Jump to content

முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் 

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முருகன் , ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை | Santhan Death Rajiv Gandhi Murder India Srilanka

தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய இவர்கள் 2022ஆம் ஆண்டளவில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/santhan-death-rajiv-gandhi-murder-india-srilanka-1710243159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு

Published By: DIGITAL DESK 3   13 MAR, 2024 | 10:12 AM

image

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

https://www.virakesari.lk/article/178590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

murugan-down-1651749606-1653393647-600x3

கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை தூதரகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணல் இன்று இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதியை பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று நேர்காணலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று முருகனை நோகாணல் செய்வதற்கு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் ரொபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்வதற்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1373297

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்: இலங்கை பாஸ்போர்ட் கிடைத்ததும் எங்கே செல்கின்றனர்?

முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ்

பட மூலாதாரம்,HANDOUT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசின் கடவுச் சீட்டை பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அவர்கள் எங்கே செல்லவிருக்கிறார்கள்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் பேரறிவாளனும் நவம்பர் மாதத்தில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சாந்தன் இலங்கை பாஸ்போர்ட் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் இலங்கையின் பாஸ்போர்ட் இருந்தது. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்து கொண்டவர்கள். ராபர்ட் பயஸின் மைத்துனர்தான் ஜெயக்குமார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

 
நளினி

பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES

முகாமில் இருந்து விடுவித்து தாங்கள் விரும்பும் நாட்டிற்குத் தங்களை அனுப்பி வைக்க வேண்டுமென தொடர்ந்து இவர்கள் கோரி வந்தனர். ஆனால், இவர்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தனுக்கு உடல்நலம் குன்றியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இருந்தபோதும், அவர் மருத்துவமனையிலேயே காலமானார். அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து மீதமுள்ள மூவருக்கும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனக்கும் தன் கணவருக்கும் விசாவுக்காக விண்ணப்பித்து இருந்ததாகவும் நேர்காணலுக்காக ஜனவரி 30ஆம் தேதி அழைக்கப்பட்ட நிலையில், தான் மட்டும் நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். முருகன் சிறப்பு முகாமில் இருந்ததால் நேர்காணலில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள மோசமான சூழிலின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் இறந்துவிட்ட நிலையில், தனது கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனவும் நளினி கோரியிருந்தார்.

 
சாந்தன்

பட மூலாதாரம்,HANDOUT

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மூவரின் நேர்காணலுக்காக புதன்கிழமையன்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நண்பகல் 12 மணியளவில் அவர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களைக் காண்பதற்கு, நளினி, ஜெயக்குமாரின் குடும்பத்தினர், அவர்களது வழக்கறிஞர்கள் ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 2 மணியளவில் விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்து அவர்கள் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இவர்கள் எங்கே செல்லவிருக்கின்றனர்?

முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நளினிக்கு இந்திய குடியுரிமை இருப்பதால் விடுதலைக்குப் பிறகு அவர் இங்கேயே வசித்து வருகிறார். நளினி - முருகன் தம்பதியின் மகள் பிரிட்டனில் இருப்பதால், முருகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்தால் இருவரும் பிரிட்டன் செல்ல விரும்புகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை நளினி சமர்ப்பித்திருக்கிறார்.

ஜெயக்குமாரை பொறுத்தவரை அவருடைய மனைவி இந்தியாவை சேர்ந்தவர். அவர் தனது மகன் பார்த்திபன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்னையில்தான் வசித்து வருகிறார். ஆனால், பாஸ்போர்ட் கிடைக்கும் பட்சத்தில் ஜெர்மனியில் உள்ள தனது சகோதரருடன் சென்று வசிக்க ஜெயக்குமார் விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ராபர்ட் பயஸை பொறுத்தவரை, அவருடைய உறவினர்கள் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். ஆகவே அவர் நெதர்லாந்து செல்ல விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 13 பேர் இலங்கைத் தமிழர்கள். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது ஏழு பேரைத் தவிர மற்ற 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் பாஸ்போர்ட் வைத்திருந்த, முறையான விசாக்களில் இந்தியா வந்த 3 பேர் உடனடியாக இலங்கைக்குச் சென்றனர். மீதமிருந்தவர்கள் சில நாட்களில் இலங்கையிலும் அதன் பிறகு வெளிநாடுகளிலும் குடியேறினர்.

https://www.bbc.com/tamil/articles/cy6zdvd6056o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலைக்கு முட்டுக்கட்டை!

1677855325.jpeg

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கு இந்தியா மறுப்பு

இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோதும், திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலையில் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டுவருகின்றது விடுதலைக்கு இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்கும் நடவடிக்கையில் இந்திய ஒன்றிய அரசு பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து தம்மால் கடவுச்சீட்டு வழங்கமுடியாது என்று இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், என்றும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக இலங்கைத் தூதரகத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல்நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்றுமுன்தினம் மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் பங்கேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் முருகன், ரொபேர்ட் பயஸ் மற் றும் ஜெயக்குமார் ஆகியோரை திருச்சியில் இருந்து அழைத்துச் சென்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் முன்னிலைப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
திருச்சி மத்திய சிறைவளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட் டிருக்கும் மூவரும் நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மூவரிடமும் நேர்முக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று முருகனின் வழங்கறிஞர் புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து அதனை தம்மால் வழங்க முடியாது எனவும் இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது என்றும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.திருச்சி சிறப்பு முகாமுக்குத் திரும்பியதன் பிற்பாடு சிறைத்துறை அதிகாரிகள் ஊடாக சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வேண்டுகைக் கடிதத்தை அனுப்பிவைத்தால் அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்திகொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்ட சாந்தனை இலங்கை அனுப்புவதில் இந்திய ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்தநிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரை விடுவிப்பதிலும் இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது.

 

 

https://newuthayan.com/article/முருகன்,_ரொபேர்ட்_பயஸ்,_ஜெயக்குமார்_விடுதலைக்கு_முட்டுக்கட்டை!

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து அதனை தம்மால் வழங்க முடியாது எனவும் இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது என்றும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.திருச்சி சிறப்பு முகாமுக்குத் திரும்பியதன் பிற்பாடு சிறைத்துறை அதிகாரிகள் ஊடாக சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வேண்டுகைக் கடிதத்தை அனுப்பிவைத்தால் அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்திகொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்ட சாந்தனை இலங்கை அனுப்புவதில் இந்திய ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்தநிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரை விடுவிப்பதிலும் இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது.

"சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது!"
இலங்கையல்லவா வழங்கவேண்டும்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

"சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது!"
இலங்கையல்லவா வழங்கவேண்டும்?!

இலங்கை All countries passport கொடுப்பதற்கு இந்தியா உடன்படவில்லை என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

இலங்கை All countries passport கொடுப்பதற்கு இந்தியா உடன்படவில்லை என்று நினைக்கின்றேன்

இலங்கை தனது நாட்டுப் பிரஜைக்கு  All countries passport வழங்குவதை இந்தியா தடுக்கும் சட்ட உரிமை உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

இலங்கை தனது நாட்டுப் பிரஜைக்கு  All countries passport வழங்குவதை இந்தியா தடுக்கும் சட்ட உரிமை உள்ளதா? 

ராஜதந்திர மட்டங்களில் அழுத்தம் கொடுக்கப்படலாம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இலங்கைக்குள் மட்டும் வைத்திருந்தால் மட்டுமே தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கலாம் அல்லது  எல்லை மீறினால் ஏதாவது செய்யலாம்  என இந்தியா நினைத்து வைத்திருக்கும். வேறு நாடுகளுக்கு சென்று உண்மைகளை உளறி விடலாம் என்ற பயம் கிந்தியாவிற்கு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒருபோதும் உயிருடன் விடமாட்டார்கள் .....ஏதாவது சாக்கு போக்கு சொல்லி காலத்தை இழுத்தடித்துக் கொண்டு போவார்கள் .........!  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
    • கட்சிக் காரருக்கு "ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்பாக மூடும் உத்தரவு கிடைக்கவில்லை" என்கிறார். வடமாகாண சபை தளத்தில் ஜூலை 4 ஆம் திகதிக்குரிய செய்தியில் மூடும் உத்தரவு பற்றிய செய்தி இருக்கிறது. அதையே ஒரு பத்திரிகை பிரசுரிக்கலாம். ஆணை புறாவின் காலில் கட்டி கட்சிக் காரருக்கு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய சட்டத் தேவை இல்லை. அனேகமாக இது நீதிமன்றம் போய் இழுபடும் கேஸாக தெரிகிறது. இனி கொடுக்கும் நன்கொடையில் ஒரு பகுதி சட்டத்தரணிகளிடம் போய்ச் சேருமென நினைக்கிறேன். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.