Jump to content

இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

58 நிமிடங்களுக்கு முன்னர்

பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது.

தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.

 

இ-விசா சலுகை

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம்.

சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது.

அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்த பயண செலவு

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும்.

சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்' எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது," என்கிறார்.

விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

 

இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா?

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது.

அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம்.

இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர்.

ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன்.

மற்ற செலவுகள் எப்படி இருக்கும்?

இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது," என்றார் பாலாஜி.

 

தவறவிடக்கூடாத இடங்கள்

இலங்கை சுற்றுலா

பட மூலாதாரம்,SAIKO3P/GETTY IMAGES

கொழும்புவில் இருந்து பதுல்லாவுக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும்.

இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிசா, பென்டோடா போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம்.

காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யாலா, உடவலவே போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும்.

இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்லா, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும்.

இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம்.

https://www.bbc.com/tamil/articles/cd1vm1rgrrjo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்கள்........!   👍

நன்றி ஏராளன் .........!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/ilanchellian

சுற்றுல்லா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை SLT Mobitel PLC நிறுவனத்திடமிருந்து VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள்
அதாவது Mobitel எந்த இலாபமன்றி 12 ஆண்டுகளாக வழங்கிய online visa சேவையை VFS Global க்கு கைமாற்றி உள்ளார்கள்
இது தொடர்பில் Tiran Alas முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு திரு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது
இதன் காரணமாக விசா சேவை கட்டணம் 2477% அதிகரிக்கப்பட்டள்ளது
அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு விசா சேவை கட்டணம் 1 டொலரிலிருந்து 25.77 டொலராக அதிகரித்துள்ளது ($18.5 + convenience)
இதனூடாக VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
அரச நடைமுறைகளுக்கு மாறாக குறிப்பாக எவ்விதமான கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் இவ மாற்றங்களை செய்துள்ளார்கள்
மேற்படி விசா சேவையை வழங்க VFS Global ரூபா 60 பில்லியன் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகின்ற போதும் விசா சேவைக்காக 24 கரட் தங்கத்தில் கணினி வலைஅமைப்புகளை பயன்படுத்தினாலும் கூட ரூபா 60 பில்லியன் முதலிட வேண்டியதில்லை என்பதை நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள்
மறுபுறம்மேற்படி மாற்றங்கள்காரணமாகவெளிநாட்டு சுற்றலாபயணி ஒருவர் சுற்றலா விசா ஒன்றுக்கு 100.77 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது
இதனால் 4 பேர்குடும்பம் விசாவிற்காக மட்டும் 400 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது
பொருளாதார சீரழிவிற்க்கு பிறகுஇலங்கை பொருளாதாரம் கடன், புலம்பெயர் இலங்கையர் அனுப்பும் பணம்
மற்றும் சுற்றுல்லா பயணிகளிடம் மட்டுமே தங்கி இருக்கின்றது
இவ் ஆண்டு 2.4 மில்லியன் சுற்றுல்லா பயணிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த மோசடியுடாக சுற்றுலா பயணிகளிடம் விசா சேவை கட்டணம் என்கிற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதால் சுற்றுலா துறையை ஆபத்தில் தள்ளியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது
கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 130 மில்லியன் பெறுமதியான தரமற்ற மருந்து இறக்குமதியில் சிக்கிய பொது அவரை காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கே முயற்சித்தார்
ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட நிமல் ஸ்ரீ பால டி சில்வா வை காப்பாற்றினார்
டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு எவ்வித முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி 12,000 கிலோவுக்கும் அதிகமான மீன்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொது அமைகியாக இருந்தார்
தற்போது அமைச்சர் Tiran Alas மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு இணையான 12.76 பில்லியன் ரூபா விசா மோசடியில் சிக்கியுள்ளார்
இதற்கு திரு ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது
இலங்கை தீவில் மோசடிகள் Normalize செய்யப்பட்டுள்ளது .
இதனால் தான் பொருளாதார சீரழிவிற்கு பின்னரும் கூட கூச்சமில்லாமல் திருடுகின்றார்கள்

நன்றி-இனமொன்றின் குரல் 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

சூப்பர் சூப்பர் ....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2024 at 01:30, ஏராளன் said:

இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார்.

இது எங்கடா சாமி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் கலைந்த VFS Global: குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கை மூலம் பதில்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை தரும் விசா வழங்குவது தொடர்பான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள VFS Global நிறுவனம், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

VFS Global 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வருவதாகவும், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, நோர்வே, ஒஸ்திரியா¸ லட்வியா, ஹங்கேரி, குரோசியா, மோல்டா மற்றும் கிரீஸ் உட்பட 23 அரசாங்கங்களுக்கு விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆறு விசா மையங்களை நடத்தி வருவதாகவும், தமது நிறுவனத்தில் 123க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு

 

2004 ஆம் ஆண்டு முதல், VFS Global சிறிலங்கா 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களைச் செயலாக்கியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை அரசாங்கத்தின் புதிய E-Visa தீர்விற்கான (www.srilankaevisa.lk )பிரதான ஒப்பந்தக்காரராக GBS தொழில்நுட்ப சேவைகள் மற்றும் IVS Global FZCO மற்றும் தொழில்நுட்ப பங்காளியாக VFS Global ஆகியவற்றுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மௌனம் கலைந்த VFS Global: குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கை மூலம் பதில் | Vfs Global Responds To Allegations With Statement

இதன்படி VFS Global  விண்ணப்ப செயல்முறை தொடர்பான நிர்வாகப் பணிகளை மட்டுமே நிர்வகிப்பதாகக் கூறியுள்ளது.

விசாவை வழங்குவது அல்லது நிராகரிப்பது என்பது இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த திட்டத்தில் தற்போது மொத்தம் 66 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர், விரைவில் இந்த எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசா முறையின் டிஜிட்டல் மாற்றம்

ஏற்கனவே தாய்லாந்து, துபாய், ஈக்குவடோரியல் கினியா, அஜர்பைஜான் மற்றும் சுரினாம் உள்ளிட்ட 12 அரசாங்கங்களுக்கு தனது டிஜிட்டல் இ-விசா தளத்தை வழங்கிய அனுபவம் இருப்பதாக VFS Global கூறியுள்ளது.

இதற்கிடையில் விசா முறையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் அதன் E-Visa மற்றும் வருகைத்தரு வீசா செயல்முறைக்கு VFS Global இன் டிஜிட்டல் தளத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது.

மௌனம் கலைந்த VFS Global: குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கை மூலம் பதில் | Vfs Global Responds To Allegations With Statement

அதிகரித்த சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்காக, இந்த செயல்முறையை தடையின்றி மேற்கொள்வதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.

பயணிகள் அதாவது வீசா விண்ணப்பதாரர்கள், ஒரு மாதம் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 17 குடியுரிமை இல்லாத விசா வகைகளில் இருந்து வீசாக்களை தேர்வு செய்யலாம்.

இதன் செயல்முறை இணையத்தில் உள்ளது. இது விண்ணப்பதாரர்களுக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. கூடுதலாக, பயணிகள் ஆங்கிலம், தமிழ், ரஷ்யன், மாண்டரின்-கான்டோனீஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய ஐந்து மொழிகளில் 24 மணிநேரமும், பிரத்யேக தொடர்பு மையத்தைப் பயன்படுத்தலாம்.

அதேநேரம் தேவையின் அடிப்படையில் இது மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று VFS Global தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லாமல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்து முதலீடுகளும் நிறுவனத்தால் ஏற்கப்படுகின்றன.

அனைத்து விசா வகைகளிலும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த சேவைக் கட்டணம் 18.50 டொலர்களாக அறவிடப்படுகிறது

கட்டணச் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய உள்ளூர் வரிகள் ஆகியவை சேவைக் கட்டணத்துடன் கூடுதலாக அறவிடப்படுகிறது என்று VFS Global நிறுவனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

https://tamilwin.com/article/vfs-global-responds-to-allegations-with-statement-1715022309

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம் ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................
    • முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024     15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டது. அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அதே தீங்கற்ற செயல்பாடு சிறிலங்கா அரசால் தடை உத்தரவுகள், கைதுகள் மற்றும் மிரட்டல்களுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. Southend-on-Sea நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்களில் ஒருவரான திருமதி நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது என்றார். நிகழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்திற்கு முன் அவர் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவராலும் நினைவு விளக்குகளும், மலர்களும் கடலில் காணிக்கையாக விடப்பட்டன. ஒளிரும் விளக்குகள் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவு சுமந்து ஆழ்கடல் நோக்கி மிதந்து சென்றன. மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-படுகொ-7/  
    • பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன் 15 ஆண்டுகள் சென்றுவிட்டன. இப் 15 ஆண்டுகளில் தமிழரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. ஐநாவில் சான்றுகளைத் திரட்டும் ஒரு பலவீனமான பொறிமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பாக கனடாவில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இமாலயப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் அங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இவற்றைவிட முக்கியமாக இறுதிக்கட்டப் போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள். அதாவது 15ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும் சித்திரம் என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் உடைந்து கொண்டே போகிறார்கள். நினைவு கூர்தல்தான் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சி புள்ளியில் ஒன்றுகூட்டி வைத்திருக்கிறது. அதே நினைவு கூரும் விடயத்தில், தமிழ்ச் சமூகத்தில் உடைவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் கட்சிகளாய்; அமைப்புகளாய்; குழுக்களாய்; கொள்கைகளாய்; பிரகடனங்களாய்; ஊர்களாய்; சங்கங்களாய்; வடக்காய்; கிழக்காய்; சமயமாய்; சாதியாய் ;இன்ன பிறவாய் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை, நினைவு நாட்கள்தான் ஓரளவுக்காவது உணர்வுபூர்வமாக ஒன்றுகூட்டி வைத்திருக்கின்றன. அதனால்தான் அரசாங்கம் நினைவுகளைக் கண்டு பயப்படுகின்றது. நினைவின் குறியீடாக தமிழ் மக்களால் உருவகப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியை அரசாங்கம் ஒரு குற்றப் பொருளாகப் பார்க்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்த களத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு “தமிழ் சிவில்சமூக அமையம்” உணவையே நினைவுப் பொருளாக உபயோகித்தது. அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. இப்பொழுது அந்த உணவையே அதாவது, நினைவையே ஒரு குற்றமாக அரசாங்கம் பார்க்கின்றது. சில நாட்களுக்கு முன், திருகோணமலையில் உணவு ஒரு குற்றமாகக் காட்டப்பட்டது. இறுதிக்கட்டப் போரில் ஒடுங்கிய கடற்கரைக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் மத்தியில் கஞ்சி இருந்தது; போண்டா இருந்தது; ரொட்டி இருந்தது. இதில் கஞ்சியானது தமிழ்ப் பண்பாட்டில் வெவ்வேறு பண்பாட்டு நிகழ்வுகளோடு சம்பந்தப்படுகின்றது. அது மிக எளிமையான உணவு. ஆனால் தமிழ் வீடுகளில் காய்ச்சும் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒன்று அல்ல.ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய்க்குத் தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே அது ஒரு பால் இல்லாத கஞ்சி. அரிசியை கிடாரத்தில் போட்டு நீர் விட்டு, உப்புப் போட்டு வேக வைப்பார்கள். அரிசி வெந்ததும் அதில் இரண்டு பால்மா பக்கெட்டுகளை உடைத்துக் கரைத்து அதில் சேர்ப்பார்கள். அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. அது தேங்காய்ப் பாலற்றது. பயறு இல்லாதது. ருசியற்றது. அந்த ருசியின்மைக்குள் அதன் அரசியல் செய்தியிருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் ஒரு கொடிய போர்க்களத்தின் நினைவு இருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் இனப்படுகொலையின் பயங்கரம் இருக்கின்றது. அந்த ருசியின்மைக்குள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நீதிக்கான தாகம் இருக்கிறது. அந்த ருசியின்மைதான் இனப்படுகொலையின் ருசி. அந்த ருசியின்மைதான் மரணத்தின் ருசி. கூட்டுக் காயங்களின் ருசி. கூட்டு மனவடுக்களின் ருசி. சுற்றி வளைக்கப்பட்டிருந்த; தனித்து விடப்பட்டிருந்த ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கண்ணீரின் ருசி; ரத்தத்தின் ருசி.தோல்வியின் ருசி; ஒரு யுகமுடிவின் ருசி. அந்த ருசியை தலைமுறைகள் தோறும் கடத்தும் பொழுது ஏன் அது ருசியாயில்லை என்ற கேள்வி வரும். அந்த ருசியின்மைக்குப் பின்னால் மேலும் பல கேள்விகள் அவிழும். ஒடுங்கிய சிறிய கடற்கரையில் ஏன் அந்த மக்கள் தனித்துவிடப்பட்டார்கள்?அருகில் இருந்த தமிழகம் ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? முழு உலகமுமே ஏன் அவர்களை காப்பாற்றவில்லை? உலகப் பெரு மன்றங்களான ஐநா போன்றவை ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அவர்களை நோக்கி அனுப்பப்பட்ட” வணங்கா மண் “என்ற கப்பல் ஏன் வந்து சேரவில்லை? என்ற கேள்விகளை  அந்த ருசியின்மை எழுப்பும். அந்த ருசியின்மையை தலைமுறைகள் தோறும் கடத்தும் போதுதான் நீதிக்கான போராட்டம் மேலும் வலுப்பெறும். மட்டுமல்ல, தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடியும். அந்த ருசியின்மைக்குள் இருக்கும் கேள்விகளை வீடுகள் தோறும் கேட்டு அதற்கு பதில் கொடுக்க வேண்டும். மூத்த தலைமுறை அதைச் செய்ய வேண்டும். தமிழ் வீடுகளில் சாப்பாட்டு மேசைகளில்; பாடசாலைகளில்; பொது இடங்களில்; என்று எல்லா இடங்களிலும் அந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.அது நினைவுகளைக் கடத்தும் ஒரு பொறிமுறை மட்டுமல்ல, அதைவிட ஆழமாக அது ஓர் அறிவூட்டும் செய்முறை.அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தோற்காமல் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுக்கும்.எனவே அந்த நினைவுகளைப் பரிமாற வேண்டும். தலைமுறைகள் தோறும் கடத்த வேண்டும். உலகில் பொதுவாக எல்லா மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் கதை சொல்லும் பாரம்பரியம் உண்டு. உறங்கும் நேரக் கதைகள்;பாட்டி செல்லும் கதைகள் என்று பலவாறாகக் கதை சொல்லும் பாரம்பரியங்கள் உண்டு. இவ்வாறு கூறப்படும் பல கதைகள் நீதிநெறிக் கதைகள். ஈழத் தமிழர்கள் அதைவிட மேலதிகமாக நீதிக்காகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கதைகளை தமது அடுத்த தலைமுறைக்குக் கூறவேண்டும். நீதிக்கான போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் எங்கே தேங்கி நிற்கிறார்கள்? என்பதனைச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டவேண்டும்.எனவே கஞ்சியின்மூலம் கடத்தப்படும் நினைவுகள் அல்லது கேள்விகள் எனப்படுகின்றவை,ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்கு இறந்த காலத்தின் நினைவுகளைப்  பகிர்வது, கடத்துவது என்பது பழைய காயத்தை திரும்பத்திரும்பக் கிண்டி இரத்தம் பெருகச் செய்யும் வேலை என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டுவார்கள். காயங்களைக் கிண்டாதீர்கள். அயர் மூடிய காயங்களின் அயரை உரித்து அதை புதுப்பிக்காதீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டும். காயம் எப்பொழுது ஆறியது? காயங்கள் ஆறவில்லை. அவை எப்பொழுதும் உண்டு. புதிய காயங்களும் உண்டு. மயிலத்தமடுவில் குருந்தூர் மலையில் வெடுக்கு நாறி மலையில் புதிய காயங்கள் உண்டு. ஓர் உணவை அதாவது நினைவை குற்றமாகப் பார்க்கும் அரசியல் காயங்களை ஆற விடாது.ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கூட்டுக் காயங்கள் ஆறாதவை. அவை ஆறாதவை என்பதனால்தான் அவற்றைக் குறித்து உரையாட வேண்டியிருக்கிறது. அவற்றை எப்படி சுகப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீன கவிஞர் ஒருவர் எழுதினார் “குணப்படுத்தவியலாத ஒரு காயமாக” நினைவைப் பேணுவது என்று. அதுதான் உண்மை. ஈழத் தமிழர்களின் கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் குணப்படுத்தப்படாதவை. அதற்கான குணமாக்கல் செய்முறைகளை சிறு தொகை மருத்துவர்கள் மட்டுமே முன்னெடுக்கின்றார்கள். அதற்கும் போதிய அளவு மனநல மருத்துவர்கள் கிடையாது. அது மட்டுமல்ல,அது மருத்துவர்களால் மட்டும் சுமக்கப்படக்கூடிய ஒரு சுமை அல்ல. அது ஒரு கூட்டுச் சுமை. கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மன வடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சை தான் இருக்கலாம். தனிய மருத்துவர்கள் மட்டும் அதைச் சமாளிக்க முடியாது. தவிர்க்க முடியாதபடி அது ஓர் அரசியல் பண்பாட்டுச் செய்முறையாகத்தான் இருக்கலாம். அதற்குப் பொருத்தமான அரசியல் தலைமை வேண்டும். அத்தலைமையின் கீழ் குடிமக்கள்சமூகங்கள்; மதத்தலைவர்கள்; கருத்துருவாக்கிகள்; புத்திஜீவிகள்;படைப்பாளிகள் என்று எல்லாத் தரப்புக்களும் இணைக்கப்பட வேண்டும். கூட்டுச் சிகிச்சையானது மேலிருந்து கீழ் நோக்கியும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்யப்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்க வேண்டும். அது அரசியல் தீர்வாக அமைய வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரான நீதியாக அது அமைய வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி அந்தத் தீர்வை நோக்கி தமிழ்மக்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டம்தான் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்யும். தமிழ்மக்கள் இப்பொழுது சிதறிப் போய் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக; ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக;எல்லாருக்கும் பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக; கட்சிகளாக; வடக்குக் கிழக்காக;சமயமாக; சாதியாக இன்னபிறவாக சிதறிப்போய் இருக்கிறார்கள். அதேசமயம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு புலம்பெயரும் தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள்,உயர் உத்தியோகங்களில் இருந்தவர்கள் என்ற வகையினரும் அடங்குவர். இவ்வாறாக மூளைசாலிகளும் தொழில் அனுபவம் மிக்கவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைத் திரட்டுவது எப்படி? ஒருவர் மற்றவரை நம்பாமல் சமூகத்தைத் திரட்ட முடியாது. ஒருவர் மற்றவரை நம்புவதில் இருந்துதான் சமூகத் திரட்சி தொடங்குகின்றது. எனவே நம்பிக்கை முக்கியம். சமூகத்துக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். புலம்பெயரும் தலைமுறைக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கையைக் கொடுக்க யார் உண்டு? அந்தக் கூட்டு நம்பிக்கைதான் கூட்டுத்தோல்வி மனப்பான்மையிலிருந்தும்,கூட்டுக் காயங்களில் இருந்தும், கூட்டு மனவடுக்களில் இருந்தும் ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலை செய்யும். ஈழத் தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கிறார்கள். எல்லாப் பேரரசுகளுக்கும் அவர்கள் தேவை. தமிழ் மக்களின் இக்கேந்திர முக்கியத்துவத்தை தமிழ் மக்களே உணராதிருக்கிறார்கள். அனுமார் தன் பலத்தை தானே அறியாதிருந்ததுபோல. தமிழ் மக்களுக்கு அவர்களின் பலத்தை உணர்த்தி,அவர்களைப் பலமான திரளாக்கி,அவர்களை கூட்டு அவநம்பிக்கையிலிருந்து விடுவிப்பதுதான் கீழிருந்து மேல் நோக்கிய கூட்டுச் சிகிச்சையாக அமையும்.அதுதான் கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும்.அதுதான் உண்மையான நினைவு கூர்தலாக அமையும்.   https://www.nillanthan.com/6761/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.