Jump to content

25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.


Recommended Posts

இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். 

இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை. 

இவர் செய்த பிழை என்னவெனில் நம்பிக்கை தரும் அளவுக்கு தன்னுடன் கதைத்த ஒரு பெண்ணை நம்பியதுதான். 

புலம்பெயர் சமூகத்தில் இவரைப்போல பல நூற்றுக்கணக்கானவர்களை நாம் காண முடியும். வந்த காலத்தில் இருந்து நரை முடி  காலம் வரைக்கும் உறவுகளுக்காக சகோதரர்களுக்காக உழைத்து அழைத்து ஈற்றில்  இளமை தொலைந்த பின் திருமணம் முடித்த நிம்மதி இல்லாத பலரை காண முடியும்.

வெறுமனே உடல் தேவைக்காக இப்படியானவர்கள் இந்த சதிகளுக்குள் மாட்டுப்படுவதில்லை.

ஆதரவாக கதைக்கும் ஒருவர் கூட அருகில் இல்லாமல் அவரை வெறுமனே பணம் கறக்கும் இயந்திரமாக பாவிக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பவர்கள் இப்படியாக ஏமாற்றுகின்ற கூட்டத்திடம் அகப்பட்டு எந்த நிம்மதிக்காக கதைக்க தொடங்கினார்களோ அந்த நிம்மதியை தொலைத்து விடுகின்றார்கள்.

இந்த வழியான மோசடிக்கு பெயர் sextortion. வயதான எளிதில் இலக்கு வைக்கபடக் கூடிய நபர்களை கண்டறிந்து ஏமாற்றும் ஒரு சைபர் கிரைம். 

நாம் இந்த குற்றங்களுக்கு இலக்கானவரை திட்டிவிட்டு இந்த குற்றத்தை புரிந்தவரை நியாயப்படுத்துகிறோம், கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில். 

குற்றம் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லை எறியட்டும் என்று இயேசுநாதர் சொன்னது போல் இங்கு திருமணம் முடித்தபின் வேறு எந்த பெண்ணையும் மனசால் கூட ஆசைப்படாத ஒரு ஆண் இங்கிருந்தால் அவர் சொல்லட்டும் இவர் செய்தது தவறு என்று. 

இங்கு நடப்பதும் victim blaming தான்.

 

 

 

  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். 

இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை. 

இவர் செய்த பிழை என்னவெனில் நம்பிக்கை தரும் அளவுக்கு தன்னுடன் கதைத்த ஒரு பெண்ணை நம்பியதுதான். 

புலம்பெயர் சமூகத்தில் இவரைப்போல பல நூற்றுக்கணக்கானவர்களை நாம் காண முடியும். வந்த காலத்தில் இருந்து நரை முடி  காலம் வரைக்கும் உறவுகளுக்காக சகோதரர்களுக்காக உழைத்து அழைத்து ஈற்றில்  இளமை தொலைந்த பின் திருமணம் முடித்த நிம்மதி இல்லாத பலரை காண முடியும்.

வெறுமனே உடல் தேவைக்காக இப்படியானவர்கள் இந்த சதிகளுக்குள் மாட்டுப்படுவதில்லை.

ஆதரவாக கதைக்கும் ஒருவர் கூட அருகில் இல்லாமல் அவரை வெறுமனே பணம் கறக்கும் இயந்திரமாக பாவிக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பவர்கள் இப்படியாக ஏமாற்றுகின்ற கூட்டத்திடம் அகப்பட்டு எந்த நிம்மதிக்காக கதைக்க தொடங்கினார்களோ அந்த நிம்மதியை தொலைத்து விடுகின்றார்கள்.

இந்த வழியான மோசடிக்கு பெயர் sextortion. வயதான எளிதில் இலக்கு வைக்கபடக் கூடிய நபர்களை கண்டறிந்து ஏமாற்றும் ஒரு சைபர் கிரைம். 

நாம் இந்த குற்றங்களுக்கு இலக்கானவரை திட்டிவிட்டு இந்த குற்றத்தை புரிந்தவரை நியாயப்படுத்துகிறோம், கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில். 

குற்றம் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லை எறியட்டும் என்று இயேசுநாதர் சொன்னது போல் இங்கு திருமணம் முடித்தபின் வேறு எந்த பெண்ணையும் மனசால் கூட ஆசைப்படாத ஒரு ஆண் இங்கிருந்தால் அவர் சொல்லட்டும் இவர் செய்தது தவறு என்று. 

இங்கு நடப்பதும் victim blaming தான்.

உண்மையில் நீங்கள் குறிப்பிடும் படியாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தால் பரிதாபத்திற்குரியவராக அல்லாமல் சமுதாயத்திற்கு ஆபத்தானவராக மட்டுமே பார்க்க முடியும். 

புலம்பெயர் நாடுகளில் இவர் போன்றவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய சட்டப்படி  அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. அதிலும் பணமும் இருந்து விட்டால்????

மேலும் திருமணம் செய்யவேண்டும் அதிலும் தமிழ்ப்பெண் தான் வேண்டும் என்றால் இவரது வயதுக்கு தகுந்த எத்தனையோ பேர் போர் அவலங்களில் சிக்கி வாழ்விழந்து தவிக்கிறார்கள் தாயகத்தில். அதை விடுத்து இவர் ஏன் 25யை தேடவேண்டும்?? அதனால் தான் ஆபத்தானவர் என்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

அதை விடுத்து இவர் ஏன் 25யை தேடவேண்டும்?? அதனால் தான் ஆபத்தானவர் என்கிறேன்.

விளங்கவில்லை   ...    ஒரு வயோதிபர்   அல்லது 52 வயது நபர்.  

புதிய கார் வேண்ட முடியும் 

புதிய வீடு வேண்ட முடியும்  

புதிய உடுப்புகள்.  அணிய முடியும் 

ஒரு 23. வயது பெண் விரும்பினால் ஏன் திருமணம் செய்ய கூடாது???   

வெளிநாட்டில் பல முதியோர்கள் இளம்பெண்களைத்  திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள் 🤣😂🙏

 

Link to comment
Share on other sites

32 minutes ago, விசுகு said:

உண்மையில் நீங்கள் குறிப்பிடும் படியாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தால் பரிதாபத்திற்குரியவராக அல்லாமல் சமுதாயத்திற்கு ஆபத்தானவராக மட்டுமே பார்க்க முடியும். 

 

அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர் தன் வயதை 55 என்று சொல்லி பழகியிருப்பின் அதனை தவறு என்பீர்களா? அல்லது 55 வயதான ஆண் 25 வயதான பெண்ணை திருமணம் செய்ய முற்படுவது தவறு என்பீர்களா?

Quote

மேலும் திருமணம் செய்யவேண்டும் அதிலும் தமிழ்ப்பெண் தான் வேண்டும் என்றால் இவரது வயதுக்கு தகுந்த எத்தனையோ பேர் போர் அவலங்களில் சிக்கி வாழ்விழந்து தவிக்கிறார்கள் தாயகத்தில். அதை விடுத்து இவர் ஏன் 25யை தேடவேண்டும்?? அதனால் தான் ஆபத்தானவர் என்கிறேன்.

எல்லாவற்றையும் விட, ஒருவர் தன் தெரிவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?
 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

விளங்கவில்லை   ...    ஒரு வயோதிபர்   அல்லது 52 வயது நபர்.  

புதிய கார் வேண்ட முடியும் 

புதிய வீடு வேண்ட முடியும்  

புதிய உடுப்புகள்.  அணிய முடியும் 

ஒரு 23. வயது பெண் விரும்பினால் ஏன் திருமணம் செய்ய கூடாது???   

வெளிநாட்டில் பல முதியோர்கள் இளம்பெண்களைத்  திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள் 🤣😂🙏

 

இருவருக்கும் ஒரே பதில் தான்.

ஏனெனில் எனக்கு இதே வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அதனால் ஆபத்தை உணர்கிறேன். 

20 minutes ago, நிழலி said:

அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர் தன் வயதை 55 என்று சொல்லி பழகியிருப்பின் அதனை தவறு என்பீர்களா? அல்லது 55 வயதான ஆண் 25 வயதான பெண்ணை திருமணம் செய்ய முற்படுவது தவறு என்பீர்களா?

எல்லாவற்றையும் விட, ஒருவர் தன் தெரிவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?
 

 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

இருவருக்கும் ஒரே பதில் தான்.

ஏனெனில் எனக்கு இதே வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அதனால் ஆபத்தை உணர்கிறேன். 

 

ஆமாம்  எற்றுகொள்கிறேன் 🙏🙏🙏

ஒரு சின்ன கேள்வி விரும்பினால் பதில் தருங்கள்.  கேள்வி பிழை எனில்  தயவுசெய்து மன்னியுங்கள் 🙏

அதாவது உங்களை ஒரு 30 வயது இளம்பெண்  விரும்பினால்  திருமணம் செய்து கொள்வீர்களா??  தமிழ் பெண் 🙏🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம்  எற்றுகொள்கிறேன் 🙏🙏🙏

ஒரு சின்ன கேள்வி விரும்பினால் பதில் தருங்கள்.  கேள்வி பிழை எனில்  தயவுசெய்து மன்னியுங்கள் 🙏

அதாவது உங்களை ஒரு 30 வயது இளம்பெண்  விரும்பினால்  திருமணம் செய்து கொள்வீர்களா??  தமிழ் பெண் 🙏🤣

இதையெல்லாம் தாண்டி வந்து கன காலமாச்சண்ணா. 

ஆனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் தரவேண்டும் என்றால் இல்லை. ஆம் என்று சொல்லும் அளவுக்கு  சுயநலம் இல்லை. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஏனெனில் எனக்கு இதே வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அதனால் ஆபத்தை உணர்கிறேன். 

ஆண் பெண் அவர்களுடைய வயது முதல் வருமானம் சொத்து என்பன தொடர்பாக தெளிவு படுத்தி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் வயது ஒரு தடையாக நாம் எண்ணக் கூடாது. 18 வயது நிறைவடைந்த இருமனம் விரும்பி திருமணம் செய்தால் மறுக்க முடியாது தானே அண்ணை. 

20 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்த பலரை அறிவேன். அதே போல வயது குறைந்த ஆணை திருமணம் செய்த பலரையும் அறிவேன். அவை தனிமனித சுதந்திரம் என எண்ணுகிறேன்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆண் பெண் அவர்களுடைய வயது முதல் வருமானம் சொத்து என்பன தொடர்பாக தெளிவு படுத்தி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் வயது ஒரு தடையாக நாம் எண்ணக் கூடாது. 18 வயது நிறைவடைந்த இருமனம் விரும்பி திருமணம் செய்தால் மறுக்க முடியாது தானே அண்ணை. 

20 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்த பலரை அறிவேன். அதே போல வயது குறைந்த ஆணை திருமணம் செய்த பலரையும் அறிவேன். அவை தனிமனித சுதந்திரம் என எண்ணுகிறேன்.

உங்களிடம் ஒரு கேள்வி.

பிரான்சின் ஜனாதிபதியை அவரது துணைவியாருடன் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவதை ஒழிக்காமல் சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆண் பெண் அவர்களுடைய வயது முதல் வருமானம் சொத்து என்பன தொடர்பாக தெளிவு படுத்தி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் வயது ஒரு தடையாக நாம் எண்ணக் கூடாது. 18 வயது நிறைவடைந்த இருமனம் விரும்பி திருமணம் செய்தால் மறுக்க முடியாது தானே அண்ணை. 

20 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்த பலரை அறிவேன். அதே போல வயது குறைந்த ஆணை திருமணம் செய்த பலரையும் அறிவேன். அவை தனிமனித சுதந்திரம் என எண்ணுகிறேன்.

Donald Trumb  June 24th 1946

Melania Trumb April 26Th 1970

40 minutes ago, விசுகு said:

உங்களிடம் ஒரு கேள்வி.

பிரான்சின் ஜனாதிபதியை அவரது துணைவியாருடன் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவதை ஒழிக்காமல் சொல்லுங்கள். 

 

மிலானியா பாவமா?இல்லையா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

Donald Trumb  June 24th 1946

Melania Trumb April 26Th 1970

 

மிலானியா பாவமா?இல்லையா?

திராவிட தந்தை பெரியார் 1949 ஆண்டு மணியம்மையை கலியாணம் கட்டும் போது…. ராமசாமிக்கு 72 வயது. மணியம்மைக்கு 26 வயது.
நம்மாள்… 46 வயது வித்தியாசத்திலை கலியாணம் கட்டி... கின்னஸ் சாதனை படைத்திருக்கு. 😂 🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலை உலகம் குப்பையாகி விட்டது. பெண்கள் ஆண்கள்..பல விதத்திலும் பணம் பார்க்க பாவிக்கிறார்கள். உடலைக் காட்டி பிழைப்பது அதிகரித்துவிட்டது.. அது உடலை விற்றுப் பிழைப்பதை விட பாதுகாப்பானது என்றாகி இருப்பதால்... பலரும் களமிறங்கி விட்டார்கள். 

ஆனாலும்.. வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் பணம் வரும் வழிமுறை உணராமல் கண்டபடிக்கும் ஊருக்கும் தெற்காசியா தென்கிழக்கு ஆசியா நோக்கியும் பணத்தை வீசிவருகின்றனர்.

அவர்கள் உழைப்பு தானே என்று விட்டாலும்.. இதனால் மற்றவர்களும் ஊரில் உள்ளவர்களும் தேவைக்கு அதிகமான செலவை செய்து பல அத்தியாவசிய.. சேவைகளை தேவைகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதில் புலம்பெயர் தமிழர்களின் தாந்தோன்றித்தனமான கண்மூடித்தனமான செலவழிப்பு போக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

திராவிட தந்தை பெரியார் 1949 ஆண்டு மணியம்மையை கலியாணம் கட்டும் போது…. ராமசாமிக்கு 72 வயது. மணியம்மைக்கு 26 வயது.
நம்மாள்… 46 வயது வித்தியாசத்திலை கலியாணம் கட்டி... கின்னஸ் சாதனை படைத்திருக்கு. 😂 🤣

ரொம்ப கொடுமை சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ரொம்ப கொடுமை சார்.

இதை கொடுமை என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது???

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதை கொடுமை என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது???

ஆடு நனையுதென்று ஓநாய் அழுவுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரொம்ப கொடுமை சார்.

அதுகும்… வளர்ப்பு மகளை திருமணம் செய்யும் துணிவு,
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  ட்ரம்புக்கும் வருமா….
தந்தை பெரியாருக்கு வந்ததே… கெத்து சார். 😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

உங்களிடம் ஒரு கேள்வி.

பிரான்சின் ஜனாதிபதியை அவரது துணைவியாருடன் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவதை ஒழிக்காமல் சொல்லுங்கள். 

Brigitte Macron: French president's wife to be subject of new TV drama


ஜோடிப் பொருத்தம் நல்லா இல்லை என்பது தான் என் மனதில் படுவது. ஆனால் அவர்களுடைய சொந்த விருப்புகளில் நாம் மூக்கை நுழைக்க முடியாது தானே அண்ணை.

4 hours ago, தமிழ் சிறி said:

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும்

அவருடைய ஆசிரியரைத் திருமணம் செய்தவர் என நினைக்கிறேன் அண்ணை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

Brigitte Macron: French president's wife to be subject of new TV drama


ஜோடிப் பொருத்தம் நல்லா இல்லை என்பது தான் என் மனதில் படுவது. ஆனால் அவர்களுடைய சொந்த விருப்புகளில் நாம் மூக்கை நுழைக்க முடியாது தானே அண்ணை.

அவருடைய ஆசிரியரைத் திருமணம் செய்தவர் என நினைக்கிறேன் அண்ணை.

வாழ்வு வாழ்வதற்கா கட்டிக் கொண்டு அழுவதற்கா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70 வயது நபர் 25 வயசு பொண்ணுடன் கதாநாயகனாக ஒரு படம் நடித்தால் அதை பார்த்து மகிழக்கூடியவர்கள் 52 வயது நபர் 25 வயசு பெண்ணிடம் மயங்குவதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்?

நமது 52 வயசு சுவிஸ் கீரோவை எங்கள் யூரியூப் தம்பிமார் பேட்டி கண்டு இணைத்தால் பலருக்கும் பிரயோசனப்படும். 

பல் உள்ளவன் பகோடா சாப்பிடுறான். 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வாழ்வு வாழ்வதற்கா கட்டிக் கொண்டு அழுவதற்கா??

அவரைப் பார்த்தால் அழுவது போல் தெரியவில்லை அண்ணை!
அவர்களைப் புரிந்துகொள்ள அவர்களால் மட்டுமே முடியும்.
நாங்கள் எமது சமூக வரைமுறைகளைத் தாண்டிய விடயங்களை ஒவ்வாமையுடன் நோக்குகிறோம் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழ பேரரசன் ராஜராஜ சோழன்  பல வயதுகளில் பல மனைவிகளை கல்யாணம் செய்து தனது வாழ்வை அவர் களுடன் இன்பமாக அனுபவித்தான்.  அவன் மகள் ராஜேந்திர சோழனும் அதையே செய்தான். 

இவர் ஒரு சாதாரண நபர். 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அவரைப் பார்த்தால் அழுவது போல் தெரியவில்லை அண்ணை!
அவர்களைப் புரிந்துகொள்ள அவர்களால் மட்டுமே முடியும்.
நாங்கள் எமது சமூக வரைமுறைகளைத் தாண்டிய விடயங்களை ஒவ்வாமையுடன் நோக்குகிறோம் என எண்ணுகிறேன்.

எண்பது வயதை கடந்த ஒரு பெண்ணுடன் 46 வயதான ஒருவர் வாழ்தல் என்பது தாம்பத்ய குடும்பம் அல்ல அதற்கு வேறு பெயர்கள் வேண்டுமானால் சொல்லலாம். இதனுடைய பின் விளைவுகள் மற்றும் விளையாட்டுகள் பற்றி பின்னர் பேசப்படும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எண்பது வயதை கடந்த ஒரு பெண்ணுடன் 46 வயதான ஒருவர் வாழ்தல் என்பது தாம்பத்ய குடும்பம் அல்ல அதற்கு வேறு பெயர்கள் வேண்டுமானால் சொல்லலாம். இதனுடைய பின் விளைவுகள் மற்றும் விளையாட்டுகள் பற்றி பின்னர் பேசப்படும்???

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல.  மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. 

அது சரி நீங்கள் ஏன் ஏதோ உங்களை எண்பது வயது பெண்ணுக்கு வாழ்க்கைப்பட வைத்தது போல் பீல் பண்ணுகின்றீர்கள்? அது போலவே உங்கள் இருபத்து ஐந்து வயது மகள் விடயத்திலும் பீதி அடைகின்றீர்கள்? உலகத்தில் ஆயிரத்து பத்தாயிரத்து ஐநூற்று ஏழு விடயங்களும் அதற்கு மேலேயும் காணப்படும். அனைத்தையும் நமது வாழ்க்கை நிலமையில் ஒப்புவமை, கற்பனை செய்ய தேவை இல்லையே. 

மற்றும் ஆண், பெண் இரு பாலினரிடையேயும் வயதுக்கு மீறிய ஈர்ப்புக்கள் எமது சமூகத்தில் ஒன்றும் புதியவை அல்ல. 

கிளுகிளுப்பு உணர்ச்சிகளை தாராளமாக கொடுத்து படைத்தவனும் என்ஜோய் பண்ண சொல்கின்றான். சட்டமும் போதியளவு இடம் கொடுக்கின்றது. இந்த நாட்டாண்மைகள் கொஞ்சப்பேர் குத்தி முறிகின்றார்கள். 

Edited by நியாயம்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

ரொம்ப கொடுமை சார்.

இதை தான் அறியாமை என்பார்கள்,.........வயோதிபர்கள்.  அனுபவசாலிகள்.   அனைத்து விடயங்களிலும்   ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்யும் இளைஞன்   அவளை திருப்தி படுத்துவதை. விட   ஒரு வயோதிபன்.  பூரணமாக திருப்தி படுத்துவன். அனுபவம் கண்ட பெண்கள் ஒருபோதும் கிழவனை தட்டி விடமாட்டார்கள். 😂🤣 

இதில் கொடுமை எதுவும் இல்லை  இங்கு மேறகு நாடுகளில் நிறைய கிழவர்கள். இளம்பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல.  மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. 

அது சரி நீங்கள் ஏன் ஏதோ உங்களை எண்பது வயது பெண்ணுக்கு வாழ்க்கைப்பட வைத்தது போல் பீல் பண்ணுகின்றீர்கள்? அது போலவே உங்கள் இருபத்து ஐந்து வயது மகள் விடயத்திலும் பீதி அடைகின்றீர்கள்? உலகத்தில் ஆயிரத்து பத்தாயிரத்து ஐநூற்று ஏழு விடயங்களும் அதற்கு மேலேயும் காணப்படும். அனைத்தையும் நமது வாழ்க்கை நிலமையில் ஒப்புவமை, கற்பனை செய்ய தேவை இல்லையே. 

மற்றும் ஆண், பெண் இரு பாலினரிடையேயும் வயதுக்கு மீறிய ஈர்ப்புக்கள் எமது சமூகத்தில் ஒன்றும் புதியவை அல்ல. 

கிளுகிளுப்பு உணர்ச்சிகளை தாராளமாக கொடுத்து படைத்தவனும் என்ஜோய் பண்ண சொல்கின்றான். சட்டமும் போதியளவு இடம் கொடுக்கின்றது. இந்த நாட்டாண்மைகள் கொஞ்சப்பேர் குத்தி முறிகின்றார்கள். 

எனக்கு எங்கள் ஜனாதிபதியை பார்க்க எவ்வளவு பாவமாக இருக்கிறதோ அதை விட பலமடங்கு பாவமாக இருக்கிறது நியாயம் என்று பெயர் வைத்து விட்டு நீங்கள் அதை நிரூபிக்க கருத்து எழுத எப்படி எல்லாம் ஓட வேண்டி இருக்கிறதே என்பதை காண்கின்ற போது....???🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • R ரணில், A அனுர, S சஜித்.
    • போன கிழமை தானே... மாவை, ரணிலுக்கு  ஆதரவு தெரிவித்து இருந்தார். அதற்குள் மனம் மாறி... தமிழ் பொது வேட்பாளர் அறியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது வரவேற்கக் கூடிய விடயம். 💪 ஆக... இப்போ, சுமந்திரன் தனியத் தான் ... சஜித்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் போலுள்ளது. 😂 தமிழரசு கட்சியில் இருந்து.... வேறு ஒருவரும் சுமந்திரனுடன், சஜித்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யப் போகாமல் இருப்பதை பார்க்க... இது சுமந்திரனின் தான்தோன்றித்தனமான முட்டாள் தனமான செயலாக உள்ளதை மக்களே அறிந்து கொள்வார்கள்.
    • ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்! ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழில் மீண்டும் வாக்குறுதி வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பாட்டிருந்த முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் முதன்முறையாக எம்.ஏ.சுமந்திரன் சஜித்தின் பிரசார மேடையில் பிரசன்னமாகியிருந்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உத்தியோக பூர்வமாக தேர்தல் மேடையில் ஏறி ஆதரவினை உறுதிப்படுத்தியிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் நேற்று மேடையில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச, ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம். வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். மதுபான சாலைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள் வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருக்க முடியாது. அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1399540
    • ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை! பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.  காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் அவருடைய  அழைப்பைத் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார். சோபியின் இந்த செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1399493
    • ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மீது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று, புளோரிடா மாநிலம், மேற்கு பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். இதன்போது அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், இதனால் அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து சந்தேக நபரான 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, ஒரு கோ ப்ரோ கமெரா உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாம் பீச் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் மற்றும் அவரைச் சூழவுள்ளனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஜுலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றிருந்த ட்ரம்ப் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றதோடு, இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அங்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் ட்ரம்ப்பை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கேள்வியை எழுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1399550
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.