Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதங்களில் நான் மார்கழி.

 

வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள்  

வாசலெல்லாம் வண்ணக்  கோலங்கள் 

பூசணிப் பூக்கள் மத்தியிலே  

சாணியில் பிள்ளையார் பூவினிலே  

 

மெல்லிய பனியுடன் மழைக்காலம் 

வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் 

நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் 

அவசர கதியில் மாந்தர் நகர்வலம் 

 

கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி 

வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் 

பீடை மாதமென்பார் பேதையர் 

சாடையினால்  தை   பிறக்கட்டுமென்பர் சோதிடர் 

 

பெருவிழாக்கள் குறைந்தாலும் 

திருவிழாக்கள் களை கட்டும் 

ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல 

சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் 

 

அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க 

கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் 

மாதங்களில் நான் மார்கழி 

என்றே பகல்கின்றான் மாதவனும் .......!

 

ஆக்கம் :   சுவி ......!  

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மார்கழி கவிதைக்கு சுவி அண்ணா.
மாதங்களில் நான் மாசி.🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, suvy said:

வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள்  

வாசலெல்லாம் வண்ணக்  கோலங்கள் 

பூசணிப் பூக்கள் மத்தியிலே  

சாணியில் பிள்ளையார் பூவினிலே  

 

மண் வாசனையை உடலெங்கும் நுகர வைத்து விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, suvy said:

மெல்லிய பனியுடன் மழைக்காலம் 

வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் 

நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் 

அவசர கதியில் மாந்தர் நகர்வலம் 

மார்கழி குளிரிலும் 
மாந்தர் நகர் வலம்
கண்டு
உள்ளமெல்லாம்
சூடேற
போட்டிக்கு
உடலும்
சூடேற
கட்டியிருந்த
நாலு முழமும்
கதறுயடி...
உன்
பட்டு தாவணியும்
பாவாடையும் 
சர சரக்க....😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க 

கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் 

மாதங்களில் நான் மார்கழி 

என்றே பகல்கின்றான் மாதவனும் .......!

 

மார்கழி குளிரில் அதிகாலை 4 மணிக்கெழும்பி பாட்டு பாடியது தான் நினைவு வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையையும் வாசித்து ஊக்கம் தந்தவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்........!  🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

இந்தக் கவிதையையும் வாசித்து ஊக்கம் தந்தவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்........!  🙏

சுவியர் அவர்களே! நீங்கள் ஏன் நம்ம உக்ரேன் பற்றி ஒரு கவிதை கட்டுரை  கடதாசி எழுதக்கூடாது? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2023 at 13:47, suvy said:

அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க 

கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் 

மாதங்களில் நான் மார்கழி 

ஊரென்றால் உளமுருகும் திரு வெம்பாவை
புலமென்பதால் உயிருருகும் பனிப்பாவை
மாரி கழிகின்ற  மார்கழியாள் என்றாலே 
மனதினிலே குளிரூடுருவிக் குறுக்கிவிடும் 
மாரியிலும் கதகதப்பில்  களிப்பேற்றும் காலமதாய்
யாவருக்கும் குதூகலமாய் அமையாது போனாலும்
யாருக்கும் காத்திருக்காக் காலச் செயலதனைக் 
களிப்போடு நுகர்கின்ற காதலர்போல் பூமியிலே
யாவரும் களிப்படைந்து களைப்படையச்
செய்யாளோ நிறை மாதமெனும்  மார்கழியாள்!


மார்கழிக் கவிதந்த சுவியவர்களுக்குப் பாராட்டுகள்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nochchi said:

ஊரென்றால் உளமுருகும் திரு வெம்பாவை
புலமென்பதால் உயிருருகும் பனிப்பாவை
மாரி கழிகின்ற  மார்கழியாள் என்றாலே 
மனதினிலே குளிரூடுருவிக் குறுக்கிவிடும் 
மாரியிலும் கதகதப்பில்  களிப்பேற்றும் காலமதாய்
யாவருக்கும் குதூகலமாய் அமையாது போனாலும்
யாருக்கும் காத்திருக்காக் காலச் செயலதனைக் 
களிப்போடு நுகர்கின்ற காதலர்போல் பூமியிலே
யாவரும் களிப்படைந்து களைப்படையச்
செய்யாளோ நிறை மாதமெனும்  மார்கழியாள்!


மார்கழிக் கவிதந்த சுவியவர்களுக்குப் பாராட்டுகள்! 

ஆஹா.....இதுவும் ஒரு அருமையான கவிதை........வாழ்த்துக்கள் நொச்சி ......!  👍

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2023 at 15:21, குமாரசாமி said:

சுவியர் அவர்களே! நீங்கள் ஏன் நம்ம உக்ரேன் பற்றி ஒரு கவிதை கட்டுரை  கடதாசி எழுதக்கூடாது? 🤣

பொதுவா நான் இங்கு எழுதும் கவிதைகள் எல்லாம் ஏதோ  அந்த நேரத்தில் தோன்றிய கருவை உடனே அப்படியே எழுதி விடுவதுண்டு......ஆனால் ஏதாவது ஒன்றைப்பற்றி எழுதவேணும் என்று நினைத்தால் ஒரு மண்ணாங்கட்டியும் வருகுதில்லை ......ஆனாலும் பார்ப்போம்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

மாதங்களில்

அவள்.. மார்..கழி...!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2024 at 19:17, nedukkalapoovan said:

மாதங்களில்

அவள்.. மார்..கழி...!!

சுவி அண்ணர் லைக் போட்டிருக்கார்.. அவருக்கு பொருள் விளங்கி இருக்கும்.

இதன் உண்மையான பொருள் விளங்க கீழ் உள்ள படம் உதவலாம்.

spacer.png

கழி என்பது.. மூங்கில் முளை மொட்டுப் பகுதியை குறிக்கும் (பெயர்). கரும்பிலும் உண்டு.

Edited by nedukkalapoovan

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகிய கவிதை, சுவியர்..!

குளிர் அறியாத காலத்தில்....மார்கழி மாதம் மனதைக் கவர்ந்தது என்பது உண்மை தான்...!

மார்கழியைக் குழந்தையாக்கிய குளிர்களைக் கண்ட பின்னரும், மார்கழியின் காதல் இன்னும் மாறவில்லை..!

மார்கழி என்றவுடன், வேற வேற நினைவெல்லாம் வருகுது..! வெட்கம் கெட்ட மனசு..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

 

மார்கழி என்றவுடன், வேற வேற நினைவெல்லாம் வருகுது..! வெட்கம் கெட்ட மனசு..!

இல்லை புங்கை, அப்பொழுது நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்திருக்கிறீர்கள் ........இப்பொழுது பண்பட்டு விட்டீர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.......! 😂

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ......!  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.