-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது! களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறையில் இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்திருந்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1388218 -
By goshan_che · Posted
அனந்தி… சும்… விக்கி…. கஜேஸ்… எல்லாரும் ஆளாளுக்கு இதில் கருத்து சொல்கிறார்கள்…அரசியல் செய்கிறார்கள். ஆனால் தமிழரின் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழரசு கட்சி தலைவர் கப்சிப். இன்னும் டீல் படியவில்லையோ? ”சடலம்” சிறிதரனை கண்டா வரச்சொல்லுங்க🤣 -
By goshan_che · Posted
தமிழரசின் தலைவர் சம்பந்தரா, சிறிதரனா? இதற்கு சம்பந்தரை மாறாமல் விட்டிருக்கலாமே. எதுவுமே செய்யாமல், சொல்லாமல் காலாமாகிய சடலம் போல் கதிரையில் இருக்கவா சிறிதரன் இந்தளவு அந்தரப்பட்டு, கட்சியை உடைத்து தலைவரானார்? சிறிதரன் லீடர் அல்ல, டீலர். -
தமது உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது, குடும்பத்தில் உன்னை ஒருவனாக அல்லது ஒருத்தியாக எம்மால் பார்க்கமுடியாது என்று பெற்றோரும், உறவினர்களும் வெறுத்து ஒதுக்கும் நிலையில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுவரும் இளைய சமுதாயம் குறித்து நாம் அனைவரும் அக்கறை கொள்ளும் காலம் விரைந்து உருவாகி வருகிறது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்இரண்டாம் கட்டப் பேச்சுக்களில் இருந்து தமிழர்தரப்பை வெளியேற்ற புதிய ஆலோசனைகள் எனும்பெயரில் தந்திரங்களை முன்வைத்த இலங்கை அரசு தமிழ்ப் பிரதிநிதிகளின் இணைந்த அறிக்கைக்குப் பதிலளித்த ஹெக்டர் பின்வரும் விடயங்களைக் கூறினார். 1. இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்குழு பிரதிநிதித்துவம் செய்கிறது. இலங்கையின் அமைச்சரவையில்க் கூட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அமைச்சர்கள் அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். 2. இங்கு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்பினர் இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கோருகிறார்கள். ஆனால், யதார்த்தத்தில் இலங்கையரசாங்கமும் தமிழர்களை இங்கே பிரதிநிதித்துவம் செய்கிறது. இங்கு பிரசன்னமாகி இருக்கும் தமிழ் அமைப்பினர் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கோருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதை விடவும், இலங்கையர்களால் நன்கு அறியப்பட்ட தமிழ் அரசியட்கட்சியான தமிழ்க் காங்கிரஸ் இங்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. மேலும், சில ஆயுத அமைப்புக்களும் இப்பேச்சுக்களில் கலந்துகொள்ளவில்லை. 3. தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு இங்கு பிரசன்னமாகியிருக்கும் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழு போதுமானது என்று நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் பேச்சுக்குழு இப்பேச்சுக்களின் பிரசன்னமாகியிருக்கின்றது. தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத்தன்மை குறித்த ஹெக்டரின் விளக்கத்தினால் இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் அப்போதைக்குத் தோல்வியடைவதைத் தடுக்க உதவியது. அத்துடன், இலங்கை அரச பிரதிநிதிகள் தமது புதிய யோசனைகள் முன்வைக்கவும் இது சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. உப தேசிய அலகுகளுக்கான கட்டமைப்பு எனும் பெயரில் இலங்கை அரசு தனது புதிய ஆலோசனைகளை முன்வைத்தது. அரசின் புதிய ஆலோசனைகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன் முதலாவது பிரிவு, மக்கள் தமது பிரச்சினைகளையும், தேவைகளையும் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளைத் தாமே உய்த்தறிந்துகொண்டு அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை உப தேசிய அலகுகள் ஊடாக பெற்றுக்கொடுப்பது. இந்த உப தேசிய அலகுகள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையினை முற்றாக ஏற்றுக்கொண்டே நடைமுறைப்படுத்தப்படும். சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கும், சட்டவாக்கல் அதிகாரமுள்ள பாராளுமன்றத்திற்கும் இந்த உப தேசிய அலகுகள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆலோசனைகளின் இரண்டாம் பிரிவு, உப தேசிய அலகுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான உப தேசிய அலகுகள் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும், தேவையேற்படின் நாலாவது அடுக்கும் சேர்க்கப்படலாம். அந்த மூன்று உப தேசிய அலகுகளுமாவன : மாகாண சபைகள், மாவட்ட சபைகள், பிரதேச சபைகள் என்பனவாகும். ஒவ்வொரு மாகாணத்திற்கென்று மாகாணசபைகளும், ஒவ்வொரு மாவட்டத்திற்குமென்று மாவட்ட சபைகளும், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்குமென்று பிரதேச சபைகளும் உருவாக்கப்படும். தேவையேற்படின் பிரதேசங்களுக்கான கூட்டமைப்பும் உருவாக்கப்படலாம். ஆனால், இதன்படி எந்தவொரு மாகாணமும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கப்படுதல் முடியாது. தற்போது நடைமுறையிலிருக்கும் மாகாணங்களின் எல்லைகளைக்குள்ளேயே உத்தேச மாகாண சபைகளும் அடங்கியிருக்கும். ஒவ்வொரு மாகாணசபைக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார். அந்த அதிகாரி பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்படுமிடத்து அவர் முதலமைச்சர் என்று அழைக்கப்படுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதவிடத்து பொருத்தமான இன்னொரு பெயர் கொண்டு அவர் அழைக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணசபைக்குமான பிரதான நிறைவேற்று அதிகாரியை, அம்மாகாணங்களின் உறுப்பினர்களின் ஆதரவோடு ஜனாதிபதியே நியமிப்பார். தனது நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரிகள் சபையினை முதலமைச்சர் அந்த மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து தெரிவுசெய்துகொள்வார். பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான அதிகாரங்கள் பாராளுமன்றத்தினாலேயே அவருக்கு வழங்கப்படும். முதலமைச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே நேரடியாக வழங்குவார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லதவிடத்து, ஜனாதிபதியினால் சில அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்படும். மாகாண நிறைவேற்று மந்திரிசபைக்கென்று அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது. தமக்கென்று தனியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட கட்டமைப்பினை எந்தவொரு மாகாண சபையும் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு மாகாணத்தின் எல்லைகளுக்குள், குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில், தமக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்டு, அந்த மாகாணசபை சில சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், இவ்வாறு இயற்றப்படும் உப சட்டங்களை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கும். மேலும், மாகாண சபை ஒன்றி இயற்றும் உப சட்டங்கள் முதலில் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் அவசியம். எவ்வாறான விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகள் உப சட்டங்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசின் அடுத்த கட்ட நிர்வாக அலகாக மாவட்ட சபைகள் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தந்த மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருப்பார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவர் மாவட்ட அமைச்சர் என்று அழைக்கப்படுவார். அவ்வாறு இல்லாதவிடத்து, அவர் அமைச்சர் என்று அழைக்கப்படுவார். மாவட்ட அமைச்சருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே இதுக்குவார். சாதாரண அமைச்சருக்கான அதிகாரங்கள் நேரடியாகவன்றி, பகிர்ந்தளிப்பு முறையில் வழங்கப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி மாவட்ட சபைகள் தமது எல்லைக்குற்பட்ட விடயங்கள் தொடர்பாக உப சட்டங்களை இயற்றவியலும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்பொழுது, இந்த ஆலோசனைகள் தமிழரைப் பொறுத்தவரையில் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகத் தோன்றினாலும்கூட, அவை உண்மையிலேயே தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பது தெரியவரும். இந்த ஆலோசனைகளை ஆளமாகப் படிக்கும் எவருக்கும், அரசாங்கம் வழங்க ஆயத்தமாக இருக்கும் அதிகார அலகு மாவட்ட சபையே அன்றி மாகாண சபை அல்ல என்பது தெளிவாகத் தெரியும். மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் ஒன்றுடன் ஒன்று இணைந்து மாகாணசபையினை உருவாக்க முடியும் அல்லது தனித்து இயங்கமுடியும். மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்களும் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், இந்த மாவட்ட சபைகள் தனித்து இயங்குவதா அல்லது இன்னொரு மாவட்ட சபையினை இணைத்து மாகாண அளவில் இயங்குவதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும். புதிய ஆலோசனைகளில் முன்வைக்கப்பட்ட "மாவட்ட சபையாக தனித்தோ அல்லது இணைந்து மாகாண அளவிலோ இயங்க முடியும்" எனும் சரத்தினூடாக இதனை அரசு புகுத்தியிருந்தது. "மாவட்ட சபையாகத் தனித்து இயங்குதல் அல்லது இணைந்து மாகாண அளவில் இயங்குதல்" எனும் சரத்தின் கீழ் பிரிவு 10 முதல் 12 வரையான மூன்று பிரிவுகளை புதிய ஆலோசனைகள் கொண்டிருந்தன. பிரிவு 10 மாகாண சபைகளுக்கான அரசியலமைப்புக் குறித்துப் பேசுகிறது. தற்போது இருக்கும் மாகாணங்களில் இயங்கும் மாவட்ட சபைகள் குறித்தும், இயங்காநிலையில் இருக்கும் மாவட்ட சபைகள் குறித்தும் இந்தப் பிரிவு பேசுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியே வருகின்றன. மாவட்ட சபைகள் இயங்கும் மாகாணங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு பல மாவட்ட சபைகள் இணைந்து மாகாண அளவில் இயங்க முடியும். அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்கும். மாவட்டங்கள் இணைந்து மாகாண சபைகள் உருவாகுமிடத்து அம்மாகாணத்திற்குள் இயங்கும் மாவட்ட சபைகளின் இயக்கம் முடிவிற்கு வரும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியிருக்கவில்லை. ஆகவே, இந்த மாகாணங்களில் இருக்கும் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அவை உருவாக்கப்படுதல் அவசியம். பின்னர் அந்த மாகாணத்தில் இருக்கும் மாவட்டசபைகளில் மூன்றில் இரண்டு விரும்புமிடத்து, மிகக் குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும் பிரேரணை ஒன்றினூடாக தம்மை இணைத்து ஒரு மாகாணசபையாக உருவாகிக்கொள்ளுதல் முடியும். அவ்வாறு இணையும் முடிவு ஒன்று எடுக்கப்படாதவிடத்து, மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்க முடியும். புதிய ஆலோசனைகளின் பிரிவு 11 மாகாணசபைகள் மற்றும் மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்கள் பற்றிப் பேசுகிறது. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அம்மாகாணங்களிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாகாண சபை உறுப்பினர்களாக இருப்பர். அவ்வவறே, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். மாகாண சபைகள் எனும் அமைப்புத் தோற்கடிக்கப்படுவதை உறுதிப்படுத்தவே புதிய ஆலோசனைகளின் பிரிவு 12 சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு மாகாணத்தில் இயங்கும் மூன்றில் ஒரு மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் அந்த மாகாணசபையிலிருந்து விலகி தனித்து மாவட்ட சபையாக இயங்கமுடியும் என்பதே அந்தச் சரத்து. அரசு முன்வைத்த புதிய யோசனைகளைப் படித்துவிட்டு தம்மால் சிரிப்பதைத் தவிர வேறு எதனையும் அப்போது செய்ய முடியாது போய்விட்டது என்று பேச்சுக்களில் பங்கெடுத்த இரு தமிழ்ப் பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்தனர். "சிலரோ கொதித்துப்போய் இருந்தனர், சத்தியேந்திரா அவர்களில் ஒருவர்" என்று ஒரு தமிழ்ப் பிரதிநிதி என்னிடம் கூறினார். தமிழர் தரப்பு பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே புதிய ஆலோசனைகளை அரசு முன்வைத்திருந்தது. தமிழர் தரப்பிற்குத் தேவைப்பட்டதெல்லாம் தகுந்த சூழ்நிலை மட்டும்தான். "பிரச்சினை என்னவென்றால், இந்தியாவைப் புண்படுத்தா வண்ணம் நாம் பேச்சுக்களில் இருந்து விலக வேண்டும்" என்று பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசும்போது தெரிவித்தார். தமிழர் தரப்பு எதிர்பார்த்திருந்த சரியான சூழ்நிலையினை அன்றிரவே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது . ஆவணி 16 ஆம் திகதி வவுனியாவிலும் திருகோணமலையிலும் சிங்கள இராணுவம் ஆடிய படுகொலைகள் தமிழர்களை வெகுவாகக் கோபங்கொள்ளச் செய்திருந்தது.
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts