Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி
2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் யுக்ரேனுக்கு அதிகாரபூர்வ பயணமாகச் செல்ல இருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

"யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார்" என்று வெளியுறவு அமைச்சக செயலர் (மேற்கு), தன்மய் லால் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"இதுவொரு முக்கியமான மற்றும் வரலாற்றுப் பயணம். ஏனெனில் நமது தூதாண்மை உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு செல்வது இதுவே முதல்முறை" என்று அவர் கூறினார்.

ரஷ்யா-யுக்ரேன் மோதல் குறித்துப் பேசிய தன்மய் லால், "இந்தியா மிகவும் தெளிவான மற்றும் நிலையான நிலைப்பாட்டைப் பராமரிக்கிறது. இந்த மோதலை தூதாண்மை மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். அது நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். எனவே பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது," என்று குறிப்பிட்டார்.

 

இருதரப்புக்கும் ஏற்புடைய மாற்றுவழிகள் மூலம் மட்டுமே நிரந்தர அமைதியை அடைய முடியும். எனவே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார் அவர்.

”இந்தச் சிக்கலான பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண சாத்தியமான எல்லா உதவிகளையும், பங்களிப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியா-யுக்ரேன் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும் என்று முன்கூட்டியே கணிப்பது சரியாக இருக்காது,” என்று தன்மய் லால் தெரிவித்தார்.

யுக்ரேன் செல்வதற்கு முன் பிரதமர் மோதி போலந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

”போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி, ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் போலந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து செல்கிறார்" என்றார் தன்மய் லால்.

நமது தூதாண்மை உறவுகள் நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஸெலென்ஸ்கி என்ன சொன்னார்?

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் பயணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

"ஆகஸ்ட் 23ஆம் தேதி யுக்ரேனின் தேசியக் கொடி தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் துவங்கிய பிறகு இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அதிபர் ஸெலென்ஸ்கி விவாதிப்பார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்" என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

கடுமையான எதிர்வினை

கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா-யுக்ரேன் போர் வெடித்த பிறகு பிரதமர் மோதி இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நடந்த ஜி7 உச்சி மாநாடுகளின் போது யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்தார். ஆனால் அவர் இதுவரை யுக்ரேனுக்கு செல்லவில்லை.

இத்தாலியில் ஸெலென்ஸ்கியை சந்தித்த மோதி, யுக்ரேன் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார்.

தற்போது பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத் திட்டம் பலரிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

“இந்த நேரத்தில் மோதியின் யுக்ரேன் பயணம் மிகவும் மோசமானது என்று நிரூபணமாகலாம். யுக்ரேனின் சமீபத்திய கைப்பற்றல்களுக்குப் பிறகு ரஷ்யா அதன் மீது பெரும் தாக்குதலை நடத்தத் தயாராகி வருகிறது. இங்கு போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த ஆர்வமும் இல்லை,” என்று பாதுகாப்பு விவகார நிபுணர் பிரம்மா செலானி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தைக் குறிப்பிட்ட பிரம்மா செலானி, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மீது கவனம் செலுத்துமாறு மோதிக்கு அறிவுரை வழங்கினார்.

 

மோதி யுக்ரேன் செல்ல அமெரிக்காவின் அழுத்தமே காரணமா?

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி இத்தாலி சென்றார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி ஜூலை மாதம் ரஷ்யா சென்றிருந்தார். ரஷ்ய அதிபர் புதினுடனான பிரதமர் மோதியின் சந்திப்பு குறித்து யுக்ரேன் அதிபர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக வொலோதிமிர் ஸெலென்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

”இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், ரத்தக்களரியை ஏற்படுத்தியுள்ள உலகின் மிகப்பெரிய குற்றவாளியைத் தழுவிக்கொண்டது அமைதி முயற்சிகளுக்கு மிகப்பெரிய அடி" என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் 'தி வயர்' வெளியிட்ட ஒரு வீடியோவில், தூதாண்மை விவகார நிபுணர் கிருஷ்ணன் சீனிவாசனும் யுக்ரேன் செல்லும் மோதியின் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிரதமர் யுக்ரேன் சென்றால் நான் ஏமாற்றமடைவேன். இதிலிருந்து எந்த நேர்மறையான விளைவையும் நான் காணவில்லை. மேலும் இந்தியாவின் தற்போதைய கொள்கைகளுக்கு இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக நிரூபணமாகக் கூடும்,” என்று கரண் தாப்பரின் நிகழ்ச்சி ஒன்றில் கிருஷ்ணன் சீனிவாசன் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தற்போதைய கொள்கை சரியானதுதான் என்று கூறிய கிருஷ்ணன் சீனிவாசன், ”இந்தியா தனது சொந்த சுதந்திரக் கொள்கையைப் பராமரிக்கிறது. ஆனால் இந்தப் பயணத்திற்குப் பிறகு இந்தியா மீது மேற்கத்திய நாடுகளின் எந்த அழுத்தமும் இல்லை என்பதைக் காட்டுவது கடினம்,” என்றும் தெரிவித்தார்.

 

'இந்தியாவின் சுதந்திர பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதி'

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

சர்வதேச விவகார நிபுணரும், ஜேஎன்யு பேராசிரியருமான ஸ்வரன் சிங், தனியார் செய்தி சேனலில் நடந்த ஒரு விவாதத்தில், “பிரதமர் மோதி ஜூலை 8ஆம் தேதி ரஷ்யாவுக்கு சென்றதிலிருந்து அவர் விரைவில் யுக்ரேனுக்கும் செல்வார் என்றே தோன்றியதாக,” குறிப்பிட்டார்.

"இந்தியா உலகிற்கு புத்தரைக் கொடுத்தது, போரை அல்ல என்பது உண்மைதான். ஆனால் அவரது ரஷ்ய பயணத்திற்குப் பிறகு அமெரிக்கா கடுமையான எதிர்வினையை வெளியிட்டது. பிரதமரின் யுக்ரேன் பயணம் அதன் தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் இது இந்தியாவின் சுதந்திரமான பாதுகாப்பு செயல் உத்தியின் ஒரு பகுதி என்று நான் கருதுகிறேன்,” என்றார் அவர்.

கடந்த 2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும் இந்தியா, சீனா போன்ற நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்கின்றன.

இந்தப் போருக்கு ரஷ்யாவை நேரடியாகக் குற்றம் சாட்டுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. ரஷ்யா இதை ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கிறது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் தூதாண்மை வழிகள் மூலம் மோதலைத் தீர்க்குமாறு இரு அண்டை நாடுகளையும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

”ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது. குறிப்பாக சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா முயலும் நேரத்தில் இந்தக் கவலை வெளியானது,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், 'மோதி யுக்ரேனுக்கு பயணம் மேற்கொண்டால் அதை நாங்கள் வரவேற்போம்' என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்தார்.

 

அமெரிக்க தூதரின் எதிர்வினை

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு நரேந்திர மோதி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரஷ்யாவை தேர்வு செய்தார்.

ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் நரேந்திர மோதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் யுக்ரேனில் டஜன்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஏவுகணைத் தாக்குதலில் சில குழந்தைகள் இறந்த செய்தியும் வெளியானது.

அதே நேரத்தில் நேட்டோவின் சிறப்பு உச்சி மாநாடும் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியும் பங்கேற்றார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் வெளியுறவு அதிகாரி டொனால்ட் லூ உட்பட பல மூத்த அமெரிக்க அதிகாரிகள் மோதியின் ரஷ்ய பயணம் ‘நேரம் மற்றும் அது தரும் செய்தியின் அடிப்படையில் ஏமாற்றம் தருவதாக’ கூறினர்.

குறிப்பாக மோதிக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையே நடந்த கட்டித் தழுவலை ஸெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்தார்.

இதுதவிர அமெரிக்காவை ’லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்றும் ’போர்க் காலங்களில் செயல் உத்தி சுயாட்சி என்று எதுவும் இல்லை’ என்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜேக் சல்லிவனிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார்.

 

'சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி'

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரதமர் மோதியின் ரஷ்ய பயணத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடுமையாக விமர்சித்தார்.

‘மோதியின் ரஷ்ய பயணத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

பிரதமர் மோதி யுக்ரேனுக்கும் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்று வெளியுறவு அமைச்சகம் அந்த நேரத்தில் சூசகமாகத் தெரிவித்திருந்தது.

இந்தியாவுக்கான யுக்ரேன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ’இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது’ தொடர்பாக யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் தொலைபேசியில் பேசினார்.

இதுதவிர இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் யுக்ரேன் பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரே யெர்மக் இடையிலும் தொலைபேசி உரையாடல் நடந்தது.

 

இந்தியா-யுக்ரேன் உறவுகள்

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,கடந்த ஆண்டு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோதியும் அதிபர் ஸெலென்ஸ்கியும் சந்தித்தனர்.

இந்தியாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. ரஷ்யா - யுக்ரேன் போருக்கு முன்பு ஏராளமான இந்திய மாணவர்கள் யுக்ரேனுக்கு உயர்கல்விக்காகச் சென்றனர்.

இதுதவிர இந்தியா மற்றும் யுக்ரேன் இடையே பரஸ்பர வர்த்தகமும் உள்ளது. யுக்ரேனிடம் இருந்து பல்வேறு பொருட்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

இருதரப்பு உறவுகளில் பதற்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவை விமர்சிக்க இந்தியாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு இடையே யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் திமித்ரி குலேபா இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக இந்தியா வந்தார் என்று 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது.

குலேபாவுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றமும், அமைதித் தீர்வு குறித்த விரிவான விவாதமும் நடைபெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மார்ச் 25ஆம் தேதி தனது வருகையை அறிவித்த குலேபா, ’இந்தியாவை ’ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச குரல் மற்றும் ஒரு முக்கியமான உலகளாவிய சக்தியாக’ யுக்ரேன் பார்ப்பதாகக் கூறினார்.

மாறாக, மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் இருந்த போதிலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதை 2022 ஆகஸ்டில் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தியாவிற்கு வழங்கப்படும் ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயிலும் "குறிப்பிடத்தக்க அளவு யுக்ரேனிய ரத்தம் உள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நட்பும் திறந்த உறவும் இருப்பதாகவும், ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு யுக்ரேன் உதவி செய்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் போர் தொடங்கியதில் இருந்து யுக்ரேன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் சென்ற ஒரு சில தலைவர்களில் மோதியும் ஒருவராக இருப்பார்.

இவர்களில் ஹங்கேரி, இந்தோனீசியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்குவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதினின் சேதியை யுக்ரேன் அதிபரிடம் சேர்க்கிறாரா? மோதி பயணம் பற்றி புதிய தகவல்கள்

ரஷ்ய அதிபர் புதின் கொடுத்த தகவல் என்ன? : மோதியின் யுக்ரேன் பயணப் பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரதமர் மோதி- யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்விட்லானா டோரோஷ்
  • பதவி, பிபிசி யுக்ரேன்
  • 22 ஆகஸ்ட் 2024, 13:51 GMT
    புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசியக் கொடி நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அன்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அங்கு தரையிறங்குகிறார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புதினை மோதி சந்தித்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இது நிகழ்கிறது. அங்கு அவர் தனது நாடு எப்போதும் போருக்கு அமைதியான தீர்வை வலியுறுத்துவதாக கூறினார். மேலும் அமைதிக்கான பேச்சுவார்த்தை முயற்சியில் உதவத் தயாராக இருப்பதாகவும் மோதி குறிப்பிட்டார்.

யுக்ரேனில் போர் தொடங்கிய பத்து ஆண்டுகளில், இந்தியத் தலைவர்கள் யாரும் ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கவில்லை அல்லது சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை.

யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் ஐ.நா.வின் எந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.

 

ரஷ்யாவிற்கு தனது கடைசி பயணத்தின் போது, ரஷ்ய ஏவுகணைகள் யுக்ரேனின் கீவ் மற்றும் பிற நகரங்களில் ஏவப்பட்ட போது, மோதி புதினை "நண்பர்" என்று குறிப்பிட்டார். ரஷ்யா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத்தின் போது என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு செய்தியை கடத்த அவர் தயாராக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, மோதியின் இந்த யுக்ரேன் பயணத்தில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது?

 

யுக்ரேன் போரும் மோதியும்

ரஷ்ய அதிபர் புதின் கொடுத்த தகவல் என்ன? : மோதியின் யுக்ரேன் பயணப் பின்னணி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,ரஷ்யாவிற்கு தனது கடைசி பயணத்தின் போது, ரஷ்ய ஏவுகணைகள் யுக்ரேனின் கீவ் மற்றும் பிற நகரங்களில் ஏவப்பட்ட போது, மோதி புதினை நண்பர் என்று குறிப்பிட்டார்

மோதி ஜூலை தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். 2019 க்குப் பிறகு அவரது முதல் ரஷ்யா பயணம் இது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது முதல் சர்வதேச பயணம் இது.

யுக்ரேன் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மோதி ரஷ்யாவுக்கு சென்றார். ஜூலை 8 அன்று கீவ்வில் 33 பேர் உட்பட மொத்தம் 47 பேர் யுக்ரேனில் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஏவுகணைகள் குழந்தைகள் மருத்துவமனையையும் தாக்கியது.

இதனிடையே ரஷ்ய அதிபர் உடனான பேச்சுவார்த்தையின் போது, மோதியை புதின் "எனது அன்பு நண்பர்" என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய அதிபருடனான மோதியின் சந்திப்பும், மோதி புதினை நட்பாக ஆரத்தழுவியதும் யுக்ரேனில் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

"இது மிகப் பெரிய ஏமாற்றம். அமைதி முயற்சிகளுக்கு விழுந்த அடி. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் (மோதி) அத்தகைய நாளில் மாஸ்கோவில் உலகின் கொடிய குற்றவாளியை ஆரத் தழுவுகிறார்" என்று ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

அதே நேரத்தில், ரஷ்யாவில் நரேந்திர மோதி ராணுவ மோதல்களுக்கு அமைதியான தீர்வுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.

"துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் போர்க்களத்தில் மோதல்களைத் தீர்க்க முடியாது என்பதை உங்கள் நண்பராக நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தில் கவனம் செலுத்துகிறோம்" என்று மோதி புதினிடம் கூறினார்.

"போர், மோதல், பயங்கரவாத தாக்குதல் என எதுவாக இருந்தாலும், மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் உயிர்கள் பலியாகும் போது, குறிப்பாக அப்பாவி குழந்தைகள் இறக்கும் போது அந்த வலியை உணர்வார்கள். அது உங்கள் இதயத்தில் ரத்தம் கசியும் உணர்வை கொடுக்கும், அந்த வலி தாங்க முடியாதது" என்றும் மோதி கூறினார்.

பேச்சுவார்த்தையால் ஏற்படும் முன்னேற்றத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும், ராணுவ மோதலுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண எந்த வடிவத்திலும் ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் மோதி கூறினார்.

இருப்பினும், 2014 இல் மோதி இந்தியாவில் பதவியேற்றதிலிருந்து, ரஷ்யா தொடர்பான விஷயங்களில் இந்தியா நடுநிலையை கடைபிடித்தது.

யுக்ரேனின் டான்பாஸில் போர் தொடங்கியபோதும், கிரிமியா இணைக்கப்பட்டபோதிலும் இந்தியா நடுநிலையைக் கடைப்பிடித்தது. ரஷ்யாவின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் கண்டிக்கவில்லை அல்லது சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை.

 

ரஷ்யாவை சார்ந்திருக்கும் இந்தியா

ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பதே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் முழு அளவிலான போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யா மீது மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, ரஷ்யா இந்தியாவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான எண்ணெயை குறைந்த விலையில் விற்கத் தொடங்கியது. இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

"இந்தியா தனது சொந்த நலன்களில் அதிக கவனம் செலுத்துகிறது. நாட்டிற்கு பயனளிக்கும் இடங்களில் ஒத்துழைக்கும் என்ற தர்க்கத்துடன் இந்தியா செயல்படுகிறது" என்று யுக்ரேனிய ப்ரிஸம் மையத்தின் நிபுணர் ஓல்கா வோரோஜ்பைட் பிபிசி யுக்ரேன் சேவையிடம் கூறினார்.

"அதனால்தான் அவர்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதை அறமற்ற செயலாகப் பார்க்கவில்லை. அதிக சதவீத ஏழை மக்களை கொண்ட ஒரு நாட்டிற்கு ரஷ்யாவிடம் இந்திய ரூபாய் மதிப்பில் எண்ணெய் வாங்குவது நன்மை பயக்கும்" என்று அவர் விளக்கினார்.

அதே சமயம் உலகின் மிகப் பெரிய படைகளைக் கொண்ட இந்தியா, ரஷ்ய ஆயுதங்களை பெரிதும் நம்பியுள்ளது.

யுக்ரேனுக்கு எதிரான போருக்காக ரஷ்யா பாரிய ராணுவச் செலவினங்களைச் செய்த போதிலும், அது இந்தியாவின் முக்கிய ஆயுத விநியோகஸ்தராக உள்ளது.

இந்தியா கருத்தில் கொள்ளும் மற்றொரு முக்கியமான விஷயம் சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகள். சீனாவுடன் நெருக்கமான உறவுகளை நோக்கி ரஷ்யா குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்னைகளை கொண்டுள்ளது. எனவே ரஷ்யா-சீனா ஒத்துழைப்பை இந்தியா கவனிக்காமல் இருக்க முடியாது.

ரஷ்ய அதிபர் புதின் கொடுத்த தகவல் என்ன? : மோதியின் யுக்ரேன் பயணப் பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேனுக்கான பேச்சுவார்த்தைகள்

இத்தகைய சூழ்நிலையில் யுக்ரேன் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

ரஷ்யப் பயணத்திற்கு பிறகு மோதி யுக்ரேன் பயணம் மேற்கொள்வது, ரஷ்யா சென்றபோது அவர் மீது எழுந்த விமர்சனங்களை மாற்றும் நோக்கம் கொண்டது என்று நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.

சமீபத்தில் வாஷிங்டனில் நடைபெற்ற `நேட்டோ’ உச்சி மாநாட்டில் பல நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கடுமையாகக் கண்டித்தன.

"மாஸ்கோவில் நடந்த மோதி - புதின் சந்திப்பு குறித்து இந்தியாவிற்கு வெளியே மட்டுமல்ல, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது மோதி யுக்ரேன் செல்வது இந்த விமர்சனங்கள் உந்துதலாக இருந்திருக்கலாம்" என்கிறார் ஓல்கா வோரோஜ்பைட்.

மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து உலகளாவிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ப்ளூம்பெர்க் செய்தி தனது தகவல்களை மேற்கோள்காட்டி,'போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தர் பங்கு வகிக்க இந்திய தலைமை நிராகரித்துவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளது.

'இருப்பினும், ரஷ்யா மற்றும் யுக்ரேன் அதிபர்களுக்கு இடையே செய்திகளை கடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது' என்று ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது

இதுபோன்ற விஷயங்கள் தற்போதைய மோதியின் பயணத்தின் பகுதியாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

''யுக்ரேனின் தேசியக் கொடி தினமான ஆகஸ்ட் 23 அன்று மோதியின் வருகை, யுக்ரேனின் இறையாண்மையை இந்தியா ஆதரிக்கிறது என்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இதன் மூலம் புதினுக்கு ஒரு முக்கிய சமிக்ஞையை இந்தியா அனுப்புகிறது” என்று பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான விட்டலி போர்ட்னிகோவ் நம்புகிறார்.

"இது இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். அதே சமயம் புதினுக்கு ஒரு வகையான அரசியல் பழிவாங்கும் சம்பவமாகவும் இருக்கும்" என்று போர்ட்னிகோவ் கூறுகிறார்

"மோதி ரஷ்யா சென்றது அவருக்கு விமர்சனத்தை தேடி தந்தது. இப்போது, யுக்ரேனின் ஆயுதப் படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு புதின் முயற்சிக்கும் தருணத்தில், இந்தியப் பிரதமர் மோதி யுக்ரேனின் தலைமையைச் சந்திக்கிறார்."

''இந்த சுற்றுப்பயணம் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகளை நோக்கிய இந்தியாவின் போக்கை உறுதிப்படுத்தும்'' என்று போர்ட்னிகோவ் கூறுகிறார்

யுக்ரேன் அதிபரின் அலுவலகம் ஜெலென்ஸ்கி மற்றும் நரேந்திர மோதி இடையே நிகழவுள்ளப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நோக்கம் குறித்து ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. இருப்பினும் எந்த துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன என்று இன்னும் தெரியவில்லை.

 

ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டின் போது, இரு நாடுகளின் தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் பற்றி விவாதித்தனர்.

தாக்குதலில் அழிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை புனரமைக்கவும், யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கவும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஓல்கா வோரோஜ்பைட்டின் கூற்றுப்படி, ''பிரதமர் மோதி போர் விஷயத்தில் தனது நடுநிலை நிலைப்பாட்டை மாற்றுவது சாத்தியமில்லை, எனவே இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து எதிர்பார்க்கக்கூடியது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும்.'' என்கிறார்

" ஐரோப்பாவில் நடக்கும் பல்வேறு மோதல்கள் தொடர்பாக வரலாற்று ரீதியாக இந்தியா எப்போதும் நடுநிலையுடன் இருக்க முயற்சிக்கிறது. எனவே, யுக்ரேன் விஷயத்திலும் பெரும்பாலும், இதுதான் நடக்கும்" என்று அவர் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய  (ஆ) வாய்வாளரின் அலுப்பு... தாங்க முடியவில்லை. animiertes-gefuehl-smilies-bild-0056.gif

  • கருத்துக்கள உறவுகள்

மோடி இன்று உக்ரைன் பயணம்: உற்றுநோக்கும் அமெரிக்கா, ரஷ்யா

150218210731-modi-suit-780x470.jpg

‘உக்ரைனுக்கு இந்திய பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது’ என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார்.

போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இன்று 23ஆம் திகதி செல்ல உள்ளார்.

இந்நிலையில், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள ரிச்சர்ட் வர்மா, டில்லியில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அவரிடம் பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்,

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்யா உடனான இந்தியாவின் நீண்ட கால உறவை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. இது போரின் சகாப்தம் அல்ல, இது அமைதிக்கான நேரம் என்று பிரதமர் மோடி கூறியது பாராட்டுக்குரியது.

வங்கதேசத்தில் ஜனநாயக செயல்முறைக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அங்குள்ள மக்களுக்கு இது ஒரு கடினமான சூழ்நிலை. சமூக ஊடகங்களில் வெளிவரும் அனைத்து தவறான தகவல்களையும் நாங்கள் நம்ப போவதில்லை. ஷேக் ஹசீனாவின் முந்தைய அரசாங்கத்தை சீர்குலைப்பதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் தனது முதல் இருதரப்புப் பயணமாக ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்ததைக் கண்டு சில மேற்கத்தியத் நாடுகள் கோபமடைந்தன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை.

பேச்சுவார்த்தை வாயிலாக மோதலை தீர்க்க அழைப்பு விடுத்து வருகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தப் பயணத்தை உற்று நோக்கியுள்ளன.

https://akkinikkunchu.com/?p=288907

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அழுத்தமாக கூட இருக்கலாம். போலந்திடம் பல  வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுவதே முக்கிய நோக்கம் என நினைக்கிறேன்.

49 minutes ago, கிருபன் said:

குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தப் பயணத்தை உற்று நோக்கியுள்ளன.

மலசல கூடங்கள் இம்முறையாவது கட்டுவாரா மோதி என அமெரிக்காவும் ரஸ்யாவும் உற்று நோக்குகின்றனர்.🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோதி, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்தபின் என்ன சொன்னார்?

மோதியின் யுக்ரேன் பயணம்

பட மூலாதாரம்,X/ANI

படக்குறிப்பு, ஒரு வீடியோவில், பிரதமர் மோதி ஸெலென்ஸ்கியின் தோளில் நீண்ட நேரம் கையை வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன
23 ஆகஸ்ட் 2024, 04:13 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேன் படைகள் ரஷ்யாவின் எல்லைக்குள் சென்றுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு பயணம் செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 23) யுக்ரேன் சென்றடைந்த அவர், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசினார். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் பலியான இடத்தை இருவரும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, ‘இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை குழந்தைகளின் குடும்பங்கள் பெறவேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாகக்’ குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீடியோவில், பிரதமர் மோதி ஸெலென்ஸ்கியின் தோளில் நீண்ட நேரம் கையை வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியும் இந்தச் சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மோதியின் யுக்ரேன் பயணம்

பட மூலாதாரம்,X/NARENDRAMODI

கடந்த மாதம் பிரதமர் மோதி ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, யுக்ரேன் அதிபர், மோதி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஒன்றாக இருந்த படங்களுக்குக் கடுமையாக எதிர்வினையற்றியிருந்தார்.

ரஷ்ய அதிபரை மோதி சந்தித்தபோது மேற்கத்திய நாடுகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தின. யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மோதியின் மாஸ்கோ பயணத்தை விமர்சித்திருந்தார்.

"உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் குற்றவாளி ஒருவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது," என்று யுக்ரேன் அதிபர் அப்போது கூறினார்.

அதைத்தொடர்ந்து, தற்போது மோதி யுக்ரேனுக்கு சென்றுள்ளது உலக அரசியல் சூழலில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. இந்தப் போர் தொடர்பாக ரஷ்யாவை இந்தியா நேரடியாக விமர்சித்ததில்லை. இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம்: போர் குறித்து போலந்து பிரதமரிடம் கூறியது என்ன?

பட மூலாதாரம்,PIB INDIA

படக்குறிப்பு, ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட யுக்ரேன் அதிபரும், இந்திய பிரதமரும்

போலாந்தில் பிரதமர் மோதி

யுக்ரேனுக்கு அரசு முறை பயணம் செய்வதற்கு முன்பு போலாந்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி எந்தப் பிரச்னைகளுக்கும் போர் தீர்வாகாது என்று கூறினார்.

போலாந்து பிரதமர் டோனல்ட் டஸ்குடன் பேசிய பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கத் தயாராக உள்ளோம் என்று கூறினார்.

"அப்பாவி மக்கள் பிரச்னையின்போது உயிரிழப்பது மனிதகுலம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது," என்று மோதி கூறினார்.

"இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநிறுத்தத் தேவையான பேச்சுவார்த்தை மற்றும் அரசு நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க விரும்புகிறோம். தமது நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது," என்று கூறினார் மோடி.

போலாந்தில் இருந்து யுக்ரேனுக்கு ரயிலில் சென்ற மோதி அங்கே யுக்ரேனிய அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளார்.

 
போலாந்து நாட்டு பிரதமருடன் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, போலாந்து நாட்டு பிரதமருடன் நரேந்திர மோதி

முன்னதாக, யுக்ரேன் செல்வதற்கு முன்பு போலாந்து நாட்டுக்குச் சென்ற மோதி இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

"பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் போலாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருகை மதிப்புமிக்க நண்பருடனான ஒருங்கிணைப்பை ஆழமாக்கியுள்ளது. பொருளாதார மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேலும் மேம்படுத்த முயன்று வருகிறோம்."

"எங்களின் நட்பு, இந்த உலகை மேலும் சிறப்பாக மாற்றத் தேவையான பங்களிப்பை வழங்கும். போலாந்து நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டிருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற மோதி

நரேந்திர மோதி ஜூலை தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். இது 2019க்குப் பிறகு அவரது முதல் ரஷ்யா பயணம்.

அது மட்டுமின்றி இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கொண்ட முதல் சர்வதேச பயணமும் இதுதான்.

யுக்ரேன் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்த நேரத்தில் மோதி ரஷ்யாவுக்கு சென்றார். யுக்ரேனில் ஜூலை 8 அன்று கீயவ் நகரில் 33 பேர் உட்பட மொத்தம் 47 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஏவுகணைகள் குழந்தைகள் மருத்துவமனையையும் தாக்கியது.

இதனிடையே ரஷ்ய அதிபர் உடனான பேச்சுவார்த்தையின்போது, மோதியை புதின் "எனது அன்பு நண்பர்" என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய அதிபருடனான மோதியின் சந்திப்பும், மோதி புதினை நட்பாக ஆரத்தழுவியதும் யுக்ரேனில் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

 
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்த நரேந்திர மோதி

வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பயணம்

ஆகஸ்ட் 21, 22 தேதிகளில் போலாந்திற்கு சென்ற மோதி அங்கிருந்து ஆகஸ்ட் 23 (வெள்ளிக்கிழமை) அன்று யுக்ரேனுக்கு சென்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்று ஆகஸ்ட் 19ம் தேதி அன்று குறிப்பிட்டிருந்தது.

ஜூன் மாதம் யுக்ரேன் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் மோதி பங்கேற்கவில்லை. மாறாக, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பங்கேற்றார். இருப்பினும் அதே மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் மோதியும் ஸெலன்ஸியும் சந்தித்துக் கொண்டனர். "பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மூலமே அமைதியை எட்ட இய்லும்," என்று அவர் தெரிவித்தார்.

மோதி நேரடியாக, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கவில்லை என்ற போதிலும், தொடர்ச்சியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எதற்காக இந்த சந்திப்பு?

யுக்ரேனுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள மோதி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஆரோக்கியம், கல்வி, மருந்தாக்க துறை, பாதுகாப்பு, கலாசாரம் குறித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுக்ரேனின் அதிபர் அலுவலகம் இதுகுறித்துப் பேசும்போது நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு முன்பே உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து, பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்திய மற்றும் யுக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஜெயஷங்கர் மற்றும் திமித்ரோ குலேபா மார்ச் மாதம் டெல்லியில் சந்தித்துக் கொண்டனர். அப்போது போருக்கு முந்தைய சூழலில் நடைபெற்றதைப் போன்று வர்த்தகம் நடைபெற வேண்டும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

தற்போதைய சந்திப்பில் ரஷ்யா - யுக்ரேன் போர் குறித்தும் விவாதிக்கப்படும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை மூலமே இந்த விவகாரத்திற்குத் தீர்வு எட்டப்படும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 

ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

2023ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சந்தித்துக் கொண்ட மோதி மற்றும் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சந்தித்துக்கொண்ட மோதி மற்றும் ஸெலன்ஸ்கி

சர்வதேச அளவில் தன்னை உயர்த்திக் கொள்ளவும், போருக்கு மத்தியில் தன்னை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் இந்தியா இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று இந்திய ஊடகங்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

"மேற்கு உலகம் மற்றும் ரஷ்யாவுடனான இந்திய உறவில் சமநிலையைப் பேண இந்தியாவுக்கு இது மிக முக்கியமான ஒன்று. மேலும், உலக உணவுப் பாதுகாப்பு குறித்து இந்தியா தன்னுடைய கருத்துகளை வெளியிட இது உதவியாக இருக்கும். உலகளாவிய பிரச்னையாக கருதப்படும் இதுபோன்ற விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருப்பது உலக அரங்கில் இந்தியாவை முக்கிய நாடாக மாற்றும்," என்று ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ஊடுருவியுள்ள நிலையில், தி பிரின்ட் செய்தி இணையதளம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோதியின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இந்தியா தன்னுடைய பங்களிப்பை வழங்குவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும் இதுதான் சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான அரசு ஊடகம் மோதியின் யுக்ரேன் வருகை குறித்து செய்தி வெளியிடவில்லை. இருப்பினும் சில ரஷ்ய ஊடகங்கள் இதுகுறித்த தங்களின் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

ரஷ்ய ஊடகங்கள் சொல்வது என்ன?

மாஸ்கோவிஸ்கி கொம்சோமோலெட்ஸ் (Moskovsky Komsomolets) என்ற பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டிய நாட்டின் தலைவர் தன்னை விமர்சித்த ஸெலன்ஸ்கியை கீயவில் சந்திக்க உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.

மாஸ்கோவில் புதினுடன் பேசிய பிரதமர் மோதிக்கு கீயவ் கண்டனங்களைப் பதிவு செய்த சில வாரங்கள் கழித்து அவர் யுக்ரேனுக்கு பயணம் செய்வதையும் மேற்கோள் காட்டியுள்ளது அந்த நாளிதழ்.

ரஷ்ய ஆதரவு செய்தித்தாளான இஸ்வெஸ்டியா, "ரஷ்ய - யுக்ரேன் போரில் தன்னை ஒரு மத்தியஸ்தராக நிலை நிறுத்திக்கொள்ள இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், "தெற்கத்திய நாடுகள் அனைத்தும், அரசியல் ஆதாயங்களுக்காக, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணத் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றன," என்று குறிப்பிட்டிருந்தது.

தனியார் செய்தி நிறுவனமான நெசாவிசிமயா கஜெட்டா (Nezavisimaya Gazeta), "இந்தியா ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே சமநிலையைப் பேண முயல்கிறது. எனவே மோதியின் யுக்ரேன் பயணம் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு என்ற கோணத்தில் அணுகக்கூடாது," என்று குறிப்பிட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ரசியாவில் நின்றபோது யுக்ரெனுக்காக கெஞ்ச போய் இருக்கிறார் என்றார்கள் இன்று ரசியாவுக்காக கெஞ்ச போயிருக்கிறாரா? அப்படியானால் ரசியா....????

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இந்தியாவிலே இருந்தால், மணிப்பூருக்கு இன்னும் போகவில்லையே, போகவில்லையா என்று அவரைக் கேள்வி கேட்டுத் துளைக்கின்றார்கள். கேரள வயநாட்டிற்கு போனார், ஆனால் மணிப்பூருக்கு இன்னும் போகவில்லை. உலக சமாதானம் பேச உக்ரேன் போனேன் என்று இனிமேல் பதில் சொல்லலாம் தானே........... 

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6948.jpeg.1bd1502c2ee8d23d7930

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

மோடி ரசியாவில் நின்றபோது யுக்ரெனுக்காக கெஞ்ச போய் இருக்கிறார் என்றார்கள் இன்று ரசியாவுக்காக கெஞ்ச போயிருக்கிறாரா? அப்படியானால் ரசியா....????

விசுகர்,

இப்பவும் அவர் கெஞ்சிக் கூத்தாடியாவது உக்ரேனைக் காப்பாற்றலாம் என்றுதான் போயிருக்கிறார்.  கோவணத்தையாவது காப்பாற்றுமாறு புத்திமதி சொல்லப் போயிருக்கிறார்.  

ஆனால் நீங்கள் வழமை போன்று உசுப்பேற்றிவிடுங்கள் .

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

விசுகர்,

இப்பவும் அவர் கெஞ்சிக் கூத்தாடியாவது உக்ரேனைக் காப்பாற்றலாம் என்றுதான் போயிருக்கிறார்.  கோவணத்தையாவது காப்பாற்றுமாறு புத்திமதி சொல்லப் போயிருக்கிறார்.  

ஆனால் நீங்கள் வழமை போன்று உசுப்பேற்றிவிடுங்கள் .

😏

ரசியாவின் கூட்டாளி உக்ரைனை காப்பாற்ற ஏன் ஓடி வருவார்? 

நான் உசுப்பேத்தி தான் ரசிய உக்ரைன் போர் நடக்கிறது என்பது எவ்வளவு பெரிய உசுப்பேத்தல்???? 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

ரசியாவின் கூட்டாளி உக்ரைனை காப்பாற்ற ஏன் ஓடி வருவார்? 

நான் உசுப்பேத்தி தான் ரசிய உக்ரைன் போர் நடக்கிறது என்பது எவ்வளவு பெரிய உசுப்பேத்தல்???? 

உங்கள் வழமையான பாணி அதுதான,😁

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி என்றாலும், உக்கிரனும், கிந்தியவும்,  பத்திரிகையாளர் புடை சூழ்ந்து லபக் என்று செய்தியை சுடச் சுட கெளவுவதற்கு   எதிர்பார்த்து நிற்க , பேச்சுவார்தை நடத்தும் புதிய நடைமுறையை படத்துக்காகவாவது செய்து காட்டுவது. 

  • கருத்துக்கள உறவுகள்

செலன்ஸ்கியிடம் எல்லோரும் கைதட்டுகிறார்கள் என  ஆடையில்லாத மன்னன் ஆக வேண்டாம், பார்த்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள சொல்லியிருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் - ரஷ்யா இடையே அமைதியை கொண்டு வரும் சக்தி பிரதமர் மோதிக்கு இருக்கிறதா?

நரேந்திர மோதி - வோலோதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, நரேந்திர மோதி - வோலோதிமிர் ஸெலன்ஸ்கி
24 ஆகஸ்ட் 2024, 05:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமைதியை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக, மோதி அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

யுக்ரேன் தலைநகர் கீயவில் கடந்த மாதம் பெரிய குழந்தைகள் மருத்துவமனை உட்பட, ரஷ்யா மோசமான தாக்குதலை நடத்திய நாளில், மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த மோதி, அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை கட்டியணைத்ததை ஸெலன்ஸ்கி விமர்சித்திருந்தார்.

பிரச்னைகளைப் போர்க்களத்தில் சரிசெய்ய முடியாது என்று தாம் புதினிடம் கூறியதாக பிரதமர் மோதி கூறியிருந்தார்.

“இரு தரப்பினரும் அமர்ந்து இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும்,” என்று கீயவில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பின்னர் மோதி தெரிவித்தார்.

போலாந்தில் இருந்து ரயில் மூலமாக யுக்ரேன் தலைநகர் கீயவை மோதி அடைந்தார். யுக்ரேனிய படைகள் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்ததில் இருந்து யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் சர்வதேச தலைவர் மோதி.

குர்ஸ்க் பிராந்தியத்தில் 1,250 சதுர கி.மீ.க்கும் அதிகமான பகுதியைக் கைப்பற்றியதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்தது.

 

நரேந்திர மோதி, ரஷ்ய அதிபரை ஆரத்தழுவியதைக் கண்டு தாம் “பெருத்த ஏமாற்றம் அடைந்ததாக” ஆறு வாரங்களுக்கு முன்பு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

“ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். இதில் மூன்று குழந்தைகளும் அடக்கம். யுக்ரேனில் உள்ள மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யா தாக்கியது. அந்த நாளில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், மாஸ்கோவில் உலகின் மிகப் பெரிய ரத்தம் தோய்ந்த குற்றவாளியை ஆரத் தழுவுவது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று அந்த நேரத்தில் ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் சமநிலைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல் குறித்து மோதிக்கும் ஸெலன்ஸ்கிக்கும் இடையே என்ன நடந்தது என்று விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 23) யுக்ரேன் அதிபரை மோதி ஆரத்தழுவினார்.

மோதி - ஸெலன்ஸ்கி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோதி, ஸெலன்ஸ்கியை கட்டிப்பிடித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், யுக்ரேன் தேசிய அருங்காட்சியகத்தில் பல்லூடக கண்காட்சியை பிரதமர் மோதி பார்வையிட்டார்.

 
நரேந்திர மோதி - வொலோதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,@NARENDRAMODI

படக்குறிப்பு, யுக்ரேனுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த இந்தியா விரும்புகிறது

பிரதமர் மோதி பேசுகையில், “முக்கியமாக குழந்தைகளுக்கு மோதல்கள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவர்கள் பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

உயிரிழந்த குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களின் நினைவாக அங்கு பொம்மை ஒன்றை பிரதமர் மோதி வைத்தார்.

நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோதியின் யுக்ரேன் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

விவசாயம், உணவுத் தொழில், மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

அப்போது, விரைவான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலான பீஷ்ம் (BHISHM) திட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியிடம் வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், உயிரைக் காப்பாற்றவும் அவை உதவும் என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு பெட்டகத்திலும் அனைத்து வகையான காயங்கள் மற்றும் மருத்துவ நிலைமைகளைச் சமாளிக்க அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

அடிப்படை அறுவை சிகிச்சை அறைக்குத் தேவையான அறுவை சிகிச்சைக் கருவிகள் இதில் இருக்கும். இதில் ஒரு நாளில் 10-15 அறுவை சிகிச்சைகள் செய்யலாம்.

இவை, தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் அல்லது ரத்தப்போக்கு போன்ற அவசரக்கால சூழ்நிலைகளில் 200 பேரைக் கையாளும் திறன் கொண்டது.

அந்தப் பெட்டகங்கள், தாமாகவே மின்சாரம் மற்றும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

சந்திப்பின் தாக்கம் என்ன?

கீயவில் ஸெலன்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தியதாக பிரதமர் மோதி கூறினார். யுக்ரேனுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது.

“விவசாயம், தொழில்நுட்பம், மருந்து மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் விவாதித்தோம். கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம்” என்று பிரதமர் மோதி கூறினார்.

'இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும்'

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் மோதலைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி, பேச்சுவார்த்தை மூலம்தான் அதற்குத் தீர்வு காண முடியும் என்று யுக்ரேன் அதிபரிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

“இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்." குறிப்பாக, யுக்ரேனிய மண்ணில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதை குறித்து விவாதிக்க விரும்புவதாகவும் யுக்ரேனிய அதிபரிடம் மோதி கூறினார்.

 
நரேந்திர மோதி - வொலோதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,@NARENDRAMODI

படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஸெலன்ஸ்கியிடம் மருந்து பொருட்களை ஒப்படைத்தார்

"அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தீவிரமாகப் பங்கு வகிக்கத் தயாராக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இதற்கு பங்களிக்க முடிந்தால், அதை நிச்சயமாகச் செய்ய விரும்புகிறேன். ஒரு நண்பராக, இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று ஸெலன்ஸ்கியிடம் கூறினார்.

"இது இந்தியாவின் அர்ப்பணிப்பு என்பதை உங்களுக்கும் முழு உலக சமூகத்திற்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை எங்களுக்கு முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் அதை ஆதரிக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

இரு தலைவர்களும் விவாதித்தது என்ன?

எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருக்கு முன்பாக ஸெலன்ஸ்கி அமர்ந்துள்ளார்.

ஸெலன்ஸ்கி முன்னிலையில் பிரதமர் மோதி, "மனிதாபிமான அணுகுமுறைதான் இந்த விவகாரத்தில் எங்களுடைய முதன்மையான பங்கு. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் அதற்கு நிறைய தேவை உள்ளது. மனிதாபிமான அணுகுமுறையை மையமாக வைத்து அதை நிறைவேற்ற இந்தியா முயன்றுள்ளது" என்றார்.

“மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எந்த வகையான உதவி தேவைப்பட்டாலும், இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று மோதி கூறினார்.

 
நரேந்திர மோதி - வொலோதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,@NARENDRAMODI

படக்குறிப்பு,பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாக மோதி கூறினார்

ஸெலன்ஸ்கி முன்னிலையில் ரஷ்ய அதிபர் புதினையும் மோதி குறிப்பிட்டார்.

ரஷ்ய பயணத்தின்போது அதிபர் விளாதிமிர் புதினுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோதி, இது போருக்கான நேரம் அல்ல என்று புதினிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

“எந்தவொரு பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியிலான முடிவுகள் மூலம்தான் தீர்வு கிடைக்கும் என்றும், நேரத்தை வீணடிக்காமல் அந்தத் திசையில் செல்ல வேண்டும் என்றும் நான் தெளிவாகக் கூறியுள்ளேன்” என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

ஸெலன்ஸ்கி கூறியது என்ன?

பிரதமர் மோதியுடனான சந்திப்பு குறித்து ஸெலன்ஸ்கி கூறுகையில், “இது மிகவும் சிறப்பான சந்திப்பு, இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோதியின் வருகைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இதுவொரு நல்ல தொடக்கம் எனவும் கூறிய யுக்ரேன் அதிபர், "அவருக்கு (பிரதமர் மோதி) அமைதி குறித்து ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் பற்றி பேசுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்றார்.

மேலும், “புதினைவிட பிரதமர் மோதி அமைதியை விரும்புகிறார். புதின் அதை விரும்பவில்லை என்பதுதான் பிரச்னை” என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா என்ன செய்ய முடியும்?

சமநிலையை எட்டுவது குறித்த கேள்விக்கு, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ஐரோப்பிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் பஸ்வதி சர்கார் பதிலளித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "24 பிப்ரவரி 2022 அன்று ரஷ்யா யுக்ரேனை தாக்கியதில் இருந்து இந்தியா இந்த விவகாரத்தில் சமநிலையைப் பேணி வந்திருக்கிறது. இந்தியா ரஷ்யாவுடன் ஆழமான உறவைக் கொண்டுள்ளது, அதை நாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. வெகுகாலமாக அந்நாடுகளுடன் இந்தியா அந்த உறுதிப்பாட்டை வைத்துள்ளது” என்றார்.

அவர் கூறுகையில், "இந்தியா ஐரோப்பாவில், குறிப்பாக அமெரிக்காவில் தனது உறவை ஆழப்படுத்த முயல்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன" என்றார்.

 
நரேந்திர மோதி - வொலோதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,@NARENDRAMODI

படக்குறிப்பு,ஸெலன்ஸ்கியை ஆரத்தழுவிய மோதி

போரை நிறுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்த கேள்விக்கு, “இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் மோதியால் மட்டுமே புதினிடம் கூற முடியும் என்பது உண்மை. எந்த ஐரோப்பியரும் இதைப் பேச முடியாது. பேச்சுவார்த்தை இல்லாமல் தீர்வு கிடைக்காது என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்” என்றார்.

"போரை நிறுத்தப் பலர் முனைப்பு காட்டுகின்றனர். சீனாவும் அதையே செய்தது. சுவிட்சர்லாந்தில் நடந்த உலக அமைதி மாநாட்டிலும் இது நடந்தது. ஆனால் ரஷ்யா இதில் பங்கேற்கவில்லை. சண்டையிட்டுக் கொள்ளும் இரு நாடுகளும் அமர்ந்து பேசாமல், இதில் முடிவை எட்ட முடியாது. இரு நாடுகளையும் ஒன்றிணைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும்” என்கிறார் அவர்.

அதே நேரம், ரஷ்ய விவகாரங்களில் நிபுணரும், ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியருமான ராஜன் குமார், “இது நிச்சயமாக மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சமிக்ஞை” என்று பிபிசியின் பாட்காஸ்டில் கூறினார்.

பிரதமர் மோதி வருகையின் அர்த்தம் என்ன?

இது மோதியின் அடையாளப் பயணமா அல்லது இதற்கு ஆழமான அர்த்தம் உள்ளதா?

ஏனெனில் மோதி இந்த ஆண்டு மாஸ்கோவுக்கும் சென்றிருந்தார். இது குறித்து பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், "இந்தப் பயணம், இந்தியா சமநிலை வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பது குறித்து, மேற்கத்திய நாடுகளுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞை. இது துணிச்சலான ராஜதந்திர நடவடிக்கை" என்றார்.

"யுக்ரேன் ஒரு சுதந்திர நாடாக மாறிய பிறகு இத்தகைய அளவில் இந்திய பிரதமர் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை.

போரின்போது, யுக்ரேன் சில பகுதிகளை ஆக்கிரமித்ததாக சமீப காலமாகக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இது முதல் முறையாக நடந்தது. மோதி முதலில் ரஷ்யா சென்றார், இதனால் மேற்கத்திய நாடுகள் கோபமடைந்தன” எனக் கூறினார்.

 
விளாதிமிர் புதின் - நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் விளாதிமிர் புதினை நரேந்திர மோதி சந்தித்தார்

குவாட் அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளதாகவும், இருந்த போதிலும் ரஷ்யாவை ஆதரிப்பதாகவும் பேராசிரியர் ராஜன் குமார் கூறினார்.

“ஒருவகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சமநிலையானது என்பதைக் காட்டும் முயற்சியே இந்தப் பயணம். இது ஒருபுறம் சமநிலைப்படுத்தும் முயற்சி, மறுபுறம், இது இருநாடுகளிடையே 'பாலமாகச் செயல்படும்’ முயற்சி” என்றார்.

ரஷ்யாவையும் யுக்ரேனையும் எப்படி இணைப்பது என்பது முதல் முயற்சி என்றும், ‘தெற்குலக’ பிரதிநிதியாக உள்ள இந்தியா, யுக்ரேனை தெற்குலகத்துடன் இணைப்பது எப்படி என்பது இரண்டாவது முயற்சி என்றும் அவர் கூறினார்.

“ஏனெனில், தெற்குலகில் இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 'புத்தரின் நேரம், போருக்கான நேரம் அல்ல' என்றும், இந்த சுற்றுப் பயணம் அமைதிக்கான முயற்சி என்றும் பிரதமர் இந்த சுற்றுப் பயணத்தில் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் பங்கு என்ன?

ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையில் இந்தியாவின் பங்காக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “பனிப்போருக்குப் பிறகு, அதாவது 1991ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் என எந்த நாட்டு விவகாரத்திலும் மத்தியஸ்தம் பற்றிப் பேச இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என பேராசிரியர் ராஜன் குமார் கூறினார்.

“இரு தரப்பையும் முன்னோக்கிக் கொண்டு வருவதைப் பற்றி இந்தியா பேசுகிறது என்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காண்கிறோம் என்று சொல்லலாம். இந்த விஷயத்தைப் பொறுத்த வரை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தம் பற்றிப் பேசவில்லை” என்கிறார் பேராசிரியர் ராஜன் குமாகுமார்.

 
நரேந்திர மோதி - வொலோதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரதமர் மோதியும், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்

ராஜன் குமார் கூறுகையில், "போர்நிறுத்தம் பற்றிப் பேசும் அளவுக்கு அரசியல் சூழல் இல்லை. சீனா, துருக்கி போன்று இந்தியாவும் அமைதித் திட்டத்தைப் பற்றி பேசவில்லை. மத்தியஸ்தம் குறித்த பேச்சு எழுந்தால் இந்தியா எந்த மாதிரியாகப் பங்கு வகிக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை” என்றார் அவர்.

கடந்த 1991ஆம் ஆண்டு யுக்ரேன் சுதந்திர நாடாக மாறிய பிறகு, இந்திய பிரதமர் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா யுக்ரேனை தாக்கியது. அன்று முதல் இன்று வரை இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

பிப்ரவரி 2022 முதல் நடந்து வரும் இந்த சண்டை, எப்போது நிற்கும் என்பதைக் காலம்தான் சொல்லும். ஆனால், ஸெலென்ஸ்கி, புதின் ஆகிய இருவரிடமும் சமாதானம் மட்டுமே தீர்வு என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும்"

அப்போ புட்டின்???

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

"இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும்"

அப்போ புட்டின்???

விசுகர் தான் மேற்குலகின் தீவிர ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதற்காகா என்னா,.....வேசமெல்லாம் போடுறார்,..🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.