Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு என்பது எனது நோக்கமில்லை; மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை - தமிழ் பொதுவேட்பாளர்

Published By: RAJEEBAN   01 SEP, 2024 | 12:13 PM

image

the morning

மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி ; ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் வடக்குகிழக்கு மக்களிற்கான உங்களின் கொள்கைகள் திட்டங்கள் என்ன?

பதில்- வடக்கு மக்களிற்காக மாத்திரமல்ல கிழக்கு மக்களிற்காகவும், அங்கு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரம் பிரஜாவுரிமைகளை பெற முடியாதவாறு நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயுள்ளன.

தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளி;ல் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்காகவும் அதனை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவுமே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் இதனையே தெரிவிக்கின்றோம்.

இந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன,இனபிரச்சினைக்கு தீர்வை காணமுடிந்தால்,பொருளாதார பிரச்சினை தானாக முடிவிற்கு வந்துவிடும் இதுவே எனது நோக்கம்.

கேள்வி ;  இலங்கை தமிழ் மக்களிற்கு தனிநாடொன்றை உருவாக்க முயற்சி செய்வீர்களா?

பதில் ; தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை.ஆனால் முழுமையான சுதந்திரமே எனது நோக்கம்.

அவ்வாறான நோக்கம் இருந்தால் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன்.

நான் நான் சமத்துவ அரசாங்கத்தை சமத்துவத்தை விரும்புகின்றேன்.கனடா சுவீடன் ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் காணப்படுவதை போன்ற சமத்துவ அரசாங்கத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

கேள்வி ; இந்தியா சீனாவுடனான இலங்கையின் புவிசார் அரசியல் தொடர்புகள் குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் ;  இந்தியா எங்களின் அயல்நாடு புராதான காலத்திலிருந்து நட்பு நாடாக விளங்குகின்றது.சீனாவை பொறுத்தவரை அதற்கு இந்தியாவுடன் அரசியல் பகைமை போட்டி உள்ளது.

இருநாடுகளும் தங்களின் நலனிற்காக திட்டங்களை தீட்டுகின்றன,இலங்கைக்கு இந்த இரண்டு நாடுகளுடனும் உள்ள உடன்படிக்கை காரணமாக இலங்கைக்கு வாய்ப்புகள் உள்ளன.

இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள்  உதவுகின்றன,எங்களிற்கு அது பிரச்சினையில்லை.

ஆனால் நாங்கள் தமிழர்கள் 1948 ம் ஆண்டு முதல் பல தலைவர்களின் ஜனாதிபதிகளின் ஆட்சிகளின் கீழ் வாழ்ந்துள்ளோம், தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன நிறைவேற்றப்படவில்லை.

நான் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக போட்டியிடவில்லை,தமிழ் மக்களின் தேவைகளிற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம் என்ற செய்தியை  தெரிவிப்பதற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம்,

கேள்வி ; ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் நாட்டை எப்படி அபிவிருத்தி செய்ய முடியும் என நினைக்கின்றீர்கள்?

பதில் ; மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு நாங்கள் செய்தியொன்றை வைத்திருக்கின்றோம்.

அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

https://www.virakesari.lk/article/192534

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் நடக்கலாம் ,  நம்புவோம் நம்பிக்கைதானே வாழக்கை .........!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தனிநாடு என்பது எனது நோக்கமில்லை; மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை - தமிழ் பொதுவேட்பாளர்

Published By: RAJEEBAN   01 SEP, 2024 | 12:13 PM

image

the morning

மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள், அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி ; ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் வடக்குகிழக்கு மக்களிற்கான உங்களின் கொள்கைகள் திட்டங்கள் என்ன?

பதில்- வடக்கு மக்களிற்காக மாத்திரமல்ல கிழக்கு மக்களிற்காகவும், அங்கு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரம் பிரஜாவுரிமைகளை பெற முடியாதவாறு நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயுள்ளன.

தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளி;ல் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்காகவும் அதனை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவுமே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் இதனையே தெரிவிக்கின்றோம்.

இந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன,இனபிரச்சினைக்கு தீர்வை காணமுடிந்தால்,பொருளாதார பிரச்சினை தானாக முடிவிற்கு வந்துவிடும் இதுவே எனது நோக்கம்.

கேள்வி ;  இலங்கை தமிழ் மக்களிற்கு தனிநாடொன்றை உருவாக்க முயற்சி செய்வீர்களா?

பதில் ; தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை.ஆனால் முழுமையான சுதந்திரமே எனது நோக்கம்.

அவ்வாறான நோக்கம் இருந்தால் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன்.

நான் நான் சமத்துவ அரசாங்கத்தை சமத்துவத்தை விரும்புகின்றேன்.கனடா சுவீடன் ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் காணப்படுவதை போன்ற சமத்துவ அரசாங்கத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

கேள்வி ; இந்தியா சீனாவுடனான இலங்கையின் புவிசார் அரசியல் தொடர்புகள் குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் ;  இந்தியா எங்களின் அயல்நாடு புராதான காலத்திலிருந்து நட்பு நாடாக விளங்குகின்றது.சீனாவை பொறுத்தவரை அதற்கு இந்தியாவுடன் அரசியல் பகைமை போட்டி உள்ளது.

இருநாடுகளும் தங்களின் நலனிற்காக திட்டங்களை தீட்டுகின்றன,இலங்கைக்கு இந்த இரண்டு நாடுகளுடனும் உள்ள உடன்படிக்கை காரணமாக இலங்கைக்கு வாய்ப்புகள் உள்ளன.

இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள்  உதவுகின்றன,எங்களிற்கு அது பிரச்சினையில்லை.

ஆனால் நாங்கள் தமிழர்கள் 1948 ம் ஆண்டு முதல் பல தலைவர்களின் ஜனாதிபதிகளின் ஆட்சிகளின் கீழ் வாழ்ந்துள்ளோம், தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன நிறைவேற்றப்படவில்லை.

நான் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக போட்டியிடவில்லை,தமிழ் மக்களின் தேவைகளிற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம் என்ற செய்தியை  தெரிவிப்பதற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம்,

கேள்வி ; ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் நாட்டை எப்படி அபிவிருத்தி செய்ய முடியும் என நினைக்கின்றீர்கள்?

பதில் ; மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு நாங்கள் செய்தியொன்றை வைத்திருக்கின்றோம்.

அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

https://www.virakesari.lk/article/192534

//வாழ்வாதாரம் பிரஜாவுரிமைகளை பெற முடியாதவாறு நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயுள்ளன.

தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்காகவும் அதனை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவுமே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் இதனையே தெரிவிக்கின்றோம்.//

//நாங்கள் தமிழர்கள் 1948 ம் ஆண்டு முதல் பல தலைவர்களின் ஜனாதிபதிகளின் ஆட்சிகளின் கீழ் வாழ்ந்துள்ளோம், தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன நிறைவேற்றப்படவில்லை.

நான் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் தேவைகளிற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம் என்ற செய்தியை  தெரிவிப்பதற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம்.//

//மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு நாங்கள் செய்தியொன்றை வைத்திருக்கின்றோம்.

அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.//
என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளரின் தரமான ஒரு பேட்டி.

இதற்குப் பிறகும்... வருங்கால  ஜனாதிபதி அரியநேத்திரன் என்று சொல்லிக் கொண்டு..
கேலிக்கதைகள் பேசும் ஒரு சிலருக்கு...  வேறு குறைபாடுகள்  உள்ளதென்றே கருத வேண்டி உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

மகா ஜனங்களே,.....

உந்தப் பேட்டியில் இலங்கையின் முதலாவது தமிழ் சனாதிபதி மேதகு அரியநேந்திரன் அவர்களின் கொள்கைப் பிரகடனம் என்னவென்று யாருக்காவது புரிகிறதா? 

நான்  புரிந்துகொண்டது  இவைதான் 👇

1) வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் 

2) வடக்கு கிழக்கில் பெளத்த மயமாக்கல் இடம்பெறுகிறது.

3) இனப் பிரச்சனை தீர்ந்தால் பொருளாதாரப் பிரச்சனை முடிவுக்கு வரும் 

4 )  தமிழர்கள் தனிநாடு தேவையில்லை 

5) நான்  (தமிழ் மக்கள்) ஏன் போட்டியிடுகின்றேன் என்று எனக்கே தெரியாது 

6)  தமிழர்கள் எனக்கு வாக்களிப்பதன் ஊடாக சிங்கள அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கிறார்கள்.

மொத்தத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் என்று எனக்கு ஒன்றும் இல்லை

🤦🏼‍♂️ 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

மகா ஜனங்களே,.....

உந்தப் பேட்டியில் இலங்கையின் முதலாவது தமிழ் சனாதிபதி மேதகு அரியநேந்திரன் அவர்களின் கொள்கைப் பிரகடனம் என்னவென்று யாருக்காவது புரிகிறதா? 

நான்  புரிந்துகொண்டது  இவைதான் 👇

1) வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் 

2) வடக்கு கிழக்கில் பெளத்த மயமாக்கல் இடம்பெறுகிறது.

3) இனப் பிரச்சனை தீர்ந்தால் பொருளாதாரப் பிரச்சனை முடிவுக்கு வரும் 

4 )  தமிழர்கள் தனிநாடு தேவையில்லை 

5) நான்  (தமிழ் மக்கள்) ஏன் போட்டியிடுகின்றேன் என்று எனக்கே தெரியாது 

6)  தமிழர்கள் எனக்கு வாக்களிப்பதன் ஊடாக சிங்கள அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கிறார்கள்.

மொத்தத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் என்று எனக்கு ஒன்றும் இல்லை

🤦🏼‍♂️

 

அரியநேந்திரன் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் கிழக்கை சேர்ந்தவர் அவர ஏமாற்ற கூடாது நீங்கள் இவ்வளவு தூற்றிய பின் நமது 129 ஓட்டும் அவருக்கே வாழ்க அரியநேந்திரன் .

என்ன பார்கிறீர்கள் ஒவ்வொரு புலம்பெயரும் தனக்கு வோட்டு உரிமை இல்லா விட்டாலும் ஊரில் உதவி பண்ணிய புண்ணியம் .

இதே சுமத்திரன் சஜித்தை வெல்ல சொல்கிறார் சஜித் தோல்வி அடைந்தால் சுமத்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கட்டும் நானும் யாழில் அரசியல் எழுதுவதை நிப்பாட்டுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

நானும் யாழில் அரசியல் எழுதுவதை நிப்பாட்டுகிறேன் .

No no no no,......No NO

தாங்கள் போனால் நான்  யாருடன் சண்டை பிடிப்பது? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

மொத்தத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் என்று எனக்கு ஒன்றும் இல்லை

ரனில், சஜித், அநுர என்ன செய்வார்கள் என  சொல்லுங்கள்? மிக ஆவலாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

No no no no,......No NO

தாங்கள் போனால் நான்  யாருடன் சண்டை பிடிப்பது? 

நான் போனால் கோசான்  போன்றவர்கள் வருவார்கள் 😀

யாழ் யாரையும் நம்பி இவர்தான் என்று இருக்காது அது பாட்டுக்கு ஓடிக்கொண்டு இருக்கும் சிலர் நினைப்பது தான்கள் இல்லாவிட்டால் யாழ் முடுபடும் என்று ஆனால் அது நடக்காது ஈழத்தமிழர் உலகில் இருக்கும் வரை யாழ் இருக்கும்  மோகன் அண்ணாவிடம் பழகியவர்கள் சொன்ன செய்தி .

  • கருத்துக்கள உறவுகள்

2௦௦9 மோசமான தோல்விக்கு பின் தமிழ் நாதம் நடத்தியவர் கனடா வில் மார்க்கம் பகுதியில் எப்படி இருந்தார் என்று சமிபத்தில் மார்க்கம் சென்றபோது காது கூசியது ?.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

ரனில், சஜித், அநுர என்ன செய்வார்கள் என  சொல்லுங்கள்? மிக ஆவலாக உள்ளோம்.

Ranil ஒன்றுமில்லை 

Sajith ஒன்றுமில்லை 

Anura ஏதாகினும் செய்ய முயன்றால் இந்தியா விடப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

Ranil ஒன்றுமில்லை 

Sajith ஒன்றுமில்லை 

Anura ஏதாகினும் செய்ய முயன்றால் இந்தியா விடப்போவதில்லை. 

அப்போ  பொது கூட்டமைப்பு வேட்பாளருக்கான முக்கல் எதற்கு???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.