Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞர் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார்.

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது | Youth Arrested Installing Cameras In Bathrooms

 

அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

கண்காணிப்பு கமராக்களில் சிக்கிய நபர்

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

 

 

 

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

https://tamilwin.com/article/youth-arrested-installing-cameras-in-bathrooms-1700670121

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்து இப்படி ஒரு செயலைச் செய்ய இவர் முனைவாரா அல்லது செய்ய முனைந்து கைது செய்யப்பட்டிருந்தால்  இவரது நிலை என்னவாகியிருக்கும் ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்து இப்படி ஒரு செயலைச் செய்ய இவர் முனைவாரா அல்லது செய்ய முனைந்து கைது செய்யப்பட்டிருந்தால்  இவரது நிலை என்னவாகியிருக்கும் ? 

இவரை வெளியில் எடுக்க சுமத்திரன் ஆட்கள் தான் முன்னுக்கு நிக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

கனவிலும் அந்த எண்ணம் வராது. புலிகள் அழிய வேண்டும் என்று விரும்பிய மாற்றுக்கருத்தாளர்கள் வீட்டிலும் இந்த நபர் கமரா வைத்திருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்து இப்படி ஒரு செயலைச் செய்ய இவர் முனைவாரா அல்லது செய்ய முனைந்து கைது செய்யப்பட்டிருந்தால்  இவரது நிலை என்னவாகியிருக்கும் ? 

உண்மைய‌ சொல்ல‌ப் போனால் இவ‌ர் வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ அள‌வுக்கு ம‌ர‌ண‌ அடி வேண்டி இருப்பார்.............ச‌மாதான‌ கால‌த்தில் ரோட்டால் போன‌ பொம்பிளை பிள்ளைய‌ ல‌வ் தொந்த‌ர‌வு செய்த‌துக்கு எம்ம‌வ‌ர்க‌ள் இந்த‌ சேட்டை எல்லாம் செய்ய‌ கூடாது என்று அந்த‌ பெடிய‌னுக்கு சொன்னார்க‌ள் அவ‌ர் கேட்ட‌ பாடு இல்லை  க‌ட‌சியில் அவ‌ருக்கு ந‌ல்ல‌ த‌ன்ட‌னை கிடைச்ச‌து..............கால‌ம் மாறி போச்சு இப்ப‌ எல்லாம் எங்க‌ட‌ ஊரில் க‌ஞ்சா திருட்டு ர‌வுடிச‌ம் எல்லாம் ம‌லிந்து போய் இருக்கு...........எப்ப‌டி இருந்த‌ ஊர் இப்ப‌டியா போய் விட்ட‌தே என்று என்னோட‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு க‌வ‌லை என‌க்கும் க‌வ‌லை தான் என்ன‌ செய்ய‌😧..............

எம்ம‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் திருந்தி வாழ‌ ஒரு ச‌ர்ந்த்த‌ப்ப‌ம்   கொடுக்கிற‌வை..........அதையும் ம‌திக்காம‌ சேட்டை தொட‌ர்ந்தால் ர‌க‌சிய‌மாய் க‌தைய‌ முடிச்சு விடுவின‌ம்................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

இவரை வெளியில் எடுக்க சுமத்திரன் ஆட்கள் தான் முன்னுக்கு நிக்கினம் .

சட்டத்தரணிகளின் வேலை அதுதானே  😁

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

கனவிலும் அந்த எண்ணம் வராது. புலிகள் அழிய வேண்டும் என்று விரும்பிய மாற்றுக்கருத்தாளர்கள் வீட்டிலும் இந்த நபர் கமரா வைத்திருப்பார். 

உப்ப‌டியான‌ த‌றுத‌லைக‌ளுக்கு எம் மாவீர‌ செல்வ‌ங்க‌ள் செய்த‌ தியாக‌ம் தெரியாது........20வ‌ருட‌த்துக்கு முத‌ல் த‌மிழீழ‌ ம‌ண் எப்ப‌டி இருந்த‌து..........த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் ப‌ற்றி தெரியாது
பெண் பிள்ளை இர‌வு 12ம‌ணியில் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌  முடிந்த‌து...........இப்ப‌ இர‌வு ஆனால் பெண் பிள்ளைக‌ளை வீட்டை விட்டு வெளியில் விட‌ ப‌ய‌ப்பிடுதுக‌ள் பெற்றோர் மார்...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பையன்26 said:

உப்ப‌டியான‌ த‌றுத‌லைக‌ளுக்கு எம் மாவீர‌ செல்வ‌ங்க‌ள் செய்த‌ தியாக‌ம் தெரியாது........20வ‌ருட‌த்துக்கு முத‌ல் த‌மிழீழ‌ ம‌ண் எப்ப‌டி இருந்த‌து..........த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் ப‌ற்றி தெரியாது
பெண் பிள்ளை இர‌வு 12ம‌ணியில் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌  முடிந்த‌து...........இப்ப‌ இர‌வு ஆனால் பெண் பிள்ளைக‌ளை வீட்டை விட்டு வெளியில் விட‌ ப‌ய‌ப்பிடுதுக‌ள் பெற்றோர் மார்...............

பிழைக்க தெரியாதவன் குளியறைக்குள் கமரா பூட்டிய நேரம் யாழில் உள்ள அரசியல்கட்சிகளின் காரியாலங்களில் கமரா  பூட்டியிருந்தால் இந்நேரம் அவன் மல்ட்டி மில்லியனர் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் யுவதிகள் குளிக்கும் போது இரகசியமாக படம் பிடித்த மன்மதராசாவை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நூதனமக வலைவிரித்து பிடித்துள்ளனர்.

கைதான மன்மதராசா, மொடல் அழகனாக பணிபுரிபவர்.

கடந்த வாரமளவில், யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றிற்குள் இரகசியமாக நுழைந்த இளைஞன், குளியலறைக்குள் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்த போது, கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

குளியலறை துவாரமொன்றின் ஊடாக கையடக்க தொலைபேசி ஒன்று தென்பட்டதையடுத்து யுவதி கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த இளைஞன் தப்பியோடி விட்டார்.

இது தொடர்பில் பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் ஒருமுறை அந்த வீட்டுக்குள் இளைஞன் இரகசியமாக நுழைந்துள்ளார். யுவதி மீளவும் அந்த இளைஞனை கண்டு சத்தமிட, தப்பியோடி விட்டார்.

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர். இதன் போது, கொக்குவில், பூநாரிமடத்தடியை சேர்ந்த இளைஞன் ஒருவரே, தொடர்புடைய மன்மதராசா என்பதை கண்டறிந்தனர்.

குறிப்பிட்ட இளைஞன், யாழ்ப்பாணத்திலுள்ள சில ஆடை விற்பனை நிலையங்களின் விளம்பரங்களில் ஆண் மொடலாக நடித்துள்ளார். ஆயினும், அவர் தற்போது தங்கியுள்ள இடத்தை யாரும் அறிந்திருக்கவில்லை.

இதையடுத்து, பொலிசார் நூதனமாக வலைவிரித்துள்ளனர்.

பிறிதெரு தொலைபேசி இலக்கத்தின் வழியாக இளைஞனை தொடர்பு கொண்டு, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுள்ளனர். முன்னணி நடிகையொருவரும் அதில் நடிப்பார் எனவும், அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென குறிப்பிட்டனர். இளைஞனும் அதற்கு சம்மதித்தார்.

இந்த உரையாடலின் போது, மருதனார்மடத்திலுள்ள உணவகம் ஒன்றில் தற்போது பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞனின் ஆடை அளவை பெறுவதற்காக சந்திக்க வேண்டுமென பொலிசார் தெரிவிக்க, தானே நேரில் வருவதாக இளைஞன் தெரிவித்துள்ளார். இதன்படி, சுன்னாகத்திலுள்ள குறிப்பிட்ட இடமொன்றுக்கு வருமாறு பொலிசார் தெரிவித்தனர்.

இளைஞன் ஆர்வம் மிகுதியில் சுன்னாகத்துக்கு சென்ற போது, அங்கு சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது, சமூக வலைத்தளங்கள் வழியாக பல யுவதிகளுடன் அவர் தொடர்பிலிருந்தது தெரிய வந்தது.

குறிப்பிட்ட இளைஞனுக்கு எதிராக யுவதி முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.

இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியை பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, குறிப்பிட்ட யுவதியை தான் காதலிப்பதாக இளைஞன் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பொலிசாரின் விசாரணையில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றத்தின் பாரதூரதன்மையிலிருந்து தப்பிக்க இளைஞன் அப்படியொரு கதையை சோடிக்க முற்படுகிறாரா என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கைதான மன்மதராசாவை அதற்கு முன்னர் கண்டிருக்கவேயில்லையென பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேவைப்படின் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உண்மையை வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக பொலிசாரிடம் தெரிவித்தார்.

பல்வேறு விதமாக இளம் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிக்காக போராட தயாராக இருப்பதில்லை. எனினும், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதியின் முன்மாதிரியான துணிச்சலை பொலிசாரும் பாராட்டினர்

https://vampan.net/50650/

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதராசதான் இந்த விளையாடிகாட்டி இருக்கிறார். பேரே மன்மதராசா, அப்பா அவர் மன்மதனாகத்தானே இருப்பார். அது சரி, மாடல் அழகனாக இருக்கும்போது எதுக்குடா நீ குளியல் அறையில் காமெரா வைக்க வேண்டும்?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.