Jump to content

யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 03:50 PM
image
 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185925

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவருக்கு என்ன மன அழுத்தமோ. ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான முடிவு எடுத்த வைத்தியருக்கு அஞ்சலிகளோ அனுதாபங்களோ சொல்வதும் தவறானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் மனுசர் தானே ஐயா. முதலில் மனுசர் அதன் பின்பே மருத்துவர். நீங்கள் படித்து ஒரு மருத்துராக பணியாற்றினால் அதன்பிறகும் மனுசர் தானே. 

இன்னோர் வலைத்தள செய்தியின் பிரகாரம் காதல் திருமணம் சம்மந்தமான நிச்சயமற்ற தன்மையே/குழப்பமே அவர் வாழ்வை முடித்துக்கொள்ள காரணம் என சொல்லப்படுகின்றது. உண்மை பொய் தெரியாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒரு வைத்தியருக்கு அவர்படிக்கும் காலத்தில் உளவியல் சம்பந்தமாக நிறையப் படித்திருப்பார். ஆழ்ந்த இரங்கல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மருத்துவர் என்றால் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து எத்தனை பெண்கள் வரிசையில் நிற்பார்கள். எத்தனை பெற்றோர் தமது பிள்ளையை கட்டிக்கொடுக்க வரிசையில் நிற்பார்கள்.

ஆனால், இந்த தம்பி தான் கண்டபெண்ணை மட்டுமே உலகம் என நினைத்து வாழ்ந்துவிட்டாரோ என்னமோ.

ஒரு மனுசனுக்கு மருத்துவ கல்வி புகட்டும் பாடத்தை விட இந்த இலக்கியம், சினிமா, கவிதை, பாடல், ஜோடி, சமூகம் காதல் பற்றி உசுப்பேத்திவிடும் கனம் அதிகம்.

இங்கு இந்த தம்பி விடயத்தில் மருத்துவ கல்வி தோற்றுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவருத்தமான செய்தி. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். 

அந்த வைத்தியசாலையில் இருக்கும் வைத்தியர் பற்றாக்குறை பற்றியும், அதிக வேலைப் பளு பற்றியும் சமீபத்தில் ஊரிலிருந்து வந்த பின்னர் எழுதியிருந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் எழுதலாம் ஆனால் இறந்தவருக்கு அதுதான் தீர்வாகி உள்ளது. அவரால் பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை.. ஒருவருக்கும் அவரது பிரச்சனையோ அல்லது அவரது விருப்பங்களோ தெரியவில்லை. 

எல்லாவற்றையும் வெளிப்படையாக கதைத்து தீர்வுகளை எடுக்கும் நிலை எங்களது சமூகத்தில் இல்லை. மற்றவர்கள் என்ன கூறுவார்களோ என்ற நிலையில்தான்/பயத்தில்தான் அனேகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மன வருத்தம்,மனநோய்,அது சம்பந்தமான நோய்களுக்கும் நாம் நாடுவது வைத்தியர்களைத்தான்..... இதர மனிதற்கு 
மருத்துவ ஆலோசனையும் மன நிம்மதி வழங்கங்கூடியவர்களும் அவர்கள்தான்....அவர்களே குறுக்கு வழியை தேடினால் அவர்கள் படித்த படிப்பு என்ன என்பதே கேள்வி.

****

Edited by இணையவன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து  உறவுகளுக்கும்  எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும்.

On 14/6/2024 at 09:29, குமாரசாமி said:

மன வருத்தம்,மனநோய்,அது சம்பந்தமான நோய்களுக்கும் நாம் நாடுவது வைத்தியர்களைத்தான்..... இதர மனிதற்கு 
மருத்துவ ஆலோசனையும் மன நிம்மதி வழங்கங்கூடியவர்களும் அவர்கள்தான்....அவர்களே குறுக்கு வழியை தேடினால் அவர்கள் படித்த படிப்பு என்ன என்பதே கேள்வி.

****

ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ  கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே  போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2024 at 19:09, P.S.பிரபா said:

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் எழுதலாம் ஆனால் இறந்தவருக்கு அதுதான் தீர்வாகி உள்ளது. அவரால் பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை.. ஒருவருக்கும் அவரது பிரச்சனையோ அல்லது அவரது விருப்பங்களோ தெரியவில்லை. 

எல்லாவற்றையும் வெளிப்படையாக கதைத்து தீர்வுகளை எடுக்கும் நிலை எங்களது சமூகத்தில் இல்லை. மற்றவர்கள் என்ன கூறுவார்களோ என்ற நிலையில்தான்/பயத்தில்தான் அனேகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

 

 

நான் அறிந்து கொண்டவரையில் அவரது அம்மாவின் பிடிவாதமும் காதலியின் பிடிவாதமுமே அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது..தாயார் இன்னும் வயது இருக்கிறது 3, 4 ஆண்டுகள் பின்னர் பார்க்கலாம் என்றும், காதலி இல்லை தாமதிக்க வேண்டியதில்லை என்ற இரு பக்க அழுத்தங்களுமே அந்த வைத்தியரை தவறான வழிக்கு கொண்டு போய் இருக்கிறது;.பாவம் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.🙏
 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து  உறவுகளுக்கும்  எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும்.

ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ  கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே  போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?

டொக்டர்,எஞ்சினியர் கலாச்சாரம் உள்ள நாட்டில் எதையும் எதிர்பார்க்க முடியாது.
மத செறிவூட்டல் போல் இலங்கை இந்திய நாடுகளில் உள்ள பிள்ளைகளை டொக்டர் இஞ்சினியர் என்ற மடப்பள்ளி சிந்தனை ஊட்டல்களை தூக்கியெறிய வேண்டும்.

பிள்ளைகளை சுய சிந்தினையில் வளர்க்காமல் நீ டொக்டருக்கு படி...நீ எஞ்சியருக்கு படி என்ற மூளைச்சலவைகளால் நாடும் முன்னேறவில்லை. மக்களும் முன்னேறவில்லை.

மாறாக அறப்படித்தவர்களே தற்கொலை உதாரணங்களாக மாறிவிட்டார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.