Jump to content

சம்பந்தர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திருகோணமலையில் ஏற்கனவே இருந்த பாஉ ஆக இருந்த நேமிநாதன் எந்தவித செயற்பாடும் இல்லாதவர்... அதுபோலவே சம்பந்தனும் செயல் திறன் அற்ற மனிதர்... தான் ஆளுமையில் இருக்கும்போதே இன்னொரு தலைவரை திருகோணமலைக்கு அடையாளம் காட்டி தூக்கி விட்டிருக்கவேண்டும்.. 70 வருடங்களாக அசையாமல் இருக்கும் தலைவர்கள் சொல்வது மட்டுமே சரி என்ற சிந்தனை மட்டுமே இப்போது வரை தொடர்கிறது மாற்று சிந்தனைகள் இல்லாமே போய்விடுகிறது , புதிய இளம் தலைவர்கள் உருவாகாமலே போய்விட்டது ஆயுத போராட்டத்திலும் ஐனநாயக போராட்டத்தலும் இடம்பெற்ற மிகப்பெரிய பிழை...இதை அடுத்த தலைமுறை தலைவர்களாவது சரிசெய்ய வேண்டும்... 

போராட்ட காலத்திலும் ...... விடுதலைப்புலிகள் சம்பந்தனுக்கு தகுந்த மரியாதை கொடுத்தே வைத்திருந்தனர்.

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு  பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும்.

இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம்.

என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை.

பேச்சு வன்மை குறைந்தும்  சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.

 

மக்கள் ஏன் அவருக்கு பல தடவைகள் வாக்களித்து வெற்றியடைய வைத்தார்கள்? அவர் சுயநலமானவர் என உங்களைப்போல் அவர்களால் இனம்காண முடியாமல் போய்விட்டதா?

எங்கள் சமூகம் சுயநலம் பாராமல் இயங்குகின்றது என்பதை நான் நம்பிவிட்டேன். எங்கள் சமூகத்தில் உள்ள பல்வேறு துறைசார் நிபுணர்கள் சுயநலம் பாராமல் சமூக முன்னேற்றத்தை மட்டும் முன்னிருத்தி சேவை ஆற்றுகின்றார்கள் எனவும் நான் ஊகிக்கின்றேன். 

எங்கள் சமூகத்தில் இல்லாத ஒன்றை சம்மந்தர் மூலம் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

தன்னை காப்பாற்ற முடியாதவன் சமூகத்தை காப்பாற்ற முடியுமா?

என்னைப்பொறுத்தவரை சம்பந்தர் ஐயா தலையில் வைத்து கொண்டாடப்படவேண்டிய ஒரு அரசியல்வாதி இல்லை.  அதேசமயம் தூற்றப்படவேண்டிய ஒருவரும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...

அதில் என்ன பிழை உண்டு??? முயற்சிகள் செய்தார்கள்,தோல்வி கண்டார்கள்.  .....தோல்விக்கு அவர்கள் காரணம் இல்லை,......பிரபாகரன் கூட முயற்சிகள் செய்தார் தோல்வி கண்டார்   தோல்விக்கு அவர் காரணமில்லை   🙏.   

குறிப்பு,..இது கருத்து களம்.  பலரும் பல கருத்துகள் எழுதுவார்கள்   பச்சை தண்ணீர் அருந்துங்கள்.  கடுப்பு வாராது 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

ஹிட்லருக்கு  உங்களால் வெளிப்படையாக அஞ்சலி செலுத்த முடியுமா?

இது தேவையற்ற அறிவற்ற. கேள்விகள்,......ஹிட்லர்.  உலகையே ஆட்டிப் படைத்தவர்   இரண்டாவது உலகப் போர் வரக் காரணம் ஆனவர்  சம்பந்தர்   திருகோணமலையில் தான் விரும்பியதை செய்ய முடியாதவர்  இரண்டுமே எப்படி ஒப்பிட முடியும்??  ஆறு தடவைகள் தமிழ் மக்கள்  பிழை விட்டுள்ளார்கள். ...அந்த தமிழ் மக்களை திருத்த முயற்சி செய்யுங்கள்   🙏🤣

49 minutes ago, பெருமாள் said:

அவர்கள் தானே தமிழருக்கு தீர்வு வாங்கி தருவம் என்று உங்க ஆட்கள் கோதாவில் உள்ளனர் அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்க .😁

இவர் மட்டுமல்ல  எல்லோரும் தீர்வு வேண்டித் தரமுடியும்.  என்று தான் சொன்னார்கள்   ஆனால்  இவரை மட்டுமே ஏன்   ஒரு தடவையல்ல ஆறு தடவைகள் தெரிவு செய்ய வேண்டும்????  

குறிப்பு,.....விவாதத்தை நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பு தருங்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

இது தேவையற்ற அறிவற்ற. கேள்விகள்,.....

Quote

நல்லவன் கெட்டவன். துரோகி ......யார் இறந்தாலும் செலுத்துவது அஞ்சலி  அது தமிழரின் குணம் பண்பு  

தங்கள் கருத்திற்கு இடப்பட்ட கேள்விகளே தவிர வேறொன்றும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

சம்பந்தன் திருகோணமலையில் இன்னொரு புதிய அரசியல் பிரதிநிதித்துவம் வருவதற்குத் தடையாய் இருந்த ஒருவர்...பத்து வருசத்துக்கு முதலே செய்திருக்கவேண்டியது...தன் மூப்பு தெரிந்து கடந்த தேர்தலில் ஆவது சம்பந்தன் போட்டியிட்டிருக்ககூடாது...திருகோணமலையில் ஏற்கனவே இருந்த பாஉ ஆக இருந்த நேமிநாதன் எந்தவித செயற்பாடும் இல்லாதவர்... அதுபோலவே சம்பந்தனும் செயல் திறன் அற்ற மனிதர்... தான் ஆளுமையில் இருக்கும்போதே இன்னொரு தலைவரை திருகோணமலைக்கு அடையாளம் காட்டி தூக்கி விட்டிருக்கவேண்டும்.. 70 வருடங்களாக அசையாமல் இருக்கும் தலைவர்கள் சொல்வது மட்டுமே சரி என்ற சிந்தனை மட்டுமே இப்போது வரை தொடர்கிறது மாற்று சிந்தனைகள் இல்லாமே போய்விடுகிறது , புதிய இளம் தலைவர்கள் உருவாகாமலே போய்விட்டது ஆயுத போராட்டத்திலும் ஐனநாயக போராட்டத்தலும் இடம்பெற்ற மிகப்பெரிய பிழை...இதை அடுத்த தலைமுறை தலைவர்களாவது சரிசெய்ய வேண்டும்... 

ஆம் உண்மை தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

சம்பந்தர்   திருகோணமலையில் தான் விரும்பியதை செய்ய முடியாதவர்

அப்படியாகின் ஏன் சாகும் வரைக்கும் பதவி வகித்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தங்கள் கருத்திற்கு இடப்பட்ட கேள்விகளே தவிர வேறொன்றும் இல்லை. 

அது உங்கள் விருப்பம்  உங்கது சுதந்திரமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

குறிப்பு,..இது கருத்து களம்.  பலரும் பல கருத்துகள் எழுதுவார்கள்   பச்சை தண்ணீர் அருந்துங்கள்.  கடுப்பு வாராது 🤣😂

அப்படியா!!!!?
பலே...பலே  👈🏽 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அப்படியாகின் ஏன் சாகும் வரைக்கும் பதவி வகித்தார்?

சரியான கேள்வி,.....ஆனால் இந்த கேள்விக்குள். இன்னொரு கேள்வி ஒளித்து  ....மறைந்து உள்ளது அதுவும் நீங்கள் கேட்ட கேள்வி தான்   ....அதாவது தமிழ் மக்கள் சாகும்வரை இவரை ஏன் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ???  உங்களை அறியாமல்,.தெரியாமல் கேட்டு விட்டிருக்கலாம்…  பதில் சொல்லுங்கள் 🙏🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சரியான கேள்வி,.....ஆனால் இந்த கேள்விக்குள். இன்னொரு கேள்வி ஒளித்து  ....மறைந்து உள்ளது அதுவும் நீங்கள் கேட்ட கேள்வி தான்   ....அதாவது தமிழ் மக்கள் சாகும்வரை இவரை ஏன் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ???  உங்களை அறியாமல்,.தெரியாமல் கேட்டு விட்டிருக்கலாம்…  பதில் சொல்லுங்கள் 🙏🤣

தனிநாடு எனும் தாரக மந்திரம்.ஈழ மக்கள் மனதில் ஊறிவிட்ட தாகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

தனிநாடு எனும் தாரக மந்திரம்.ஈழ மக்கள் மனதில் ஊறிவிட்ட தாகம்.

உண்மை  சரியான பதில்   பதிலுக்கு நன்றிகள் பல.  🙏 மீண்டும் சந்திப்போம் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

பொறுப்பு கூறவேண்டியவர்கள் ஆயுதங்களுடன் மெளனித்துவிட்டார்கள். 

மூழ்கிய கப்பலுக்கு சம்பந்தரை கப்டனாக போட்டுவிட்டு கப்பலை சரியாக ஓட்டவில்லை என குறை கூறலாமா?

நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

செய்யவில்லை   முடியவில்லை ஆனால் தொடர்ந்து உழைந்தார். பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ரணில் எழும்பி வெளியில் போ என்ற போதும் கூட  இருந்து பேச்சுவார்த்தை நடத்தினார்   அரசாங்கம்கள்.  தரவில்லையென்றால் என்ன செய்ய முடியும்??? உங்களை பாராளுமன்றம் அனுப்பினால்   சிங்கள குடியோற்றத்தை   நிறுத்துவிர்களா?? எப்படி?? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? 

இங்குதான் முக்கிய .   நான் என்ன எழுதுவது என்பதை உங்களால் கிரக்கிக்க முடியாது எனும் வன்மம் .

இங்கு புலிகளோ அல்லது சம்பந்தரே இனவாத சிங்களவரிடம் தீர்வு என்பது கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும் .

ஆனால் தமிழர் இனவழிப்பு அரசுகளை காப்பாற்றினார் அந்த .......... மகனுக்கு எப்படி மரியாதை அழிப்பது ?

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

மக்கள் ஏன் அவருக்கு பல தடவைகள் வாக்களித்து வெற்றியடைய வைத்தார்கள்? அவர் சுயநலமானவர் என உங்களைப்போல் அவர்களால் இனம்காண முடியாமல் போய்விட்டதா?

ஆசிய அரசியல் அறிவுகள் கொஞ்சம் வித்தியாசனமானவை.அதாவது இந்தியா மற்றும் அதனை சுற்றியிருக்கும் வால் நாடுகள். இவர்களிடம் உணர்ச்சி அரசியலை தவிர எதிர்கால சிந்தனை அரசியல் அறிவு அறவே இல்லை.  அந்த அறிவு இருப்பவர்கள் கூட காலக்கட்டாயத்தின் பேரில் சேர்ந்து வாழவேண்டிய கட்டாயம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍

கனக்க குதூகலிக்க வேண்டாம் இலங்கையின் வெளிநாட்டு முதலீடு என்ற வகையில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்கள் மூலமும் புலிகளின் பணம் வெளிநாடுகளில் முதல் இடப்பட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍

முடியா விட்டால் பொத்தி  கொண்டு இருந்திருக்கணும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...

சம்பந்தன்ர செத்த வீட்டோட இலங்கையில உள்ள தமிழின தலைவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் ஒரு கூட்டுக்குள் வர வேண்டும்.

இது கட்டளை அல்ல.  இது தமிழின தலைவர்களினது கூத்தாட்டத்தின் விளைவாக வந்த சிந்தனை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

முடியா விட்டால் பொத்தி  கொண்டு இருந்திருக்கணும் ?

உண்மைதான். முடியாவிட்டால் பொத்தி கொண்டு இருந்திருந்தால் முள்ளிவாய்கால் பேரழிவே நடந்திருக்காது.

இது உங்கள் கூற்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2024 at 05:23, தமிழ் சிறி said:

அடுத்த தீபாவளிக்குள்  தீர்வு, அடுத்த பொங்கலுக்குள் தீர்வு என்று சொல்லிச் சொல்லி.

  சொன்ன வாக்கை நிறைவேற்றாமலேயே ஒரு சரித்திரம் மறைந்துவிட்டது. எத்தனை தாகம் இருந்திருக்கும் அவருக்குள்? இழந்தவை போக மிஞ்சியவையையும் தக்க வைக்க முடியவில்லை, தான் கொண்டுவந்த ஓணானை விரட்டவும் முடியவில்லை, அணைக்கவும் முடியவில்லை. வேறொரு தலைவரை உருவாக்கி தன் வெற்றிடத்தை நிரப்ப முயலவில்லை,  தமிழ்த் தேசியம் எனும் குதிரையில் பலதடவை சவாரி செய்து சலித்து சென்றுவிட்டார். போய் அமைதியில் இளைப்பாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நாட்டிற்க்கு போயிருந்தபோது என்னோடு படித்த ஒரு முஸ்லீம் நண்பன் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் பிரச்சார பீரங்கி. படிக்கும் காலத்தில் படு மொக்கு, சாதாரண தரம் கூட குதிரையோடி சித்தியடைந்து முஸ்லீம் மந்திரிகளின் கைகளில் கால்களில் விழுந்து நீதிமன்று இலிகிதராக உள்ளான். 
எதோ ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறதே என்று சும்மா வாகனத்தை ஒடித்து எதேச்சையாக நோட்டம் விட்டேன் 
பேச்சைக்கேட்டு ஒரு நிமிடம் விதிவிதிர்த்து போய்விட்டேன். தமிழே எழுதவராத பேசவராத ஒருவனிடம் எப்படி இந்த மொழி ஆளுமை என்று. ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது எங்கே, எப்படி எப்போதெல்லாம் கோட்டைவிட்டோம் என்று. அத்துடன் கல்முனை தமிழ் பிரதேச சபை முன் வழமை போல தலையில் பட்டியை கட்டிக்கொண்டு "மாரித்தவக்கை" சான்ஸ், கூத்தமைப்பு  உபயத்தில் கூட்டமாய் உட்கார்ந்துகொண்டு பதாகை பிடித்துக்கொண்டு இருக்கினம். பிரதேசபை தரமுயர்த்தபடுகுதோ இல்லையோ கனடாவில் அசைலம் அடிக்க எடுக்கும் படங்கள் உதவும் போல.
அப்புறம் ஓட்டை விழுந்த கப்பலின் கேப்டன் தத்தா நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறார். அவரால் ஒன்றும் கிழித்திருக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க கடலில் இறங்கி தள்ளுங்கள் அடுத்த பொங்கலுக்கு தீபாவளிக்கு கரைசேர்ப்பேன் என்று வாயால் வடை சுடாமலாவது இருந்திருக்கலாம்.
தாத்தாவின் இழப்பு ஒருவகையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும், தாத்தா குத்தி குத்தி உடைத்த மேசைகளை இழப்பீடு செய்யப்போய் ஒட்டுமொத்த இலங்கையும் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டி வந்தது. இனி வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பயமில்லாமல் இலங்கை வந்து கூத்தமைப்பானுகளோடு கூத்தடிக்கலாம் மேசையில் குத்தி பயம் காட்ட தாத்தா இல்லை.
போய் வாருங்கள்  தாத்தா உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்குமளவுக்கு  அப்பாடக்கர் இல்லை நீங்கள்  

Edited by அக்னியஷ்த்ரா
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இங்கு புலிகளோ அல்லது சம்பந்தரே இனவாத சிங்களவரிடம் தீர்வு என்பது கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும் .

ஆமாம் 100%    உண்மை 

5 hours ago, பெருமாள் said:

ஆனால் தமிழர் இனவழிப்பு அரசுகளை காப்பாற்றினார் அந்த .....

இதுவும் சரி  ...  எதிர்கட்சி தலைவர் பதவியும் எற்று இருக்கக்கூடாது   பலம். இல்லாதநிலையில்.  அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டு  எதிர்கட்சி தலைவராக இருந்தது தப்பு தான்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

உங்களை பொறுத்தவரை, சம்பந்தர் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியிருந்தால் அதை மன்னித்திருப்பீர்கள்.😂  

சீ அது அவரால் முடியாது என்று தெரியும். ஆனால் வாயாலாவது வடை சுட வருமே?

9 hours ago, Justin said:

சம்பந்தர் மட்டுமல்ல, இப்போது இருக்கும் தமிழ் பா.உக்கள் சிலரும் கூட சிங்கள அரசின் அநியாயங்களைப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். பாராளுமன்றிலும் பேசினர், பேசுகின்றனர். ஒரு படி மேலே சென்று, வெளிநாட்டு அரச பிரதிநிதிகளிடமும் பேசுகின்றனர். இதைத் தேடி அறிய இயலாதவரா நீங்கள்?

புலிகள் செய்ததையும், அரசு செய்ததையும் பேசிய சம்பந்தரை தேர்தலில் தெரிவு செய்த மக்கள் கொடுத்த பதவியில் அவர் இருக்க யாருடைய அனுமதியும், ஆதரவும் அவசியமில்லை.

மக்கள் விரும்பா விட்டால் தூக்கி எறிந்திருப்பர், அவரும் பேசாமல் போயிருப்பார். கஜேந்திரன் போல பின் கதவால் வந்திருப்பாரென நினைக்கவில்லை.

 

மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது இவர்கள் சரியாக நடப்பதால் என்று நீங்கள் நினைத்தால் என்னிடம் உங்களுக்கு பதில் சொல்ல நல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

உண்மைதான். முடியாவிட்டால் பொத்தி கொண்டு இருந்திருந்தால் முள்ளிவாய்கால் பேரழிவே நடந்திருக்காது.

அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று  தானாக தேடி வந்தது அழிவு....?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று  தானாக தேடி வந்தது அழிவு....?

56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?!

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் போராளிகளை சம்பந்தன் கணக்கெடுக்கவே இல்லை. அந்த கோவம் இருக்கும்தானே!
    • தமிழ்வின் செய்தி தளத்தில் இந்த செய்தி உள்ளது. ஆனால், இது துர்க்காபுரத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதியாக கூறப்படவில்லை. செய்தியை இணைத்தவர்கள் முடியுமானால் செய்தியின் உண்மை தன்மையை தெளிவுபடுத்தவும்.  இங்கு பொதுவான ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்.  இலங்கையில் க.பொ.த சாதாரணம் கற்றுவிட்டு க.பொ.த உயர்தரம் கற்கச்செல்லும் மாணவர்கட்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன.  குறிப்பாக நன்றாக படிக்கக்கூடிய பல மாணவிகள் உயர்தரத்திற்கு இடம்/பாடசாலை மாறவேண்டி உள்ளது.  வீட்டு சூழ்நிலை இடம்கொடுக்காத நிலையில் (தங்கும் இடம் வாடகை, உணவு செலவு, ரியூசன் செலவு: ஒரு பாடம் கிட்டத்தட்ட மாதம் 1,250 ரூபா கட்டணம், போக்குவரத்து செலவு) இலவச விடுதிகளில் விலை குறைவான இடங்களில் சென்று தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 
    • 03 JUL, 2024 | 05:08 PM இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, மனதை ஒருநிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியும் என இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் (Guy Regev Rosenberg) தெரிவித்தார். அண்மையில் இலங்கை வந்த அவரை கொழும்பில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுவதாகவும், அந்த வகையில் இலங்கையையும் இலங்கை மக்களையும் தான் மிகவும் விரும்புவதாகவும் விசேடமாக இந்து மற்றும் பௌத்த மதங்களின் தியான வழிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் எம்மோடு பகிர்ந்து கொண்ட விடயங்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தன. "தியானமும் தியான பயிற்சிகளும் உடற்பயிற்சியும் மனிதனின் பழக்கவழக்கங்களை சிறந்தனவாக மாற்றுகின்றன. தியானங்களில் ஈடுபடும் யோகிகளிடமிருந்தும் சித்தர்களிடமிருந்தும் அதேபோன்று பௌத்த துறவிகளிடமிருந்தும் தியானம் மற்றும் தியானங்களை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டேன். நான் இதில் பட்டம் பெற்றவன் அல்ல" என்கிறார். "கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தியானத்தில் ஈடுபடுவதற்கான நுணுக்கங்களை அறிந்துகொண்டுள்ளேன். பரபரப்பான இந்த உலகில் பொதுவாக மக்கள் மிகுந்த வேலைப்பளுவுடன் நேரத்தைப் போக்குகின்றனர். அதனால் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகுந்த பதற்றத்துடன் இருப்பதனால் மன அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர். இது போன்ற சமயங்களில் தியானம் போன்ற செயன்முறைகளை நாம் அன்றாட வாழ்வில் முன்னெடுப்பதன் மூலம் பதற்றத்திலிருந்து விடுதலையை பெற முடியும்" என்கிறார் கையி. "நமது எல்லா செயற்பாடுகளுக்கும் மனம்தான் காரணம். அதனால்தான் மனதை ஒருநிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இதற்கு தனியான பயிற்சிகள் உள்ளன. அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் பதற்றமில்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது எனது கருத்து. இது எந்த துறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் இருப்பவர்களுக்கு ஆலேசனைகளையும் பயிற்சிகளையும் கொடுக்கும் பணியினைதான் நான் செய்து வருகின்றேன். மன அழுத்தத்துடன் இருக்கும் விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நான் ஆலோசனைகளை வழங்கி வருகின்றேன். எனது நாட்டில் மாத்திரம் அல்லாது ஏனைய பல நாடுகளுக்கும் சென்று, இதனை நான் செய்து வருகின்றேன். அதன் அடிப்படையிலேயே இலங்கை பயணமும் அமைந்துள்ளது. இலங்கையுடன் எனக்கு நீண்டகால தொடர்பு இருக்கிறது. பல தடவைகள் இலங்கை வந்துள்ளேன். இலங்கை எனக்கு மிகவும் பிடித்த நாடு" என்றார் கையி. "இந்து மதமும் பௌத்த தர்மமும் மிகவும் பிடித்தமானது. பல தடவைகள் சித்தர்கள் மற்றும் யோகிகளை சந்தித்துள்ளதுடன் அவர்களிடமிருந்து தியானம் குறித்த பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்" எனவும் கூறுகிறார் கையி.  "மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை தீர்ப்பதற்கு இந்து மதத்தில் தியானம் உட்பட பல்‍வேறு விடயங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை. இலங்கையில் எப்போதும் இல்லாதவாறு தற்போது பல சோதனைகள் காணப்படுகின்றன. இந்த நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள அனைவரும் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் இஸ்ரேலில் பிறந்தாலும் இலங்கையையே எனது வீடாக உணர்கின்றேன். சிரிப்பு என்பது இலங்கையர்களுடன் ஒட்டிப் பிறந்ததொரு கொடையாகும். அதை சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டும்" என்றார் கையி. "ஒவ்வொரு 10 விநாடிகளுக்கும் ஒரு முறை எமது கைத்தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் பல்வேறு புதிய தகவல்கள் வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக்கில் யார் தகவல்களை பகிர்கிறார்கள் என பார்க்கின்றோம். தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்கனவே நம் வாழ்க்கையைப் பாதித்துவிட்டன. அவை நம்மை அடிமையாக்குவதற்காக காத்திருக்கின்றன. ஆனால், நாம் அவற்றுக்கு அடிமையாக வேண்டுமா, இல்லையா என்பதை நம் மனம்தான் தீர்மானிக்கும்.  புத்த பகவான் கூறியது போன்று எமக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. முதலாவது, உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவது... மற்றையது, உங்கள் மனது உங்களை கட்டுப்படுத்த அனுமதிப்பது... எந்த வகையான தொழில்நுட்ப சாதனங்களால் நாம் திசைதிருப்பப்பட்டாலும், நம் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு பயிற்றுவிக்க முடியும். நமக்குத் தேவையானதை வடிகட்டவும், மீதமுள்ளவற்றை நிராகரிக்கவும் மனதின் மூலம் தான் முடியும்" என்கிறார் கையி. நம்மில் பலரை தொழில்நுட்ப யுகம் ஆக்கிரமித்து முற்றுகையிட்டுள்ளது. நமக்கான வரம்புகளையும் வரையறைகளையும் முடிவுகளையும் நாம் எடுக்காத வரை, தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை ஆக்கிரமித்துவிடும்" என எச்சரிக்கிறார் கையி. "உங்களுக்கு சிறிது காலம்தான் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கும் வரை மக்கள் தங்களை பாதிக்கும் விடயங்களை புறக்கணிக்கின்றனர். இது உங்கள் மனதுக்கும் பொருந்தும். நீங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை உங்கள் மனதுக்கும் விதிக்க வேண்டும்" என்றும் கூறுகிறார் கையி. "நான் காலையில் எழுந்தவுடன் எனது தொலைபேசியை பார்க்கப் போவதில்லை அல்லது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எனது குறுஞ்செய்திகளையோ, சட்களையோ அல்லது செய்திகளையோ பார்க்கப் போவதில்லை போன்ற கட்டுப்பாடுகளை நீங்கள் உங்கள் மனதுக்கு விதிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மனம் மென்பொருளை பதிவேற்றம் செய்ய முடியாத பழைய கணினியைப் போலாகிவிடும்" என்றார் கையி. முக்கியமாக, "இந்து மற்றும் பௌத்த மத போதனைகளை நடைமுறைப்படுத்த இலங்கையர்களுக்கு இந்த சவாலான காலகட்டம் மிகவும் பொருத்தமானது" என்றும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/187609
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.