Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை.

தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.

இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை.

உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள்.

மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான்.

தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................

அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம் 

பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................

இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................

 

இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்

 

இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................

 

ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................

உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல.

பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்!

இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும்.

இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும்.

இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புலவர் said:

சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

சகோ

சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே. 

இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே. 

எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்

மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.

பையனும் சரி, நீங்களும் சரி, சமூக வலையூடகங்களில் வரும் பின்னோட்டங்களை வாசித்து விட்டு , அந்த துணுக்குகளையே தரவுகள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். Macroeconomics என்று ஒன்று இருப்பதை அறிய மாட்டீர்களா? ஒரு நாட்டை Macroeconomic metrics இனால் அளப்பீர்களா அல்லது யூ ரியூப் பின்னூட்டங்களால் அளப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.

இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................

ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்?

ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள்

இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.

 

13 minutes ago, விசுகு said:

சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே. 

இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே. 

எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரி

சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள்

குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

பையனும் சரி, நீங்களும் சரி, சமூக வலையூடகங்களில் வரும் பின்னோட்டங்களை வாசித்து விட்டு , அந்த துணுக்குகளையே தரவுகள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். Macroeconomics என்று ஒன்று இருப்பதை அறிய மாட்டீர்களா? ஒரு நாட்டை Macroeconomic metrics இனால் அளப்பீர்களா அல்லது யூ ரியூப் பின்னூட்டங்களால் அளப்பீர்களா?

உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்.................

500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்.................

நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது.................

ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.

 

சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள்

குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

 

 

நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

Macroeconomics என்று ஒன்று இருப்பதை அறிய மாட்டீர்களா? ஒரு நாட்டை Macroeconomic metrics இனால் அளப்பீர்களா அல்லது யூ ரியூப் பின்னூட்டங்களால் அளப்பீர்களா?

Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு

 

ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?

மனித அபிவிருத்தி சுட்டெண்-HDI - நாடொன்றின் ஒட்டு மொத்த அபிவிருத்தியைக் காட்டுவது. இந்தியா மிகக் கீழே. இலங்கைக்கும் கீழே. இந்தியா மட்டுமல்ல, ஏற்கனவே நான் சொன்ன பொருளாதார பலம் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளும் கீழ் நிலை தான். காரணம் சொல்ல வேண்டியதில்லை.

Macroeconomics அளவீட்டில், இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது - சொல்லப் போனால் பிரிட்டனின் தேங்கிய பொருளாதாரத்தை விடவும் வளர்கிறது.

இதைப் புரிந்து கொள்ள, இலங்கையின் 9 ஆம் ஆண்டு சமூகக் கல்விப் பாடம் போதும். ஆனால் இந்தப் பால பாடத்தைக் கூட மறந்து வாய் பிளந்து தம்மைத் தொடரும் படி, சீமான் விசிறிகளின் மண்டையைக் கழுவி வைத்திருக்கிறார்கள்.

எனவே, மலம், மலம் அள்ளல் என்று அலட்டிக் கொண்டிருக்காமல் சீமானோ, யாரோ சொல்வதை தரவுகளோடு ஒப்பிட்டு நிராகரிப்பது , ஏற்றுக் கொள்வது தான் உங்களுக்கு அழகு!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்.................

 

இலவச அறிவுரையாக இருந்தாலும் பயனுள்ள இடத்தில் மட்டும் தான் நான் சொல்வது.

உங்கள் ஒரிஜினல் கருத்துக்கு நான் பதில் எழுதியது இந்தியாவின் வளரும் நாடு என்ற  தகுதி பற்றிய உங்கள் தவறான தரவை ஏனைய வாசகர்கள் சரியென நம்பி விடக் கூடாதென்பதற்காக மட்டும் தான். நீங்கள் தரவுகளை சீரியசாக எடுத்து சீர்தூக்கிப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

மனித அபிவிருத்தி சுட்டெண்-HDI - நாடொன்றின் ஒட்டு மொத்த அபிவிருத்தியைக் காட்டுவது. இந்தியா மிகக் கீழே. இலங்கைக்கும் கீழே. இந்தியா மட்டுமல்ல, ஏற்கனவே நான் சொன்ன பொருளாதார பலம் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளும் கீழ் நிலை தான். காரணம் சொல்ல வேண்டியதில்லை.

Macroeconomics அளவீட்டில், இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது - சொல்லப் போனால் பிரிட்டனின் தேங்கிய பொருளாதாரத்தை விடவும் வளர்கிறது.

இதைப் புரிந்து கொள்ள, இலங்கையின் 9 ஆம் ஆண்டு சமூகக் கல்விப் பாடம் போதும். ஆனால் இந்தப் பால பாடத்தைக் கூட மறந்து வாய் பிளந்து தம்மைத் தொடரும் படி, சீமான் விசிறிகளின் மண்டையைக் கழுவி வைத்திருக்கிறார்கள்.

எனவே, மலம், மலம் அள்ளல் என்று அலட்டிக் கொண்டிருக்காமல் சீமானோ, யாரோ சொல்வதை தரவுகளோடு ஒப்பிட்டு நிராகரிப்பது , ஏற்றுக் கொள்வது தான் உங்களுக்கு அழகு!

மருத்துவத்தில் புலமை பெற்ற நீங்கள் வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் என்று பல விடயங்களில் ஆழ்ந்து சிந் திக்கும்  படியான கருத்துக்களை வாசகர்களுக்கு புரியும்படி   உங்கள் அறிவுத்தேடலைக் காட்டுவதுடன் அதுவே யாழ் இணையத்தின் பலமும. கூட.  

யாழ் இணையம் வெறும் சமூக ஊடக குப்பைகளை இணைக்கும்  குப்பைத் தொட்டியாக மாறுவதை தடுக்கும்  உங்களைப் போன்ற கருத்தாளர்களின் பங்களிப்புக்கு  நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2024 at 14:38, ஈழப்பிரியன் said:

இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை

அதை விட மேம்பட்டு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2024 at 14:26, புலவர் said:

பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது.

தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

வாசன், தினகரன் தாமரையில். கமலுக்கு கேட்காதபடியால் ஒதுக்கவே இல்லை என நினைகிறேன். தரவுகளை சரிபார்க்கவும்.

அப்படி பக்கசார்பாக நடந்திருந்தால் தை ஏன் உச்ச நீதிமன்றில் நாதக சொல்லவில்லை?

On 28/3/2024 at 14:38, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை.

அங்கேயும் தான் தோற்பதை ஏற்க முடியாத அதே bad loser குணம் உடைய அமெரிக்கன் சீமான் டிரம்ப் அவர் ஆட்கள்கள் இப்படி அலட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

இலவச அறிவுரையாக இருந்தாலும் பயனுள்ள இடத்தில் மட்டும் தான் நான் சொல்வது.

உங்கள் ஒரிஜினல் கருத்துக்கு நான் பதில் எழுதியது இந்தியாவின் வளரும் நாடு என்ற  தகுதி பற்றிய உங்கள் தவறான தரவை ஏனைய வாசகர்கள் சரியென நம்பி விடக் கூடாதென்பதற்காக மட்டும் தான். நீங்கள் தரவுகளை சீரியசாக எடுத்து சீர்தூக்கிப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அல்ல!

தேட‌ல் என்று தொட‌ங்கினால் ஒரு சில‌ நிமிட‌த்தில்  உண்மையை தெரிந்து கொள்ளலாம் அப்ப‌டியான‌ நிலைக்கு தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து....................... மேற்கு வங்காளம் முத‌ல‌மைச்ச‌ர் எடுத்த‌ முடிவை நான் கேட்ட‌தில் வாசித்த‌தில் தெரிந்து வைத்து எழுதினேன் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்த‌ காணொளியில் நீங்க‌ள் சொன்ன‌ க‌தைக‌ள் ஒன்றும் வ‌ர‌ வில்லை ராஜிவ் கொலை இந்திய‌ன் ஆமி ஈழ‌த்துக்கு வ‌ந்த‌ வ‌ர‌லாறுக‌ள் ஆதார‌த்தோடு கொட்டி கிட‌க்கு😏.......................

 

8 minutes ago, goshan_che said:

வாசன், தினகரன் தாமரையில். கமலுக்கு கேட்காதபடியால் ஒதுக்கவே இல்லை என நினைகிறேன். தரவுகளை சரிபார்க்கவும்.

அப்படி பக்கசார்பாக நடந்திருந்தால் தை ஏன் உச்ச நீதிமன்றில் நாதக சொல்லவில்லை?

அங்கேயும் தான் தோற்பதை ஏற்க முடியாத அதே bad loser குணம் உடைய அமெரிக்கன் சீமான் டிரம்ப் அவர் ஆட்கள்கள் இப்படி அலட்டுகிறார்கள்.

சீமான் சீமான் என்று க‌ட‌சியில் உங்க‌ளுக்கு மென்ட‌ல் பிடிக்க‌ போகுது..................

  • கருத்துக்கள உறவுகள்

மனித அறிவுச் சுட்டெண் என்பது மக்களின் சராசரி ஆயுட்காலம்,கல்வியறிவு,தனிநபர்வருமானம் என்பவற்றை வைத்து கணிக்கப்படுகிறது.இந்தியாவில் இளைஞர்களே அதிகம் ஆயுட்காலம் குறைவு,கல்வியறிவு இந்தியாவின் நகர்புறத்திடன் ஒப்பிடும் பொழுது கிராம ப்புறங்களில் படுமோசம்.நகர்புறங்களில் தனியார் கல்விநிலையங்கள் மிக அதிக அளவு பணத்தை அறவிடுவதால் எல்லோரும் னியார் கல்விநிலையங்களில் படிப்பிக்க முடியாது.அரசபாடசாலைகள் நிலமை படுமோசம்.அதேபோல் தனிநபர் வருமானம் நகர்புறத்தில் வாழும் நடுத்தரக்குடும்பங்களில் சமாளிக்க முடியாத நிலமை.ஆப்பிரிக்க நாடுகளை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்.வளர்ச்சியடைந்த நாடு என்று எப்படிச் சொல்வதுஅதுவும் இலங்கைக்கு கீழே இருக்கிறது என்றால் கற்பனை பண்ணிப் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

மனித அறிவுச் சுட்டெண் என்பது மக்களின் சராசரி ஆயுட்காலம்,கல்வியறிவு,தனிநபர்வருமானம் என்பவற்றை வைத்து கணிக்கப்படுகிறது.இந்தியாவில் இளைஞர்களே அதிகம் ஆயுட்காலம் குறைவு,கல்வியறிவு இந்தியாவின் நகர்புறத்திடன் ஒப்பிடும் பொழுது கிராம ப்புறங்களில் படுமோசம்.நகர்புறங்களில் தனியார் கல்விநிலையங்கள் மிக அதிக அளவு பணத்தை அறவிடுவதால் எல்லோரும் னியார் கல்விநிலையங்களில் படிப்பிக்க முடியாது.அரசபாடசாலைகள் நிலமை படுமோசம்.அதேபோல் தனிநபர் வருமானம் நகர்புறத்தில் வாழும் நடுத்தரக்குடும்பங்களில் சமாளிக்க முடியாத நிலமை.ஆப்பிரிக்க நாடுகளை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்.வளர்ச்சியடைந்த நாடு என்று எப்படிச் சொல்வதுஅதுவும் இலங்கைக்கு கீழே இருக்கிறது என்றால் கற்பனை பண்ணிப் பாருங்கள்

இந்தியாவில் தமிழ் நாடு தானாம் முன்னேறின‌ மானில‌மாம் த‌மிழ் நாடே முன்னேற இன்னும் எவ‌ள‌வோ இருக்கு...........ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் நில‌மை எப்ப‌டி இருக்கும் என்று பாருங்கோ புல‌வ‌ர் அண்ணா........................

இந்த திரிக்குள் ஜ‌ஸ்ரின் ஏன் சீமானின் பெய‌ரை இழுக்கிறார் என்று புரிய‌ வில்லை இதை தான் சொல்வ‌து ஆட்டுக்கை மாட்டை க‌ல‌ப்ப‌து 

சீமான் போல் இந்த‌ திரியில் எழுதுப‌வ‌ர்க‌ளால் உல‌க‌ அர‌சிய‌லை ப‌ற்றி இயற்கை வளங்களை ப‌ற்றி குறைந்த‌து ஒரு மணி நேரம் துண்ட‌றிக்கை பார்க்காம‌ பேச‌ முடியுமா.......................அடுத்த‌வ‌ன் எழுதுவ‌தை வெட்டி ஒட்டி யாழில் இணைத்து விட்டு சொந்த‌ தாயாரிப்பு என்று மார் த‌ட்டி கொள்வ‌து அதுவும் ஒரு வ‌கை ம‌ன‌ நோய் தான்😜😁..........................

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு கருத்துக்கணிப்பும் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் என்று கூறவில்லை

எனினும் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் ஏன் நாம் தமிழர் கட்சிக்கு அதிக நெருக்கடிகளை கொடுக்கின்றன?

பாஜகவும் திமுகவும் ஏன் நாம்தமிழர் கட்சியை அதிகம் விமர்சிக்கின்றன?

நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்தை முன்வைப்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கும்?

ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழத்தேசியத்தை எதிர்க்கும் என்பது இதுதானா?

இந்நிலையில் கடந்த தேர்தலைவிட ஒரு வோட்டு அதிகமாக பெற்றாலே நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும்.

அது நடக்கும்.

https://www.facebook.com/share/p/ejq6yQRvywyXmf62/?mibextid=WC7FNe

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

எனினும் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் ஏன் நாம் தமிழர் கட்சிக்கு அதிக நெருக்கடிகளை கொடுக்கின்றன?

பாஜகவும் திமுகவும் ஏன் நாம்தமிழர் கட்சியை அதிகம் விமர்சிக்கின்றன?

 

ஆரியமும் திராவிடமும் துள்ளிக் குதிக்குது சரி.

ஆனால் இங்கு யாழ்கள தம்பிமார் துள்ளி குதித்து குத்தி முறிந்து பிபி யை ஏற்றுகிறார்களே 

அது தான் என்று ஒன்றுமே புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வாசன், தினகரன் தாமரையில். கமலுக்கு கேட்காதபடியால் ஒதுக்கவே இல்லை என நினைகிறேன். தரவுகளை சரிபார்க்கவும்.

அப்படி பக்கசார்பாக நடந்திருந்தால் தை ஏன் உச்ச நீதிமன்றில் நாதக சொல்லவில்லை?

சின்னம் விடயத்தில் தேர்தல் ஆணையம் ஒருபக்கச்சார்பாக நடந்திருப்பது தெட்டத்தெளிவானது.சீமான் தாமதமாக விண்ணப்பித்தார் என்ற காரணத்தை ஏற்றுக் கொண்டாலும்.தேர்தலில் நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தையும் வாசனுக்கு சைக்கிள் சின்னத்தையும் பாமகவுக்கு மாம்பழத்தையும் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் மதிமுக ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் குறைந்த து2 தொகுதியில் போட்டியிடவேண்டும் என ஒதுக்க முடியாது எனக்காரணம் கூறும்அதே வேளை விடுதலைச்சிறுத்தைகளுக்கு 2 தொகுதியில் நிற்பவர்களைக்கு பானைச்சின்னத்தை ஒதுக்க மறுத்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நாதக அவசரவழக்குப் போட்ட பொழது உயர்நீதிமன்ற நீதிபதி உங்களுக்கு அந்த சின்னம் லக்கி இல்லைப்போல் தெரிகிறது என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறார்.தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.