Jump to content

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!

Vhg மே 23, 2024
1000247285.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான தெரிவு நடைபெற்றது. 

அதேவேளை, மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளதுடன் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

spacer.png

spacer.png

https://www.battinatham.com/2024/05/blog-post_636.html

 

Edited by கிருபன்
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கை அரசினதும் நேரடிக் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டது. 

உருத்திரகுமார் ஏற்கனவே ஒரு கையாளாகாத ஆள் என்று நிரூபித்தவர்.

இனிமேல், தான் ஒரு பொம்மை என்று நிரூபிப்பார். 

அம்புட்டுதே. 

😏

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் இருக்கின்றார்கள் என்ற விசயம் மறந்தே போய் இருந்தது...........இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஞாபகம் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

இவர்களும் இருக்கின்றார்கள் என்ற விசயம் மறந்தே போய் இருந்தது...........இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஞாபகம் இருக்கும். 

எனக்கும் மறந்துவிட்டது! 

ஆனாலும் பிரதமரும் கூட்டுக்களவாணிகளும் இன்னும் ஓயவில்லை!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கூட்டுக்களவாணிகளும்

 

13 hours ago, Kapithan said:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கை அரசினதும் நேரடிக் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டது.

 

செயற்பாடுகளில்   (அல்லது வேறு) ஆதாரம் இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kadancha said:

 

 

செயற்பாடுகளில்   (அல்லது வேறு) ஆதாரம் இருக்கிறதா? 

ஆதாரம் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நாள் வரை இந்த நாடு கடந்த அரசாங்கம் என்பது என்ன செயற்பாடுகளைச் செய்துள்ளது? 

இதனைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியுமா?

 

  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, P.S.பிரபா said:

இது நாள் வரை இந்த நாடு கடந்த அரசாங்கம் என்பது என்ன செயற்பாடுகளைச் செய்துள்ளது? 

இதனைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியுமா?

 

நாடு கடந்த அரசாங்கத்தில் பிரதமருடன் பல அமைச்சர்களும் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை முதன் முதலில் கேட்ட போது, பல வருடங்களின் முன், எப்படியாவது சிரிப்பை அடக்க வேண்டுமே என்று கொஞ்சம் கஷ்டமாகப் போய்விட்டது.

நாங்கள் எங்கள் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இணைந்து வருடா வருடம் ஒரு ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். முக்கியமாக ஒரு கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி. இரண்டு நாட்கள் நடக்கும். பல வருடங்களின் முன் ஒரு வருடத்தில் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தான் இந்த அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் என்று சொன்னார். இந்த இடத்தில் தான் எனக்கு நான் மேலே சொல்லியிருந்த அந்த அடக்க வேண்டிய கஷ்டம் ஏறபட்டது. எங்களின் இந்த விளையாட்டுகள் மற்றும் ஒன்றுகூடலிற்கு அரசாங்கமும் வரலாமா என்று என்னைக் கேட்டனர். கேட்டுச் சொல்கின்றேன் என்று சொன்னேன்.

நண்பர்களை கேட்ட போது, பலத்த எதிர்ப்பு. இவையெல்லாம் யார், இதுக்குள்ள ஏன் அரசியல் என்று எல்லோரும் மறுத்து விட்டனர். அத்துடன் இது முடியவில்லை.

முன்னர் இங்கு மாவீரர் தினம் பெரிதாக நடக்கும். பின்னர் அமெரிக்க அரசின் தடை மற்றும் சில கைதுகள் காரணமாக இங்கு மாவீரர் தினம் தடைப்பட்டது. உருத்திரகுமார் அவர்கள் நல்ல பேச்சு வல்லமை உள்ளவர். கொழும்பு சட்டக் கல்லூரி என்று நினைக்கின்றேன். இங்கு மாவீரர் தினங்கள் பெரிதாக நடைபெற்ற போது மேடையில் பேசியிருக்கின்றார்.

தடையின் பின்னரும் நாங்கள் சில குடும்பங்கள் மட்டும் ஒன்று சேர்ந்து மாவீரர் தினத்தை சிறிய அளவில் செய்து கொண்டிருந்தோம் ஒவ்வொரு வருடமும், இன்று வரையும். பெரும் பேச்சாளர்கள் எவரும் வருவதில்லை, நாங்களும் கூப்பிடுவதில்லை. சில வருடங்களின் பின், அமெரிக்க அரசு இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது. அத்தோடு நாங்கள் வெறும் 'பிள்ளைப் பூச்சிகள்' என்று அதற்கு தெரிந்தும் விட்டது போல. மீண்டும் மாவீரர் தினங்கள் பெரிதாக ஆரம்பித்தன.

எங்களின் ஒரு வருட நிகழ்விற்கு, அரசாங்கமும் வருவதாகச் சொல்லி, பிரதமரும், அமைச்சர்களும் வந்தனர். அவர்களின் வருடாந்திர கூட்டமும் நடந்தது. அங்கு நடந்தவையை நேரே பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள். மொத்தத்தில் இது என்ன கூத்து என்றே பார்த்துக் கொண்டிருந்த எங்கள் எல்லோருக்கும் தோன்றியது.

இவர்களை இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும், அதே அரசுகள் என்னை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் ஒன்றே. அந்த அரசுகளுக்கு ஒரு சல்லிக்கு பிரயோசனம் கிடையாது என்று சொல்கின்றேன்.      

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 அவலங்களுக்கு பின் நாடு கடந்த தமிழ் அரசின் மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தேன். அது ஒரு நாடக கூட்டுகள் என்பதை சிறிது காலத்திலேயே உணர்ந்து விட்டேன்.

2 hours ago, ரசோதரன் said:

நாடு கடந்த அரசாங்கத்தில் பிரதமருடன் பல அமைச்சர்களும் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை முதன் முதலில் கேட்ட போது, பல வருடங்களின் முன், எப்படியாவது சிரிப்பை அடக்க வேண்டுமே என்று கொஞ்சம் கஷ்டமாகப் போய்விட்டது.

என்னது கெட்ட கேட்டுக்கு அமைச்சரவை வேற இருக்கா? 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15வ‌ருட‌த்தை வீன் அடித்து விட்டார்க‌ள்

இவ‌ர்க‌ளை இனி ந‌ம்ப‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன்

உருத்திரகுமார் வாய் சொல் ந‌ப‌ர்

 

இவ‌ரின் மாவீர‌ நாள் உரைக்கு ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு இல்லை..........................நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றின‌து தான் மிச்ச‌ம்........................இவ‌ர்க‌ளை நானும் எட்டி பார்க்காம‌ விட்டு க‌ண‌ காலம்......................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

2009 அவலங்களுக்கு பின் நாடு கடந்த தமிழ் அரசின் மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தேன். அது ஒரு நாடக கூட்டுகள் என்பதை சிறிது காலத்திலேயே உணர்ந்து விட்டேன்.

என்னது கெட்ட கேட்டுக்கு அமைச்சரவை வேற இருக்கா? 🤣

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இலங்கை அரசின் நேரடி முகவர் ஒருவர் தேர்தலில் நிற்காமலேயே (?) தெரிவுசெய்யப்பட்டதுதான். 

இன்னொரு விடயம், ஒருவரை நீங்கள் உருத்திரகுமாருக்குப் போட்டியாக நிற்க வைக்கிறோம் என்று அறிவித்து அவரை முதுகின் பின்னால் குத்தியே தேர்தலில் தோற்கடிக்க வைத்தார்கள். 

🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இலங்கை அரசின் நேரடி முகவர் ஒருவர் தேர்தலில் நிற்காமலேயே (?) தெரிவுசெய்யப்பட்டதுதான். 

இன்னொரு விடயம், ஒருவரை நீங்கள் உருத்திரகுமாருக்குப் போட்டியாக நிற்க வைக்கிறோம் என்று அறிவித்து அவரை முதுகின் பின்னால் குத்தியே தேர்தலில் தோற்கடிக்க வைத்தார்கள். 

🤣

ஒவ்வொரு  புலம் பெயர் அமைப்புகளும் தத் தம் நாடுகளில் பிள்ளையார் சிலை போல் தமிழீழ களிமண் சிலை அமைத்து மகிழ வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரசோதரன் said:

. அந்த அரசுகளுக்கு ஒரு சல்லிக்கு பிரயோசனம் கிடையாது என்று சொல்கின்றேன்

அப்படியெல்லாம் கூறமுடியாது.. அடிக்கடி இந்த மாதிரி அறிக்கைகள் விடுவதற்காகவது தேவைதானே.….

—..

உண்மையில் இந்த மாதிரி நடவடிக்கைகளால்தான் மக்கள் இன்று என்ன நடந்தாலும் ஆதரவு கொடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பொதுவான பதிவு.

கபிதன், அவர் கருதும்  எவர், சிங்களத்தின் முகவர் என்று வெளியில் சொல்லலாம்.

(தோற்றப்பாடுகளை  வைத்து முடிவுக்கு வருவது மிக கடினம்) 

வேறு பல நாடுகடன்ஹா அமைபுக்களும் இருக்கிறது எதை செய்தார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது.

ஆனால், நாடுகடந்த எந்த அமைப்போ, இந்த சூழ்நிலையில் தேவை.

நாடுகடந்த எந்த அமைப்பிலும் போட்டி,  இலகுவில் தலைமை கைமாறாது, எந்த  அளவு வெளிப்படை தன்மை இருந்தாலும்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kadancha said:

எல்லோருக்கும் பொதுவான பதிவு.

கபிதன், அவர் கருதும்  எவர், சிங்களத்தின் முகவர் என்று வெளியில் சொல்லலாம்.

ஏன்? 

என்னுடைய அடி நுனி தேடி பொதுவெளியில் போட்டுடைக்கவா? 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

ஏன்? 

என்னுடைய அடி நுனி தேடி பொதுவெளியில் போட்டுடைக்கவா? 

😁

நாடு கடந்த அரசாங்கங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இரகசியம் இல்லை

யார் என்று சொல்வதில் ஏன தேவை இல்லாத ஆலாபரணம்?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, Kadancha said:

நாடு கடந்த அரசாங்கங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இரகசியம் இல்லை

யார் என்று சொல்வதில் ஏன தேவை இல்லாத ஆலாபரணம்?

பிரச்சனை அவர்களுக்கு இல்லை. எனக்கு. 
ஏனென்றால் யார் அவர்கள்  என்று உங்களுக்குத்  தெரிந்தும் எந்த மாற்றமும் நடைபெறப்போவதில்லை. 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழீழ அரசாங்கம்" என்ற பெயரை வைத்திருக்க யோக்கியதை இல்லாத "நட்டு கலண்டவங்கள்"  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣........ அசோசியேட் மெம்பர்ஸை தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே....
    • "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்"     "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !"   "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !"   "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !"   "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு முணுப்பை இசையாக்கிறேன் !"   "வாலிப்பதை தூண்டும் சிறு இடையும் வாட்டம் காட்டாத நிலா முகமும் வாசனை கொட்டும் கரும் கூந்தலும் வாக்கியமாய் இங்கே வரைந்து காட்டுகிறேன் !"   "பருவ பெண்ணை முழுதாக ரசிக்க பளிங்கு கன்னத்தில் முத்தம் இட பரவசம் கொஞ்சம் என்னை தழுவ பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      மிதலை - navel, கொப்பூழ், தொப்புள்
    • சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக 5 முறை மிரட்டல் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Chennai airport - hindutamil.in
    • அன்பு Justin  க்கு  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன்." உங்கள் வாதத்தை பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை ?? ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு என ஒரு கருத்தும், வரைவிலக்கணமும் , அடிப்படை சொல்லும் [வேர் சொல்லும்] உண்டு . இப்படித்தான் சொல்லை ஏற்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நான் வாதாடுகிறேன். மற்றும் படி "நீங்க வேற, நாங்க வேற" என்று இல்லை.  marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.   அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்,  ஆண் ஆணுடன் சேருவது அல்லது பெண் பெண்ணுடன் சேருவது மற்றும் ஆண் பெண்ணுடன் சேருவது எல்லாம் ஒன்றா ?? வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியாதா ? அதனாலதான்  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்கிறேன், மற்றும் படி அவர்களை தாழ்த்தி அல்லது உயர்த்தி காட்டிட அல்ல  ஆண் பெண் சேர்தலில் ஒரு 'பிள்ளை' பிறக்கிறது அல்லது 'பிள்ளை' பிறக்க பொதுவாக வாய்ப்பு உண்டு  அந்த பிள்ளையை , பிள்ளை என்று மட்டும் கூப்பிடுவதில்லை, அவர்களின் உடல் அமைப்பை வைத்து பொதுவாக ஆண் / மகன் அல்லது பெண் / மகள் என்று வேறு வேறு சொற்களில் கூறுகிறோம் , மற்றும் படி பிள்ளையை  நீங்க வேற, நாங்க வேற" என்று அல்ல.  ஏன் ஆண் , பெண் என்று கூறுகிறோம் ? பொதுவாக மனிதன் என்றே கூறலாமே ?? எல்லாத்துக்கும் காரணம் சொல்லுக்கு என்று கருத்தும் அதிகமாக வேர்ச் சொல்லும் உண்டு,  அப்படித்தான் மனித கூட்டும் ?? வேலைக்கு போகிறவர்கள் எல்லோரும் ஊழியர் அல்லது பணியாளர் என்று கூப்பிடலாம் ?? ஏன் நாம் ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர் என்று வேறு வேறாக கூப்பிடுகிறோம் ?? என என்றால் அங்கு அந்த ஊழியர்களின் தொழில் அமைப்பில் வேறுபாடு இருப்பதால்  அப்படியே இதுவும். சிந்தித்தால் இலகுவான ஒன்று !! நன்றி   
    • sptneSdoro9 97i928h8fcf861h091f8g3283294mlh1i05mh9ct041c654l  ·  எழுத்துப்பிழை இல்லாமல் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி தர சில விளக்கங்கள்... தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" , மூன்று சுழி "ண", மற்றும் "ந" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தோன்றும். "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? ஒரு எளிய விளக்கம். "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம். என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ண "கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "ன" கர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இவை ரெண்டும் என்றுமே மாறி வராது என்பதை நினைவில் கொள்க.. மண்டபமா? மன்டபமா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா? பக்கத்துல 'ட' இருப்பதால், இங்க மூன்று சுழி 'ண' தான் வரும். ஏன்னா அது "டண்ணகரம்". கொன்றானா? கொண்றானா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா? பக்கத்துல 'ற' இருப்பதால், இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும். ஏன்னா அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம். இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும். ஏன்னா இந்த 'ந' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை). இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த எளிமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்ததை பலபேருக்கு பகிர்வோம். #shared #post.....!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.