Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு!

August 6, 2024

மருத்துவர் ஒருவர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்கவைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு நோயாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட்-02) அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த விடுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கும் புதிய கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு அன்றைய தினம் மதியம் 2.00 மணியளவில் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இருதய பாதிப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் அவசர நோயாளர் காவு   வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் மற்றைய நோயாளர்களும் அதில் ஏற்றப்பட்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருதய நோயாளி தவிர்நத ஏனைய நோயாளர்கள் அவசரமாக அதிலிருந்து இறக்கப்பட்டனர். மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் யுவதி ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாகவே அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டியிருந்ததால் அவ்வாறு அவர்கள் இறக்கப்பட்டதற்கான காரணம் அங்கிருந்த ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்றைய அவசர நோயாளர் காவு வாகனத்தின் வந்து கொண்டிருப்பதாகவும் வந்த உடன் அதில் ஏற்றி அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய அவசர நோயாளர் காவு வாகனம் உடனடியாகவே வந்திருந்த போதிலும் காக்கவைக்கப்பட்ட நோயாளர்களை விடுதிக்கு அழைத்து சென்று விடுமாறும் மாலை 4 மணிக்கு பின்னரே அவசர நோயாளர் காவு வாகனம் புறப்படும் எனவும் அவசர நோயாளர் காவு வாகனத்தில்  நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஏனைய சிற்றூழியர்கள் அதிருப்தியை வெளிக்காட்ட முடியாது புறுபுறுத்தவாறே நோயாளர்களை விடுதிக்கு கொண்டு சென்றிருந்தனர். இந்நிலையில் திடீரென உடனடியாக நோயாளர்களை பழைய வெளிநோயாளர் பிரிவு வாசல் பகுதிக்கு கொண்டு வருமாறு சிற்றூழியர்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது.

இதையடுத்து 06 ஆம் இலக்க விடுதியில் இருந்த நோயாளியை மீண்டும் சக்கர நாற்காலி மூலமாக அழைத்துச் சென்று அவசர நோயாளர் காவு வாகனத்தில்  ஏற்றிய நிலையில் புதிய கட்டிட பகுதியில் வைத்து ஏனைய இரு நோயாளிகளும் அன்று பிற்பகல் 03.30 மணியளவில் ஏற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏற்றப்பட்ட போதிலும் அவசர நோயாளர் காவு வாகனம் புறப்படாது காத்திருந்துள்ளது. ஏற்கனவே ஒரு அவசர நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றி இறக்கப்பட்டதுடன் மீளவும் விடுதிக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்த நிலையில் அவதியுற்ற நோயளிகள் மேலும் ஏற்பட்ட காலதாமத்தினால் அதிருப்தியடைந்து அவசர நோயாளர் காவு வாகனத்தின் சாரதியிடம் தாமதத்திற்கான காரணத்தை வினவியபோது கடும் தொனியில் அதிருப்தியுடன் இதோ வாறா.. அவவிடமே கேளுங்கள் என்பதாக அவசர நோயாளர் காவு வாகனத்தில் சாதரண உடையில் ஏறிய பெண்ணை காட்டி கூறியிருந்தார். அத்துடன் அவர்கள் ஏதோ கேக்கினம் அதுக்கு பதில் சொல்லுங்கோ அதுக்கு பிறகு எடுக்கிறன் என குறித்த பெண்ணிடம் சாரதி தெரிவித்திருந்தார்.

குறித்த பெண் எதுவும் நடக்காதவர் போன்று அமைதியாக இருக்க சுமார் நான்கு மணியை நெருங்கும் நேரத்தில் அம்பியுலன்ஸ் புறப்பட்டது. சாதாரண உடையில் தாமதமாக வந்து ஏறிய அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தரை புத்தூர் சந்திக்கு அண்மித்த பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோக்கி பயணித்தது   அவசர நோயாளர் காவு வாகனம், அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான குறித்த பெண் உத்தியோகத்தர் தனது கடமை நேரம் முடிந்த பின்னர் அவசர நோயாளர் காவு வாகனத்திலேயே  வீடு திரும்பும் நோக்கிலேயே மதியம் 2.30 மணிக்கு அனுப்பவேண்டிய நோயாளர்களை 4.00 மணி வரை காத்திருக்க வைத்து அலைக்கழித்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது. தனது சொந்த தேவைக்காக நோயாளர்களை காக்கவைத்து அலைக்கழித்துள்ளதுடன் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செய்றபாடுகளாகும். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வாறான தவறுகள் மீளவும் நடைபெறாதென்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

https://www.ilakku.org/பருத்தித்துறை-அவசர-நோயா/

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது.,.?

இன்னும் கனக்க வரும்.....,??

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்பத்திரியில் வேலை செய்வோர் எல்லோரும் "மருத்துவர்கள்" அல்ல என்று இலக்கு இணையத்திற்கு யாராவது சொல்ல வேண்டும். "சிற்றூழியர்" என்று செய்தி எழுதி விட்டு, "மருத்துவர்" என்று தலையங்கம்.

இது தற்போது சூடாக இருக்கும் சூழலை வைத்து வயிறு வளர்க்கும் சாக்கடை ஊடக நுட்பம் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆஸ்பத்திரியில் வேலை செய்வோர் எல்லோரும் "மருத்துவர்கள்" அல்ல என்று இலக்கு இணையத்திற்கு யாராவது சொல்ல வேண்டும். "சிற்றூழியர்" என்று செய்தி எழுதி விட்டு, "மருத்துவர்" என்று தலையங்கம்.

இது தற்போது சூடாக இருக்கும் சூழலை வைத்து வயிறு வளர்க்கும் சாக்கடை ஊடக நுட்பம் என நினைக்கிறேன்.

மந்திகை ஆஸ்பத்திரியைப் பற்றி உதயனில் பல குறைபாடுகளை ஒருவர் அடிக்கடி எழுதுகின்றார்!

சிற்றூழியரை மருத்துவர் என்று தவறாக இந்த முறைப்பாட்டில் எழுதியுள்ளார். ஆனாலும் அம்புலன்ஸை வேலைக்கான போக்குவரத்துக்காக பாவிக்கும் அளவிற்கும், நோயாளிகளின் அவசர தேவைகளை மதிக்காத அளவிற்கும் சீரழிவுகள் பல காலமாக உள்ளன. இப்போது கவனம் இப்படியானவர்கள் மேலிருந்தாலும் மாற்றங்கள் வராது!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

மந்திகை ஆஸ்பத்திரியைப் பற்றி உதயனில் பல குறைபாடுகளை ஒருவர் அடிக்கடி எழுதுகின்றார்!

சிற்றூழியரை மருத்துவர் என்று தவறாக இந்த முறைப்பாட்டில் எழுதியுள்ளார். ஆனாலும் அம்புலன்ஸை வேலைக்கான போக்குவரத்துக்காக பாவிக்கும் அளவிற்கும், நோயாளிகளின் அவசர தேவைகளை மதிக்காத அளவிற்கும் சீரழிவுகள் பல காலமாக உள்ளன. இப்போது கவனம் இப்படியானவர்கள் மேலிருந்தாலும் மாற்றங்கள் வராது!

நிச்சயமாக. இலங்கையில் வளத் துஷ்பிரயோகத்தில் முதல் இடம் அலுவலக வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்குத் தான், எல்லா மட்டத்தினரும் செய்வார்கள். 20 ஆண்டுகள் முன்பு, வவுனியாவில் உயர் பதவியில் இருந்த மருத்துவர், ICRC வவுனியா மருத்துவ மனைக்கு வழங்கியிருந்த வாகனத்தில் தான் தன் பிள்ளைகளைப் பளிக்கூடத்திற்கு ஏற்றி இறக்குவார். பின்னர் அவர் மாகாண அமைச்சராகவும் வந்தார். இப்போது வடபகுதியில் நடக்கும் அக்கப் போர் பற்றி மூச்சும் விடாமல் இருக்கிறார் 😎- காரணம் இது தான்!

எனது அப்பா ஒரு அரச ஊழியர்.  குருணாகல் / கொழும்பு மாநகர சபையின் மூத்த கணக்காளராக இருந்தவர் (CA). அரச / மக்கள் வளத்தை எப்படி தனக்காக / குடும்பத்திற்காக பயன்படுத்த முடியும் என்பதில் PhD முடித்தவர்.

நான் படித்து முடிந்த பின், தன் செல்வாக்கை கொண்டு நல்ல அரச வேலை ஒன்று எடுத்து தருகின்றேன் என்று விடாப்பிடியாக நின்றவர். கனடா கனவில் இருந்ததால் நான் சம்மதிக்கவில்லை

அரச வளங்களை சொந்த தேவைக்காக பயன்படுத்துவது என்பது ஒரு மேதாவித்தனமான கலாச்சாரம் அங்கு. ஒரு போதும் திருந்த மாட்டார்கள். அது தவறென்று கூட நம்பமாட்டார்கள். அதே போல் தமக்கு கீழ் இருக்கும் சிற்றூழியர்களை மதிக்கவே மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

எனது அப்பா ஒரு அரச ஊழியர்.  குருணாகல் / கொழும்பு மாநகர சபையின் மூத்த கணக்காளராக இருந்தவர் (CA). அரச / மக்கள் வளத்தை எப்படி தனக்காக / குடும்பத்திற்காக பயன்படுத்த முடியும் என்பதில் PhD முடித்தவர்.

நான் படித்து முடிந்த பின், தன் செல்வாக்கை கொண்டு நல்ல அரச வேலை ஒன்று எடுத்து தருகின்றேன் என்று விடாப்பிடியாக நின்றவர். கனடா கனவில் இருந்ததால் நான் சம்மதிக்கவில்லை

அரச வளங்களை சொந்த தேவைக்காக பயன்படுத்துவது என்பது ஒரு மேதாவித்தனமான கலாச்சாரம் அங்கு. ஒரு போதும் திருந்த மாட்டார்கள். அது தவறென்று கூட நம்பமாட்டார்கள். அதே போல் தமக்கு கீழ் இருக்கும் சிற்றூழியர்களை மதிக்கவே மாட்டார்கள். 

எனது தந்தை இதற்கு எதிர்மாறு! தொழிலாளர் நியாயமன்றில் சாதரண எழுதுவினைஞராக கடமையாற்றியபோது தொழிலாளர் நியாயமன்றின் நீதிபதி தனது தனிப்பட்ட வேலைகளுக்கு மன்றின் அலுவலக உதவியாளரை உபயோகித்தமையை சுட்டி எதிர்த்தமையால் 8 ஆண்டுகள் வேலையால் இடைநிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் வழக்காடி வெற்றிபெற்று மீளப்பணியில் இணைந்து சிரேஸ்ட எழுதுவினைஞராகவும் பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தன்னளவில் நேர்மையாகவும் தனக்குத் தெரிய ஊழல்கள் இடம்பெறாத வண்ணமும் பார்த்துக் கொண்டார். வேலை நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதை கட்டாயமாகப் பின்பற்றுவார். பிழை என்றால் நேரடியாகவே கண்டித்துவிடுவார். இதனால் மேலதிகாரிகளில் இருந்து சிற்றூழியர் வரை அவரில் அச்சம் கலந்த மரியாதை வைத்திருந்தார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை பெரிய உத்தியோகத்தில இருக்கிற பலருக்கு அரசாங்க வாகன வசதிகள் இருக்கு. அவையள்....
சந்தைக்கு சாமான் சக்கட்டையள் வாங்கப்போறதும் அதிலைதான். தங்கட பிள்ளையளை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விடுறதும் அதிலை தான்
அப்பப்ப கோயில் விசேசங்களுக்கும் அதிலை தான்...
எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் அந்த வாகன றைவர் அரசாங்கத்தாலை நியமிக்கப்பட்டவர்தான்.இருந்தாலும் அந்த பெரிய கவுண்மேந்து உத்தியோகத்தர் வீட்டுக்கு அவர் ஒரு குட்டி வீட்டுவேலைகாரர் மாதிரி இருப்பார். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.