Jump to content

பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

trump-1.jpg?resize=750,375&ssl=1

பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும்  போட்டியிடவுள்ளனர்.

இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

இதன்போது குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1389828

Link to comment
Share on other sites

On 26/6/2024 at 07:02, தமிழ் சிறி said:

மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நேரம் ட்ரம்புக்குத் தேவைப்படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

இவ்வளவு நேரம் ட்ரம்புக்குத் தேவைப்படாது.

ஜேர்மன் தொலைக்காட்சிகளில் பைடன் தடக்குப்பட்டு  விழ்ந்த காட்சிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2024 at 13:02, தமிழ் சிறி said:

பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும்  போட்டியிடவுள்ளனர்.

என்னப்பா இந்தா பார் டொனால்ட் ரம்ப ஜெயிலுக்கு அனுப்புறம்....ஆளை தூக்கிறம் எண்டுச்சினம்.....இப்ப என்னடாவெண்டால்  நேருக்கு நேர் விவாதம் எண்டுறாங்கள். ஒண்டுமாய் விளங்குதில்லை.... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனை சீன வடகொரிய சர்வாதிகாரிகள் மதிப்பதில்லை – நேரடி விவாதத்தின் போது டிரம்ப் தெரிவிப்பு

Published By: RAJEEBAN    28 JUN, 2024 | 08:23 AM

image
 

யாரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உலகம் மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது  என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான நேரடி விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளை கடுமையாக சாடியுள்ள அவர் வடகொரிய ஜனாதிபதி, சீனா ஜனாதிபதி போன்ற வெளிநாட்டு சர்வாதிகாரிகள் பைடனை மதிப்பதில்லை அவரை பார்த்து அச்சப்படுவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜோ பைடன் நேட்டோவின் உறுப்புநாடு தாக்கப்பட்டதும் தான் நேட்டோவின் சரத்து ஒன்றை பயன்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தருணத்தில் அமெரிக்கா உலகிற்கு தேவைப்படுகின்றது. எங்கள் சமூகத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளதால் உலகின் ஒரு பகுதியை பாதுகாக்க நாங்கள் அவசியம் என பைடன் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புட்டின் தடையின்றி உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்ள அனுமதிப்பதே மூன்றாம் உலகத்திற்கு இட்டுச்செல்லும் என பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187135

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறிய பைடன் - கலக்கத்தில் ஜனநாயக கட்சியினர்

Published By: RAJEEBAN   28 JUN, 2024 | 11:26 AM

image
 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற நேரடி விவாதத்தின் போது ஜோ டைபனின் தடுமாற்றம் மிகுந்த பதில்களும் செயற்பாடுகளும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன.

சிஎன்என் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி தேர்தல் விவாதம் பைடனின் பிரச்சாரகுழுவினருக்கு பல  கேள்விகளிற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது பிரச்சார குழுவினர் பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

பைடனும் டிரம்பும் குடியேற்றவாசிகள், பொருளாதாரம், கருக்கலைப்பு உரிமை போன்றவை குறித்து விவாதித்தனர்.

பைடனின் மெதுவான ஆரம்பம் ஜனநாயக கட்சியின் சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ பைடனின் கரடுமுரடான குரலும்( உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்)பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நவம்பரில் பைடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் ஆய்வாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

குடியரசுக் கட்சியினரும் இதே விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை ஜனநாயக கட்சியினர் உடனடியாக ஜனாதிபதியின் பின்னாள் அணி திரண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/187160

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02-10.jpg?resize=750,375

ஜோ பைடனுக்கும் – டொனால்ட் ட்ரம்புக்கும் இடையேயான முதல்நாள் விவாதம் நிறைவு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையேயான முதல்நாள் விவாதம் நிறைவடைந்துள்ளது.

ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் கருக்கலைப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருந்தன.

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக கொண்டு இந்த விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கை பதிவுக்காக ஜோ பைடனை பலமுறை தாக்கி விவாதித்துள்ளார்.

மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1390102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

ஜோ பைடனின் கரடுமுரடான குரலும்( உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்)பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

 

 

பி.பி.சி. யே... பைடனுக்கு, அறளை பேர்ந்து விட்டது என கூறியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

பி.பி.சி. யே... பைடனுக்கு, அறளை பேர்ந்து விட்டது என கூறியுள்ளது. 

„Good Night, Joe!

https://www.bild.de/politik/ausland-und-internationales/us-medien-urteilen-vernichtend-gute-nacht-joe-biden-667e38a523778e6a23b2dd96

அமெரிக்க சம்பந்தன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ட்றம்புடன் நேரடி விவாதத்துக்குப் போகாமல்… பைடன் காய் வெட்டி திரிந்திருக்கலாம்.
இப்ப முழு மானமும் கப்பல்லை இல்லை ராக்கெட்டிலை ஏறி பறக்குது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது    இரண்டு வேட்பாளர்களும். வயோதிபர்கள். தான்   பைடனிடம். குறைபாடுகளுண்டு அதை சுட்டி காட்டுவது  மூலம் ரம்டபு. சிறந்தவர்  என்று நிறுவ முடியாது,.ரம்புடன். என்ன திறமைகளுண்டு.   ??  ரம்டபு உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும்   ஆனால் ஜேர்மனி   மொச்சிகோவில். காரை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கக்கூடாது     இது என்ன நியாயம்?? இரண்டு பேரும். ஒதுங்கி இருந்து  இளைஞர்கள்  போட்டி இட. ஊக்கப்படுத்தலாம் ஆலோசனைகளை வழங்கலாம்     🙏 இது பற்றி அமெரிக்கர்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ட்றம்புடன் நேரடி விவாதத்துக்குப் போகாமல்… பைடன் காய் வெட்டி திரிந்திருக்கலாம்.
இப்ப முழு மானமும் கப்பல்லை இல்லை ராக்கெட்டிலை ஏறி பறக்குது. 🤣

காய் வெட்டிக்கொண்டு திரிய இதென்ன கிந்தியாவே? 😂
பல ஊடகங்களில் அடுத்த அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என முடிவு கட்டிவிட்டார்கள் போலிருக்கின்றது.:cool:
நான் நினைக்கிறன் புரோ செலென்ஸ்கிக்கு இப்பவே வயித்தை கலக்க தொடங்கியிருக்குமெண்டு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது    இரண்டு வேட்பாளர்களும். வயோதிபர்கள். தான்   பைடனிடம். குறைபாடுகளுண்டு அதை சுட்டி காட்டுவது  மூலம் ரம்டபு. சிறந்தவர்  என்று நிறுவ முடியாது,.ரம்புடன். என்ன திறமைகளுண்டு.   ??  ரம்டபு உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும்   ஆனால் ஜேர்மனி   மொச்சிகோவில். காரை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கக்கூடாது     இது என்ன நியாயம்?? இரண்டு பேரும். ஒதுங்கி இருந்து  இளைஞர்கள்  போட்டி இட. ஊக்கப்படுத்தலாம் ஆலோசனைகளை வழங்கலாம்     🙏 இது பற்றி அமெரிக்கர்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்  🤣

இது உணமை, ஆனால் இனி யாராலும் அமெரிக்காவினை காப்பாற்ற முடியாது, ஏனென்றால் அவர்களை வேறு யாரும் அழிப்பதில்லை, அவர்களது எதிரிகள் வேறு யாருமல்ல அவர்களேதான். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

காய் வெட்டிக்கொண்டு திரிய இதென்ன கிந்தியாவே? 😂
பல ஊடகங்களில் அடுத்த அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என முடிவு கட்டிவிட்டார்கள் போலிருக்கின்றது.:cool:
நான் நினைக்கிறன் புரோ செலென்ஸ்கிக்கு இப்பவே வயித்தை கலக்க தொடங்கியிருக்குமெண்டு 🤣

செலன்ஸ்கி வெகுவிரையில் எல்லோராலும் கைவிடப்படும் நாள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது.. பிரான்சில் பிரித்தானியாவில் ஜேர்மனியில் அமெரிக்காவில் என முக்கிய வல்லரசு நாடுகளில் வலதுசாரிகள் கைகள் மேலோங்குகின்றன.. அவர்கள் உள்ளூர் மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள்.. இடதுசாரிகளும் நடு நிலைவாதிகளும் உள்ளூர் மக்களின் கஸ்ரங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்காமல் உக்கிரேனுக்கு பில்லியன்களில் அள்ளிவழங்கும் அறிவிப்பை வெளியிடும்போது எண்ணெய்க்கும் கரண்டுபில்லுக்கும் அல்லாடும் உள்ளூர் வெள்ளைகள் செம காண்டாகிறார்கள.. அனைத்து வலதுசாரிகளின் முக்கிய அறிவுப்புகளில் ஒன்று உக்கிரேன் போருக்கு ஆதரவு இல்லை என்பது..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?

அமெரிக்க அதிபர் தேர்தல் - நேருக்கு நேர் விவாதத்தில் பைடனும் டிரம்ப்பும் என்ன பேசினர்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குக் குறை இல்லை. மேலும், பைடன் அவ்வப்போது கம்மிய குரலில் பேசினார். இதனால், ஜனநாயக கட்சியினர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், “மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்ததாக,” பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், டொனால்ட் டிரம்ப், பைடனை பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27, வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் நடைபெற்றது.

ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொருளாதாரம்

பொருளாதாரம் சார்ந்துதான் இந்த விவாதம் தொடங்கியது.

விவாதத்தில் பணவீக்கம் பிரச்னை எழுப்பப்பட்டபோது, வேலை வாய்ப்பின்மையுடன் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே டொனால்ட் டிரம்ப் தனக்குக் கையளித்ததாகத் தெரிவித்தார் பைடன். அப்போது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் ‘சிறப்பாக’ இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறிய பைடன், அவருடைய ஆட்சிக் காலத்தில் நிலைமை “மோசமாக” இருந்ததாகக் கூறினார். “எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியிருந்ததாக” பைடன் கூறினார். அப்போது, “பெருங்குழப்பம்” என்ற வார்த்தையை அடிக்கடி பைடன் உபயோகித்தார்.

“டிரம்ப் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக” பைடன் தெரிவித்தார். அப்போது டிரம்ப், தான் மக்களுக்கு முன்பு இல்லாத வகையில் வரியை குறைத்ததாகக் கூறினார்.

 

ஆப்கானிஸ்தான் விவகாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?

பட மூலாதாரம்,REUTERS

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது குறித்தும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

டிரம்ப் ஆட்சிக் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சண்டையிட்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை கண்ணியம் மற்றும் பலத்துடன் திரும்பப் பெறத் தான் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், “அப்படைகளை (பைடன் ஆட்சிக் காலத்தில்) திரும்பப் பெற்றபோது அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அவமானகரமான நிகழ்வாக இருந்ததாகவும்” டிரம்ப் கூறினார்.

கொரோனா

கொரோனா பெருந்தொற்று விவகாரம் இந்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது.

கொரோனா காலத்தை டிரம்ப் எப்படி கையாண்டார் என்பது குறித்துப் பேசிய பைடன், அச்சமயம் “பெருங்குழப்பங்களுடன் கூடியது” எனக் குறிப்பிட்டார்.

“கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின்போது தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் பணத்தைச் செலவழித்தோம். இதனால், மிகுந்த அழுத்தத்திற்குள் நாங்கள் தள்ளப்படவில்லை. எல்லாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது” என்றார் டிரம்ப்.

எல்லைகள் குறித்த பிரச்னை

அமெரிக்க எல்லைகள் சார்ந்த கொள்கைகளில் பைடனை டிரம்ப் தாக்கிப் பேசினார்.

அப்போது, சிறைவாசிகள், மனநல சிகிச்சை மையங்களில் உள்ளவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் எல்லைகள் வாயிலாக நாட்டுக்குள் வருவதாக டிரம்ப் கூறினார்.

ஆனால், டிரம்ப் கூறுவதை ஆதரிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என பைடன் கூறினார்.

 

அமெரிக்கப் படையினர் மரணங்கள்

ஜோ

பட மூலாதாரம்,REUTERS

கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கப் படையினர் தன்னுடைய ஆட்சியில்தான் உயிரிழக்கவில்லை என பைடன் கூறினார்.

பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழுவின்படி, பைடனின் இந்தக் கூற்று தவறானது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

இதுதவிர, ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 13 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஐ.எஸ்-கே பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

போரில் உயிரிழக்கும் படையினர் குறித்த ஆய்வு அமைப்பு (Defense Casualty Analysis System) அளித்தத் தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 65 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

 

டிரம்ப் மீதான வழக்கு

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை விவாதத்தின்போது ஜோ பைடன் குறிப்பிட்டார்.

பைடன் கூறுகையில், “குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் இங்கு இருக்கிறார், அவரைத்தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார்.

டிரம்ப் ஒழுக்கமான நபர் அல்ல என பைடன் கூறினார். அதேநேநேரம், பைடனின் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.

 

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

காஸா குறித்த கேள்வி எழுகையில், முன்னாள் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் தன் வேலையை முடிக்க வேண்டும் எனக் கூறினார். பைடன் பாலத்தீனியராகவே மாறிவிட்டதாக டிரம்ப் கூறினார்.

மேலும், யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவுவது குறித்தும் டிரம்ப் எழுப்பினார். யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகள் குறைவாக செலவழித்துள்ளன என தெரிவித்தார்.

யுக்ரேனுக்கு உதவ அதிகமாக பணம் செலவழிக்குமாறு நேட்டா (NATO) நாடுகளுக்கு பைடன் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் டிரம்ப் கேள்வியெழுப்பினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்வீர்கள் என பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, போரை நிறுத்த ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் தெரிவித்தார்.

இஸ்ரேலின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய பைடன், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

 
ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS

இருவரும் எப்படி விவாதித்தனர்?

வட அமெரிக்கா குறித்து செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் விவாதம் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் இருந்ததாகக் கூறினார்.

வாக்குவாதம் செய்தல், மிகைப்படுத்தப்பட்ட பதில்களைத் தருவதிலிருந்து டிரம்ப் விலகியிருந்தார்55. ஏனெனில், கடந்த தேர்தல் விவாதத்தின்போது, இந்த விஷயங்கள் அவரை பலவீனமாக்கின.

டிரம்ப்பின் சில கூற்றுகள் முழுமையான தரவுகளின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், அவை முழுவதும் தவறான தகவல்கள் இல்லை. எனினும், டிரம்ப்பை பைடனால் மடக்க முடியவில்லை.

உதாரணத்திற்கு கருக்கலைப்பு குறித்த விவாதம் எழுந்தபோது, டொனால்டு டிரம்ப் அதை ‘ஜனநாயக (கட்சியினரின்) தீவிரவாதம்’ எனக் குறிப்பிட்டார்.

மேலும், பைடன் கட்சியின் தலைவர்கள் குழந்தைகள் பிறந்த பிறகு, கருக்கலைப்பை ஆதரிப்பதாக, தவறான தகவலைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பைடன் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதைச் செய்ய பைடன் தவறிவிட்டார்.

விவாதத்தின்போது பல நேரங்களில் பைடனின் குரல் கரகரப்பாக இருந்தது, இதற்கு கடந்த சில தினங்களாகவே அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவே காரணம் என, அவருடைய பிரசார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பைடன் விவாதத்தின்போது சில நேரங்களில் தடுமாறியதாகவும் அவருடைய வாதங்கள் தட்டையாக இருந்ததாகவும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தின் ஆரம்பத்தில் அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமற்றதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வயதைக் கடந்து தனக்கு போதிய ஆற்றல், வலு இருப்பதாக நிரூபிக்க பைடன் தவறிவிட்டார் என ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் மீண்டும் கிட்லர் ஆட்சி வேண்டாம் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள் 

வலதுசாரிகள் வளர்ச்சி உண்மை தான்  ஆனால் அவர்கள் ஜேர்மனியில் உள்ள 16  மாநிலத்தில்  ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியாது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டஙள். அங்கீகாரம்…………………… வழங்குவது. புண்டாஸ்  ராட். ஆகும்  இது 16 மாநிலத்திலிருந்தும்  முதலமைச்சர்  ...உள் நாட்டு அமைச்சர்   என்று இருவர் வீதமும். பிரதமர் ஐனதிபதி,[இவர் தான் தலைவர் ]35.  பேர் அளவில் அங்கம் வகிப்பார்கள். SPD.  CDU.  தான்  மாநிலத்தில் ஆள்வதுண்டு  தமிழ் சிறியின. மாநிலம்  GRUNE. கட்சி ஆள்கிறது  பையர் மாநிலம் CSU. ஆட்சி செய்யுது  இது CDU. இன். கூட்டணி கட்சி  மற்றைய எந்தவொரு கட்சியும். மாநிலங்களை ஆளவில்லை.முடியாது  இந்த வளர்ந்து வரும் வலதுசாரிகளும் ஒருபோதும் மாநிலங்களை ஆளப்போவதில்லை   மத்தியில் ஆளும் கட்சி  7 மாநிலங்களை  ஆள வேண்டும்  அப்போ தான்  சட்டம்களை இயற்றி அங்கீகரிக்க முடியும்   நடைமுறையில் வரும  இந்த வலதுசாரிகள் 25 %   மேல் வளரப்போவதில்லை.  எப்படி மாநிலத்தில் அல்லது மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

செலன்ஸ்கி வெகுவிரையில் எல்லோராலும் கைவிடப்படும் நாள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது.. பிரான்சில் பிரித்தானியாவில் ஜேர்மனியில் அமெரிக்காவில் என முக்கிய வல்லரசு நாடுகளில் வலதுசாரிகள் கைகள் மேலோங்குகின்றன.. அவர்கள் உள்ளூர் மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள்.. இடதுசாரிகளும் நடு நிலைவாதிகளும் உள்ளூர் மக்களின் கஸ்ரங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்காமல் உக்கிரேனுக்கு பில்லியன்களில் அள்ளிவழங்கும் அறிவிப்பை வெளியிடும்போது எண்ணெய்க்கும் கரண்டுபில்லுக்கும் அல்லாடும் உள்ளூர் வெள்ளைகள் செம காண்டாகிறார்கள.. அனைத்து வலதுசாரிகளின் முக்கிய அறிவுப்புகளில் ஒன்று உக்கிரேன் போருக்கு ஆதரவு இல்லை என்பது..

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎

அப்படி எனில் இலங்கையில் நடந்த     நடக்கும்   ஆட்சியாளர்கள் சரியானவர்கள் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎

வெள்ளையர்கள் உலக நாடுகளை அடிமைப்படுத்திய  காலம் தொடக்கம்  இன்று வரைக்கும் நாடுகளை கூறுபோட்டு இனங்களை அழித்து கொள்ளையடித்து  தங்கள் இராணுவங்களை நிறுவி அஜாரகங்கள் செய்தது/செய்வது வலதுசார கொள்கையுள்ள நாடுகளா அல்லது இடதுசார கொள்கையுள்ள நாடுகளா?   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது    இரண்டு வேட்பாளர்களும். வயோதிபர்கள். தான்   பைடனிடம். குறைபாடுகளுண்டு அதை சுட்டி காட்டுவது  மூலம் ரம்டபு. சிறந்தவர்  என்று நிறுவ முடியாது,.ரம்புடன். என்ன திறமைகளுண்டு.   ??  ரம்டபு உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும்   ஆனால் ஜேர்மனி   மொச்சிகோவில். காரை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கக்கூடாது     இது என்ன நியாயம்?? இரண்டு பேரும். ஒதுங்கி இருந்து  இளைஞர்கள்  போட்டி இட. ஊக்கப்படுத்தலாம் ஆலோசனைகளை வழங்கலாம்     🙏 இது பற்றி அமெரிக்கர்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்  🤣

அவர் சிறந்தவரா அல்லது இவர் சிறந்தவரா என்ற ஒப்பீடு இவர்கள் இருவருக்கும் இடையில் இல்லை என்று நினைக்கின்றேன். இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் அது சிறந்ததா அல்லது இது சிறந்ததா என்பதே நடுநிலையான வாக்காளர்களின் சிந்தனையாக இருக்கும். என்னுடையது அதுவே. நாட்டையே, அமெரிக்காவை மட்டுமே, முன்னிலைப்படுத்தியே இவர்கள் ஒரு பக்கம் சாய்வார்கள். பொதுவாக உலக நடப்புகள் வெறும் ஊறுகாய் மட்டுமே, வேறு எதுவுமே இல்லாவிட்டால் அதை கையில் எடுப்பார்கள்.   

இரண்டு கட்சிகளினதும் தீவிர ஆதரவாளர்களும், ட்ரம்பின் ரசிகர்களும் என்ன ஆனாலும் மாறப் போவதில்லை. 

பங்குச் சந்தை போன்றே இந்த நாடும். வல்லுநர்கள் ஏதேதோ சொல்வார்கள், ஆனால் நடப்பதோ வேறு ஒன்று. ஏற்கனவே இருக்கும் பொறிமுறையில், சில சின்ன மாற்றங்களுடன், தான் நாடு போய்க் கொண்டிருக்கும், ஆனாலும் ட்ரம்ப் வந்தால் குடியேறிய மற்றும் அகதிகளாக வந்த முதலாவது தலைமுறைக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கும். இனவாதம், தூய்மைவாதம் போன்றன வெளியில் வந்து நடனமிடும். விவேக் ராமசாமி போன்றும் பலர் முன்னே வருவார்கள். மாற்றுக் கருத்துகள் சொல்வார்கள். நாங்கள் சிரித்துக் கொண்டேயிருக்க நான்கு வருடங்கள் ஓடி விடும்.

இளைஞர்கள் இங்கு மெதுமெதுவாகவே முன்னுக்கு வரலாம். அவர்கள் அதி வேகத்தில் முன்னே வருவதற்கு இங்கு ஒரு வெற்றிடம் பொதுவாக ஏற்படுவதில்லை. ஏற்கனவே ஒரு அதிகார, பதவி வரிசை இரு கட்சிகளிலும் இருந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் இரு கட்சிகளிலும் இப்பொழுது அந்த வரிசை பலமாக இல்லை, முக்கியமாக ஜனநாயக் கட்சியில். கலிஃபோர்னியா கவர்னர், நியூசம், அடுத்த தலைவராகப் பார்க்கப்படுகின்றார். அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு இடதுசாரி, அது ஒரு பலவீனம். விவேக் தவிர வேறு எந்த இளையவரும் தொடுவானம் வரை இல்லை. விவேக்கை ஒருவரும், அவர் தவிர, பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நடைமுறை சாத்தியமற்ற அதிரடியான கருத்துகள் மூலம் கவனம் பெறுவார், வேறு எதுவும் இல்லை. 

Edited by ரசோதரன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

அவர் சிறந்தவரா அல்லது இவர் சிறந்தவரா என்ற ஒப்பீடு இவர்கள் இருவருக்கும் இடையில் இல்லை என்று நினைக்கின்றேன். இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் அது சிறந்ததா அல்லது இது சிறந்ததா என்பதே நடுநிலையான வாக்காளர்களின் சிந்தனையாக இருக்கும். என்னுடையது அதுவே. நாட்டையே, அமெரிக்காவை மட்டுமே, முன்னிலைப்படுத்தியே இவர்கள் ஒரு பக்கம் சாய்வார்கள். பொதுவாக உலக நடப்புகள் வெறும் ஊறுகாய் மட்டுமே, வேறு எதுவுமே இல்லாவிட்டால் அதை கையில் எடுப்பார்கள்.   

இரண்டு கட்சிகளினதும் தீவிர ஆதரவாளர்களும், ட்ரம்பின் ரசிகர்களும் என்ன ஆனாலும் மாறப் போவதில்லை. 

பங்குச் சந்தை போன்றே இந்த நாடும். வல்லுநர்கள் ஏதேதோ சொல்வார்கள், ஆனால் நடப்பதோ வேறு ஒன்று. ஏற்கனவே இருக்கும் பொறிமுறையில், சில சின்ன மாற்றங்களுடன், தான் நாடு போய்க் கொண்டிருக்கும், ஆனாலும் ட்ரம்ப் வந்தால் குடியேறிய மற்றும் அகதிகளாக வந்த முதலாவது தலைமுறைக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கும். இனவாதம், தூய்மைவாதம் போன்றன வெளியில் வந்து நடனமிடும். விவேக் ராமசாமி போன்றும் பலர் முன்னே வருவார்கள். மாற்றுக் கருத்துகள் சொல்வார்கள். நாங்கள் சிரித்துக் கொண்டேயிருக்க நான்கு வருடங்கள் ஓடி விடும்.

இளைஞர்கள் இங்கு மெதுமெதுவாகவே முன்னுக்கு வரலாம். அவர்கள் அதி வேகத்தில் முன்னே வருவதற்கு இங்கு ஒரு வெற்றிடம் பொதுவாக ஏற்படுவதில்லை. ஏற்கனவே ஒரு அதிகார, பதவி வரிசை இரு கட்சிகளிலும் இருந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் இரு கட்சிகளிலும் இப்பொழுது அந்த வரிசை பலமாக இல்லை, முக்கியமாக ஜனநாயக் கட்சியில். கலிஃபோர்னியா கவர்னர், நியூசம், அடுத்த தலைவராகப் பார்க்கப்படுகின்றார். அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு இடதுசாரி, அது ஒரு பலவீனம். விவேக் தவிர வேறு எந்த இளையவரும் தொடுவானம் வரை இல்லை. விவேக்கை ஒருவரும், அவர் தவிர, பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நடைமுறை சாத்தியமற்ற அதிரடியான கருத்துகள் மூலம் கவனம் பெறுவார், வேறு எதுவும் இல்லை. 

உங்கள் பதில்களுக்கு நன்றி பல. நான் முன்பு வாசித்து உள்ளேன்    ட்ரம்பு  அமெரிக்கா படைகளை அனுப்ப வேண்டும்  எனக் கோரிக்கை விடுத்த போது   பென்டகன் தலைவர் மறுத்து விட்டார்  .....பென்டகன்.  விரும்பிய போது போர் நடந்து உள்ளது   அமெரிக்கா ஐனதிபதி பதவி பொம்மை பதவியா??? அவர்கள் விரும்பியதை செய்ய முடியுமா?? அல்லது பென்டகன். விரும்பியதை செய்ய வேண்டுமா??. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது  

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

உங்கள் பதில்களுக்கு நன்றி பல. நான் முன்பு வாசித்து உள்ளேன்    ட்ரம்பு  அமெரிக்கா படைகளை அனுப்ப வேண்டும்  எனக் கோரிக்கை விடுத்த போது   பென்டகன் தலைவர் மறுத்து விட்டார்  .....பென்டகன்.  விரும்பிய போது போர் நடந்து உள்ளது   அமெரிக்கா ஐனதிபதி பதவி பொம்மை பதவியா??? அவர்கள் விரும்பியதை செய்ய முடியுமா?? அல்லது பென்டகன். விரும்பியதை செய்ய வேண்டுமா??. 

இது ஒரு பொம்மை பதவி இல்லை. ஆனால், கூட்டுப் பொறுப்பின் ஒரு பகுதியே அரச தலைவர். உலகமகா யுத்தங்கள் போன்ற விதிவிலக்குகள் தவிர, எந்த முடிவும் பலராலேயே எடுக்கப்படும். ஒவ்வொரு துறைக்கும் செனட் கமிட்டி என்று ஒன்று உள்ளது. அவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். 20, 30, 40 வருடங்களாக செனட் பதவிகளில் இருப்பவர்கள். அதை விட பாதுகாப்பு, இராணுவம், உளவு என்று பல அதிகார மையங்கள் உள்ளது. வெளி உலகத்திற்கே இன்னும் தெரியாத சில மையங்கள் அல்லது அதிகாரங்கள் கூட இருக்கக்கூடும். அரச தலைவர் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவே முடியாது, விதிவிலக்கான பெரும் நெருக்கடி காலங்களைத் தவிர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

🤣.........

நீங்கள் ஒரு வக்கீல் ஆகியிருக்க வேண்டியவர்....

எங்கிருந்து கட்டளைகள் எங்கு போகின்றன என்பது முக்கியம் என்று நினைக்கின்றேன். 

என்னுடைய அனுமானத்தின் பிரகாரம், ரஷ்யா மற்றும் அது போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்தே ஆரம்பிக்கின்றது. ஆரம்பகட்ட தகவல்களை அவர் பலரிடமிருந்து அல்லது நம்பிக்கையான ஒரு சிலரிடமிருந்தோ பெற்றுக் கொள்வார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை. அவர் ஓரளவு பின்னரேயே கலந்து ஆலோசிக்கப்படுவார். இறுதி முடிவில் அவரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

கிட்டத்தட்ட இங்கு தனியார் நிறுவனங்களும் இப்படியே நடத்தப்படுகின்றன. 

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

அரச தலைவர் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவே முடியாது, விதிவிலக்கான பெரும் நெருக்கடி காலங்களைத் தவிர.

ரொம்ப நன்றி   🙏. புரிந்தது     வாழ்த்துக்கள் 

11 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய அனுமானத்தின் பிரகாரம், ரஷ்யா மற்றும் அது போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்தே ஆரம்பிக்கின்றது.

கிட்டத்தட்ட இலங்கை   இந்தியா  போன்றது 

27 minutes ago, குமாரசாமி said:

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

புட்டின். தனி மனித ஆட்சி    அதாவது மன்னர் ஆட்சி      அமெரிக்கா அப்படியில்லை   பல. தடைகளுண்டு அந்த தடைகளை உடைத்து அல்லது தாண்டி தான்   ஒரு விடயத்தை நிறைவேற்ற வேண்டும்    

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை.       பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார்.  அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை.  காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள்.  தீவு தேசத்தின் பசுமையை ரம்மியமாகப் படம் பிடித்திருக்கிறது ராஜிவ் ரவியின் கேமரா கண்கள். வலிந்து திணிக்கப்படாத காட்சிகளுக்குச் சரியான வேகத்தினை கொடுத்து யதார்த்தினை உறுதி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத். தனிமையில் இயற்கையுடன் அமர்ந்து பேசுகிற விதமாக ஒளி வடிவமைப்பு கச்சிதமாகச் செய்யப்பட, அதில் தேவைக்கேற்ப ‘கே’யின் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறது. காவல்நிலையம், ஹோம் விடுதிக்குள் பணியாட்கள் தங்குமிடம் எனக் கலை இயக்கத்தில் தம்மிக்கா ஹேவாடுவத்தாவின் மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது.  படம் ஆரம்பித்ததிலிருந்தே உலக சினிமாவுக்கான இலக்கணத்தின் படி மிதமான வேகத்தில் எதார்த்த திரைமொழியைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. ஒருபுறம் இலங்கையில் நடக்கும் சமகால பிரச்னையை மையமாக வைத்து ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற படம், மறுபுறம் மனித மனங்களில் மண்டி கிடக்கும் கசடுகளைத் தூர் செய்கிறது. பல அடுக்குகளை உருவகமாக வைத்து நகரும் காட்சிகளில் ராமாயணம், மான் ஆகியவற்றைப் பயன்படுத்திய விதத்தில் இயக்குநர் பிரசன்ன விதானகே பார்வையாளர்களுக்குப் பலப்பரீட்சை நடத்துகிறார். அதனால் படம் முடிந்த பின்னரும் ஒவ்வொரு காட்சியாக நாம் மீண்டும் அசை போடத் துவங்குகிறோம். இந்த உரையாடலே படைப்புக்கான வெற்றி எனக் கருதலாம்.  “நான் சோகமாக இருக்கவேண்டுமென்று நீ நினைக்கிறாயா”, “மனித உயிரோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டுதான்” போன்ற வசனங்கள் போகிற போக்கில் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதிலும் “சீதையே ராவணனைக் கொல்லும் ராமாயணம் உட்பட 300க்கும் மேற்பட்ட ராமாயண வெர்ஷன்கள் இங்கே இருக்கின்றன”, “சந்தேகப்படும் ராமனை அக்கினி பரீட்சையில் வெல்கிறாள் சீதை” என்று பேசப்படும் வசனங்கள் இறுதிக் காட்சிக்கான குறியீடாக நம் மனதில் பதிகிறது. அதே போலக் கதையில் பேசப்பட்ட விஷயங்களைப் பெண் மையபார்வையில் அணுகியதற்கும், அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களை அதிகாரம் என்ன செய்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியதற்கும் படக்குழுவுக்குப் பாராட்டுக்கள்.  பதற்றமான சூழலில் மனிதன் தன்னை எந்த நிலையில் வெளிப்படுத்துகிறான் என்பதை, ஒரு நாட்டின் பதற்ற சூழலை வைத்துப் பின்னியிருக்கும் இறுதிக் காட்சி நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறைய வைக்கிறது. சில இடங்களில் பொறுமையாக நகரும் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன என்றாலும், அந்த நிதானத்தைத்தான் படைப்பாளர் நம்மிடம் விரும்புகிறார் என்கிற இடத்தில் இந்தப் படம் நிஜமாக ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது.  மொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் நம் அக உணர்வுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் இந்த `பேரடைஸ்', ஒரு பெண்ணின் பார்வையில் `எது சொர்க்கம்’ என்ற கேள்வியை முன்வைத்து, படத்தில் வரும் வசனம் போலவே மற்றொரு ராமாயண பதிப்பாக நம் மனதில் ஆழமாகப் பதிகிறது.   https://cinema.vikatan.com/mollywood/darshana-rajendran-and-roshan-mathews-paradise-movie-review?pfrom=home-main-row
    • ராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2024, 13:47 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.” 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார். தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது. இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது. 'ரோஷக்காரர்' டிராவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார். எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார்.   இந்திய வீரராக வெற்றி டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES வரலாற்றுச் சாதனை டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை. இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார். பயிற்சியாளர் அவதாரம் 2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார். அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   டிராவிட்டின் பட்டறை பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார். அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும். வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான். இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர் இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது. சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES இறுதிப்போட்டிகளில் தோல்வி 2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது.   டிராவிட் காலம் பொற்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான். ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார். https://www.bbc.com/tamil/articles/cn09d9rjrldo
    • முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த தெரிந்தவர்களின் தென்னந்தோப்புகளில் குடியேறினர்.அத்தோடு முல்லைத்தீவு ,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,இன்னும் எங்கெங்கெல்லாமோ சென்று வாழ முற்பட்டனர் அகதிகளான மக்கள். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இதயபூமியை சிங்களமயமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த எண்ணி இராணுவம் கொக்கிளாய்ப்பாடசாலையை இராணுவமுகாமாகமாற்றி முல்லை திருகோணமலை இராணுவப்போக்குவரத்திற்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் பெரும் பலத்தை ஏற்படுத்தியது. கொக்கிளாய் இராணுவமுகாம் அகற்றப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தவிடுதலைப்புலிகள் அதனைத்தாக்கியழிக்க முடிவெடுத்தனர்.இத்தாக்குதலுக்கு மக்களும் பலவழிகளில் புலிகளுக்கு உதவினர். 1985.2.13 அன்று அதிகாலைநேரம் கொக்கிளாய் முகாமின்மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். நேர்த்தியான வேவின் பின் மணலாற்றுக்காட்டின்வழியே சென்ற தாக்குதலணி துணிச்சலுடன் முகாமைப் பலமாகத்தாக்கியது.இத்தாக்குதலை எதிர்பார்த்திராத இராணுவம் நிலைகுலைந்துபோனது.இத்தாக்குதலே தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவமுகாம்மீதான முதலாவது தாக்குதலாகும்.இதன்போது 16 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்கள்.அவர்களிற் பலரின் வித்துடல்களை மீட்கமுடியவில்லை.அக்காலப்பகுதியில் இவ்வீரச்சாவுகள் விடிவுக்கு முந்திய மரணங்களாக மக்களால் நினைவுகொள்ளப்பட்டன.இத்தாக்குதலால் இலங்கை இராணுவம் இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. லெப்டினன்ட் சைமன் கனகரத்தினம் ரஞ்சன் பொத்துவில், அம்பாறை வீரப்பிறப்பு:20.09.1956 லெப்டினன்ட் பழசு முதுங்கொடுவ உடுகமகே கேமசிறி பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.10.1963 வீரவேங்கை கெனடி கனகசபை வில்வராசா கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:19.04.1961 வீரவேங்கை காந்தரூபன் பொன்னையா சந்திரகுமார் கல்லடி, மட்டக்கள்ப்பு. வீரப்பிறப்பு:30.07.1964 வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்) சண்முகராசா பிரபாகரன் லிங்கநகர், திருகோணமலை. வீரப்பிறப்பு:26.01.1963 வீரவேங்கை காந்தி கந்தையா பரமேஸ்வரன் தம்பலகாமம், திருகோணமலை வீரப்பிறப்பு:17.08.1956 வீரவேங்கை ரவி நமசிவாயம் தர்மராஜா செம்மலை, அளம்பில், மணலாறு. வீரப்பிறப்பு:02.10.1964 வீரவேங்கை வேதா கனகு இராசநாயகம் சங்கத்தடி, கண்டாவனை, பரந்தன், கிளிநொச்சி வீரப்பிறப்பு:30.10.1959 வீரவேங்கை ரஞ்சன்மாமா பொன்னையா சண்முகநாதன் கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி. வீரப்பிறப்பு:16.10.1951 வீரவேங்கை காத்தான் துரைச்சாமி சிறீமுருகன் குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி. வீரப்பிறப்பு:05.03.1961 வீரவேங்கை மயூரன் குணசிங்கராசா துவாரகன் மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.02.1967 வீரவேங்கை சொனி சதாசிவம் அன்ரனி நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:03.01.1964 வீரவேங்கை தனபாலன் தியாகராசா வரேந்திரன் காரைநகர், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:30.09.1965 வீரவேங்கை சங்கரி செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:01.06.1962 வீரவேங்கை மகான் கதிரவேலு செல்வராசா கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:22.05.1962 வீரவேங்கை நிமால் கந்தையா ஜெயந்தன் தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:22.03.1966   http://irruppu.com/2021/02/13/கொக்கிளாய்-இராணுவமுகாம்/
    • 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் . அதாவது வடமராட்சியிலிருந்து பலாலி விமானப்படைத்தளத்திற்க்குச் சென்று அங்கு விமானங்கள் பற்றியும் இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் பற்றிய வேவுத்தகவல்களை துல்லியமாகச் சொன்னவர்.அந்நடவடிக்கைகளில் ஒரு தடவை காவலரனை எட்டிப்பார்க்கும் பொழுது காவலரனில் உள்ள இராணுவத்தினன் சத்தம் கேட்டு ரோச் லயிற் அடிக்க இவன் அந்த லயிற்றை பறித்ததும் எதிரி ரவையால் பொழிந்து தள்ளினான்.இப்படியாக பல சம்பவங்கள் உண்டு. 1992.11.24 அன்றைய தினம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொண்டமானறு முதல் ஒட்டகப்புலம் வரையான சுமார் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையின் பிரதான பங்காளனான இவன் 11.11.1993ம் ஆண்டு பூநகரி முகாம் தகர்ப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக மேற்கொள்ளப்படவிருந்த பலாலி விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கும் இவனது பங்களிப்பு முக்கியமானதாக இருந்து. இயக்கத்தில் இருந்த காலத்தில் இராணுவத்திற்க்குள்ளே நீண்டகாலமாக இருந்தான் அதன் பின்னர் பூநகரி முகாம் மீதான வேவு நடவடிக்கையில் 01.03.1994 அன்று வீரச்சாவடைந்தான். கப்டன் கந்தையா (அபிமன்யு) தியாகராசா ஞானவேல் மயிலிட்டி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 28.10.1973 வீரச்சாவு 01.03.1994   http://irruppu.com/2021/03/01/கப்டன்-கந்தையா-அபிமன்யு/
    • வட மாகாணத்துக்கு 3ஆவது நேரடி தங்கம் 30 JUN, 2024 | 01:04 PM   (யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து நெவில் அன்தனி) யாழ். துரையப்பபா விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. மத்திய மாகாணத்துக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிக இலகுவான 3 வாய்ப்புகள் உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்ட வட மாகாணம், 19 வயதான கோல் காப்பாளர் ஆர்ணிகன் 3 பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. போட்டியின் ஆரம்பத்தில் மிகத் திறமையாக விளையாடிய வட மாகாண அணி ஒரு சில கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. ஆனால், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து பரிமாறப்பட்ட பந்தை கே.ஜீ.ஏல்.டி. (தில்லின) பிரேமச்சந்த்ர கோலினுள் இலாவகமாக புகுத்தி மத்திய மாகாணத்தை முன்னிலையில் இட்டார். அதன் பின்னர், கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த வட மாகாண அணிக்கு அடுத்தடுத்து 4 கோர்ணர் கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் கோல் போட முடியாமல் போனது. இடைவேளையின்போது மத்திய மாகாண அணி 1 - 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் முழு ஆதிக்கம் செலுத்திய வட மாகாணம் எதிரணியின் கோல் வாயிலுக்கு அருகாமையில் இருந்தவாறு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. வின்சென்ட் கீதன், செபமாலை நாயகம் ஞானரூபன், நிதர்சன், மாற்று வீரர் பிரேமகுமார் ஆகியோர் மிக இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். இதனால் வட மாகாணத்துக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற கருத்து நிலவியது. ஆனால், போட்டியின் உபாதையீடு நேரத்தில் வின்சென்ட் கீதன் கோல் நிலையை சமப்படுத்தி வட மாகாண அணிக்க்கு நம்பிக்கையைக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால், போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இதனையடுத்து, வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டி முறையில் வட மாகாணம் 6 - 5 என வெற்றிபெற்று தங்கப் பதக்கதை மூன்றாவது நேரடித் தடவையாக சுவீகரித்தது. ஆட்டநாயகனாக எஸ். ஆர்ணிகன் தெரிவானார். 2019இல் செபமாலைநாயகம் ஞானரூபன் தலைமையிலும் 2023இல் செபமாலை நாயகம் ஜூட் சுபன் தலைமையிலும் இந்த வருடம் எம். என். நிதர்சன் தலைமையிலும் வட மாகாணம் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. 2020, 2021, 2021 ஆகிய வருடங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த வருடம் மத்திய மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் தென் மாகாணம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. வட மாகாண அணி எம்.என். நிதர்சன் (தலைவர்), எஸ். ஞானரூபன், எஸ். ஜூட் சுபன், வின்சென்ட் கீதன், ஏ. ஜெயராஜ், வி. விக்னேஷ், ரி. கஜகோபன், எஸ். ஆர்ணிகன் (கோல்காப்பாளர்), என். அன்தனி ரமேஷ், ஏ. டிலக்ஷன், கஜமாதன், எம். பிரேமகுமார், ஜே. ஜோன்ராஜ், எம். ஜே. குயின்டன், பி. சுதேசன், ஏ. ரி. தீபன், எம். எஸ். கிரிஷா, ஜே. ஏ. ஜெரிசன், எஸ். மதிவதனன், எஸ். சிந்துஜன். பெண்கள் பிரிவில் மேல் மாகாணம் தங்கப் பதக்கத்தையும் வடமேல் மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் சப்ரகமுவ வெண்கலப் பதக்கதையும் வென்றன. https://www.virakesari.lk/article/187308
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.