Jump to content

அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    22 NOV, 2023 | 05:14 PM

image

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும்  நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு திட்டத்தை முறியடித்தனரா என்ற விபரம் தெரியவரவில்லை என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169991

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் விட்ட விளையாட்டுக்களை மேற்கு நாடுகளிலும் கட்டவிழ்த்து விட்டு இந்தியா மாட்டிக் கொள்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்ப இனி இந்திய யுடியுப் கூட்டம் இந்தியா அமெரிக்கா மீது அந்த தடை இந்த தடை கடைசியில் அமெரிக்கன் பயந்து விட்டான் என்று அலம்பரை பன்னபோரான்கள் அதை நினைக்கத்தான் வேர்க்குது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்தியா சதித் திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு

இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வாழும் ஒரு காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கொலை செய்வதற்கு இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அதை அமெரிக்கா முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதியில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் அமெரிக்காவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

செய்தியறிக்கையின்படி, இந்த சதித் திட்டத்தின் இலக்கு குர்பத்வந்த் சிங் பன்னு. இவர் சீக்கிய தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதி. காலிஸ்தானை உருவாக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பின் வழக்கறிஞர். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார்.

இவர் 2020ஆம் ஆண்டு இந்தியாவால் 'பயங்கரவாதி' என்று அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் வான்கூவரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் மாதம், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்து 'நம்பகமான குற்றச்சாட்டுகள்' இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றது, அபத்தமானது’ என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த முறை, அமெரிக்காவில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்துக் கூறப்படும் செய்திகள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இந்தியா கூறியுள்ளது.

 
இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,NIA/SOCIAL MEDIA

படக்குறிப்பு,

இந்தியாவில் இருக்கும் பன்னுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மீது என்ன குற்றச்சாட்டு?

பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு, பன்னுவை கொல்ல நடந்த சதித் திட்டம் பற்றிய தகவல்களை அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது.

ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு பயணம் செய்த பிறகு, இது தொடர்பாக அமெரிக்கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

அமெரிக்கா, ராஜ்ஜீய மட்டத்தில் இந்தியாவை எச்சரித்தது. மேலும் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒருவர் மீது நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது, என்று அந்த செய்தித்தாள் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது.

தற்போது, இந்த வழக்கை பகிரங்கப்படுத்த வேண்டுமா அல்லது நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணையை கனடா முடிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை விவாதித்து வருவதாகவும் அந்தச் செய்தியறிக்கை கூறுகிறது.

வான்கூவரில் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனேடிய அதிபர் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அமெரிக்கா இது பற்றிய விரிவான தகவல்களை அதன் நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது. இந்த வழக்குகளின் ஒரே மாதிரியான வடிவம் குறித்து இந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கையின்படி, அமெரிக்க நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐ இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதோடு 'சட்ட விஷயங்கள்' மற்றும் 'ரகசிய இராஜதந்திர தகவல்தொடர்புகள்' குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதில்லை என்றும் கூறியது.

இந்தியா ஆட்சேபனை தெரிவித்த பிறகு சதித்திட்டம் தீட்டியவர்கள் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டார்களா, அல்லது எஃப்.பி.ஐ தலையிட்டு சதித்திட்டத்தை முறியடித்ததா என்பதை இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை என்றும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியறிக்கை கூறுகிறது.

 
இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,

நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் பன்னு அறியப்படுகிறார்.

யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னு?

குர்பத்வந்த் சிங் பன்னு காலிஸ்தான் ஆதரவாளரான அமெரிக்க வழக்கறிஞர். அவரது வயது 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

இவர் அமிர்தசரஸ் அருகே உள்ள கான்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மகிந்தர் சிங் பஞ்சாப் மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் பணிபுரிந்தவர்.

பன்னு 1990களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இப்போது அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ளார். கனடாவில் காலிஸ்தான் சார்பு நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அவர் அடிக்கடி காணப்படுகிறார்.

நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார்.

பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, அவரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து அமெரிக்க நிர்வாகம் அவருக்குத் தெரிவித்ததா இல்லையா என்பதைக் கூற பன்னு மறுத்துவிட்டார். அவர், “அமெரிக்க மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்தட்டும்,” என்றார்.

பன்னு மேலும், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். பைடன் நிர்வாகம் இதுபோன்ற சவால்களைச் சமாளிக்கும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன்," என்றார்.

கடந்த வாரம், பன்னு, ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று சீக்கியர்களுக்கு எச்சரித்திருந்தார். அவ்வாறு செய்வது ‘உயிருக்கு ஆபத்தானது’ என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை பன்னு மீது ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

 
இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பினையும் பாதிப்பதாகவும், அதனால் இதை இந்தியா தீவிரமாக விசாரித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவின் பதில் என்ன?

பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, குழுவாகச் செயல்படும் குற்றவாளிகள், சட்டவிரோத துப்பாக்கி வியாபாரிகள், பயங்கரவாதிகள், மற்றும் பலர் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது,’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், "இந்தத் தகவல் இரு நாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயம். இது குறித்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பையும் பாதிப்பதாகவும், அதனால் இந்தியா இதைத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்கா வழங்கிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c2q21lpx6d9o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியப் பிரிவினைவாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியர்மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - என்ன நடந்தது?

பணம் கொடுக்கும் காட்சி

பட மூலாதாரம்,US DEPARTMENT OF JUSTICE

29 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீக்கியப் பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

இந்தச் சதித்திட்டம் நியூயார்க்கில் நடத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர் மீது புதன்கிழமை (நவம்பர் 29) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை இந்திய அரசாங்க ஊழியர் ஒருவர் இயக்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

இந்த விஷயத்தில், அவர்மீது கூலிக்குக் கொலை செய்ய முயன்றக்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

ஒருவருக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் கொடுத்து சீக்கியரை கொலை செய்ய முயன்றதாக அவர்கள் கூறினர். ஆனால் அடியாள் என நினைத்து பணம் கொடுக்கப்பட்ட நபர் அமெரிக்காவின் ரகசிய ஏஜென்ட் எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், யாரைக் கொலை செய்ய இந்தத் திட்டம் தீட்டப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

 
அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அதிகாரிகளின் எதிர்வினை என்ன?

இதுதொடர்பில் அமெரிக்கா தனது பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எழுப்பியக் குற்றச்சாட்டில், விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய அரசு முன்னதாக கூறியிருந்தது.

குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த விவகாரத்தை இந்திய அரசாங்கத்தின் மிக மூத்த மட்டங்களில் எழுப்பியதாக அமெரிக்க அரசாங்கம் கூறியிருக்கிறது. அதற்கு இந்திய அதிகாரிகள் ‘ஆச்சரியம் மற்றும் கவலையுடன்' பதிலளித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

"சீக்கியர்களுக்கு இறையாண்மை கொண்ட அரசை நிறுவ வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனை, நியூயார்க் நகரில் கொலை செய்யப் பிரதிவாதி இந்தியாவில் இருந்து சதி செய்தார்," என்று அமெரிக்க வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் கூறினார்.

மேலும் அவர், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களைப் படுகொலை செய்யும் முயற்சிகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் யார்?

குற்றப்பத்திரிகையின்படி, நிகில் குப்தா சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கொலைத்திட்டத்திற்காக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் நியமிக்கப்பட்டார்.

மேலும், இத்திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டாளியைத் தொடர்பு கொள்ளுமாறு நிகில் குப்தாவிடம் அந்த இந்திய அதிகாரி சொன்னதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நிகில் குப்தா, நியூயார்க் நகரில் இந்தக் கொலையைச் செய்யக்கூடிய ஒருவரைச் சந்திக்க எண்ணியிருந்தார் என்றும் அது கூறுகிறது.

ஆனால், அதற்கு பதிலாக, அந்த நபர் குப்தாவை, மாறுவேடத்தில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தியது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர், ஒரு லட்சம் டாலர்களுக்கு இந்தக் கொலையைச் செய்வதாக கூறியதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

நிகில் குப்தா ஜூன் 9 அன்று ஒரு கூட்டாளி மூலம் $15,000 முன்பணமாகச் செலுத்தினார், என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 30-ஆம் தேதி அமெரிக்க வழக்கறிஞர்கள் நிகில் குப்தாவுக்கு எதிராக முதற்கட்டக் குற்றச்சாட்டை வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே செக் குடியரசில் உள்ள அதிகாரிகள் அவரைல் கைது செய்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் அவரை இன்னும் காவலில் வைத்துள்ளனர்.

ஆவணங்களில் இந்தச் சதியின் இலக்கு குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் சீக்கிய பிரிவினைவாதக் குழு ஒன்றின் அமெரிக்கத் தலைவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

 
அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,

குர்பத்வந்த் சிங் பன்னு

இதற்கு முன்னர் எழுந்த குற்றச்சாட்டு

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குர்பத்வந்த் சிங் பன்னு, எனும் சீக்கியத் தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதியைக் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த இந்தியா, ‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று கூரியிருந்தது.

அதைத்தொடர்ந்து, புதன்கிழமை (நவம்பர் 29) இந்தியா இந்த விஷயத்தை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறது என்று வெளியுறவுத்துறைச் செயலாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையும் கனடாவின் குற்றச்சாட்டும்

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான வாகன நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த இரண்டு பேர் அவரது டிரக்கில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

அப்போது நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ‚நம்பகமான அம்சங்களை‘ கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

இந்தக் கொலை தொடர்பான உளவுத்துறைத் தகவல்களை அமெரிக்காதான் கனடாவுக்கு வழங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்போது செய்தி வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இந்தியா-கனடா உறவில் குறிப்பிடத்தகுந்த அளவில் விரிசல் ஏற்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c518leq9ynyo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்திய பிரஜை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் கனடாவில் கடந்த ஜூன் மாதம், சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

 

 

இந்தியா - கனடா உறவில் விரிசல்

எனினும் இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் நிராகரித்திருந்ததோடு, இந்த விவகாரம் இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், தற்போது கனடாவை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

https://tamilwin.com/article/us-govt-khalistan-assassination-gurpatwant-1701367186

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடாவில் கொலை

அமெரிக்காவில் கொலை முயற்சி

முழு தகவல்களும் இரட்டை ஏஜென்ட் மூலம் அம்பலம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சீக்கியர்களின் போராட்டமும் எங்களின் போராட்டமும் பல ஒற்றுமைகளை கொண்டது முக்கியமாய் இந்தியா எனும் பிராண்டுக்காக பெயருக்காக பலியிடப்படும் இனம்களில் முதன்மையானது எமது தமிழ் இனமும் சீக்கிய இனமும்தான் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர் அடுத்த வாரம் இந்தியா செல்கின்றார்

08 DEC, 2023 | 02:45 PM
image
 

புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் இந்திய அதிகாரி முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டுப் பெற அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ fbi இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியாசெல்கின்றார் 

காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தற்போது அவர் அறிவித்துள்ளார். 

இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பிய சிபிஐ கட்சி எம்.பி ஜான் பிரிட்டாஸ் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் இதேபோன்ற குற்றச்சாட்டை கனடா ஏற்கெனவே முன்வைத்திருப்பது குறித்தும் ஜான் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். 

பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ''அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன. ஏனெனில் அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை . இது இரண்டு நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது'' என தெரிவித்தார்.

இந்நிலையில் குருபத்வந்த் பன்னு விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இதனை தெரிவித்துள்ளார். வரும் 11-ம் தேதி கிறிஸ்டோபர் ரே புதுடெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/171261

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பன்னு

பன்னு பன்னு என்று முதலும் செய்திகள் வர 

என்னடா இவங்கள் பணீஸ் திங்கிறதுக்கு அடிபடுறாங்களோ என்று எண்ணிவிட்டேன்.

இப்ப தான் தெரியுது பன்னு என்றால் என்ன? யார் என்று.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னூன் கொலை சதி: இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை

பன்னு வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய வம்சாவளி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெய்பால்

16 டிசம்பர் 2023, 09:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா பற்றி அமெரிக்க அரசாங்கம் ஐந்து இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது.

இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக கொலை செய்யப்படவிருந்த பிரிவினைவாத தலைவர் பற்றிய தகவலை அமெரிக்க அரசு தரப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, வழக்கறிஞர் மற்றும் சீக்கிய பிரிவினைவாத தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொலை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பன்னூனைக் கொலை செய்ய பணம் கொடுத்ததாக நிகில் குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் அமி பெரா, பிரமிளா ஜெய்பால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டு குறித்து பைடன் நிர்வாகம் நடத்திய ரகசிய விசாரணைக்குப் பிறகு எம்.பி.க்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதில், '‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் மிகப்பெரிய முன்னுரிமை அளிக்கிறோம். நிகில் குப்தா மீதான அமெரிக்க அரசின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் கவலையளிக்கின்றன,’' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 'பன்னூன் கொலைச் சதி குறித்து விசாரிக்க குழு அமைக்க இந்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதனுடன், இந்திய அரசு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்வதும் முக்கியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் பொறுப்பேற்க வைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,’' என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை

ஐந்து எம்.பி.க்களின் அறிக்கையில், 'இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் வாழ்க்கையில் சாதகமான, நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன என்பதும், கவனிக்கப்படாவிட்டால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதே எங்கள் கவலையாக இருக்கிறது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பைடன் நிர்வாகம் தங்களுக்கு வெளிப்படையாக பல தகவல்களை அளித்துள்ளதற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

52 வயதான நிகில் குப்தா பணம் கொடுத்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குப்தாவுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய ஒரு கொலையாளிக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் தருவதாக குப்தா உறுதியளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பன்னூன் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 30 அன்று செக். குடியரசு நாட்டில் குப்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது.

இதற்கிடையில், காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’, இந்திய-அமெரிக்க எம்.பி.-க்களுக்கு பைடன் நிர்வாகம் வழங்கிய விளக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பன்னூன் இது குறித்துக் கூறுகையில், ‘'அமெரிக்க எம்.பி.-க்கள் அமெரிக்க குடிமக்களின் உயிர்களையும், அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் அவர்களின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்க தயாராக உள்ளனர் என்பதற்கு இது உறுதியளிக்கும் நடவடிக்கையாகும். உண்மையில் இதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படை,” என்றார்.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நிகில் குப்தா இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா மனு

இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு குறித்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் வாதிட்டு வரும் வழக்கறிஞர் ரோகினி மூசா கூறுகையில், ஜனவரி 4-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.

நிகில் குப்தா, தான் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரோகினி மூசா, "அவருக்கு எதிராக நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு நகல் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர் நாடு கடத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெறவோ அல்லது அவர்களைப் பற்றி எதுவும் அறியவோ முடியாத நிலைதான் உள்ளது," என்றார்.

நிகில் குப்தாவின் குடும்பத்தினரால் அவருக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முடியவில்லை என்றும் மூசா கூறுகிறார்.

குப்தாவின் குடும்பத்தினர், அவர் எந்தவிதமான கைது வாரண்டும் இன்றி 'அமெரிக்காவின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொண்ட அமெரிக்க ஏஜெண்டுகளால்' கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அமெரிக்காவின் சார்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு இதுவரை நியாயமான சட்ட நடவடிக்கைகள் அல்லது உதவிகள் எதுவும் அளிக்கப்படாமல் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
பன்னு வழக்கு
படக்குறிப்பு,

நிகில் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்

அவர் தனது மத நம்பிக்கைகளுக்கு முரணாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம், நியூயார்க் நகரில் ஒரு அமெரிக்க குடிமகனை கொலை செய்ய சதி செய்ததாக அமெரிக்க நீதிமன்றம் அவர் மீது குற்றம் சாட்டியது.

தான் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், யாரையும் அறியாத, யாருக்கும் தெரியாத அமெரிக்க குடிமகனைக் கொலை செய்வதற்கு இந்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

குப்தாவின் விடுதலைக்காக இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு நியாயமான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட உதவிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குப்தாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனுடன், அமெரிக்கா மற்றும் செக். குடியரசில் தனக்காக வாதாட ஒரு இந்திய வழக்கறிஞரையும் குப்தா கோரியுள்ளார்.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விசாரிக்க இந்தியா சார்பில் சிறப்புக் குழு

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த குற்றப்பத்திரிகையில் எந்த இந்திய அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

அப்போது பேசிய பாக்சி, "அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பயங்கரவாதிகள், ஆயுத வியாபாரிகள் மற்றும் பிறரின் தொடர்பு குறித்து அமெரிக்க தரப்பு சில உள்ளீடுகளை பகிர்ந்து கொண்டதாக நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை இந்தியா அமைத்துள்ளது," என்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,

பன்னூனைக் கொலை செய்ய ரூ.80 லட்சம் பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

யார் இந்த குர்பத்வந்த் பன்னூன்?

அமெரிக்காவைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவர் 'ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்' அமைப்பின் நிறுவனர் மற்றும் வழக்கறிஞர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்றவும், காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கவும், பஞ்சாபியர்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கவும் இந்த அமைப்பை பன்னூன் நிறுவி, தமது கோரிக்கைகளுக்கான ‘பொது வாக்கெடுப்பு-2020’ பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இதன் கீழ், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் சீக்கியர்கள் ஆன்லைனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பே, இந்த அமைப்பு மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவான 40 இணையதளங்களை இந்திய அரசு தடை செய்தது.

இந்த அமைப்பு தன்னை ஒரு மனித உரிமை அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது, ஆனால் இந்தியா அதை 'பயங்கரவாத' அமைப்பாக அறிவித்துள்ளது.

பன்னூனிடமிருந்து வந்த மிரட்டல் வீடியோக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புக்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, பன்னூன் கடந்த 2020 ஜூலையில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

பிபிசி ஆசிய நெட்வொர்க்குடன் பேசிய குர்பத்வந்த் சிங் பன்னூன், "காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நடத்துவது மரணத்தை விளைவிக்கும் என்றால், அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw50ly2kwxzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு எந்த வகையிலும் ஆப்பு இறங்கினாலும் மகிழ்ச்சியே. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யோவ் கொஞ்சமாவது நிஜத்தை புரிந்து கொண்டு எழுதுங்க உங்களை போல் அரைகுறை கூட்டங்களால் எமது அரசியலை இழந்தது தான் மிச்சம் .
    • 👍........... நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த வகையான நிரலையும் பார்த்திருக்கின்றேன், வசீ. இது ஒரு Power Index போல. என்னுடைய அயலவர் ஒருவர், அவர் இப்போது உயிருடன் இல்லை, முதன்முதலாக தாழப் பறக்கும் பெரிய விமானங்களை உருவாக்கும் பொறியியலாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு இந்தியர், பஞ்சாபி. அவருடைய நாட்களில் இந்தியாவில் ஒரே ஒரு ஐஐடி மட்டுமே இருந்தது. கரக்பூரில் என்று நினைக்கின்றேன். அவர் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் பாடசாலை போனதே இல்லை. வீட்டுக் கல்வியிலிருந்து நேரடியாக ஐஐடி போனார். அங்கு முதலாம் வருடம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார். தென்னிந்தியர்களை தன்னால் தாண்டவே முடியாது என்று நினைத்ததாகச் சொன்னார். ஆனால் இறுதியில் அவர் அந்த வகுப்பில் இரண்டாவதாக வந்தார். இறுதிப் பரீட்சை ஒன்றில் வந்த கேள்விகள் என்ன, தான் எழுதிய பதில்கள் என்ன என்ன என்று ஒரு தடவை சொன்னார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு மேல்படிப்பிற்கும், வேலைக்கும் போனார். பின்னர் இந்தியா திரும்பினார். இறுதியில் அவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இங்கு போயிங் நிறுவனத்தில் சேர்ந்தார். B வகை விமான உருவாக்கம் பற்றி நிறையவே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லுவதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை, இன்றும் இல்லை. அவர் சொன்ன இன்னொரு விடயம் சில நாடுகளில் ராணுவமும், அதன் ஆராய்ச்சிகளும் ஒரு தலைமுறை முன்னால் போய்க் கொண்டிருக்கும் என்று. பலதும் மிக இரகசியமாகவே இருக்கும் என்றார். அவர் ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பார்த்தவர். இன்றைய நாளில் அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே.       
    • என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு    இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால்  தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால்  தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்   இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ??  நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??    இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  
    • உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார். உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம். அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன். இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும். பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை  பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁
    • தொடருங்கள், யாழை எட்டிப் பார்த்தேன்..! ஜாலியா போகுது திரி..😀
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.