால் அது எங்க‌ட‌ ச‌ந்த‌தியை பாதிக்கும் என்று

க‌ட‌சி க‌ட்ட‌ போரில் நிதி மோச‌டி செய்த‌ கூட்ட‌ம் இப்ப‌ ந‌ல்லா இருக்க‌லாம் ஆனால் அவ‌ர்க‌ளின் க‌ண் முன்னே அவ‌ர்க‌ளின் ச‌ந்த‌திக்கு ஆண்ட‌வ‌ர் ந‌ல்ல‌ தீர்ப்பு கொடுப்பார் ...........அது ம‌ட்டும் போராளிக‌ள் ர‌த்த‌ம் சிந்தின‌ காசை வைத்து ஆட‌ட்டும் ஏதோ ஒரு நாள் அத‌ற்கான‌ த‌ண்ட‌னைய‌ அனுப‌விப்பின‌ம்............

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இவ‌ங்க‌ளுக்கு வேலை வெட்டி இல்லை இப்ப‌டியே ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ இந்திய‌ அர‌சிட‌ம் ம‌ண‌ம் வாங்கி விட்டு கூவுறானுங்க‌ள்
இதை எல்லாம் ம‌க்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்க்க‌ போவ‌து கிடையாது.............அருணா டென்மார்க்கில் இருந்து இருக்க‌னும் சில‌ கேள்விக‌ளை நேரில் போய்யே கேட்டு இருப்போம்😡.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.