Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை  சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான்.

காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்..

"நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை நான் பாடுகிறேன்."

"உனக்கு நல்ல குரல் பாடிப்பழகு 'பாட்டுக்கு பாட்டு' போட்டியில் பாடலாம் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்க போயினமாம் அடுத்த மாசம்"

" சும்மா பகிடி விடாமல் போங்கோ எனக்கு கிணற்றடியில் பாட்டு பாடத்தான் முடியும் நாலு பேருக்கு முன்னால் பேசவே மாட்டேன்"

".."இந்த கதியாலில‌ குமுதமும், ஆனந்த விகடனும் வைச்சிருக்கிறன் அக்காட்ட கொடுத்திட்டு வேறு புத்தகம் வாங்கி கொண்டு வைச்சுவிடு நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்"

கிணற்றுக்கட்டில் வைத்திருந்த துவாய்யை எடுத்தவனுக்கு கடந்த முறை முசுறு கடித்த ஞாபகம் வரவே இரண்டு மூன்று தடவை நன்றாக உதறிவிட்டு உடம்பை துடைத்தபின்பு தூவாயினால் உடம்பை சுற்றியபடியே சாரத்தை கழற்றி நன்றாக பிளிந்து கொடியில் காயப்போட்டுவிட்டு ,கதியாலில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான் .

புத்தகத்தை புரட்டி பார்த்தபடியே சென்று அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு புத்தகம் இருந்தால் அண்ரி வாங்கி கொண்டு வரசொன்னவர் ,என்றான் .அந்த மேசையில் இரண்டு புத்தகம் இருக்கு கொண்டு போய் கொடு என்றாள் தமக்கை.

புத்தகத்தை எடுத்து பார்த்துகொண்டு போனவனுக்கு அதிலிருந்த காட்சி அவனை அந்த கதையை வாசிக்க தூண்டிவிட்டது

பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற‌ ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல‌

  • கருத்துக்கள உறவுகள்

இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... 

அட்ரா சக்கை..இப்படியொரு வசனத்தைதான் தேடிக்கொண்டிருந்தனான்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற‌ ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல‌

என்ன புத்தா

விடிய காலமை தலைப்பைப் பார்த்துட்டு ஆகா புத்தன் கிளுகிளுப்பான தலைப்புடன் வந்திருக்கிறாரே என்று வேலைவெட்டியை விட்டுட்டு கதையை வாசித்தால்

யூடியூப் காரர் பரவாயில்லைப் போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற‌ ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல‌

புத்தன் ஏமாந்தது காணாது என்று… “குளியலறையில்”  என்ற தலைப்பை போட்டு எங்களையும் ஏமாற்றி விட்டார். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் கடைசிப் பந்திதான் கவருது . .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

 

பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற‌ ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல‌

என்ன புத்தரே..சுஜாதாவின் கதையும் ..ஜெயராஜின் ஓவியமுமாக  இருந்திருக்குமோ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

"நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாலியை கிணற்றினுள் இறக்கினான்

பாட்டு எழுதினது கண்ணதாசன், இவர் ஏன் "வாலி"யை கிணற்றுக்குள் இறக்கினவர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் ஒரு அழியாத கோலம்.
புத்தன்  செய்யாத லீலகள் இல்லை.
புத்தன் அக்கா,ஆண்டி என்கிறார்
புத்தன்புத்தக பரிமாற்றம் செய்திருக்கிறார்
புத்தன் ஒரு பேய்காய். 

விடலைப்பருவம் பின்னியெடுக்குது.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... 

அட்ரா சக்கை..இப்படியொரு வசனத்தைதான் தேடிக்கொண்டிருந்தனான்..

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Alvaayan

7 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா

விடிய காலமை தலைப்பைப் பார்த்துட்டு ஆகா புத்தன் கிளுகிளுப்பான தலைப்புடன் வந்திருக்கிறாரே என்று வேலைவெட்டியை விட்டுட்டு கதையை வாசித்தால்

யூடியூப் காரர் பரவாயில்லைப் போல இருக்கே.

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் ஈழப்பிரியன்.....பழைய கிளுகிளுப்புக்களை இரை மீட்டினால் தான் இப்ப கொஞ்சமாவது உசார் வருது

6 hours ago, தமிழ் சிறி said:

புத்தன் ஏமாந்தது காணாது என்று… “குளியலறையில்”  என்ற தலைப்பை போட்டு எங்களையும் ஏமாற்றி விட்டார். 😂 🤣

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் தமிழ்சிறி.....இப்ப தலைப்பை பார்த்து கதை வாசிக்கும் காலம் அது தான் நானும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

கதையில் கடைசிப் பந்திதான் கவருது . .......!  😂

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Suvy..... கவர்ச்சியாக இருக்குதோ 

4 hours ago, alvayan said:

என்ன புத்தரே..சுஜாதாவின் கதையும் ..ஜெயராஜின் ஓவியமுமாக  இருந்திருக்குமோ...

அதே...... ஜெ யின் ஒவியத்தை பார்த்து படித்த கதைகள் பல....ஒவியங்கள் இன்னும் நினைவில் உண்டு ஆனால் கதை மறந்து போய்விட்டது..... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா said:

பாட்டு எழுதினது கண்ணதாசன், இவர் ஏன் "வாலி"யை கிணற்றுக்குள் இறக்கினவர்?

நன்றி பிரபா வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்

44 minutes ago, குமாரசாமி said:

புத்தன் ஒரு அழியாத கோலம்.
புத்தன்  செய்யாத லீலகள் இல்லை.
புத்தன் அக்கா,ஆண்டி என்கிறார்
புத்தன்புத்தக பரிமாற்றம் செய்திருக்கிறார்
புத்தன் ஒரு பேய்காய். 

விடலைப்பருவம் பின்னியெடுக்குது.

 

 

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி கு.சா...பழசுகளை நினைத்து வண்டியை ஒட்ட வேண்டிய காலம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப்பிழைகள் உண்டு எடிட் பண்ண முடியாமல் இருக்கின்றது ...தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் .... 
வாலி=வாளி
சேரு =சேறு
ஞாகம்..ஞாபகம் 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.