Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய தகவல்களை திருட முயன்ற இரண்டு இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி

Published By: RAJEEBAN   01 MAY, 2024 | 12:25 PM

image
 

2020 ம் ஆண்டு அவுஸ்திரேலியா இந்தியாவின் ரோ புலனாய்வுபிரிவை சேர்ந்த  இருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ரோவிற்கும் மேற்குலகின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்களிற்கும் இடையிலான மோதல்களில் இதுவும் ஒன்று என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இரகசிய தகவல்களை திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவின் புலனாய்வு அமைப்பை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என 2020இல் வெளியேற்றப்பட்டனர் என அவுஸ்திரேலிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவர் வெளியேற்றப்பட்டனர் என த அவுஸ்திரேலியனும் சிட்னி மோர்னிங் ஹெரால்ட்டும் தெரிவித்துள்ள அதேவேளை இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களின் நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏபிசி எனினும் எத்தனை பேர் வெளியேற்றப்பட்டனர் என்பதை தெரிவிக்கவில்லை.

மிகவும் இரகசியமான பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் விமானநிலைய பாதுகாப்பு அவுஸ்திரேலியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான இரகசிய விபரங்களை திருட முயன்ற இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என ஏபிசி தெரிவித்துள்ளது.

2020 இல் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அமைப்பினால் வெளியேற்றப்பட்ட உளவாளிகளின் கூடுகளை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களை உன்னிப்பாக அவதானித்து வந்தனர். தற்போதைய முன்னாள் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திவந்தனர் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

2021 இல் ஆற்றிய உரையொன்றில் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் இந்த சம்பவத்தை மறைமுகமாக தெரிவித்திருந்தார் என ஏபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/182405

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய தகவல்களை திருட முயன்ற இரண்டு இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி

 

இப்போது இந்தியா வளர்ந்து விட்டது.

அமெரிக்கா ரசியா இங்கிலாந்து போல நாடுகள் கடந்து உளவு பார்ப்பது மட்டுமல்ல தாக்குதல்களும் நடத்தத் தொடங்கிவிட்டனர்.

முதன்முதல் இலங்கையிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டனர் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

இப்போது இந்தியா வளர்ந்து விட்டது.

அமெரிக்கா ரசியா இங்கிலாந்து போல நாடுகள் கடந்து உளவு பார்ப்பது மட்டுமல்ல தாக்குதல்களும் நடத்தத் தொடங்கிவிட்டனர்.

முதன்முதல் இலங்கையிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டனர் என எண்ணுகிறேன்.

நான் நினைக்கிறன்; தனது திறமைகளையெல்லாம் இலங்கையில் பரீட்சித்து பார்த்து உறுதி செய்து கொண்டபின்தான் மேற்கு நாடுகளில் செயற்படுத்த இறங்கியிருக்கும். அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது இலங்கையில் அது அடைந்த வெற்றிகள் அனுபவங்கள் அதன் பயிற்சி பாசறையாய் அமைந்தது. இலங்கையையே வெற்றி கொண்டுவிட்டேன்,  மற்றைய நாடுகள் என்ன சுண்டைக்காய் என நினைத்து இறங்கியிருக்குமோ? இது உலக நாடுகளால் அடையப்போகும் அவமானமே இலங்கையில் இது என்ன செய்தது என்பதற்கு சாட்சியாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, satan said:

நான் நினைக்கிறன்; தனது திறமைகளையெல்லாம் இலங்கையில் பரீட்சித்து பார்த்து உறுதி செய்து கொண்டபின்தான் மேற்கு நாடுகளில் செயற்படுத்த இறங்கியிருக்கும். அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது இலங்கையில் அது அடைந்த வெற்றிகள் அனுபவங்கள் அதன் பயிற்சி பாசறையாய் அமைந்தது. இலங்கையையே வெற்றி கொண்டுவிட்டேன்,  மற்றைய நாடுகள் என்ன சுண்டைக்காய் என நினைத்து இறங்கியிருக்குமோ? இது உலக நாடுகளால் அடையப்போகும் அவமானமே இலங்கையில் இது என்ன செய்தது என்பதற்கு சாட்சியாகும். 

பல வெளிநாட்டவருக்கு விளங்கவில்லை கூடவே ஒரு 30 ஆயிரம் டொலர் கையில் வைத்து இருந்தால் அதே உளவாளி அவுசுக்கு ஆதரவாய் மாறி இருப்பார்கள் எனும் விபரம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

முதன்முதல் இலங்கையிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டனர் என எண்ணுகிறேன்.

இலங்கை எனும் நாடு நாலா பக்கமும் தரை எல்லைகளை கொண்டிருந்திருந்தால்..... 
கிந்தியாவின் சித்திரம் விளங்கியிருக்கும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இலங்கை எனும் நாடு நாலா பக்கமும் தரை எல்லைகளை கொண்டிருந்திருந்தால்..... 
கிந்தியாவின் சித்திரம் விளங்கியிருக்கும். :cool:

இவ்வளவு காலமாக தம்மை மீறி யாரும் வாலாட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்தவை.

ஆனால் இப்போது மும்முனைப் போட்டியில் சிக்குண்டுள்ளனர்.

11 minutes ago, பெருமாள் said:

பல வெளிநாட்டவருக்கு விளங்கவில்லை கூடவே ஒரு 30 ஆயிரம் டொலர் கையில் வைத்து இருந்தால் அதே உளவாளி அவுசுக்கு ஆதரவாய் மாறி இருப்பார்கள் எனும் விபரம் .

இதைத் தானே அண்மையில் கட்டாரில் பார்த்தோம்.

1 hour ago, satan said:

நான் நினைக்கிறன்; தனது திறமைகளையெல்லாம் இலங்கையில் பரீட்சித்து பார்த்து உறுதி செய்து கொண்டபின்தான் மேற்கு நாடுகளில் செயற்படுத்த இறங்கியிருக்கும். அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது இலங்கையில் அது அடைந்த வெற்றிகள் அனுபவங்கள் அதன் பயிற்சி பாசறையாய் அமைந்தது. இலங்கையையே வெற்றி கொண்டுவிட்டேன்,  மற்றைய நாடுகள் என்ன சுண்டைக்காய் என நினைத்து இறங்கியிருக்குமோ? இது உலக நாடுகளால் அடையப்போகும் அவமானமே இலங்கையில் இது என்ன செய்தது என்பதற்கு சாட்சியாகும். 

இலங்கையில் செய்ததை கனடா அமெரிக்காவில் செய்யப் போய் மாட்டிக் கொண்ட அனுபவமும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

பல வெளிநாட்டவருக்கு விளங்கவில்லை கூடவே ஒரு 30 ஆயிரம் டொலர் கையில் வைத்து இருந்தால் அதே உளவாளி அவுசுக்கு ஆதரவாய் மாறி இருப்பார்கள் எனும் விபரம் .

சிங்கள அரசு சலுகைகளையும் சில்லறைகளையும் விட்டெறிந்து உளவாளிகளை வாங்கி பூந்து விளையாடியிருக்கும். ஆனா மேற்கு நாடுகள் அப்படியல்ல, விலைபோனதுகள் விலைபோய்க்கொண்டே இருப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். பெற்றதாயையும் (இனம்) பிறந்த பொன்னாட்டையும் காட்டிக்கொடுப்பவனுக்கு பெரிதாக இருக்கப்போகுது?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் செய்ததை கனடா அமெரிக்காவில் செய்யப் போய் மாட்டிக் கொண்ட அனுபவமும் இருக்கு.

இதுதான் இலங்கையில் பெற்ற அனுபவம்! பல நாடுகள் சேர்ந்து தர்மத்துக்கு எதிராக செய்ததை இலங்கை தான் செய்தேன் என்று வெற்றி விழா எடுக்குது, அதற்கு இந்தியா பக்கத்துணை என்குது. சேர்ந்து நின்ற நாடுகளுக்கு அது எப்படி யாரால் ஆனது என்கிற உண்மை தெரிந்த படியால் உடனேயே உளவாளிகள் மாட்டுப்பட்டு விடுகின்றனர். இவர்கள் மட்டில் மேற்கு நாடுகள் மிக எச்சரிக்கையாக இருக்கின்றன. இவர்களோ; தாங்கள் பெரிய சீன உளவாளிகள் என்கிற நினைப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

 

இப்போது இந்தியா வளர்ந்து விட்டது.

அமெரிக்கா ரசியா இங்கிலாந்து போல நாடுகள் கடந்து உளவு பார்ப்பது மட்டுமல்ல தாக்குதல்களும் நடத்தத் தொடங்கிவிட்டனர்.

முதன்முதல் இலங்கையிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டனர் என எண்ணுகிறேன்.

இலங்கை , நேபாளம் , மாலைதீவு, பாகிஸ்தான் …..என்று பல நாடுகளில் பெற்ற அனுபவம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.