Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sarath-weerasekara_3.jpg?resize=400,266&

விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும்.

இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.

உண்மையில், மஹிந்த ராஜபக்ஷ பெரிய தவறொன்றை இழைத்துவிட்டார். ஹிட்லர் இறந்தவுடன், அவரது நாஜி கட்சி இல்லாது போனது.

பொல் போட் இறந்தபின்னர் அவரது காம்பூச்சியா கட்சி இல்லாமல் செய்யப்பட்டது.

சதாம் உசைன் இறந்தபோதும், முபாரக் இறந்தபோதும் அவர்களது அரசியல் கட்சிகள் இல்லாது செய்யப்பட்டன.

ஆனால், எல்.ரி.ரி.ஈ. எனும் உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது அரசியல் கட்சியான ரி.என்.ஏ.வை நாம் தடை செய்யவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1360395

  • கருத்துக்கள உறவுகள்

100%

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகளை தடைசெய்ய வேண்டுமென்று குறிப்பிடுபவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி

Published By: VISHNU     23 NOV, 2023 | 04:47 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான்  தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு  கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

இவர்கள் ஒருபோதும்  தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர்  தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமது அரசியல் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/170076

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தடைசெய்யலால். தானே???  தடை செய்யவும்  சர்வதேசம்  அல்லது பல நாடுகள் உதவி செய்ய வேண்டுமா???   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இப்போது தடைசெய்யலால். தானே???  தடை செய்யவும்  சர்வதேசம்  அல்லது பல நாடுகள் உதவி செய்ய வேண்டுமா???   

ஹிட்லர் சொன்னது தான் நினைவுக்கு வருது........அடக்க முடியாத கோபத்தை கட்டி வை காலம் உன்னிடம் வரும்......அப்போது ஒருவனையும் விடாது கருவறு

2009க்கு பிற‌க்கு ஆயுத‌ம் வேண்டாம் அகிம்சை தான் சிற‌ந்த‌ வ‌ழி என்று அதை நோக்கி ப‌ய‌ணிக்கிறோம்............இவ‌ங்க‌ளே த‌மிழ‌ர்க‌ளை மீண்டும் ஆயுத‌ம் ஏந்த‌ வைப்பாங்க‌ள் போல் இருக்கு 😡

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிங்களவர்கள் சிலருடன் எம்மவர் ஓரிருவர் உரையாடியபோது அரசியலும் புகுந்தது எம்மவரில் ஒருவர் அவர்களுடன் அம்பட்டிய சுமண தேரர், வீரசேகர பேச்சுபற்றி சிலாகித்தார் அவர்கள் சிரித்தார்கள், நான் வாய் மட்டும் பாத்துக்கொண்டிருந்தேன்.

சுமனதேரர் பேசும் இனதுவேசம் சரியென்றால் ஒட்டுமொத்த சிங்களவர்களும் அவர்பின்னாடியே நின்றிருப்போமே யாருமே கண்டுகொள்ளாத அவர் தனியனாக பிசுபோல் உளறிக்கொண்டு திரிகிறார் என்றார்கள்,

வீரசேகரபற்றிய பேச்சின்போது நாட்டில் உள்ள பெரும்பான்மை சிங்கள பெற்றோர்களின் தற்போதைய நோக்கமெல்லாம் தமது பிள்ளைகளுக்கான கல்வி தகுதியும் பொருளாதாரம் எதிர்காலம் பற்றியதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றியுமே இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

நீங்கள் வேண்டுமென்றால் அவர்கள் பேச்சை சீரியசாக எடுத்துக்கொள்ளுங்கள் நாங்கள் அதுபற்றி சிந்திப்பது கிடையாது அவர்களின் பேச்சுக்கள் எதுவும் நடைமுறை சாத்தியமில்லாதவை என்றும் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, valavan said:

இங்கு சிங்களவர்கள் சிலருடன் எம்மவர் ஓரிருவர் உரையாடியபோது அரசியலும் புகுந்தது எம்மவரில் ஒருவர் அவர்களுடன் அம்பட்டிய சுமண தேரர், வீரசேகர பேச்சுபற்றி சிலாகித்தார் அவர்கள் சிரித்தார்கள், நான் வாய் மட்டும் பாத்துக்கொண்டிருந்தேன்.

சுமனதேரர் பேசும் இனதுவேசம் சரியென்றால் ஒட்டுமொத்த சிங்களவர்களும் அவர்பின்னாடியே நின்றிருப்போமே யாருமே கண்டுகொள்ளாத அவர் தனியனாக பிசுபோல் உளறிக்கொண்டு திரிகிறார் என்றார்கள்,

வீரசேகரபற்றிய பேச்சின்போது நாட்டில் உள்ள பெரும்பான்மை சிங்கள பெற்றோர்களின் தற்போதைய நோக்கமெல்லாம் தமது பிள்ளைகளுக்கான கல்வி தகுதியும் பொருளாதாரம் எதிர்காலம் பற்றியதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றியுமே இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

நீங்கள் வேண்டுமென்றால் அவர்கள் பேச்சை சீரியசாக எடுத்துக்கொள்ளுங்கள் நாங்கள் அதுபற்றி சிந்திப்பது கிடையாது அவர்களின் பேச்சுக்கள் எதுவும் நடைமுறை சாத்தியமில்லாதவை என்றும் சொன்னார்கள்.

உல‌க‌ வ‌ங்கியிட‌ம் பிச்சை எடுத்து
நாட்டை கொண்டு ந‌ட‌த்தினால் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இப்ப‌டி யோசிக்காம‌ எப்ப‌டி யோசிப்பின‌ம்.............அன்மைக் கால‌மாய் இல‌ங்கையில் நிறைய‌ கோளாறுக‌ள் ந‌ட‌க்குது............விமான‌ நிலைய‌த்தில் வைத்து  திருட்டு த‌ன‌மாய் ப‌ண‌ம் ப‌றிக்க‌ திட்ட‌ம் போடுவ‌து...........இந்த‌ அறிக்கைய‌ வெளி விட்ட‌வ‌ன் என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது..............2009க்கு பிற‌க்கும் இவ‌ன்ட‌ இன‌வெறி அட‌ங்க‌ வில்லை என்றால் இவ‌ன் எப்ப‌டி ப‌ட்ட‌ ம‌னித‌ பிற‌வி.............நாங்க‌ள் துப்பாக்கிய‌ விரும்ப‌ வில்லை அகிம்சைய‌ விரும்புகிறோம்...............அகிம்சையும் கை கொடுக்காட்டி வேறு திட்ட‌ம் போட்டு வேறு வ‌ழிய‌ தான் தேந் எடுக்க‌னும்................பாதி நாட்டை சீன‌ன் எழுதி வாங்கிட்டான்.............த‌மிழ‌ர்க‌ளின் நில‌ப்ப‌ர‌ப்பு சீன‌ன் கைக்கு போவ‌துக்கு முத‌ல் த‌மிழ‌ர்க‌ள் விழித்திட‌ வேணும்🤲...............

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

இங்கு சிங்களவர்கள் சிலருடன் எம்மவர் ஓரிருவர் உரையாடியபோது அரசியலும் புகுந்தது எம்மவரில் ஒருவர் அவர்களுடன் அம்பட்டிய சுமண தேரர், வீரசேகர பேச்சுபற்றி சிலாகித்தார் அவர்கள் சிரித்தார்கள், நான் வாய் மட்டும் பாத்துக்கொண்டிருந்தேன்.

சுமனதேரர் பேசும் இனதுவேசம் சரியென்றால் ஒட்டுமொத்த சிங்களவர்களும் அவர்பின்னாடியே நின்றிருப்போமே யாருமே கண்டுகொள்ளாத அவர் தனியனாக பிசுபோல் உளறிக்கொண்டு திரிகிறார் என்றார்கள்,

வீரசேகரபற்றிய பேச்சின்போது நாட்டில் உள்ள பெரும்பான்மை சிங்கள பெற்றோர்களின் தற்போதைய நோக்கமெல்லாம் தமது பிள்ளைகளுக்கான கல்வி தகுதியும் பொருளாதாரம் எதிர்காலம் பற்றியதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றியுமே இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

நீங்கள் வேண்டுமென்றால் அவர்கள் பேச்சை சீரியசாக எடுத்துக்கொள்ளுங்கள் நாங்கள் அதுபற்றி சிந்திப்பது கிடையாது அவர்களின் பேச்சுக்கள் எதுவும் நடைமுறை சாத்தியமில்லாதவை என்றும் சொன்னார்கள்.

அடுத்த வருடம் தேர்தல் வர இருக்கின்றது. அந்த சிங்களவர்களின் கருத்து உண்மையா இல்லையா என்பதை அறிவதட்கு நல்ல ஒரு சந்தர்ப்பம்.  நிச்சயமாக சரத் வீரச்செக்கிற போட்டியிடுவார். சுமானதேரரர் அப்படி போட்டியிட சந்தர்ப்பம் இல்லை.


இருந்தாலும் பெரும்பாலான சிங்களவர்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லை. ஓரளவு படித்தவர்கள் அப்படி கூறினாலும் பெரும்பான்மையானவர்கள் அப்படி இல்லை என்றே எனக்கு தோன்றுகின்றது. நாடு பிச்சை எடுத்தாலும், இனவாதம் என்பது அகற்ற முடியாது போலவே தெரிகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.