Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் உற்ற நண்பனை இனி கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்

Digital News Team

நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம்.

தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027 இலிருந்து அமலுக்கு வரும்.

அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2 வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும்.

தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய ஜனாதிபதியும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர்.

நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/287592

Edited by ஏராளன்
க்

  • ஏராளன் changed the title to நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம்.

நாய் மட்டுமா உயிர் நண்பனாக இருக்கமுடியும்?
ஆடு மாடுகளையும் பாசம் காட்டி வளர்த்து பாருங்கள். கூடப்பிறந்த உறவுகளை விட   அன்பாக பழகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

யுவதி ஒருவர் நாயை  வளர்பு பிராணியாக வளர்ப்பவர் தான் ஒரு  போதும் நாயிறைச்சி சாப்பிட்டதில்லை சாப்பிட போவதுமில்லை என தெரிவித்து இருந்தார்.
பெரியவர் ஒருவர் தான் வாழ்க்கை பூரா நாயிறைச்சி சாப்பிட்டு வளர்ந்ததாகவும் இச்சட்டத்தை எதிர்ப்பதாகவும் மாடும் செல்லப்பிராணி அதனையும் தடை செய்ய வேண்டுமாம்.🤣
நாய்ப்பண்ணை வைத்திருக்கும் ஒருவர் அடுத்து என்ன செய்வது என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

bbc international news

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நாய்க்கும் பாஸ்போட் குடுத்தால் ..வவுனியாவில் இருந்து பருத்திதுறை மட்டும்ரோட்டிலை படுத்திருக்கிறாக்கள்.. விசா எடுத்து தென்கொரியா போனால் நல்லதுதானே(ஊருலா பயணக் கட்டுரைக்கு நன்றி அண்ணா)...அதிலை போட்டோவைப் பார்த்தமட்டில் எல்லாரும் இளமையாகவும் வடிவாகவும்தான் இருக்கினம்...இந்த கொரிய விசயத்தை நம்மட யூடியூப்பஸ்   காணவில்லைப்போல கிடக்கு...இதுக்கிடையிலை நூறு ..இருநூறு... விசாப் பெட்டகம் வந்திருக்கும்....அவை இப்ப கனடாவை விட்டிட்டு..சுவிசு விசாவிலை பிசி போலஐ  கிடக்கு😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

யுவதி ஒருவர் நாயை  வளர்பு பிராணியாக வளர்ப்பவர் தான் ஒரு  போதும் நாயிறைச்சி சாப்பிட்டதில்லை சாப்பிட போவதுமில்லை என தெரிவித்து இருந்தார்.
பெரியவர் ஒருவர் தான் வாழ்க்கை பூரா நாயிறைச்சி சாப்பிட்டு வளர்ந்ததாகவும் இச்சட்டத்தை எதிர்ப்பதாகவும் மாடும் செல்லப்பிராணி அதனையும் தடை செய்ய வேண்டுமாம்.🤣
நாய்ப்பண்ணை வைத்திருக்கும் ஒருவர் அடுத்து என்ன செய்வது என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

bbc international news

நாய்களுக்கு இனியாவது விடுதலை கிடைக்கட்டும். நாய் பண்ணை வைத்திருப்பவருக்கு 2027 வரைக்கும் கால இருக்கின்றது. அதட்குள் அவர் பண்ணையை மூடி விட்டு கோழி பண்ணை வைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை மனிதன் உண்ணும் காலம் வந்துவிட்டது. இவர்கள் நாய் அது உற்ற நண்பன் என்று பேசுகிறார்கள்?😅

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யாழ்ப்பாணத்தில் கட்டாகாலி நாய்களை மாநகரசபைதான் வண்டிலில் பிடித்துக் கொண்டு போனது......அப்பவே கொரியாவுடன் கொந்தரா ஒப்பந்தம் போட்டிருந்தால் அவர்களே வந்து அள்ளிக்கொண்டு போயிருப்பார்கள்.......இரு நாட்டுப் பிரச்சினையும் சுலபமா தீர்ந்திருக்கும்......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Cruso said:

நாய்களுக்கு இனியாவது விடுதலை கிடைக்கட்டும். நாய் பண்ணை வைத்திருப்பவருக்கு 2027 வரைக்கும் கால இருக்கின்றது. அதட்குள் அவர் பண்ணையை மூடி விட்டு கோழி பண்ணை வைக்கலாம். 

சார்! நாய்களுக்கு மட்டும் ஏன் பிரத்தியேக சலுகை சார்?
கெதியா சொல்லுங்க சார். நமக்கு வேற சோலி நெறய இருக்கு சார்.😎

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சார்! நாய்களுக்கு மட்டும் ஏன் பிரத்தியேக சலுகை சார்?
கெதியா சொல்லுங்க சார். நமக்கு வேற சோலி நெறய இருக்கு சார்.😎

அப்படியா? நாய் ஒரு நன்றியுள்ள நல்ல ஒரு மிருகம். இதையும்விட பெரிதாக யாரும் எதையும் சொல்லிவிட முடியாது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.