Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CG_c0832image_story-750x375-1.jpg?resize

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில்  நாளை (செவ்வாய்கிழமை)யை  துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1383227

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

CG_c0832image_story-750x375-1.jpg?resize

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில்  நாளை (செவ்வாய்கிழமை)யை  துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1383227

ஆளுனர் நசீர் முகமதுவுக்கு ரிக்கற் போட்டிருப்பினம்.. இவர்தான்   செத்தவீட்டுக்குப் போனால்...அவையோடை  கதைச்சுப் பேசி  கான்  மூலம் பெற்றொல் வாங்கிவந்து ரணிலுக்கு கொடுக்கக்கூடிய ஆள்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல கல்லெறியாளர்களுக்கும் துக்கதினம்தான்! என்னசெய்வது உப்பெர் திண்டால் தண்ணி குடிச்சுத்தானே ஆகவேணும்!😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில்  நாளை (செவ்வாய்கிழமை)யை  துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

எனக்கு பிடிக்காத அரசியல் நாடாக இருந்தாலும்...... இலங்கையின் இந்த கெத்து எனக்கு பிடிச்சிருக்கு....
கடன் பட்டு வாழ்ந்தாலும்/ பல குற்றங்களை வரலாற்று ரீதியாக  செய்தாலும்.... தங்கள் கொள்கையில் கூனி குறுகாமல் நிமிர்ந்து நிற்கின்றார்கள். 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கு பிடிக்காத அரசியல் நாடாக இருந்தாலும்...... இலங்கையின் இந்த கெத்து எனக்கு பிடிச்சிருக்கு....
கடன் பட்டு வாழ்ந்தாலும்/ பல குற்றங்களை வரலாற்று ரீதியாக  செய்தாலும்.... தங்கள் கொள்கையில் கூனி குறுகாமல் நிமிர்ந்து நிற்கின்றார்கள். 👍🏼

கொள்கையல்ல..பயம்  அய்யா..துக்கதினம் போடவிட்டால்..ரைசியின் ஆட்கள் ..திறந்த அணையை பூட்டிவிடுவினம்......தேர்தல் வாறதாலை இப்ப அவை இன்னமும் உசார்கூடி  நிக்கினம்😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, alvayan said:

கொள்கையல்ல..பயம்  அய்யா..துக்கதினம் போடவிட்டால்..ரைசியின் ஆட்கள் ..திறந்த அணையை பூட்டிவிடுவினம்......தேர்தல் வாறதாலை இப்ப அவை இன்னமும் உசார்கூடி  நிக்கினம்😆

ஏலுமெண்டால் அமெரிக்கா  வந்து சண்டித்தனம் காட்டட்டும் பாப்பம்? அவைக்கு இந்தியா சீனாவை நினைச்சு  பேய்ப்பயம்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
3 hours ago, alvayan said:

 

ஏலுமெண்டால் அமெரிக்கா  வந்து சண்டித்தனம் காட்டட்டும் பாப்பம்?

அவன் ஹெலி கொடுக்கும்போதே அதனுள் TAG வச்சித்தான் கொடுத்தவன். அது விளங்காத இந்தக்கூட்டம் அவன் கொடுத்த இரவலை இவ்வளவு காலமும் பாவிச்சுக்கொண்டு, அவனுக்கே வாய்ச்சவால் விட்டுக்கொண்டு வந்தார்கள். இடம், பொருள், ஏவல் பார்த்திருந்து முடிச்சிட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

இந்தியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ‘இந்தியா’ முழுவதும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்று முன் தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போதே சீரற்ற வானிலை காரணமாக குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் ரைசியுடன் பயணித்த மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்  அந்நாட்டரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383267

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1716286861524.jpg?resize=720,375&

ஈரான் ஜனாதிபதியின் மறைவு: சம்மாந்துறையில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசயின் மறைவையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதியின்  மறைவை தொடர்ந்து  இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383355

35 minutes ago, தமிழ் சிறி said:

ஈரான் ஜனாதிபதியின் மறைவு: சம்மாந்துறையில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசயின் மறைவையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

 

தனக்கு தனக்கு என்றால், சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஈரான் ஜனாதிபதியின் மறைவு: சம்மாந்துறையில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த எம், பி இவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கருத்துரைக்க அதிகாரம் இல்லை எனக் கத்தியவர் கரீஷ் எம், பி.

ஆனால் ஈரானில் செத்தவருக்கு இங்கு கதவடைக்கிறானுகள். என்ன ஒரு நியாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஈரான் ஜனாதிபதியின் மறைவு: சம்மாந்துறையில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்.

உடல் இங்கே உயிர் அங்கே என்பார்கள் அது தான் இது. 

தமிழ் பேசும் உடல் இங்கே உயிர் அங்கே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.