Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

123.jpeg?resize=750,375&ssl=1

13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து தொடர்பாக, இவ்வாறு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு இரத்தம் சிந்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சஜித் பிரேமதாச 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என வடக்கில் சஜித் கூறுகின்றார்.

13 ஆவது திருத்தத்திலுள்ள எதனை அவர் வழங்கப் போகின்றார்?

காணி அதிகாரங்களை அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறாரா, என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும்.

இந்த நாட்டில் வடக்கிற்கு தெற்கிற்கு என வெவ்வேறு அதிகாரங்கள் இருக்க முடியாது.

பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டும்.
மாறாக மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நான் உயிரோடு இருக்கும் வரை அமுல்படுத்த விடமாட்டேன்.

அதையும் மீறி யாரேனும் 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்களை வழங்கினால், இரத்தம் சிந்தியேனும் வீதியில் இறங்கி அந்த முயற்சியை முறியடிப்பேன்.

சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாச அதிகளவான ஆயுதங்களை புலிகளுக்கு வழங்கியிருந்தார்.

இதனால் நூற்றுக் கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து நான் இங்கு பேசப் போவதில்லை” என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1387970

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ரனிலை தெரிவு செய்யாமல் மகிந்தவை தெரிவு செய்தது பிழை என்றளவில் உள்ளோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன்

இந்த  13 திருத்த சட்ட செய்திகள் வரும் போது அந்த 13 ல் என்னென்ன இருக்கின்றது என்பதையும் சேர்த்து இணைத்தால் நல்லாய் இருக்கும். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு மறதி அதிகம் எல்லோ  😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு உலக இரத்ததான தினம் என்று எங்கேயோ ஒரு செய்தி இருந்தது.......மேர்வின் டி சில்வா நல்ல அப்டேட்டாகத் தான் இருக்கின்றார்.........

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

123.jpeg?resize=750,375&ssl=1

13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து தொடர்பாக, இவ்வாறு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு இரத்தம் சிந்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சஜித் பிரேமதாச 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என வடக்கில் சஜித் கூறுகின்றார்.

13 ஆவது திருத்தத்திலுள்ள எதனை அவர் வழங்கப் போகின்றார்?

காணி அதிகாரங்களை அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறாரா, என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும்.

இந்த நாட்டில் வடக்கிற்கு தெற்கிற்கு என வெவ்வேறு அதிகாரங்கள் இருக்க முடியாது.

பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டும்.
மாறாக மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நான் உயிரோடு இருக்கும் வரை அமுல்படுத்த விடமாட்டேன்.

அதையும் மீறி யாரேனும் 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்களை வழங்கினால், இரத்தம் சிந்தியேனும் வீதியில் இறங்கி அந்த முயற்சியை முறியடிப்பேன்.

சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாச அதிகளவான ஆயுதங்களை புலிகளுக்கு வழங்கியிருந்தார்.

இதனால் நூற்றுக் கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து நான் இங்கு பேசப் போவதில்லை” என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1387970

அவர் வடக்கு கிழக்கு மட்டும்  வழங்குவதாக சொல்லவில்லை நாடு முழுவதும்  9  மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்றவர்   மேர்வின். செய்தியை வடிவாக. வாசிக்க வேண்டும்   சும்மா 20 வருடங்களுக்கு முன்பே சொன்னதை  கண்ணை மூடிக்கொண்டு சொல்லக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

கண்ணை மூடிக்கொண்டு சொல்லக்கூடாது 

இடம், காலம், கர்த்தா, எல்லாம் தெரியுது, கண்ணை மூடிக்கொண்டு தட்டை நீட்டினால் விழும் என்று எதிர்பார்ப்போர், தட்டில் விழுவதை தடுத்தால், எடுத்தால் கண்ணை விழித்துக்கொள்வர். யார் அதை செய்வது? இவர்களை அமர்த்துவதே, அதை செய்ய வேண்டியவர்களே இவர்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து கொண்டு இயங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

“சஜித் பிரேமதாச 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என வடக்கில் சஜித் கூறுகின்றார்.

இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியாது என  உண்மையிலேயே நினைக்கிறார்களா?

அல்லது தமிழ் மக்கள் முட்டாள்கள் என நினைக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, இவர்களை அப்படி பேசும்படி சொல்கிறார்கள்.

ஏற்கெனவே தமிழரின் இரத்தம் ஓடி குடித்தாயிற்று இனி என்ன புதிதாக ஓடப்போகிறது என்று பிதற்றுகிறார் இவர் போன்றவர்கள். தாங்கள் என்ன செய்தோம் என்பதை ஒப்புவிக்கிறார்கள் தங்களையறியாமலேயே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.